Tuesday, October 26, 2010

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
23
நல்ல நிலவு வீசிக் கொண்டிருந்தது. சுற்றிவரக் கதிரைகள் போடப்பட்டிருந்தன. கயல்விழி பாயோடு வந்தாள். சில கதிரைகளை நகர்த்திவிட்டுப் பாயை விரித்தாள். மங்கையும் கயலும் பாயில் இருந்தார்கள். “எப்படி அம்மா கட்டைபறிச்சான்? பிடிச்சிருக்கா”? மங்கை தொடங்கினாள். “நான் முதல் கட்டைபறிச்சான் வந்திருக்கிறன். நாகதம்பிரான் திருவிழாவுக்கு வந்தனான். நல்ல ஊர். நல்ல மனங்கள் கொண்ட மக்கள்.” அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அருண் நிலத்தைப் பார்த்தபடி இருந்தான். சுந்தரத்தாரும் வந்தார். அருண் மெதுவாக எழுந்து அறைக்குள் சென்றான்.
கொஞ்சநேரம் கதைத்தார்கள். உறக்கம் வந்து கண்களைத் தாலாட்டியது. “அம்மா பயணக்களைப்பு. உங்களுக்கும் அலுப்பாக இருக்கும். நாளைக்கு எங்களுக்கு நிறைய வேலையிருக்கு”. மங்கை சொன்னதும் “அப்படி என்ன வேலை”? அருணின் அம்மா கேட்டார். அம்மா காலையில நானும் கயல்விழியும் பாடசாலைக்குப் போவம். அங்கிருந்து ஊர் விசயங்களையும் கவனிப்பம். அதோட எங்கட இளைஞர் விவசாயத் திட்டம் இருக்கு. அங்கே போவம் அந்த வேலைகளையும் கவனிக்க வேணும். இப்படி எக்கச்செக்கமான வேலை. ஒய்வெடுக்க ஏலாது. நூங்க ஓய்வெடுத்தா எல்லாம் ஓய்ந்துவிடும். மங்கை வளவளத்தாள். சுந்தரத்தார் மங்கையின் துணிச்சலான பேச்சைக் கண்டு சிரித்தார்.
“மங்கை நீ இஞ்ச அம்மாவோடு உறங்கலாமே? அம்மாவத் தனிய விடலாமா? சுந்தரத்தார் கேட்டார். “எனக்கு என்ன தனி. என்ர பிள்ளயும் இருக்கிறான். மங்கை நீங்க போய் தூங்குங்க. நாளைக்குக் கதைப்பம். அருணின் அம்மா கூறினார். “இல்லயம்மா நானும் உங்களோட வாறன். மங்கை போய் தனது படுக்கையை எடுத்து வந்தாள். அம்மாவுக்காக ஒதுக்கிய அறையில் தனது படுக்கையையும் விரித்தாள். கயல் நாளைக்குச் சந்திப்பம். நாங்க ஓய்வெடுக்கப் போறம். சோல்லிக் கொண்டு அறையினுள் சென்றாள். கயல்விழியோடு சுந்தரத்தார் பின்னால் சென்றார். தங்கம் சென்றார்.
நல்ல காற்று. நுளம்புத் தொல்லையும் இல்லை. இருவரும் படுக்கையில் சாய்ந்தார்கள். “அம்மா ஒன்று சொல்லுவன் கோவிக்கக் கூடாது. சொல்லட்டா”? மங்கை தொடங்கினாள். “நான் என் கோவிக்கிறன். சொல்லுங்க”. பதிலளிதார். “அம்மா எங்கட கயல்விழியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க”? கேள்வியாகக் கேட்டாள். “நல்ல பிள்ளைபோல்தான் தெரியுது. அவளுக்கென்ன”? விசாரித்தார். அவளைப்பற்றி அறியும் ஆவலில் மனதைக் கட்டுப்படுத்தி உசாரானார். “கயல்விழி தங்கமான பிள்ள. அவமேல அருணுக்கும் விருப்பமிருக்குப் போல் தெரியுது. கயலுக்கும் விருப்பம் இருக்கு. ஆனால் இருவரும் தாங்கள் விரும்புவதை வெளியில் காட்டுறாங்க இல்லை. அம்மா இந்த இரண்டு பேரையும் ஒன்று செர்த்து வையுங்கம்மா”. கெஞ்சினாள். “நல்ல விசயத்தைச் சொல்லுறாளே”. அவருக்குச் சந்தோசம்.
“மங்கை அருணுக்கு கயல்விழி மேல் அன்பு இருக்கிறது. அவன் பல்கலைக் கழகத்தை விட்டு வந்ததுமே கயல்விழியைத்தான் மணம் முடிப்பேன் என்று இன்றுவரை காத்திருக்கிறான். அவனுக்காத்தான் நான் வந்திருக்கிறன். நாங்க எல்லாரும் சேர்ந்து நல்லபடியாக செய்து வைப்பம்.” அம்மா இப்படிக் கூறுவார் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. உடனே ஓடிப்போய் கயல்விழிக்குச் சொல்ல வேணும் என்று மனம் தள்ளியது. அடக்கிக் கொண்டாள். சந்தோசத்தில் உறங்கிவிட்டாள். கயல்விழிக்கு உறக்கம் வரமறுத்தது. அப்பா வந்ததும் அருண் ஏன் அறைக்குள் போனார். பிடிக்கவில்லையா? அல்லது மரியாதையா? மனதைப் போட்;டுக் குளப்பிக் கொண்டிருந்தாள். எப்படியோ உறங்கிவிட்டாள்.
எப்படித்தான் பிந்தி உறங்கினாலும் விடியாலா சத்தத்தில் கயல்விழி எழுந்து விடுவாள். தனது கடமைகளை முடித்துக் கொண்டு தேநீரோடு ஏர7pக்’கரை வீட்டு வாசலில் கதவைத் தட்டியபடி நின்றாள். அம்மா எழும்பியாச்சா? இந்தாங்க தேநீர். கொடுத்தாள். சன்னம்மா உனக்கும் தேநீர் இந்தாங்க பிடியுங்க ஒரு நையாண்டியுடன் கொடுத்தாள். “ஆமா சொல்லுவீங்க. தெரியும் உங்கட லெவெல். கொடுப்புள் சிரித்த வண்ணமே தேநீரை வாங்கனிhள். அருணின் அறைக் கதவைத் தட்டிக் காத்திருந்தாள். அவன் கதவைத் திறந்ததும் “குட் மோnனிங். தேநீர். இந்தாங்க”. ஓரு புன்னகையை வீசியவாறு கொடுத்தாள். அந்தக் காலைப்பொழுதில் முழுநிலவாய் ஜொலித்தாள். முகம் மலர்ந்து தேநீரைப் பெற்றுக் கொண்டான்.
இன்பபுரி நகராக படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. நாட்கள் நகரத் தொடங்கின. பசி, பட்டினி பஞ்சம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. குழுக்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வலுவூட்டப்பட்டது. வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது, கணக்குப் பேணும் வழிமுறைகள். வங்கியில் hணமெடுத்தல், வைப்பில் இடுதல். சுகாதாரப் பழக்க வழககங்கள், முதலுதவிப் பயிற்சிகள். ஆனர்த்த முகாமைத்துவும் பற்றி பயிற்சிகளில் தேறியவர்களாள மக்கள் மாறிவிட்டனர். உற்பத்தியைப் பெருக்கும் வழிவகைகளைத் தெரிந்திருந்தனர். சுய உதவிக்குழுக்கள் தமக்குள்ளேயே தேவைகளைக் கண்டறியும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். அதற்கேற்ப தேவைகளை நிறைவேற்றும் தீர்மானங்களை எடுக்கவும் பழகிவிட்டனர்.
காணிகளில் பயிர்கள் வளர்ந்து காற்றிலாடி அசைந்தன. அந்த மாலைபொழுது அழகாக இருந்தது. இளைஞர்கள் குழுமி இருந்தனர். இன்று சுய உதவிக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைமை தாங்க வேண்டும். வழமையான கூட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நீங்களே தீர்மானங்களை பரிசீலனை செய்து முடீவுக்கு வரவேண்டும். நாங்கள் பார்வையாளர்களாக இருப்போம் அவசியம் ஏற்புடும்போது நாங்கள் உதவுவோம். குயல்விழி கேட்டுக் கொண்டாள். முப்பது சுய உதவிக்குழுக்கள் சமுகம் கொடுத்திருந்தன. அவர்களுக்குள்ளேயே மற்றக்குழுக்களும் இருந்தனர்.
“நாகேஸ்வரன் தலைமை தாங்குவார்.” ஏகோபித்த முடிவாக எழுந்தது. நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை விளக்கினார்கள். தங்கள் தேவைகளை முன்வைத்தார்கள். நமது முக்கிய தேவையாக இருப்பது சிறிய அரிசி ஆலை. ஆந்த ஆலையை பொதுவான இடத்தில் வைக்கவேண்டும். அதனால் பலவசதிகள் ஏற்படும். மக்கள் மூதூருக்கு எடுத்துச் செல்லும் கஸ்டம் நீங்கும். அந்த மெசினில் நெல்மட்டுல்ல மா மிளகாய்த்தூள் எல்லாம் அரைக்கலாம். அப்படி அரிசி ஆலையைத் தொடங்கினால் நமது குழுக்களுக்கு லாபம். நமது பணம் நமக்கே பயன்படும். இரண்டு பேர் வேலைவாய்ப்புப் பெறலாம். தவிடு கால்நடைகளுக்குத் தீனியாகும். இதற்குரிய பணத்தினை குழுவில் இருந்து பெற்று அதற்குரிய வட்டியையும் குழுவுக்குக் கட்டலாம். விவாதித்தார்கள். நல்ல பயனுள்ள விசயம். இதனை உடனடியாக நடைமுறைப் படுத்துவோம். உரிய விலை மனுக்களைக் கோரி நிறைவேற்றும் தீர்மானம் முடிவாகியது. நமது பிரதேசத்தில் கால்நடைகள் உள்ளன. நல்ல இனப்பசுக்கள் இல்லை. பொலநறுவை அல்லது கந்தளாய் பண்ணைகளில் இருந்து இளம் காளைகளை வாங்கினால் எதிர்காலத்தில் பயனைப் பெறலாம். நீண்ட காலப்பயனுள்ளதாக இருக்கும்.
நமது மக்கள் பாலைச் சேகரித்து வைப்பதங்குரிய வசதிகள் இல்லாமல் பாலைச் சேகரித்துப் பயன்பெறத் தெரியாமல் உள்ளார்கள். அதேவேளை பால்மா பக்கற்றுக்களை வாங்கிப் பாவிக்கிறார்கள். நமது கட்டாக்காலி மாடுகளைக் கட்டி பால் கறந்;து பயன்பெற வற்புறுத்த வேண்டும். பால் சேகரித்து பால்சபைக்கு அறிவித்து அவர்களை இங்கு வந்து பாலை எடுத்துச் செல்ல வழிசெய்யவேண்டும். குழுக்கள் நல்ல செயற்திட்டங்களை முன்வைத்தார்கள். “கிராம முன்னேற்ற அபிவிருத்தி அலுவலர் என்ற வகையில் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நீங்கள் சொன்ன அத்தனை திட்டங்களையும் எற்கனவே உங்கள் ‘சேர்ந்து வாழ்’ நிறுவனத் தலைவி உரிய இடங்களுக்கு அனுப்பிவிட்டார். அதனை அவரது நிறைவேற்று முகாமையாளர் விளக்குவார். அருண் மங்கையை இழுத்து விட்டான்.
அரிசி ஆலை வேலைகள் முடிந்து விட்டன. உரிய இயந்திரம் நாளை வரும். அதற்குரிய வேலைகளை பொருளாளர் ராகினி செய்து விட்டார். கோயிலடியில் நூலகத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் நாளை மாலை இதே நேரம் திறக்கலாம். உங்கள் எல்லோரையும் அழைக்கிறோம். குழுக்கள் ஆரவாரித்தார்கள். பால் சேகரிக்கும் விசயம் தொடர்பாக பால்சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகமாக அடுத்த கிழமை நிறைவேறிவிடும். ஆனால் நீங்கள் மனம் வைத்தால்தான் பால்மா பக்கற் விவகாரம் இல்லாது போகும். ராகினி விளக்கினார்.
குழுக்களே தீர்மானம் எடுத்தார்கள். மாடு உள்ளவர்கள் தங்கள் மாடுகளைத் தேடிப் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கட்டிப் பால்கறந்து தந்தால் உங்கள் பாலை நாங்கள் வாங்கிப் பால்சபைக்குக் கொடுப்போம். உரிய பணத்தினை உங்களுக்கு வழங்குவோம். இதனை நடைமுறைப் படுத்துங்கள். ஒரு வேண்டுகோளாக விடுத்தார்கள். “கல்விக் குழு எப்படி இயங்குகிறது.”? ஓருகுழு வினாவியது. குல்விக்குழுதான் சரியாக இயங்குகிறது. வீடுகளில் பிள்ளைகள் படிக்கிறார்கள். பெற்றோர் தங்களாலான முயற்சிகளை எடுக்கிறார்கள். பாடங்கள் நல்ல முறையில் நடைபெறுகின்றன. இரண்டு பாடசாலைகளும். முன்பள்ளிகளும் சேர்ந்து விளையாட்டுப் போடடிகளையும், கலைவிழாவையும் நடத்த ஒழுங்குகளையும் செய்கிறோம். கல்விக்குழு செயற்பாடுகளை விளக்கியது. இவற்றை எல்லாம் கண்ணால் கண்டு, களிப்போடு நின்றாள் கயல்விழி.
தொடரும்

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP