Friday, September 24, 2010

மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்
கிழக்கிலங்கையின் தவப்புதல்வனாம் சாமித்தம்பி மயில்வாகனம் எனும் சுவாமி விபுலானந்தர் பன் மொழிப் புலமையையும் ஆற்றலையும் கொண்டவர். சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகி, மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்து, மீண்டும் அதே கல்லூரியில் ஆசிரியராகி, இலங்கைத் தொழில்நுட்பக்கல்லூரியல் டிப்போமாப் பட்டம் பெற்றதும் அக்கல்லூரியில் கற்பித்தவர். யாழ் சம்பத்ரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் இலங்கையின் முதற்பண்டிதராய் விளங்கியவர். லண்டன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானப் பட்டதாரியாய் விளங்கிய பண்டிதர் மயில்வாகனம். பி.எஸ் சி அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சிறந்ததொரு அதிபராக கடமையேற்று அருந்தொண்டாற்றியவர்.
ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை இராம கிருஷ்ண சங்கத்தின் துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார். 1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
ஏழைகளின் கண்ணீரில் இறைவனைக் காணமுடியும் என்பதைப் புரிந்து கொண்டார். ‘படமாக இருக்கும் பரமனுக்கு அன்பின் நிமித்தம் நாம் ஒன்றைக் கொடுத்தால், அது அவருக்குப் போய்ச் சேராது. அதே பொருளை அவனாகக் கருதி நடமாடும் ஏழைக்குக் கொடுத்தால் படமாக இருக்கும் பரமனுக்குச் சேரும்’ என்பது திருமூலரின் கூற்றாகும். திருமூலரின் சிந்தனை அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது.
‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்றீந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அது ஆகாநடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்றீந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆகும்மே’
என்பதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டார். அந்த உணர்வுதான் மட்டக்களப்புக்குக் கல்விப் பயிர் செழிக்க உதவியது.
ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை இராம கிருஷ்ண சங்கத்தின் துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார். 1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.
மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.
வால்டர் ஸ்கொட.; அவர்கள் ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர். ஸ்கொட்லாந்தின் யாழைத்தேடி எழும் ஏக்கக் குரலாக ‘லேடி ஒஃப் த லேக்’;(டுயனல ழக வாந டுயமந) எனும் அழகிய கவிதையில் மூழ்கி அதனை ‘நீர்நிலைக் கன்னிகை’ என்ற தலைப்பிட்டு மொழி பெயர்த்து எழுதினார். அதன் சாரம் இவ்வாறுள்ளது.
“நல்யாழே துயிலொழிந்து எழுவாயாக, நினது நரம்புகளில் படருங் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கு ஒர் இதயமாவது துடிப்புறுமெனின், நின் செயல் வீண் செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருத்தல் தகுதியன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே, எழுந்திரு! இன்னும் ஒருமுறை எழுந்திரு”
வால்டர் ஸ்கொட்டின் பாடல் அடிகளது உள்ளத்தை உருக்கி உள்ளொளியைத் தூண்டியது. தமிழரின் சொத்தான யாழ்கள் துயிலில் மூழ்கியிருப்பதை உணர்ந்தார். அவற்றை மீட்டெடுக்க ஆராய்ச்சியில் இறங்கினார். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, என்பவற்றில் காணப்படும் இசை நாடக ஆராய்ச்சியிலும் இடுபட்டார். தமிழரின் சொத்தான யாழ்களை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியிலும் இறங்கினார்.

1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக உயர்நீதி மன்ற சட்டத்தரணி திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் இருந்தார்கள். அந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவிலே பெரும் புலவராகிய டாக்டர் சாமிநாதையர் தலைமை வகித்தார். இளந்துறவி இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார்.
இந்த ஆராய்ச்சி பயனுடையது. இதனை விரிவாக எழுதி வெளியிட்டால் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மிகப்பயனுடையது. ஆதலால் இதனை விரிவுற எழுதித் தருமாறு தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் உயர்நீதி மன்ற சட்டத்தரணி திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்ற சுவாமி விபுலானந்தர் நாடகத் தமிழை எழுதிக் கொடுத்தார். “இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹா மஹோ உபாத்தியாயர் சாமிநாதையர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார். ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்கும்போது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக’ என சுவாமி விபுலானந்தர் அந்த நூலில் குறிப்பிடுகிறார். அதுவே “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
“நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையரவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன்.
இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.
ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக” என சுவாமி விபுலானந்தர் நூலில் குறிப்பிடுகிறார். அதுவே “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.
மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். ‘நானிலம் யாவுமோர் நாடக மேடையே – அதில்நடிப்பவர் ஆண் பெண் அனைவருமாவோம்’
என்ற கூற்றை தமிழ்க் கவிஞர்களும். அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார்.
“உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்” என சுவாமி விபுலானந்நத்ர் மதங்கசூளாமணியில் கூறுகிறார். எந்த நாட்டவரும் சேக்ஸ்பியருக்குக் கொடுக்காத கௌரவத்தையும் முதன்மையையும் நமது அடிகள் கொடுத்துக் கௌரவித்துள்ளார்.
மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் உறுப்பியல். எடுத்துக்காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமையவேண்டும் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து மதங்கசூளாமணியில் தந்துள்ளார். உறுப்பியல் உறுப்பியல் சிலப்திகார அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை விளக்குகின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்துக்கு உரிய கட்டுக்கோப்பு, என்பவற்றுடன் நாடகத்துக்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றியும் எடுத்துக் கூறப்படுகிறது.கதை தழுவி வரும் கூத்தே நாடகமாகும். கூத்தை இருவகைப் படுத்துவார்கள்சாந்திக்கூத்து – அதனை அகக்கூத்து அல்லது வேத்தியல் என்றும் அது அரசர்க்குரியதென்றும் கொள்வர்.
நாயகன் சாந்தமாக ஆடுவது சாந்திக்கூத்தாகும். – அது நான்கு வகைப்படும் எனக் காட்டுவர்.
1) சொக்கம் - இது தாள லயத்தை ஆதாரமாக் கொண்டது2) மெய்க்கூத்து - இது உள்ளக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டது. இவ்வகைக் கூத்தும் தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப் படும்.3) அவிநயக்கூத்து - இது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யுங்கூத்து4) நாடகம் - இது கதை தழுவி வருங்கூத்து - இவை யாவும் சேர்ந்து வருவதே நாடகம் என்பர்.
மற்றது விநோதக் கூத்து – அதனை புறக்கூத்து அல்லது பொதுவியல் - அது ஏனையோர்க்கு உரியது என்பர். விநோதக்கூத்து குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம் நோக்கு, தோற்பாவை என்பன அடங்கும். இவை பல்வகைப்படும் நாடக உறுப்புக்கள்: சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் நாடக உறுப்புக்களாம்.
சுவை: சுவை ஒன்பது எனக்கூறுவர். இவை உள்ளத்துள் நிகழ்வதாகும். வீரம், அச்சம், இழிப்பு, அற்புதம், இன்பம். அவலம், நகை, நடுவுநிலைமை, உருத்திரம் என்றார். நடுவுநிலைமை ஐம்புலன் அடங்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமம் வெகுளி மயக்கத்தில் நின்றும் நீங்கியவர் ஆதலால் யாவரும் கண்டஞ்சும் யமனுக்கும் அஞ்சார். எத்துணை இளிவரல் காணினும் இழித்துக் கூறார். கல்வி நிறைந்திருந்தும் அதனைப் பொருளெனக் கொள்ளாக் காரணத்தால் பெருமிதங்காட்டார். புதுமை , பெருமை சிறுமை ஆக்கமென்பன நிலையில்லாப் பொருளென அறிவார். ஆதலின் அவற்றினைக் கண்டு வியப்புறார். வெகுளார் ஆதலினால் சமநிலை எனப்படும் நடுவுநிலை நல்லோரிடத்துப் பொருந்தியிருக்கும். ஆதலினால் நடுவுநிலையைச் சற்றுப் புறந்தள்ளி “நகையே அழுகை, இளிவரல், மருட்கை. அச்சம், பெருமிதம், வெகுளி. உவகை’ என்று அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப’ எனத் தொல்காப்பியர் கூறுவர். எடுத்துக் காட்டியல்இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களை மொழிமாற்றம் செய்து உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கேற்ப விளக்கியுள்ளார். நாடகத்தின் அமைப்பை, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், என விளக்கி, அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டுகிறார். அத்துடன் நாடகம் தரும் சுவையுணர்வுகiளான வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுவுநிலை என்ற ஒன்பது சுவைகளையும் விளக்கி, அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இந்நாடகங்களில் சிலவற்றின் கதைகளை மட்டும் கூறிச் செல்கிறார்.தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலானந்தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமுகம் செய்வதுடன் வடமொழி நாடக மரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்பத் தமிழ் நாடக மரபையும் காட்டுகிறார். ஒரு வகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந்ததென்பதையும், அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாக இருக்கலாம். சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க நாடகங்களையும் ஆட்டுப்பாடலில் இருந்து ஆத தோன்றியமையையும் இணைத்து ஆட்டுப்பாடலைத் தமிழரின் பண்டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல். நாடக ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த தூரப்பார்வையினைப் புலப்படுத்துகிறது. என பேராசிரியர் சி.மௌனகுரு குறிப்பிடுவர்.ஒழிபியல்ஒழிபியல் தனஞ்செயனார் வடமொழியில் இயற்றிய இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்து கூறுகிறது. நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகமாகும். இவற்றைவிட தொல்காப்பியர் சூத்திர உரையினின்றும் எடுக்கப்பட்ட நாடகத்துக்குரிய அவிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்துக்குப் பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல். அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் மறுபதிப்பாக இலங்கையின் பிரதேச அமைச்சு 1987 ஜூலை 19ல் வெளியிட்டுள்ளது. இந்த நூலைக் கற்பவர்கள் எத்தனை பேருளர்.? மதங்கசூழாமணியைப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களுக்குப் பாடநூலாக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே. நம்நாட்டுப் பேரறிஞர் சாத்திரங்களை நாங்களே ஒதுக்கிவிடுகிறோம். பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் மதங்கசூளாமணியை இக்காலத்துக்கு ஏற்றவகையில் இலகு படுத்தி வருங்கால இளையதலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டுள்hர்கள். யார் முனவந்து செய்வார்கள் என்று தமிழர் சமூகம் எதிரபார்த்துக்கிடக்கிறது.
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP