Saturday, December 25, 2010

சிறுவர் கதைகள்
நரியும் காட்டுக் கோழியும்
அந்தக் காட்டில் மிருகங்களும், பறவைகளும் வாழ்ந்தன. தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தாமே பேசித் தீர்த்தன. அந்தக் காட்டில் ஒருநரிக் கூட்டம் வாழ்ந்தது. நரிக்கூட்டத்துக்கு ‘வல்லவன்’ என்ற நரி தலைவனாக இருந்தது. வல்லவன் தந்திரத்தில் வல்லது. மிகவும் புத்தியும் உள்ளது. “எந்தப் பிரச்சினை வந்தாலும் எங்கள் தலைவர் தீர்த்து வைப்பார். இனிய அன்பர்களே உங்கள் பிரச்சினையை எங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்.” என்று நரிக் கூட்டம் பரப்புரைகளைச் செய்தன.


விலங்குகளும், பறவைகளும் நம்பின. விலங்குகளும் பறவைகளும் வந்தன. தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை கேட்டன. நரி அவற்றைக் அனுதாபத்துடன் பார்க்கும். அவை சொல்வதைக் கவனமாகக் கேட்கும். மிருகங்கள் தங்கும் இடங்களைக் கேட்டறியும். பொருத்தமில்லாத இடங்களை மாற்றச் சொல்லும். பிரச்சினைகளுக்கு ஏற்றப் பதிலைக் கூறும். அவை சந்தோசத்துடன் கேட்டுப் போகும். வல்லவன் நரியின் புகழ் காடெங்கும் பரவியது. நாட்கள் நகர்ந்தன. ஒருதரம் வந்த விலங்கு
மீண்டும் வருவதில்லை. அதேபோல் பறவைகளும் வருவதில்லை. நரியாருக்குப் பின்னால் பல நரிகள் உதவிக்கு இருந்தன. தன்னிடம் வரும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தனது பெருமைகளைச் சொல்லும். தான் அவற்றுக்குச் சொன்ன பதில்களைச் சொல்லும். ஒரு நாள் ஒரு காட்டுக் கோழி வந்தது. அந்தக் கோழி கொழுத்து இருந்தது. நரியின் நாவில் எச்சில் ஊறியது. “என்ன பிரச்சினை”? என்று கேட்டது. “மரநாயும், கொடும்புலிகளும் என்னை வேட்டையாட வருகின்றன. நான் மரத்தின் உச்சங்கிளையில் தங்குகிறேன். நித்திரையில் விழுந்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது. நான் விழாது ஒருக்க வழி சொல்லுங்கள்.” என்றது.
நரி யோசனை செய்வது போல் நடித்தது. “நீ இப்போது தங்கும் இடத்தை மாற்று. நான் சொல்லும் இடத்தில் தங்கு. உனக்குப் பயம் இல்லாது போகும். மரநாயும், கொடும்புலிகளும் வராது. அது நான் வாழும் பகுதி” என்று ஒரு இடத்தைக் கூறியது.
காட்டுக் கோழி நம்பியது. நரி சொற்படியே செய்வதாகக் கூறியது. “எனது நண்பன் கரிக்குருவி. அவன் பக்கத்துக் காட்டுக்குப் போயிருக்கிறான். அவன் வந்ததும் சொல்லிவிட்டு வருகிறேன்”. என்றது. “நீ விரைவில் நான் சொன்ன இடத்துக்குப் பேய்விடு. மரநாய் பொல்லாதது. கவனம்.” என்றது. காட்டுக் கோழி போவதையே பார்த்துக் கொண்டிருந்தது.நாட்கள் சென்றன. கரிக்குருவி வரவில்லை. நரி குறிப்பிட்ட இடத்தில் தங்கியது. அந்தக் காட்டுக் கோழி திரும்பி வரவில்லை. நரி;யிடம் சென்ற மிருகங்கள் காணாமல் போயின. பறவைகளும் குறைந்து கொண்டு வந்தன. நரி கொழுகொழுவென்று கொழுத்திருந்தது. நரிக்கூட்டத்துக்கு இலகுவில் உணவு கிடைத்தது. நரிக்கூட்டம் அதிக தூரம் வேட்டையாடப் போவதில்லை.
கரிக்குருவி காட்டுக் கோழியைத் தேடி வந்தது. கோழியைக் காணவில்லை. தனது நண்பனைக் காணாது வாடியது. தனிமையில் இருந்து சீட்டியடிக்கும். அந்தச் சீட்டி அழகான கொக்கின் காதுகளில் விழுந்தது. மெதுவாக கரிக்குருவியிடம் வந்தது. “நண்பா நீ ஒவ்வொரு நாளும் அழகாகப் பாடுகிறாய். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. யாருக்காகப் பாடுகிறாய்?” கொக்குக் கேட்டது. “காட்டுக் கோழியை நினைத்துப் பாடுகிறேன்” கரிக்குருவி பதிலளித்தது.
“காட்டுக் கோழிக்கு என்ன நடந்தது”? கொக்கு வினவியது. “தெரியாது. எப்படியும் காட்டுக் கோழி வரும். அதுதான் பாடுகிறேன்”. என்றது.“கொக்கொக் கொக்” சத்தம் கேட்டது. கரிக்குருவி சத்தம் வந்த இடத்துக்கு விரைந்தது. பின்னால் கொக்கும் விரைந்தது. காட்டுக் கோழியைத் தேடியது. கோழி ஒரு புதருள் மறைந்திருந்தது. கரிக்குருவி கண்டு கொண்டது. சந்தோசத்தால் துள்ளியது காட்டுக் கோழி வாடி மெலிந் திருந்தது. பயத்தால் நடுங்கியது.
“நண்பா என்ன நடந்தது? கரிக்குருவி கேட்டது? கோழி பயந்து நடுங்கியது. நரி எனக்கு ஒரு மரத்தைக் காட்டியது. அந்த மரத்தின் ஒருகிளை பாறைத் தொடரை மூடியிருந்தது. அழகான கூடுபொல் இருந்தது. அதில் படுத்தால் நல்ல தூக்கம் வரும். சுகமாகவும் இருக்கும். அதில தங்குமாறு சொன்னது. நானும் இரண்டு நாட்கள் தங்கினேன். நல்ல சுகமாக இருந்தது. அடுத்த நாள் நான் விழித்திருந்தேன். நரிக்கூட்டம்
மெதுவாக வந்தது. அந்த நரி‘வல்லவன்தான்’ தலைவன்;. அது முன்னால் வந்தது. “இது நல்ல
கொழுத்த காட்டுக் கோழி. நான் முன்னுக்குப் போகிறேன். என்னைக் கண்டால் கோழி ஓடாது. நான் பிடித்துச் சாப்பிடுவேன். பின்னால் நீங்க வாங்க” சொல்லி பாறையில் ஏறியது.நான் பின்புறத்தால் வேறுமரத்தில் தாவியிருந்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை. “ஆஹா.. கோழி தப்பிப் போய்விட்டது. நான் ஏமாந்து போனேன். ஆனால் அந்தக் கோழியை விடமாட்டேன். என்று சொல்லிப் போனது. அதுதான் பயமாக இருக்கிறது.” கோழி சொல்லிக் கவலைப் பட்டது. இந்த நரிக்கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும். என்ன செய்யலாம்.”? காட்டுக் கோழி கேட்டது. மூன்றும் ஆலோசித்தன. கொக்கு குரங்குகளிடம் சென்றது. காட்டுக் கோழியின் செய்தியைக் கூறியது. குரங்குகள் பாய்ந்து வந்தன.
“சரி நாங்கள் நடவடிக்கை எடுக்கறோம். இன்றைக்கே கூட்டம் போட்டு முடிவை எடுப்போம்”. என்றன. மிருகங்களும் பறவைகளும் ஒன்று கூடின. நரியின் தந்திரத்தை விபரமாகக் கூறின. காட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்தன. அப்படியே நரியின் இடத்துக்கு நடந்தன. நரிக்கூட்டம் கண்டு கொண்டது. “இன்றைக்கு இவ்வளவு கூட்டமா? நமக்கு வேட்டைதான். தலைவனிடம் சொல்வோம்”. என்று ஓடின. செய்தி நரித்தலைவன் ‘வல்லவன்’; காதில் விழுந்தது. உடனே “ஒவ்வொருவராக உள்ளே விடுங்கள். கட்டளையிட்டது. வழமையாக நரி இருக்கும் இடத்தில் அரசனைப் போல் இருந்தது.குரங்குகள் பாய்ந்து வந்தன. அவற்றை நரிக்கூட்டம் தடுத்தது. “ஒவ்வொருவராக தலைவரிடம் போங்கள்”;. கட்டளை இட்டன. பின் தொடர்ந்து யானைகள் வந்தன. நரிகளின் வால்களைப் பிடித்துத் தூக்கி வீசின. கொம்பன் யானை உள்ளே போனது. “ஓ…. நண்பரே.. உங்களுக்குமா பிரச்சினை. சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே”? நரித்தலைவன் நையாண்டியுடன் சொன்னது. “பிரச்சினை நீதான். நீயும் உன் கூட்டமும் இந்தக் காட்டின் நிம்மதியைக் கெடுத்துப் போட்டீங்க. உங்களை இப்படியே விட்டால் காடு அழிந்து விடும். முதலில் உனக்குப் பாடம் படிப்பிக்க வேணும்.” கூறியது. நரித்தலைவனின் வாலைப் பிடித்து இழுத்தது. ஒரே சுற்றாகச் சுற்றி வீசியது. நரித்தலைவன் வல்லவன் தூரத்தே போய் விழுந்தது. பின்னால் யானைக்கூட்டம் வந்தது.கொக்குப் பறந்து வந்தது. யானையின் மேலிருந்து நரிகளைக் காட்டியது. சில நரிகள் பற்றைகளுள் பதுங்கின. அவற்றைக் காட்டுக் கோழி கண்டு கொண்டது. எங்களை ஏமாற்றி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. இனியும் உங்களை விட்டால் மற்ற மிருகங்க ளுக்கு ஆபத்து. விடமாட்டோம். துரத்துங்கள். சத்தமிட்டது. பதுங்கியிருந்த நரிகள் ஓடத்தொடங்கின. எல்லா மிருகங்களும் பறவைகளும் நரிக்கூட்டத்தை ஓட ஒட விரட்டின.
இப்போது அந்தக் காட்டில் நரிக்கூட்டம் இல்லை. காட்டு மிருகங்களும் பறவைகளும் நிம்மதியாக வாழ்ந்தன..




ஆமையும் கொக்கும்
மழை வேண்டிய காலத்தில் பெய்யவில்லை. அதனால் வரட்சி நிலவியது. குளம் வற்றிக் கொண்டு வந்தது. சனங்களுக்குத் திண்டாட்டம். குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் கிணறுகளில் தண்ணீர் நிற்கும். கிணற்று நீரும் வற்றிக் கொண்டு வந்தது. சிறுவர்கள் குளத்தைப் பார்த்தார்கள். தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. அவர்களுக்குக் கொண்டாட்டம். அவர்கள் மீன்களைப் பிடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குளத்தில் ஆமைகளும் வாழ்ந்தன. ஆமைக்குக் கவலை. தண்ணீர வற்றினால் குளத்தில் வாழமுடியாது.
ஆமைகள் தினமும் வானைப் பார்த்து ஏங்கும். இன்றாவது மழை வருமா? கவலையோடு காத்திருக்கும். மழை பெய்தபாடில்லை. மழை பெய்யாது போனால் என்ன செய்வது? நினைந்து வாடியிருக்கும்.
தாமரை இலைகள் வாடிக்கிடந்தன. பூக்கள் இல்லை. மிருகங்கள் தண்ணீர் குடிப்பதற்கு வந்தன. தூரத்தில் நின்று பார்த்தன. சிறுவர்கள் குளத்தில் இறங்கினார்கள். இந்தச் சிறுவர்கள் குளத்தைக் கலக்கி விட்டார்கள். தண்ணீர் எப்படிக் குடிப்பது? குளத்தின் மத்தியில் ஒரு பெரிய பாறையிருந்தது. ஆமை பாறையில் கவலையோடு இருந்தது. கொக்குக் கூட்டம் பறந்து வந்தது. வட்டம் அடித்து நடுக்குளத்தில் இறங்கியது. கொக்குகள் பாறையில் குவிந்து நின்றன.
“ மழை பெய்யவில்லை. இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டு வருகிறது. தண்ணீர் வற்றினால் நமக்கு உணவு கிடைக்காது. மனிதர்களையும் வறுமை வாட்டும். என்ன செய்வது”? ஆமை தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. ஆமையைக் கொக்குகள் சூழ்ந்து கொண்டன. சில கொக்குகள் கிண்டலடித்தன. “என்ன ஆமையண்ணா..கவலையா”? கேட்டன. “இருக்காதா பின்ன? குளத்தில தண்ணீர் இல்லை. உணவுப் பஞ்சம். காட்டு மிருகங்களுக்கும் குடிநீரும் இல்லை. சனங்கள் கஸ்டப்படப் போறங்க” கவலையோடு கூறியது.
“ஆமையண்ணா நீயேன் கவலைப் படுகிறாய்?. இந்தக் குளம் இல்லாட்டி இன்னொரு குளம். போகவேண்டியது தானே. நாங்க இந்த ஒரு குளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. பறந்து திரிந்து வசதியான குளங்களில் வாழ்வோம். இது இல்லாட்டி அது”. கொக்குகள் சேர்ந்து சிரித்தன. “எல்லாவற்றுக்கும் ஒரு நியதியிருக்கிறது. நீங்க பறவையினம். உங்களுக்குச் சிறகிருக்கிறது. உங்கள் வாழ்க்கை முறை வேறு. எங்களுக்கு உங்களைப் போல் வாழமுடியாது. இந்தக் குளத்தைச் சுற்றித்தான் வாழ்க்கை”. ஆமை அமைதியாகக் கூறியது.
“ஆமையண்ணா எங்களோடு வாங்க. நாங்க உங்களக் கூட்டிப்போகிறோம். நல்ல வசதியாக வாழலாம்.” கொக்குகள் கூறின. ஆமை சிரித்தது. “ஆமையண்ணா ஏன் சிரிக்கிறிங்க”? கொக்குகள் சேர்ந்து கேட்டன. “‘கொக்குகள் தூக்கிச் சென்ற ஆமை’ கதை தெரியுமா உங்களுக்கு?. ஆமையாகிய எங்களுக்கு புத்தியில்லை என்று கதை விடுறாங்க. இப்படித்தான் இந்த மனிதர்கள் தங்களுக்கு வேண்டியமாதிரிக் கதை விடுவாங்க. நாங்க யானையைப் போல பலசாலிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா?. நமக்குள்ளே ஒரு ஒற்றுமையிருக்கிறது.? கொக்குகளைப் பார்த்து ஆமை கேட்டது. “ என்ன ஒற்றுமை? சொல்லுங்க”. கொக்குகள் ஆவலுடன் கேட்டன. “நீங்களும் முட்டையில் இருந்துதான் வந்தீர்கள். நானும் முட்டையில் இருந்துதான் வந்தேன். அதுதான் நமக்குள் உள்ள ஒற்றுமை.” ஆமை சொல்வதைக் கொக்குகள் கவனமாகக் கேட்டன.
“எங்கள் அம்மா மணலில் ஒரு வீடமைத்து முப்பது முட்டைகளையாவது இடுவார். நாங்களாகவே குஞ்சு பொரித்து வெளிவருவோம். எங்கள் உணவை நாங்களே தேடிக் கொள்வோம். நீங்கள் அப்படியில்லை. உங்கள் அம்மா முட்டை விட்டபின் அடைகாக்கவேண்டும். உணவு ஊட்டி விடவேண்டும். பறவை காட்டவேண்டும். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நாங்கள் இந்தச் சூழலுக்குப் பழக்கப் பட்டவர்கள். எங்களால எதையும் சமாளிக்க முடியும். நாங்கள் மற்ற உயிர்களைப் பற்றிதான் கவலைப் படுகிறோம். நாங்கள் மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம். மனிதர்கள் நல்லவர்கள். அவர்களையும் சூழல்தான் பாதிக்கிறது. கண்டவற்றை எல்லாம் சாப்பிட்டுக் கொழுப்பேறிப் போச்சு. மருந்தும் மாத்திரையுமாக மனிதர் மாறிவிட்டார்கள். தாவர உண்ணிகளாக மாறிவருகிறார்கள். அங்கே பாருங்கள் சிறுவர்கள் எங்களை நண்பர்களாகச் சேர்த்து விளையாடுறாங்க. இதைவிட சந்தோசம் வேறென்ன இருக்கு”? ஆமை சொன்னது.
கொக்கு மேலெழுந்து பார்த்தது. ஒரு சிறுவன் பெரிய ஆமையில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். கொக்குகள் எழுந்து பறந்து பார்த்தன. வுhனம் இருட்டியது. மின்னல் வெட்டியடித்தது. “ஆமையண்ணா நாங்க போய்வாறம். மழைவரப் போகுது”. கூறியபடி வந்த வழியே வானில் பறந்து சென்றன. இடிமுழக்கத்தோடு மழை சோவெனப் பெய்தது. ஆமையின் மனதிலே குதூகலம் பொங்கியது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுதான் தவமாகும்.
தாமரைக் குளம்
அந்தக் காட்டில் மிகப்பழைய குளமிருந்தது. குளம் பெரியது. ஆழமானது. குளத்தின் மேற்காக வயல்நிலங்கள் பரந்து கிடந்தன. குளத்தில் நீர்நிறைந்து இருந்தது. குளம் நிறையத் தாமரை படர்ந்திருந்தது. தாமரை தண்ணீர் மட்டத்துக்கு வளர்ந்து பூத்திருக்கும். குளத்திலிருந்து நீர் வயல்களுக்குப் பாயும். வயல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். களத்தை நம்பிப் பல உயிரினங்கள் வாழ்ந்தன. காட்டு விலங்குகள் ஒருபுறம் தண்ணீர் குடிக்க வரும். மீன் கொத்தி மரத்தில் காவலிருக்கும். கொக்குநிரை சேர்ந்து கும்மாளமிடும். மைனாக்கள் கரையிலிருந்து கதையளக்கும்.
ஆமைகளும் வாழ்ந்தன. அவை தண்ணீருக்குள்ளும் வாழும். தரையிலும் வாழும். குளத்தையண்டிய புதர்களில் முயல்களும் வாழ்ந்தன. மாலைவேளைகளில் ஆமைகள் குளக்கரைக்கு வரும். பறவைகளும் கூடும். முயல்கள் சேர்ந்து விளையாடும். மைனாக்கள் சேர்ந்தால் இரைச்சாலாய் இருக்கும். அவை ஆளுக்காள் சண்டையிட்டுக் கட்டிப்புரளும். ஆமைகள் பார்த்துச் சிரிக்கும். கொக்குகள் வேடிக்கை பார்க்கும்.
“ஏன் சண்டை பிடிக்கிறீங்க. சந்தோசமாக இருங்கப்பா” மைனாக்கபை; பார்த்து ஒரு ஆமை கூறியது. வாய்க்கார மைனாக்களுக்குக் கோபம் வந்தது. “ஓகோ ஆமைக்கு வந்த ரோசத்தைப் பாரு. ஒரு மைனா ஏளனமாகச் பார்த்தது. “இருக்காத பின்ன? எல்லாம் அந்தா இருக்கிற முயல் செய்தவேலை” சுட்டிக் காட்டிச் சொன்னது. “முயல் என்ன செய்தது”? சின்ன மைனா கேட்டது . “உனக்கு விளங்காது. ஒரு ஓட்டப் போட்டி நடந்தது. ஆமை அரக்கியரக்கிப் போனது. முயல் வேகத்தோடு ஓடியது. ஆமையைக் காணவில்லை. இந்த ஆமை என்னை வெல்வதாவது. இடையில் ஓய்வெடுக்க எண்ணியது. அப்படியே நித்திரை கொண்டிற்று. ஆமை சத்தமில்லாமல் போய்
வெற்றிபெற்றது. அது தான் அவருக்குத் தலைக்கனம்.” பெரிய மைனா சத்தமாகக் கூறியது.. அந்த நேரம் பார்த்துக் “கா..கா..” என இரைந்து கொண்டு இரண்டுகாகங்கள் பறந்து வந்தன. மைனாக்கள் வரையாடுவதை உற்றுக் கேட்டன. மீண்டும் “கா..கா..” கரைந்தன. கொக்குக் கூட்டமும் வலந்து சேர்ந்து கொண்டது.
“இந்த ஆமையின் தலைக்கனத்தைக் குறைக்க வழியிருக்கிறது. நாங்க ஒன்று சொன்னால் செய்வீங்களா”? காகங்கள் இரைந்தன. மைனாக்களின் ஆரவாரம் அடங்கியது. “சொல்லுங்க செய்வோம்”;. உடன்பட்டன.
இந்தக் குளம் பெரியது. இந்தக் குளத்தின் அந்தப் பக்கத்தில் உள்ள மரத்தை யார் முதலில் போய் தொடுகிறாரோ அவருக்குத்தான் வெற்றி.” காகங்கள் ஆரவாரித்தன. “ நானும் திருத்தம் சொல்லவேணும்”.





இந்தப் போட்டியில் சிறிய விலங்குகளும்;, பறவைகளும் பங்கு பற்றலாம். பறவைகள் பறக்கக் கூடாது. குளத்தில் இறங்கி நீந்திச் செல்லலாம். தண்ணீரில் நடந்து செல்லலாம். அல்லது குளத்தைச் சுற்றி ஓடலாம். மரத்தை முதலில் தொடுபவருக்கு ஓரு தேன்வதை கொடுக்கப் படும். நரி உற்சாகமாகச் சொன்னது.
முயல் விரைந்து ஓடி வெற்றிபெறலாம் என எண்ணியது. கொக்கு நடந்து குளத்தைக் கடக்கலாம். என்று நினைந்தது. ஆமை தனக்குள் சிரித்துக் கொண்டது. “இந்தக் கரையில் வீழ்ந்தால் அந்தக் கரையில் மிதப்பேன்” என்று ஆயத்தமானது. போட்டி பற்றிய செய்தி எங்கும் பரவியது. நிபந்தனைகள் அறிவிக்கப் பட்டன. பங்கு கொள்ள பறவைகளும், சிறிய விலங்குகளும் வந்தன. தொடக்குநர் ஒருவர் வேண்டும். யாரை அழைப்பது? தண்ணீர் குடிப்பதற்காக யானைக்கூட்டம் வந்தது. தொடக்குநராகவும், நடுவர்களாகவும் செயற்பட யானைகள் சம்மதித்தன. சில யானைகள் குளத்தின் அக்கரையில் உள்ள மரத்தடிக்குச் சென்றன. குளத்தினைச் சுற்றியும் நின்றன. போட்டி தொடங்கும் தொடக்குநர் நினறது. போட்டியாளர்களை அழைத்தது. குறிப்பிட்ட இடத்துக்கு யாவும் வந்தன.
முயல், ஆமை, கொக்கு, கானாங்கோழி, காகம், மைனா ஆகியன ஆயத்தமாக நின்றன. அவதானிப்பாளர்களாகக் கடமையாற்ற மீன்கொத்தி, மைனா. நரி முன்வந்தன. யானை கடைப்பிடிக்க

வேண்டிய விதிகளை விளக்கியது. போட்டியாளர்கள் குளத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்தன. எப்படி ஓடுவதென்று தீர்மானித்தன. யானை தனது தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது.
முயல் குளத்தைச் சுற்றி விரைந்தது. நரி முயலின் பின்னால் ஓடியது. ஆமை குளத்தில் வீழ்ந்து நீந்தியது. தாமரை ஆமைக்குத் தடங்கலாக இருந்தன. குளம் நிறைந்து தாமரை பூக்கள் விரிந்திருந்தன. இலைகள் பரவியிருந்தன. கொக்குத் தண்ணீரில் இறங்கியது. காகமும், மைனாக்களும் இறங்கின. கானாங்கோழி உற்றுப் பார்த்தது. இலைகள் பரந்துள்ள நிரையைக் கவனித்தது. பூக்களில் கால்கள் படாதவண்ணம் கால்களை வைத்தது. பூக்களின் ஊடே புகுந்து நடந்தது.
காகத்தால் விரைந்து நடக்க முடியவில்லை. சரியாக இலைகளின் மேல் கால்கள் வைக்கத் தடுமாறியது. தண்ணீரில் மூழ்கியெழுந்தது. மைனாவும் இலையில் ஓடிப் பார்த்து விழுந்தது. கானாங்கோழிக்கு நல்ல
பரீட்சையம் இருந்தது. இலைகளை அவற்றின் தண்டுகள் தாங்கும் இடத்தில் கால்களை வைத்து நடந்தது. மீன்கொத்தியுடன் மைனாவும் மரத்தில் இருந்து அவதானித்தன. எப்படி இந்தக் கானாங்கோழியால் இப்படி விரைந்து நடக்க முடிந்தது?. எப்படி அதன் கால்களைத் சரியாகத் தண்டு இலைகளைத் தொடும் இடத்தில் வைக்கிறது?. அதன் கால்கள் வைக்கும் இடைவெளியில் தாமரையிலைகள் பரந்து கிடந்தன. குளத்தின் ஓரத்தில் நரி அவதானித்துக் கொண்டிருந்தது.
கானாங்கோழி குளத்தைக் கடந்து மரத்தைத் தொட்டு நின்றது. யானைகள் கானாங்கோழியை வாழ்த்திப் பிளிறின. அதனைத் தூக்கித் தங்கள் முதுகில் வைத்து வாழ்த்தின. முயலை வென்ற ஆமை இன்னும் வெற்றிக்கம்பத்தை அடையவில்லை. முயல் விரைந்து ஓடியது. முயல் நரியை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவடவொன்று எளிதாகும்.









நரியும் காட்டுக் கோழியும்
அந்தக் காட்டில் மிருகங்களும், பறவைகளும் வாழ்ந்தன. தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தாமே பேசித் தீர்த்தன. அந்தக் காட்டில் ஒருநரிக் கூட்டம் வாழ்ந்தது. நரிக்கூட்டத்துக்கு ‘வல்லவன்’ என்ற நரி தலைவனாக இருந்தது. வல்லவன் தந்திரத்தில் வல்லது. மிகவும் புத்தியும் உள்ளது. “எந்தப் பிரச்சினை வந்தாலும் எங்கள் தலைவர் தீர்த்து வைப்பார். இனிய அன்பர்களே உங்கள் பிரச்சினையை எங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்.” என்று நரிக் கூட்டம் பரப்புரைகளைச் செய்தன.


விலங்குகளும், பறவைகளும் நம்பின. விலங்குகளும் பறவைகளும் வந்தன. தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை கேட்டன. நரி அவற்றைக் அனுதாபத்துடன் பார்க்கும். அவை சொல்வதைக் கவனமாகக் கேட்கும். மிருகங்கள் தங்கும் இடங்களைக் கேட்டறியும். பொருத்தமில்லாத இடங்களை மாற்றச் சொல்லும். பிரச்சினைகளுக்கு ஏற்றப் பதிலைக் கூறும். அவை சந்தோசத்துடன் கேட்டுப் போகும். வல்லவன் நரியின் புகழ் காடெங்கும் பரவியது. நாட்கள் நகர்ந்தன. ஒருதரம் வந்த விலங்கு
மீண்டும் வருவதில்லை. அதேபோல் பறவைகளும் வருவதில்லை. நரியாருக்குப் பின்னால் பல நரிகள் உதவிக்கு இருந்தன. தன்னிடம் வரும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தனது பெருமைகளைச் சொல்லும். தான் அவற்றுக்குச் சொன்ன பதில்களைச் சொல்லும். ஒரு நாள் ஒரு காட்டுக் கோழி வந்தது. அந்தக் கோழி கொழுத்து இருந்தது. நரியின் நாவில் எச்சில் ஊறியது. “என்ன பிரச்சினை”? என்று கேட்டது. “மரநாயும், கொடும்புலிகளும் என்னை வேட்டையாட வருகின்றன. நான் மரத்தின் உச்சங்கிளையில் தங்குகிறேன். நித்திரையில் விழுந்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது. நான் விழாது ஒருக்க வழி சொல்லுங்கள்.” என்றது.
நரி யோசனை செய்வது போல் நடித்தது. “நீ இப்போது தங்கும் இடத்தை மாற்று. நான் சொல்லும் இடத்தில் தங்கு. உனக்குப் பயம் இல்லாது போகும். மரநாயும், கொடும்புலிகளும் வராது. அது நான் வாழும் பகுதி” என்று ஒரு இடத்தைக் கூறியது.
காட்டுக் கோழி நம்பியது. நரி சொற்படியே செய்வதாகக் கூறியது. “எனது நண்பன் கரிக்குருவி. அவன் பக்கத்துக் காட்டுக்குப் போயிருக்கிறான். அவன் வந்ததும் சொல்லிவிட்டு வருகிறேன்”. என்றது. “நீ விரைவில் நான் சொன்ன இடத்துக்குப் பேய்விடு. மரநாய் பொல்லாதது. கவனம்.” என்றது. காட்டுக் கோழி போவதையே பார்த்துக் கொண்டிருந்தது.நாட்கள் சென்றன. கரிக்குருவி வரவில்லை. நரி குறிப்பிட்ட இடத்தில் தங்கியது. அந்தக் காட்டுக் கோழி திரும்பி வரவில்லை. நரி;யிடம் சென்ற மிருகங்கள் காணாமல் போயின. பறவைகளும் குறைந்து கொண்டு வந்தன. நரி கொழுகொழுவென்று கொழுத்திருந்தது. நரிக்கூட்டத்துக்கு இலகுவில் உணவு கிடைத்தது. நரிக்கூட்டம் அதிக தூரம் வேட்டையாடப் போவதில்லை.
கரிக்குருவி காட்டுக் கோழியைத் தேடி வந்தது. கோழியைக் காணவில்லை. தனது நண்பனைக் காணாது வாடியது. தனிமையில் இருந்து சீட்டியடிக்கும். அந்தச் சீட்டி அழகான கொக்கின் காதுகளில் விழுந்தது. மெதுவாக கரிக்குருவியிடம் வந்தது. “நண்பா நீ ஒவ்வொரு நாளும் அழகாகப் பாடுகிறாய். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. யாருக்காகப் பாடுகிறாய்?” கொக்குக் கேட்டது. “காட்டுக் கோழியை நினைத்துப் பாடுகிறேன்” கரிக்குருவி பதிலளித்தது.
“காட்டுக் கோழிக்கு என்ன நடந்தது”? கொக்கு வினவியது. “தெரியாது. எப்படியும் காட்டுக் கோழி வரும். அதுதான் பாடுகிறேன்”. என்றது.“கொக்கொக் கொக்” சத்தம் கேட்டது. கரிக்குருவி சத்தம் வந்த இடத்துக்கு விரைந்தது. பின்னால் கொக்கும் விரைந்தது. காட்டுக் கோழியைத் தேடியது. கோழி ஒரு புதருள் மறைந்திருந்தது. கரிக்குருவி கண்டு கொண்டது. சந்தோசத்தால் துள்ளியது காட்டுக் கோழி வாடி மெலிந் திருந்தது. பயத்தால் நடுங்கியது.
“நண்பா என்ன நடந்தது? கரிக்குருவி கேட்டது? கோழி பயந்து நடுங்கியது. நரி எனக்கு ஒரு மரத்தைக் காட்டியது. அந்த மரத்தின் ஒருகிளை பாறைத் தொடரை மூடியிருந்தது. அழகான கூடுபொல் இருந்தது. அதில் படுத்தால் நல்ல தூக்கம் வரும். சுகமாகவும் இருக்கும். அதில தங்குமாறு சொன்னது. நானும் இரண்டு நாட்கள் தங்கினேன். நல்ல சுகமாக இருந்தது. அடுத்த நாள் நான் விழித்திருந்தேன். நரிக்கூட்டம்
மெதுவாக வந்தது. அந்த நரி‘வல்லவன்தான்’ தலைவன்;. அது முன்னால் வந்தது. “இது நல்ல
கொழுத்த காட்டுக் கோழி. நான் முன்னுக்குப் போகிறேன். என்னைக் கண்டால் கோழி ஓடாது. நான் பிடித்துச் சாப்பிடுவேன். பின்னால் நீங்க வாங்க” சொல்லி பாறையில் ஏறியது.நான் பின்புறத்தால் வேறுமரத்தில் தாவியிருந்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை. “ஆஹா.. கோழி தப்பிப் போய்விட்டது. நான் ஏமாந்து போனேன். ஆனால் அந்தக் கோழியை விடமாட்டேன். என்று சொல்லிப் போனது. அதுதான் பயமாக இருக்கிறது.” கோழி சொல்லிக் கவலைப் பட்டது. இந்த நரிக்கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும். என்ன செய்யலாம்.”? காட்டுக் கோழி கேட்டது. மூன்றும் ஆலோசித்தன. கொக்கு குரங்குகளிடம் சென்றது. காட்டுக் கோழியின் செய்தியைக் கூறியது. குரங்குகள் பாய்ந்து வந்தன.
“சரி நாங்கள் நடவடிக்கை எடுக்கறோம். இன்றைக்கே கூட்டம் போட்டு முடிவை எடுப்போம்”. என்றன. மிருகங்களும் பறவைகளும் ஒன்று கூடின. நரியின் தந்திரத்தை விபரமாகக் கூறின. காட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்தன. அப்படியே நரியின் இடத்துக்கு நடந்தன. நரிக்கூட்டம் கண்டு கொண்டது. “இன்றைக்கு இவ்வளவு கூட்டமா? நமக்கு வேட்டைதான். தலைவனிடம் சொல்வோம்”. என்று ஓடின. செய்தி நரித்தலைவன் ‘வல்லவன்’; காதில் விழுந்தது. உடனே “ஒவ்வொருவராக உள்ளே விடுங்கள். கட்டளையிட்டது. வழமையாக நரி இருக்கும் இடத்தில் அரசனைப் போல் இருந்தது.குரங்குகள் பாய்ந்து வந்தன. அவற்றை நரிக்கூட்டம் தடுத்தது. “ஒவ்வொருவராக தலைவரிடம் போங்கள்”;. கட்டளை இட்டன. பின் தொடர்ந்து யானைகள் வந்தன. நரிகளின் வால்களைப் பிடித்துத் தூக்கி வீசின. கொம்பன் யானை உள்ளே போனது. “ஓ…. நண்பரே.. உங்களுக்குமா பிரச்சினை. சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே”? நரித்தலைவன் நையாண்டியுடன் சொன்னது. “பிரச்சினை நீதான். நீயும் உன் கூட்டமும் இந்தக் காட்டின் நிம்மதியைக் கெடுத்துப் போட்டீங்க. உங்களை இப்படியே விட்டால் காடு அழிந்து விடும். முதலில் உனக்குப் பாடம் படிப்பிக்க வேணும்.” கூறியது. நரித்தலைவனின் வாலைப் பிடித்து இழுத்தது. ஒரே சுற்றாகச் சுற்றி வீசியது. நரித்தலைவன் வல்லவன் தூரத்தே போய் விழுந்தது. பின்னால் யானைக்கூட்டம் வந்தது.கொக்குப் பறந்து வந்தது. யானையின் மேலிருந்து நரிகளைக் காட்டியது. சில நரிகள் பற்றைகளுள் பதுங்கின. அவற்றைக் காட்டுக் கோழி கண்டு கொண்டது. எங்களை ஏமாற்றி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. இனியும் உங்களை விட்டால் மற்ற மிருகங்க ளுக்கு ஆபத்து. விடமாட்டோம். துரத்துங்கள். சத்தமிட்டது. பதுங்கியிருந்த நரிகள் ஓடத்தொடங்கின. எல்லா மிருகங்களும் பறவைகளும் நரிக்கூட்டத்தை ஓட ஒட விரட்டின.
இப்போது அந்தக் காட்டில் நரிக்கூட்டம் இல்லை. காட்டு மிருகங்களும் பறவைகளும் நிம்மதியாக வாழ்ந்தன..




ஆமையும் கொக்கும்
மழை வேண்டிய காலத்தில் பெய்யவில்லை. அதனால் வரட்சி நிலவியது. குளம் வற்றிக் கொண்டு வந்தது. சனங்களுக்குத் திண்டாட்டம். குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் கிணறுகளில் தண்ணீர் நிற்கும். கிணற்று நீரும் வற்றிக் கொண்டு வந்தது. சிறுவர்கள் குளத்தைப் பார்த்தார்கள். தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. அவர்களுக்குக் கொண்டாட்டம். அவர்கள் மீன்களைப் பிடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குளத்தில் ஆமைகளும் வாழ்ந்தன. ஆமைக்குக் கவலை. தண்ணீர வற்றினால் குளத்தில் வாழமுடியாது.
ஆமைகள் தினமும் வானைப் பார்த்து ஏங்கும். இன்றாவது மழை வருமா? கவலையோடு காத்திருக்கும். மழை பெய்தபாடில்லை. மழை பெய்யாது போனால் என்ன செய்வது? நினைந்து வாடியிருக்கும்.
தாமரை இலைகள் வாடிக்கிடந்தன. பூக்கள் இல்லை. மிருகங்கள் தண்ணீர் குடிப்பதற்கு வந்தன. தூரத்தில் நின்று பார்த்தன. சிறுவர்கள் குளத்தில் இறங்கினார்கள். இந்தச் சிறுவர்கள் குளத்தைக் கலக்கி விட்டார்கள். தண்ணீர் எப்படிக் குடிப்பது? குளத்தின் மத்தியில் ஒரு பெரிய பாறையிருந்தது. ஆமை பாறையில் கவலையோடு இருந்தது. கொக்குக் கூட்டம் பறந்து வந்தது. வட்டம் அடித்து நடுக்குளத்தில் இறங்கியது. கொக்குகள் பாறையில் குவிந்து நின்றன.
“ மழை பெய்யவில்லை. இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டு வருகிறது. தண்ணீர் வற்றினால் நமக்கு உணவு கிடைக்காது. மனிதர்களையும் வறுமை வாட்டும். என்ன செய்வது”? ஆமை தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. ஆமையைக் கொக்குகள் சூழ்ந்து கொண்டன. சில கொக்குகள் கிண்டலடித்தன. “என்ன ஆமையண்ணா..கவலையா”? கேட்டன. “இருக்காதா பின்ன? குளத்தில தண்ணீர் இல்லை. உணவுப் பஞ்சம். காட்டு மிருகங்களுக்கும் குடிநீரும் இல்லை. சனங்கள் கஸ்டப்படப் போறங்க” கவலையோடு கூறியது.
“ஆமையண்ணா நீயேன் கவலைப் படுகிறாய்?. இந்தக் குளம் இல்லாட்டி இன்னொரு குளம். போகவேண்டியது தானே. நாங்க இந்த ஒரு குளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. பறந்து திரிந்து வசதியான குளங்களில் வாழ்வோம். இது இல்லாட்டி அது”. கொக்குகள் சேர்ந்து சிரித்தன. “எல்லாவற்றுக்கும் ஒரு நியதியிருக்கிறது. நீங்க பறவையினம். உங்களுக்குச் சிறகிருக்கிறது. உங்கள் வாழ்க்கை முறை வேறு. எங்களுக்கு உங்களைப் போல் வாழமுடியாது. இந்தக் குளத்தைச் சுற்றித்தான் வாழ்க்கை”. ஆமை அமைதியாகக் கூறியது.
“ஆமையண்ணா எங்களோடு வாங்க. நாங்க உங்களக் கூட்டிப்போகிறோம். நல்ல வசதியாக வாழலாம்.” கொக்குகள் கூறின. ஆமை சிரித்தது. “ஆமையண்ணா ஏன் சிரிக்கிறிங்க”? கொக்குகள் சேர்ந்து கேட்டன. “‘கொக்குகள் தூக்கிச் சென்ற ஆமை’ கதை தெரியுமா உங்களுக்கு?. ஆமையாகிய எங்களுக்கு புத்தியில்லை என்று கதை விடுறாங்க. இப்படித்தான் இந்த மனிதர்கள் தங்களுக்கு வேண்டியமாதிரிக் கதை விடுவாங்க. நாங்க யானையைப் போல பலசாலிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா?. நமக்குள்ளே ஒரு ஒற்றுமையிருக்கிறது.? கொக்குகளைப் பார்த்து ஆமை கேட்டது. “ என்ன ஒற்றுமை? சொல்லுங்க”. கொக்குகள் ஆவலுடன் கேட்டன. “நீங்களும் முட்டையில் இருந்துதான் வந்தீர்கள். நானும் முட்டையில் இருந்துதான் வந்தேன். அதுதான் நமக்குள் உள்ள ஒற்றுமை.” ஆமை சொல்வதைக் கொக்குகள் கவனமாகக் கேட்டன.
“எங்கள் அம்மா மணலில் ஒரு வீடமைத்து முப்பது முட்டைகளையாவது இடுவார். நாங்களாகவே குஞ்சு பொரித்து வெளிவருவோம். எங்கள் உணவை நாங்களே தேடிக் கொள்வோம். நீங்கள் அப்படியில்லை. உங்கள் அம்மா முட்டை விட்டபின் அடைகாக்கவேண்டும். உணவு ஊட்டி விடவேண்டும். பறவை காட்டவேண்டும். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நாங்கள் இந்தச் சூழலுக்குப் பழக்கப் பட்டவர்கள். எங்களால எதையும் சமாளிக்க முடியும். நாங்கள் மற்ற உயிர்களைப் பற்றிதான் கவலைப் படுகிறோம். நாங்கள் மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம். மனிதர்கள் நல்லவர்கள். அவர்களையும் சூழல்தான் பாதிக்கிறது. கண்டவற்றை எல்லாம் சாப்பிட்டுக் கொழுப்பேறிப் போச்சு. மருந்தும் மாத்திரையுமாக மனிதர் மாறிவிட்டார்கள். தாவர உண்ணிகளாக மாறிவருகிறார்கள். அங்கே பாருங்கள் சிறுவர்கள் எங்களை நண்பர்களாகச் சேர்த்து விளையாடுறாங்க. இதைவிட சந்தோசம் வேறென்ன இருக்கு”? ஆமை சொன்னது.
கொக்கு மேலெழுந்து பார்த்தது. ஒரு சிறுவன் பெரிய ஆமையில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். கொக்குகள் எழுந்து பறந்து பார்த்தன. வுhனம் இருட்டியது. மின்னல் வெட்டியடித்தது. “ஆமையண்ணா நாங்க போய்வாறம். மழைவரப் போகுது”. கூறியபடி வந்த வழியே வானில் பறந்து சென்றன. இடிமுழக்கத்தோடு மழை சோவெனப் பெய்தது. ஆமையின் மனதிலே குதூகலம் பொங்கியது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுதான் தவமாகும்.
தாமரைக் குளம்
அந்தக் காட்டில் மிகப்பழைய குளமிருந்தது. குளம் பெரியது. ஆழமானது. குளத்தின் மேற்காக வயல்நிலங்கள் பரந்து கிடந்தன. குளத்தில் நீர்நிறைந்து இருந்தது. குளம் நிறையத் தாமரை படர்ந்திருந்தது. தாமரை தண்ணீர் மட்டத்துக்கு வளர்ந்து பூத்திருக்கும். குளத்திலிருந்து நீர் வயல்களுக்குப் பாயும். வயல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். களத்தை நம்பிப் பல உயிரினங்கள் வாழ்ந்தன. காட்டு விலங்குகள் ஒருபுறம் தண்ணீர் குடிக்க வரும். மீன் கொத்தி மரத்தில் காவலிருக்கும். கொக்குநிரை சேர்ந்து கும்மாளமிடும். மைனாக்கள் கரையிலிருந்து கதையளக்கும்.
ஆமைகளும் வாழ்ந்தன. அவை தண்ணீருக்குள்ளும் வாழும். தரையிலும் வாழும். குளத்தையண்டிய புதர்களில் முயல்களும் வாழ்ந்தன. மாலைவேளைகளில் ஆமைகள் குளக்கரைக்கு வரும். பறவைகளும் கூடும். முயல்கள் சேர்ந்து விளையாடும். மைனாக்கள் சேர்ந்தால் இரைச்சாலாய் இருக்கும். அவை ஆளுக்காள் சண்டையிட்டுக் கட்டிப்புரளும். ஆமைகள் பார்த்துச் சிரிக்கும். கொக்குகள் வேடிக்கை பார்க்கும்.
“ஏன் சண்டை பிடிக்கிறீங்க. சந்தோசமாக இருங்கப்பா” மைனாக்கபை; பார்த்து ஒரு ஆமை கூறியது. வாய்க்கார மைனாக்களுக்குக் கோபம் வந்தது. “ஓகோ ஆமைக்கு வந்த ரோசத்தைப் பாரு. ஒரு மைனா ஏளனமாகச் பார்த்தது. “இருக்காத பின்ன? எல்லாம் அந்தா இருக்கிற முயல் செய்தவேலை” சுட்டிக் காட்டிச் சொன்னது. “முயல் என்ன செய்தது”? சின்ன மைனா கேட்டது . “உனக்கு விளங்காது. ஒரு ஓட்டப் போட்டி நடந்தது. ஆமை அரக்கியரக்கிப் போனது. முயல் வேகத்தோடு ஓடியது. ஆமையைக் காணவில்லை. இந்த ஆமை என்னை வெல்வதாவது. இடையில் ஓய்வெடுக்க எண்ணியது. அப்படியே நித்திரை கொண்டிற்று. ஆமை சத்தமில்லாமல் போய்
வெற்றிபெற்றது. அது தான் அவருக்குத் தலைக்கனம்.” பெரிய மைனா சத்தமாகக் கூறியது.. அந்த நேரம் பார்த்துக் “கா..கா..” என இரைந்து கொண்டு இரண்டுகாகங்கள் பறந்து வந்தன. மைனாக்கள் வரையாடுவதை உற்றுக் கேட்டன. மீண்டும் “கா..கா..” கரைந்தன. கொக்குக் கூட்டமும் வலந்து சேர்ந்து கொண்டது.
“இந்த ஆமையின் தலைக்கனத்தைக் குறைக்க வழியிருக்கிறது. நாங்க ஒன்று சொன்னால் செய்வீங்களா”? காகங்கள் இரைந்தன. மைனாக்களின் ஆரவாரம் அடங்கியது. “சொல்லுங்க செய்வோம்”;. உடன்பட்டன.
இந்தக் குளம் பெரியது. இந்தக் குளத்தின் அந்தப் பக்கத்தில் உள்ள மரத்தை யார் முதலில் போய் தொடுகிறாரோ அவருக்குத்தான் வெற்றி.” காகங்கள் ஆரவாரித்தன. “ நானும் திருத்தம் சொல்லவேணும்”.





இந்தப் போட்டியில் சிறிய விலங்குகளும்;, பறவைகளும் பங்கு பற்றலாம். பறவைகள் பறக்கக் கூடாது. குளத்தில் இறங்கி நீந்திச் செல்லலாம். தண்ணீரில் நடந்து செல்லலாம். அல்லது குளத்தைச் சுற்றி ஓடலாம். மரத்தை முதலில் தொடுபவருக்கு ஓரு தேன்வதை கொடுக்கப் படும். நரி உற்சாகமாகச் சொன்னது.
முயல் விரைந்து ஓடி வெற்றிபெறலாம் என எண்ணியது. கொக்கு நடந்து குளத்தைக் கடக்கலாம். என்று நினைந்தது. ஆமை தனக்குள் சிரித்துக் கொண்டது. “இந்தக் கரையில் வீழ்ந்தால் அந்தக் கரையில் மிதப்பேன்” என்று ஆயத்தமானது. போட்டி பற்றிய செய்தி எங்கும் பரவியது. நிபந்தனைகள் அறிவிக்கப் பட்டன. பங்கு கொள்ள பறவைகளும், சிறிய விலங்குகளும் வந்தன. தொடக்குநர் ஒருவர் வேண்டும். யாரை அழைப்பது? தண்ணீர் குடிப்பதற்காக யானைக்கூட்டம் வந்தது. தொடக்குநராகவும், நடுவர்களாகவும் செயற்பட யானைகள் சம்மதித்தன. சில யானைகள் குளத்தின் அக்கரையில் உள்ள மரத்தடிக்குச் சென்றன. குளத்தினைச் சுற்றியும் நின்றன. போட்டி தொடங்கும் தொடக்குநர் நினறது. போட்டியாளர்களை அழைத்தது. குறிப்பிட்ட இடத்துக்கு யாவும் வந்தன.
முயல், ஆமை, கொக்கு, கானாங்கோழி, காகம், மைனா ஆகியன ஆயத்தமாக நின்றன. அவதானிப்பாளர்களாகக் கடமையாற்ற மீன்கொத்தி, மைனா. நரி முன்வந்தன. யானை கடைப்பிடிக்க

வேண்டிய விதிகளை விளக்கியது. போட்டியாளர்கள் குளத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்தன. எப்படி ஓடுவதென்று தீர்மானித்தன. யானை தனது தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது.
முயல் குளத்தைச் சுற்றி விரைந்தது. நரி முயலின் பின்னால் ஓடியது. ஆமை குளத்தில் வீழ்ந்து நீந்தியது. தாமரை ஆமைக்குத் தடங்கலாக இருந்தன. குளம் நிறைந்து தாமரை பூக்கள் விரிந்திருந்தன. இலைகள் பரவியிருந்தன. கொக்குத் தண்ணீரில் இறங்கியது. காகமும், மைனாக்களும் இறங்கின. கானாங்கோழி உற்றுப் பார்த்தது. இலைகள் பரந்துள்ள நிரையைக் கவனித்தது. பூக்களில் கால்கள் படாதவண்ணம் கால்களை வைத்தது. பூக்களின் ஊடே புகுந்து நடந்தது.
காகத்தால் விரைந்து நடக்க முடியவில்லை. சரியாக இலைகளின் மேல் கால்கள் வைக்கத் தடுமாறியது. தண்ணீரில் மூழ்கியெழுந்தது. மைனாவும் இலையில் ஓடிப் பார்த்து விழுந்தது. கானாங்கோழிக்கு நல்ல
பரீட்சையம் இருந்தது. இலைகளை அவற்றின் தண்டுகள் தாங்கும் இடத்தில் கால்களை வைத்து நடந்தது. மீன்கொத்தியுடன் மைனாவும் மரத்தில் இருந்து அவதானித்தன. எப்படி இந்தக் கானாங்கோழியால் இப்படி விரைந்து நடக்க முடிந்தது?. எப்படி அதன் கால்களைத் சரியாகத் தண்டு இலைகளைத் தொடும் இடத்தில் வைக்கிறது?. அதன் கால்கள் வைக்கும் இடைவெளியில் தாமரையிலைகள் பரந்து கிடந்தன. குளத்தின் ஓரத்தில் நரி அவதானித்துக் கொண்டிருந்தது.
கானாங்கோழி குளத்தைக் கடந்து மரத்தைத் தொட்டு நின்றது. யானைகள் கானாங்கோழியை வாழ்த்திப் பிளிறின. அதனைத் தூக்கித் தங்கள் முதுகில் வைத்து வாழ்த்தின. முயலை வென்ற ஆமை இன்னும் வெற்றிக்கம்பத்தை அடையவில்லை. முயல் விரைந்து ஓடியது. முயல் நரியை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவடவொன்று எளிதாகும்.








எலியின் சாதனை ..
முன்னொரு காலத்தில் சீனதேசத்தின் சக்கரவர்த்தியாக ஜேட் இருந்தார். அவரது ஆட்சிக்காலம் பொன்னானது. காலங்களை அறிய ஆவல் கொண்டார். காலத்தை எப்படிக் கணிப்பது? அதனைக் கணிப்பதற்காக வழிகளைத் தேடினார். வானத்தில் பன்னிரெண்டு ராசிகள் உள்ளன. அந்த ராசிகளுக்கு உருவங்களும் உண்டு. அவற்றுக்குப் பெயர்களும் உண்டு. நமது தேசத்தில் அந்த உருவங்களுக்குப் பெயர்கள் இல்லை. வருடங்களுக்குப் பெயரும் இல்லை. பன்னிரண்டு வருடங்களுக்கும் என்ன பெயர் வைக்கலாம்? யோசித்தார். விடைகிடைக்கவில்லை.
அமைச்சர்களை அழைத்தார். அவர்கள் வந்தார்கள். அமைச்சர்களோடு ஆராய்ந்தார். முதலமைச்சரிடம் ஆலாசனை கேட்டார். மற்றவர்களிடமும் கேட்டார். எல்லோரும் யோசித்தார்கள். நீங்கள் முடிவெடுத்து நாளை வாருங்கள் என்றார். அவர்கள் போய்விட்டார்கள். அரசரின் மனம் ஆழ்ந்து யோசித்தது. அரசரே முடிவெடுத்தார். ஒரு போட்டி வைத்துப் பார்த்தால் என்ன? ஓரு முடிவுக்கு வந்தார். சீனாவில் விரைந்து ஓடும் ஆறு இருந்தது. அதனை நினைவு கொண்டார். அது படுபயங்கரமானது. பார்ப்பவர்களுக்குப் பயங்கரமாக இருக்கும்.
தண்ணீர் பாயும் சத்தம் பயத்தை ஊட்டும். மெதுவாக நடந்தார். அவர் விரைந்தோடும் ஆற்றையடைந்தார். அது பயங்கரமான இரைச்சலோடு விரைந்து பாய்ந்தது. சக்கரவர்த்தி அந்த ஆற்றைப் பார்க்கச் சென்றார். ஆற்றங்கரையில் நின்று யோசித்தார். அவரது மூளை வேலைசெய்தது.
அரண்மனைக்குப் போனார். அமைச்சர்களை அழைத்தார். அவர்களும் வந்தார்கள். அரசசபை கூடியது. அரசரின் செயல் அமைச்சர்களுக்குப் புதுமையாக இருந்தது. அரசர் தொடங்கினார். “எனது பிறந்த நாளன்று ஒரு போட்டி வையுங்கள். அதை நான் சொல்வது போல் நடத்தவேண்டும். என்றார். “ அரசே அது எப்படி இருக்கவேண்டும் சொல்லுங்கள்”. அமைச்சர்கள் கேட்டார்கள். போட்டியை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார். அமைச்சர்களின் மூளைகள் வேலைசெய்தன. ஆனால் ஒரு பயனுமில்லை. முதலமைச்சர் புத்திசாலி. அவர் தனது ஆலோசனையைக் கூறினார். “சக்கரவர்த்தியின் பிறந்த நாளன்று ஒரு போட்டியை வைத்தால் என்ன?” என்றார்கள். “சரி அப்படிச் செய்யுங்கள்”. “என்ன போட்டி வைக்கலாம்”.? கேட்டார்கள். “அந்தப் போட்டி இதுதான்.” அரசர் தொடங்கினார். “நமது நாட்டின் எல்லையில் ஆறு உள்ளது. அது பயங்கரமாகப் பாய்ந்து ஓடும். அந்த ஆற்றைக் குறுக்காக நீந்திக்கடக்கவேண்டும்.” அரசர் விளக்கினார். “யார் யார் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்?”. மந்திரிகளும் பிரதானிகளும் கேட்டார்கள். “சிறப்பாக விலங்குகளும் பிராணிகளும் பங்கு பெறவேண்டும். அதில் வெற்றி பெறுகிறவர்கள் யாரென்று பார்ப்போம்.? வெற்றி பெறுபவர்களது பெயர்களை வருடங்களுக்குப் பெயர் சூட்டலாம். முதல் வரும் பன்னிரெண்டு இடங்களை எடுப்போம். அந்த வரிசையில் பெயர்களை வைத்து அழைப்போம்.” என்றார். “ஆகா அற்புதமான எண்ணம். அப்படியே செய்யலாம்.” ஒப்புதல் அமைச்சர்கள் அளித்தார்கள்.
“இதனை நமது நாட்டிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவியுங்கள்” என்றார். அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். அமைச்சர்கள் போட்டியின் விதிகளை அறிவித்தார்கள்.
எல்லோரும் ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்தனர். வெளவாலுக்குச் சந்தோசம். “நான் வெற்றி பெறுவேன். நான் குட்டி போடும் விலங்கு. எனது குட்டிகளுக்ப் பாலூட்டுகிறேன். நானும் பங்கு கொள்வேன்”; என்றது.
நரி அதனைக் கேட்டது. அரசரின் காதில் சொல்லி வைத்தது. “பறப்பவை எவையும் பங்கு கொள்ள முடியாது” அரசர் அறிவித்து விட்டார். போட்டி அறிவிக்கப் பட்டது. மக்கள் சென்று பார்த்தனர். விலங்குகளும் பாத்தன. ஆறு படுபயங்கர வேகத்தில்
பாய்ந்துகொண்டிருந்தது. போட்டியில் பங்குபற்ற விலங்குகள் முன்வந்தன. நாள் அறிவிக்கப்பட்டது.



பங்குபற்றும் போட்டியாளர்களை வருமாறு அறிவிக்கப்பட்டது. நீந்தக்கூடிய பறவைகளும் வந்தன. விலங்குகள் ஒன்று சேர்ந்து சாரிசாரியாக வந்தன. யானைகள், தனியாகவும் கூட்டமாகவும் வந்தன. பன்றிகள், காண்டாமிருகள், போன்றனவும் வந்தன. மான் கூட்டம் திரண்டு வந்தது. பெரிய பரந்த வெளியில் ஒன்று கூடின. அவற்றை விரைந்தோடும் அந்த ஆற்றங்கரைக்குச் செல்லுமாறு பணித்தார்கள். அவை ஆற்றங்கரையில் திரண்டு ஆரவாரித்தன. ஆறு இரைந்து அலையெறிந்து ஓடிக்கொண்டிருந்தது. மனிதர்கள் எட்டிப்பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
வேடிக்கை பார்க்கவென்று பல விலங்குகள் வந்தன. சில ஆற்றங்கரையில் உல்லாசமாக உலா வந்தன. கரடிக்கூட்டம் ஒருபுறம் வந்தது. நரிகள் கூட்டங்கூட்டமாக வந்து கூடின. குரங்குகளும் கூடின. குதிரைகள், ஆடு. எருதுகள் முயலும் வந்தது.புலிகள் பாய்ந்து வந்தன. பாம்பு, நாய்களும் பங்குகொள்ள வந்தன.





பல மிருகங்களுக்கு உதறல் எடுத்தது. சக்கரவர்த்தி ஜேட் வந்தார். அவருக்காக மேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது. அவர் வந்து மேடையில் அமர்ந்தார். மிருகங்கள் ஆரவாரமிட்டன. மனிதர்களும் மகிழ்ந்து வாழ்த்தினர். சக்கரவர்த்தி எழுந்தார். “நமது சீனநாட்டில் வருடங்களுக்குப் பெயரில்லை. ராசிகளின் பெயரால் வருடங்கள் அழைக்கப் படுகின்றன. நாம் நமது தேசத்தில் வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும். பன்னிரெண்டு ராசிகள் உள்ளன. பன்னிரெண்டு வருடங்களுக்குப் பெயரிடவேண்டும். இந்த ஆற்றைக் குறுக்காக நீந்திக்கடந்து வெற்றி பெறுபவர்களது பெயர்களால் பன்னிரெண்டு மாதங்களும் அழைக்கப்படும்”;. என்றார்.
மிருகங்கள் ஆரவாரித்தன. இந்தப் பயங்கர ஆற்றை எவ்வாறு கடக்கலாம்? கேள்விமேல் கேள்விகள் எழுந்தன.
நீச்சல் போட்டி ஆயத்தமானது. பல்வேறு மிருகங்களும் கரையோரமாக வரிசையில் நின்றன. யானை, கரடி. சிங்கம். புலி எனப் பல மிருகங்கள் நின்றன. அவைகளுள் ஓரு பூனையும். எலியும் குந்தியிருந்தன. அவை நீச்சலில் மிகவும் பின்தங்கியிருந்தன.
பக்கத்தில் பலமான எருது நின்றது. எருதுவிடம் மெதுவாகக் கதை தொடுத்தன. “ஐயா எங்களுக்கு நீந்தத்தெரியாது. நீங்கள் பலசாலியாக இருக்கிறீர்கள். நன்றாக நீந்துவீர்கள். எங்களுக்கு உதவமுடியுமா” எனக் கெஞ்சின. எருதுவுக்குப் பெருமையாக இருந்தது. எலியையும், பூனையையும் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. “இவ்வளவு மிருகங்கள்



இருந்தும் என்னிடம் உதவி கேட்கிறீர்கள். உங்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. என்ன செய்வது? நான் உதவுகிறேன்” எனக் கூறியது. “எப்படி என்னோடு வருவீர்கள்.? சரி என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள். அக்கரையில் விட்டுவிடுகிறேன்” என்றது.எலியும், பூனையும் பாய்ந்து எருதுவின் முதுகில் ஏறிக்கொண்டன. போட்டி தொடங்கியது.மிருகங்கள் ஆற்றில் பாய்ந்து நீந்தின. எருதும் பாய்ந்தது. எலியும், பூனையும் எருதின் முதுகைப் படித்திருந்தன. பல மிருகங்களை விரைந்தோடும் வெள்ளம் அடித்துச் சென்றது. கரடியை தண்ணீர் ஒருபுறம் இழுத்துச் சென்றது..சில மிருகங்கள் பின்வாங்கின. எருது விரைவாக நீந்தியது. அக்கரை தெரிந்தது. கரை கிட்ட வந்ததும் எலி பூனையை ஆற்றில் தள்ளிவிட்டது. பூனை ஆற்றில் அவதிப்பட்டது. எருது கரையை அடையுமுன் எலி துள்ளிப்பாய்ந்து கரையை அடைந்தது. எலி வெற்றி பெற்றது. “மிகக்கெட்டிக்கார எலி” என்று சக்கரவரத்;தி ஜேட் புகழ்ந்தார்.“இன்றுமுதல் ஏலியின் பெயரால் முதலாவது வருடத்தை அழைப்போம்.” என அறிவித்தார். பன்னிரெண்டு வருடங்களில் முதலாவது எலிதான். பாவம் எலிக்கு உதவிய எருதுவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. சீன ராசிகளில் முதலாம் இடம் எலிக்கும் இரண்டாம் இடம் எருதுவுக்கும் வழங்கப்பட்டது. “ஏன்னை நயவஞ்சகமாக ஆற்றில் தள்ளிவிட்டாய். ஏனக்குத் துரோகம் செய்து விட்டாய். உன்னைச் சும்மா விடமாட்டேன். என்று கூறியது. அன்றுமுதல் பூனைக்கும் எலிக்கும் பகை உருவாகியது. எலியைப் பூனை துரத்தத் தொடங்கியது. எல்லா மிருகங்களும் பார்த்து ச் சிரித்தன.

நரியும் காட்டுக் கோழியும்
அந்தக் காட்டில் மிருகங்களும், பறவைகளும் வாழ்ந்தன. தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தாமே பேசித் தீர்த்தன. அந்தக் காட்டில் ஒருநரிக் கூட்டம் வாழ்ந்தது. நரிக்கூட்டத்துக்கு ‘வல்லவன்’ என்ற நரி தலைவனாக இருந்தது. வல்லவன் தந்திரத்தில் வல்லது. மிகவும் புத்தியும் உள்ளது. “எந்தப் பிரச்சினை வந்தாலும் எங்கள் தலைவர் தீர்த்து வைப்பார். இனிய அன்பர்களே உங்கள் பிரச்சினையை எங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்.” என்று நரிக் கூட்டம் பரப்புரைகளைச் செய்தன.


விலங்குகளும், பறவைகளும் நம்பின. விலங்குகளும் பறவைகளும் வந்தன. தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை கேட்டன. நரி அவற்றைக் அனுதாபத்துடன் பார்க்கும். அவை சொல்வதைக் கவனமாகக் கேட்கும். மிருகங்கள் தங்கும் இடங்களைக் கேட்டறியும். பொருத்தமில்லாத இடங்களை மாற்றச் சொல்லும். பிரச்சினைகளுக்கு ஏற்றப் பதிலைக் கூறும். அவை சந்தோசத்துடன் கேட்டுப் போகும். வல்லவன் நரியின் புகழ் காடெங்கும் பரவியது. நாட்கள் நகர்ந்தன. ஒருதரம் வந்த விலங்கு
மீண்டும் வருவதில்லை. அதேபோல் பறவைகளும் வருவதில்லை. நரியாருக்குப் பின்னால் பல நரிகள் உதவிக்கு இருந்தன. தன்னிடம் வரும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தனது பெருமைகளைச் சொல்லும். தான் அவற்றுக்குச் சொன்ன பதில்களைச் சொல்லும். ஒரு நாள் ஒரு காட்டுக் கோழி வந்தது. அந்தக் கோழி கொழுத்து இருந்தது. நரியின் நாவில் எச்சில் ஊறியது. “என்ன பிரச்சினை”? என்று கேட்டது. “மரநாயும், கொடும்புலிகளும் என்னை வேட்டையாட வருகின்றன. நான் மரத்தின் உச்சங்கிளையில் தங்குகிறேன். நித்திரையில் விழுந்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது. நான் விழாது ஒருக்க வழி சொல்லுங்கள்.” என்றது.
நரி யோசனை செய்வது போல் நடித்தது. “நீ இப்போது தங்கும் இடத்தை மாற்று. நான் சொல்லும் இடத்தில் தங்கு. உனக்குப் பயம் இல்லாது போகும். மரநாயும், கொடும்புலிகளும் வராது. அது நான் வாழும் பகுதி” என்று ஒரு இடத்தைக் கூறியது.
காட்டுக் கோழி நம்பியது. நரி சொற்படியே செய்வதாகக் கூறியது. “எனது நண்பன் கரிக்குருவி. அவன் பக்கத்துக் காட்டுக்குப் போயிருக்கிறான். அவன் வந்ததும் சொல்லிவிட்டு வருகிறேன்”. என்றது. “நீ விரைவில் நான் சொன்ன இடத்துக்குப் பேய்விடு. மரநாய் பொல்லாதது. கவனம்.” என்றது. காட்டுக் கோழி போவதையே பார்த்துக் கொண்டிருந்தது.நாட்கள் சென்றன. கரிக்குருவி வரவில்லை. நரி குறிப்பிட்ட இடத்தில் தங்கியது. அந்தக் காட்டுக் கோழி திரும்பி வரவில்லை. நரி;யிடம் சென்ற மிருகங்கள் காணாமல் போயின. பறவைகளும் குறைந்து கொண்டு வந்தன. நரி கொழுகொழுவென்று கொழுத்திருந்தது. நரிக்கூட்டத்துக்கு இலகுவில் உணவு கிடைத்தது. நரிக்கூட்டம் அதிக தூரம் வேட்டையாடப் போவதில்லை.
கரிக்குருவி காட்டுக் கோழியைத் தேடி வந்தது. கோழியைக் காணவில்லை. தனது நண்பனைக் காணாது வாடியது. தனிமையில் இருந்து சீட்டியடிக்கும். அந்தச் சீட்டி அழகான கொக்கின் காதுகளில் விழுந்தது. மெதுவாக கரிக்குருவியிடம் வந்தது. “நண்பா நீ ஒவ்வொரு நாளும் அழகாகப் பாடுகிறாய். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. யாருக்காகப் பாடுகிறாய்?” கொக்குக் கேட்டது. “காட்டுக் கோழியை நினைத்துப் பாடுகிறேன்” கரிக்குருவி பதிலளித்தது.
“காட்டுக் கோழிக்கு என்ன நடந்தது”? கொக்கு வினவியது. “தெரியாது. எப்படியும் காட்டுக் கோழி வரும். அதுதான் பாடுகிறேன்”. என்றது.“கொக்கொக் கொக்” சத்தம் கேட்டது. கரிக்குருவி சத்தம் வந்த இடத்துக்கு விரைந்தது. பின்னால் கொக்கும் விரைந்தது. காட்டுக் கோழியைத் தேடியது. கோழி ஒரு புதருள் மறைந்திருந்தது. கரிக்குருவி கண்டு கொண்டது. சந்தோசத்தால் துள்ளியது காட்டுக் கோழி வாடி மெலிந் திருந்தது. பயத்தால் நடுங்கியது.
“நண்பா என்ன நடந்தது? கரிக்குருவி கேட்டது? கோழி பயந்து நடுங்கியது. நரி எனக்கு ஒரு மரத்தைக் காட்டியது. அந்த மரத்தின் ஒருகிளை பாறைத் தொடரை மூடியிருந்தது. அழகான கூடுபொல் இருந்தது. அதில் படுத்தால் நல்ல தூக்கம் வரும். சுகமாகவும் இருக்கும். அதில தங்குமாறு சொன்னது. நானும் இரண்டு நாட்கள் தங்கினேன். நல்ல சுகமாக இருந்தது. அடுத்த நாள் நான் விழித்திருந்தேன். நரிக்கூட்டம்
மெதுவாக வந்தது. அந்த நரி‘வல்லவன்தான்’ தலைவன்;. அது முன்னால் வந்தது. “இது நல்ல
கொழுத்த காட்டுக் கோழி. நான் முன்னுக்குப் போகிறேன். என்னைக் கண்டால் கோழி ஓடாது. நான் பிடித்துச் சாப்பிடுவேன். பின்னால் நீங்க வாங்க” சொல்லி பாறையில் ஏறியது.நான் பின்புறத்தால் வேறுமரத்தில் தாவியிருந்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை. “ஆஹா.. கோழி தப்பிப் போய்விட்டது. நான் ஏமாந்து போனேன். ஆனால் அந்தக் கோழியை விடமாட்டேன். என்று சொல்லிப் போனது. அதுதான் பயமாக இருக்கிறது.” கோழி சொல்லிக் கவலைப் பட்டது. இந்த நரிக்கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும். என்ன செய்யலாம்.”? காட்டுக் கோழி கேட்டது. மூன்றும் ஆலோசித்தன. கொக்கு குரங்குகளிடம் சென்றது. காட்டுக் கோழியின் செய்தியைக் கூறியது. குரங்குகள் பாய்ந்து வந்தன.
“சரி நாங்கள் நடவடிக்கை எடுக்கறோம். இன்றைக்கே கூட்டம் போட்டு முடிவை எடுப்போம்”. என்றன. மிருகங்களும் பறவைகளும் ஒன்று கூடின. நரியின் தந்திரத்தை விபரமாகக் கூறின. காட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்தன. அப்படியே நரியின் இடத்துக்கு நடந்தன. நரிக்கூட்டம் கண்டு கொண்டது. “இன்றைக்கு இவ்வளவு கூட்டமா? நமக்கு வேட்டைதான். தலைவனிடம் சொல்வோம்”. என்று ஓடின. செய்தி நரித்தலைவன் ‘வல்லவன்’; காதில் விழுந்தது. உடனே “ஒவ்வொருவராக உள்ளே விடுங்கள். கட்டளையிட்டது. வழமையாக நரி இருக்கும் இடத்தில் அரசனைப் போல் இருந்தது.குரங்குகள் பாய்ந்து வந்தன. அவற்றை நரிக்கூட்டம் தடுத்தது. “ஒவ்வொருவராக தலைவரிடம் போங்கள்”;. கட்டளை இட்டன. பின் தொடர்ந்து யானைகள் வந்தன. நரிகளின் வால்களைப் பிடித்துத் தூக்கி வீசின. கொம்பன் யானை உள்ளே போனது. “ஓ…. நண்பரே.. உங்களுக்குமா பிரச்சினை. சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே”? நரித்தலைவன் நையாண்டியுடன் சொன்னது. “பிரச்சினை நீதான். நீயும் உன் கூட்டமும் இந்தக் காட்டின் நிம்மதியைக் கெடுத்துப் போட்டீங்க. உங்களை இப்படியே விட்டால் காடு அழிந்து விடும். முதலில் உனக்குப் பாடம் படிப்பிக்க வேணும்.” கூறியது. நரித்தலைவனின் வாலைப் பிடித்து இழுத்தது. ஒரே சுற்றாகச் சுற்றி வீசியது. நரித்தலைவன் வல்லவன் தூரத்தே போய் விழுந்தது. பின்னால் யானைக்கூட்டம் வந்தது.கொக்குப் பறந்து வந்தது. யானையின் மேலிருந்து நரிகளைக் காட்டியது. சில நரிகள் பற்றைகளுள் பதுங்கின. அவற்றைக் காட்டுக் கோழி கண்டு கொண்டது. எங்களை ஏமாற்றி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. இனியும் உங்களை விட்டால் மற்ற மிருகங்க ளுக்கு ஆபத்து. விடமாட்டோம். துரத்துங்கள். சத்தமிட்டது. பதுங்கியிருந்த நரிகள் ஓடத்தொடங்கின. எல்லா மிருகங்களும் பறவைகளும் நரிக்கூட்டத்தை ஓட ஒட விரட்டின.
இப்போது அந்தக் காட்டில் நரிக்கூட்டம் இல்லை. காட்டு மிருகங்களும் பறவைகளும் நிம்மதியாக வாழ்ந்தன..




ஆமையும் கொக்கும்
மழை வேண்டிய காலத்தில் பெய்யவில்லை. அதனால் வரட்சி நிலவியது. குளம் வற்றிக் கொண்டு வந்தது. சனங்களுக்குத் திண்டாட்டம். குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் கிணறுகளில் தண்ணீர் நிற்கும். கிணற்று நீரும் வற்றிக் கொண்டு வந்தது. சிறுவர்கள் குளத்தைப் பார்த்தார்கள். தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. அவர்களுக்குக் கொண்டாட்டம். அவர்கள் மீன்களைப் பிடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குளத்தில் ஆமைகளும் வாழ்ந்தன. ஆமைக்குக் கவலை. தண்ணீர வற்றினால் குளத்தில் வாழமுடியாது.
ஆமைகள் தினமும் வானைப் பார்த்து ஏங்கும். இன்றாவது மழை வருமா? கவலையோடு காத்திருக்கும். மழை பெய்தபாடில்லை. மழை பெய்யாது போனால் என்ன செய்வது? நினைந்து வாடியிருக்கும்.
தாமரை இலைகள் வாடிக்கிடந்தன. பூக்கள் இல்லை. மிருகங்கள் தண்ணீர் குடிப்பதற்கு வந்தன. தூரத்தில் நின்று பார்த்தன. சிறுவர்கள் குளத்தில் இறங்கினார்கள். இந்தச் சிறுவர்கள் குளத்தைக் கலக்கி விட்டார்கள். தண்ணீர் எப்படிக் குடிப்பது? குளத்தின் மத்தியில் ஒரு பெரிய பாறையிருந்தது. ஆமை பாறையில் கவலையோடு இருந்தது. கொக்குக் கூட்டம் பறந்து வந்தது. வட்டம் அடித்து நடுக்குளத்தில் இறங்கியது. கொக்குகள் பாறையில் குவிந்து நின்றன.
“ மழை பெய்யவில்லை. இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டு வருகிறது. தண்ணீர் வற்றினால் நமக்கு உணவு கிடைக்காது. மனிதர்களையும் வறுமை வாட்டும். என்ன செய்வது”? ஆமை தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. ஆமையைக் கொக்குகள் சூழ்ந்து கொண்டன. சில கொக்குகள் கிண்டலடித்தன. “என்ன ஆமையண்ணா..கவலையா”? கேட்டன. “இருக்காதா பின்ன? குளத்தில தண்ணீர் இல்லை. உணவுப் பஞ்சம். காட்டு மிருகங்களுக்கும் குடிநீரும் இல்லை. சனங்கள் கஸ்டப்படப் போறங்க” கவலையோடு கூறியது.
“ஆமையண்ணா நீயேன் கவலைப் படுகிறாய்?. இந்தக் குளம் இல்லாட்டி இன்னொரு குளம். போகவேண்டியது தானே. நாங்க இந்த ஒரு குளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. பறந்து திரிந்து வசதியான குளங்களில் வாழ்வோம். இது இல்லாட்டி அது”. கொக்குகள் சேர்ந்து சிரித்தன. “எல்லாவற்றுக்கும் ஒரு நியதியிருக்கிறது. நீங்க பறவையினம். உங்களுக்குச் சிறகிருக்கிறது. உங்கள் வாழ்க்கை முறை வேறு. எங்களுக்கு உங்களைப் போல் வாழமுடியாது. இந்தக் குளத்தைச் சுற்றித்தான் வாழ்க்கை”. ஆமை அமைதியாகக் கூறியது.
“ஆமையண்ணா எங்களோடு வாங்க. நாங்க உங்களக் கூட்டிப்போகிறோம். நல்ல வசதியாக வாழலாம்.” கொக்குகள் கூறின. ஆமை சிரித்தது. “ஆமையண்ணா ஏன் சிரிக்கிறிங்க”? கொக்குகள் சேர்ந்து கேட்டன. “‘கொக்குகள் தூக்கிச் சென்ற ஆமை’ கதை தெரியுமா உங்களுக்கு?. ஆமையாகிய எங்களுக்கு புத்தியில்லை என்று கதை விடுறாங்க. இப்படித்தான் இந்த மனிதர்கள் தங்களுக்கு வேண்டியமாதிரிக் கதை விடுவாங்க. நாங்க யானையைப் போல பலசாலிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா?. நமக்குள்ளே ஒரு ஒற்றுமையிருக்கிறது.? கொக்குகளைப் பார்த்து ஆமை கேட்டது. “ என்ன ஒற்றுமை? சொல்லுங்க”. கொக்குகள் ஆவலுடன் கேட்டன. “நீங்களும் முட்டையில் இருந்துதான் வந்தீர்கள். நானும் முட்டையில் இருந்துதான் வந்தேன். அதுதான் நமக்குள் உள்ள ஒற்றுமை.” ஆமை சொல்வதைக் கொக்குகள் கவனமாகக் கேட்டன.
“எங்கள் அம்மா மணலில் ஒரு வீடமைத்து முப்பது முட்டைகளையாவது இடுவார். நாங்களாகவே குஞ்சு பொரித்து வெளிவருவோம். எங்கள் உணவை நாங்களே தேடிக் கொள்வோம். நீங்கள் அப்படியில்லை. உங்கள் அம்மா முட்டை விட்டபின் அடைகாக்கவேண்டும். உணவு ஊட்டி விடவேண்டும். பறவை காட்டவேண்டும். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நாங்கள் இந்தச் சூழலுக்குப் பழக்கப் பட்டவர்கள். எங்களால எதையும் சமாளிக்க முடியும். நாங்கள் மற்ற உயிர்களைப் பற்றிதான் கவலைப் படுகிறோம். நாங்கள் மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம். மனிதர்கள் நல்லவர்கள். அவர்களையும் சூழல்தான் பாதிக்கிறது. கண்டவற்றை எல்லாம் சாப்பிட்டுக் கொழுப்பேறிப் போச்சு. மருந்தும் மாத்திரையுமாக மனிதர் மாறிவிட்டார்கள். தாவர உண்ணிகளாக மாறிவருகிறார்கள். அங்கே பாருங்கள் சிறுவர்கள் எங்களை நண்பர்களாகச் சேர்த்து விளையாடுறாங்க. இதைவிட சந்தோசம் வேறென்ன இருக்கு”? ஆமை சொன்னது.
கொக்கு மேலெழுந்து பார்த்தது. ஒரு சிறுவன் பெரிய ஆமையில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். கொக்குகள் எழுந்து பறந்து பார்த்தன. வுhனம் இருட்டியது. மின்னல் வெட்டியடித்தது. “ஆமையண்ணா நாங்க போய்வாறம். மழைவரப் போகுது”. கூறியபடி வந்த வழியே வானில் பறந்து சென்றன. இடிமுழக்கத்தோடு மழை சோவெனப் பெய்தது. ஆமையின் மனதிலே குதூகலம் பொங்கியது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுதான் தவமாகும்.
தாமரைக் குளம்
அந்தக் காட்டில் மிகப்பழைய குளமிருந்தது. குளம் பெரியது. ஆழமானது. குளத்தின் மேற்காக வயல்நிலங்கள் பரந்து கிடந்தன. குளத்தில் நீர்நிறைந்து இருந்தது. குளம் நிறையத் தாமரை படர்ந்திருந்தது. தாமரை தண்ணீர் மட்டத்துக்கு வளர்ந்து பூத்திருக்கும். குளத்திலிருந்து நீர் வயல்களுக்குப் பாயும். வயல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். களத்தை நம்பிப் பல உயிரினங்கள் வாழ்ந்தன. காட்டு விலங்குகள் ஒருபுறம் தண்ணீர் குடிக்க வரும். மீன் கொத்தி மரத்தில் காவலிருக்கும். கொக்குநிரை சேர்ந்து கும்மாளமிடும். மைனாக்கள் கரையிலிருந்து கதையளக்கும்.
ஆமைகளும் வாழ்ந்தன. அவை தண்ணீருக்குள்ளும் வாழும். தரையிலும் வாழும். குளத்தையண்டிய புதர்களில் முயல்களும் வாழ்ந்தன. மாலைவேளைகளில் ஆமைகள் குளக்கரைக்கு வரும். பறவைகளும் கூடும். முயல்கள் சேர்ந்து விளையாடும். மைனாக்கள் சேர்ந்தால் இரைச்சாலாய் இருக்கும். அவை ஆளுக்காள் சண்டையிட்டுக் கட்டிப்புரளும். ஆமைகள் பார்த்துச் சிரிக்கும். கொக்குகள் வேடிக்கை பார்க்கும்.
“ஏன் சண்டை பிடிக்கிறீங்க. சந்தோசமாக இருங்கப்பா” மைனாக்கபை; பார்த்து ஒரு ஆமை கூறியது. வாய்க்கார மைனாக்களுக்குக் கோபம் வந்தது. “ஓகோ ஆமைக்கு வந்த ரோசத்தைப் பாரு. ஒரு மைனா ஏளனமாகச் பார்த்தது. “இருக்காத பின்ன? எல்லாம் அந்தா இருக்கிற முயல் செய்தவேலை” சுட்டிக் காட்டிச் சொன்னது. “முயல் என்ன செய்தது”? சின்ன மைனா கேட்டது . “உனக்கு விளங்காது. ஒரு ஓட்டப் போட்டி நடந்தது. ஆமை அரக்கியரக்கிப் போனது. முயல் வேகத்தோடு ஓடியது. ஆமையைக் காணவில்லை. இந்த ஆமை என்னை வெல்வதாவது. இடையில் ஓய்வெடுக்க எண்ணியது. அப்படியே நித்திரை கொண்டிற்று. ஆமை சத்தமில்லாமல் போய்
வெற்றிபெற்றது. அது தான் அவருக்குத் தலைக்கனம்.” பெரிய மைனா சத்தமாகக் கூறியது.. அந்த நேரம் பார்த்துக் “கா..கா..” என இரைந்து கொண்டு இரண்டுகாகங்கள் பறந்து வந்தன. மைனாக்கள் வரையாடுவதை உற்றுக் கேட்டன. மீண்டும் “கா..கா..” கரைந்தன. கொக்குக் கூட்டமும் வலந்து சேர்ந்து கொண்டது.
“இந்த ஆமையின் தலைக்கனத்தைக் குறைக்க வழியிருக்கிறது. நாங்க ஒன்று சொன்னால் செய்வீங்களா”? காகங்கள் இரைந்தன. மைனாக்களின் ஆரவாரம் அடங்கியது. “சொல்லுங்க செய்வோம்”;. உடன்பட்டன.
இந்தக் குளம் பெரியது. இந்தக் குளத்தின் அந்தப் பக்கத்தில் உள்ள மரத்தை யார் முதலில் போய் தொடுகிறாரோ அவருக்குத்தான் வெற்றி.” காகங்கள் ஆரவாரித்தன. “ நானும் திருத்தம் சொல்லவேணும்”.





இந்தப் போட்டியில் சிறிய விலங்குகளும்;, பறவைகளும் பங்கு பற்றலாம். பறவைகள் பறக்கக் கூடாது. குளத்தில் இறங்கி நீந்திச் செல்லலாம். தண்ணீரில் நடந்து செல்லலாம். அல்லது குளத்தைச் சுற்றி ஓடலாம். மரத்தை முதலில் தொடுபவருக்கு ஓரு தேன்வதை கொடுக்கப் படும். நரி உற்சாகமாகச் சொன்னது.
முயல் விரைந்து ஓடி வெற்றிபெறலாம் என எண்ணியது. கொக்கு நடந்து குளத்தைக் கடக்கலாம். என்று நினைந்தது. ஆமை தனக்குள் சிரித்துக் கொண்டது. “இந்தக் கரையில் வீழ்ந்தால் அந்தக் கரையில் மிதப்பேன்” என்று ஆயத்தமானது. போட்டி பற்றிய செய்தி எங்கும் பரவியது. நிபந்தனைகள் அறிவிக்கப் பட்டன. பங்கு கொள்ள பறவைகளும், சிறிய விலங்குகளும் வந்தன. தொடக்குநர் ஒருவர் வேண்டும். யாரை அழைப்பது? தண்ணீர் குடிப்பதற்காக யானைக்கூட்டம் வந்தது. தொடக்குநராகவும், நடுவர்களாகவும் செயற்பட யானைகள் சம்மதித்தன. சில யானைகள் குளத்தின் அக்கரையில் உள்ள மரத்தடிக்குச் சென்றன. குளத்தினைச் சுற்றியும் நின்றன. போட்டி தொடங்கும் தொடக்குநர் நினறது. போட்டியாளர்களை அழைத்தது. குறிப்பிட்ட இடத்துக்கு யாவும் வந்தன.
முயல், ஆமை, கொக்கு, கானாங்கோழி, காகம், மைனா ஆகியன ஆயத்தமாக நின்றன. அவதானிப்பாளர்களாகக் கடமையாற்ற மீன்கொத்தி, மைனா. நரி முன்வந்தன. யானை கடைப்பிடிக்க

வேண்டிய விதிகளை விளக்கியது. போட்டியாளர்கள் குளத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்தன. எப்படி ஓடுவதென்று தீர்மானித்தன. யானை தனது தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது.
முயல் குளத்தைச் சுற்றி விரைந்தது. நரி முயலின் பின்னால் ஓடியது. ஆமை குளத்தில் வீழ்ந்து நீந்தியது. தாமரை ஆமைக்குத் தடங்கலாக இருந்தன. குளம் நிறைந்து தாமரை பூக்கள் விரிந்திருந்தன. இலைகள் பரவியிருந்தன. கொக்குத் தண்ணீரில் இறங்கியது. காகமும், மைனாக்களும் இறங்கின. கானாங்கோழி உற்றுப் பார்த்தது. இலைகள் பரந்துள்ள நிரையைக் கவனித்தது. பூக்களில் கால்கள் படாதவண்ணம் கால்களை வைத்தது. பூக்களின் ஊடே புகுந்து நடந்தது.
காகத்தால் விரைந்து நடக்க முடியவில்லை. சரியாக இலைகளின் மேல் கால்கள் வைக்கத் தடுமாறியது. தண்ணீரில் மூழ்கியெழுந்தது. மைனாவும் இலையில் ஓடிப் பார்த்து விழுந்தது. கானாங்கோழிக்கு நல்ல
பரீட்சையம் இருந்தது. இலைகளை அவற்றின் தண்டுகள் தாங்கும் இடத்தில் கால்களை வைத்து நடந்தது. மீன்கொத்தியுடன் மைனாவும் மரத்தில் இருந்து அவதானித்தன. எப்படி இந்தக் கானாங்கோழியால் இப்படி விரைந்து நடக்க முடிந்தது?. எப்படி அதன் கால்களைத் சரியாகத் தண்டு இலைகளைத் தொடும் இடத்தில் வைக்கிறது?. அதன் கால்கள் வைக்கும் இடைவெளியில் தாமரையிலைகள் பரந்து கிடந்தன. குளத்தின் ஓரத்தில் நரி அவதானித்துக் கொண்டிருந்தது.
கானாங்கோழி குளத்தைக் கடந்து மரத்தைத் தொட்டு நின்றது. யானைகள் கானாங்கோழியை வாழ்த்திப் பிளிறின. அதனைத் தூக்கித் தங்கள் முதுகில் வைத்து வாழ்த்தின. முயலை வென்ற ஆமை இன்னும் வெற்றிக்கம்பத்தை அடையவில்லை. முயல் விரைந்து ஓடியது. முயல் நரியை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவடவொன்று எளிதாகும்.








எலியின் சாதனை ..
முன்னொரு காலத்தில் சீனதேசத்தின் சக்கரவர்த்தியாக ஜேட் இருந்தார். அவரது ஆட்சிக்காலம் பொன்னானது. காலங்களை அறிய ஆவல் கொண்டார். காலத்தை எப்படிக் கணிப்பது? அதனைக் கணிப்பதற்காக வழிகளைத் தேடினார். வானத்தில் பன்னிரெண்டு ராசிகள் உள்ளன. அந்த ராசிகளுக்கு உருவங்களும் உண்டு. அவற்றுக்குப் பெயர்களும் உண்டு. நமது தேசத்தில் அந்த உருவங்களுக்குப் பெயர்கள் இல்லை. வருடங்களுக்குப் பெயரும் இல்லை. பன்னிரண்டு வருடங்களுக்கும் என்ன பெயர் வைக்கலாம்? யோசித்தார். விடைகிடைக்கவில்லை.
அமைச்சர்களை அழைத்தார். அவர்கள் வந்தார்கள். அமைச்சர்களோடு ஆராய்ந்தார். முதலமைச்சரிடம் ஆலாசனை கேட்டார். மற்றவர்களிடமும் கேட்டார். எல்லோரும் யோசித்தார்கள். நீங்கள் முடிவெடுத்து நாளை வாருங்கள் என்றார். அவர்கள் போய்விட்டார்கள். அரசரின் மனம் ஆழ்ந்து யோசித்தது. அரசரே முடிவெடுத்தார். ஒரு போட்டி வைத்துப் பார்த்தால் என்ன? ஓரு முடிவுக்கு வந்தார். சீனாவில் விரைந்து ஓடும் ஆறு இருந்தது. அதனை நினைவு கொண்டார். அது படுபயங்கரமானது. பார்ப்பவர்களுக்குப் பயங்கரமாக இருக்கும்.
தண்ணீர் பாயும் சத்தம் பயத்தை ஊட்டும். மெதுவாக நடந்தார். அவர் விரைந்தோடும் ஆற்றையடைந்தார். அது பயங்கரமான இரைச்சலோடு விரைந்து பாய்ந்தது. சக்கரவர்த்தி அந்த ஆற்றைப் பார்க்கச் சென்றார். ஆற்றங்கரையில் நின்று யோசித்தார். அவரது மூளை வேலைசெய்தது.
அரண்மனைக்குப் போனார். அமைச்சர்களை அழைத்தார். அவர்களும் வந்தார்கள். அரசசபை கூடியது. அரசரின் செயல் அமைச்சர்களுக்குப் புதுமையாக இருந்தது. அரசர் தொடங்கினார். “எனது பிறந்த நாளன்று ஒரு போட்டி வையுங்கள். அதை நான் சொல்வது போல் நடத்தவேண்டும். என்றார். “ அரசே அது எப்படி இருக்கவேண்டும் சொல்லுங்கள்”. அமைச்சர்கள் கேட்டார்கள். போட்டியை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார். அமைச்சர்களின் மூளைகள் வேலைசெய்தன. ஆனால் ஒரு பயனுமில்லை. முதலமைச்சர் புத்திசாலி. அவர் தனது ஆலோசனையைக் கூறினார். “சக்கரவர்த்தியின் பிறந்த நாளன்று ஒரு போட்டியை வைத்தால் என்ன?” என்றார்கள். “சரி அப்படிச் செய்யுங்கள்”. “என்ன போட்டி வைக்கலாம்”.? கேட்டார்கள். “அந்தப் போட்டி இதுதான்.” அரசர் தொடங்கினார். “நமது நாட்டின் எல்லையில் ஆறு உள்ளது. அது பயங்கரமாகப் பாய்ந்து ஓடும். அந்த ஆற்றைக் குறுக்காக நீந்திக்கடக்கவேண்டும்.” அரசர் விளக்கினார். “யார் யார் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்?”. மந்திரிகளும் பிரதானிகளும் கேட்டார்கள். “சிறப்பாக விலங்குகளும் பிராணிகளும் பங்கு பெறவேண்டும். அதில் வெற்றி பெறுகிறவர்கள் யாரென்று பார்ப்போம்.? வெற்றி பெறுபவர்களது பெயர்களை வருடங்களுக்குப் பெயர் சூட்டலாம். முதல் வரும் பன்னிரெண்டு இடங்களை எடுப்போம். அந்த வரிசையில் பெயர்களை வைத்து அழைப்போம்.” என்றார். “ஆகா அற்புதமான எண்ணம். அப்படியே செய்யலாம்.” ஒப்புதல் அமைச்சர்கள் அளித்தார்கள்.
“இதனை நமது நாட்டிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவியுங்கள்” என்றார். அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். அமைச்சர்கள் போட்டியின் விதிகளை அறிவித்தார்கள்.
எல்லோரும் ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்தனர். வெளவாலுக்குச் சந்தோசம். “நான் வெற்றி பெறுவேன். நான் குட்டி போடும் விலங்கு. எனது குட்டிகளுக்ப் பாலூட்டுகிறேன். நானும் பங்கு கொள்வேன்”; என்றது.
நரி அதனைக் கேட்டது. அரசரின் காதில் சொல்லி வைத்தது. “பறப்பவை எவையும் பங்கு கொள்ள முடியாது” அரசர் அறிவித்து விட்டார். போட்டி அறிவிக்கப் பட்டது. மக்கள் சென்று பார்த்தனர். விலங்குகளும் பாத்தன. ஆறு படுபயங்கர வேகத்தில்
பாய்ந்துகொண்டிருந்தது. போட்டியில் பங்குபற்ற விலங்குகள் முன்வந்தன. நாள் அறிவிக்கப்பட்டது.



பங்குபற்றும் போட்டியாளர்களை வருமாறு அறிவிக்கப்பட்டது. நீந்தக்கூடிய பறவைகளும் வந்தன. விலங்குகள் ஒன்று சேர்ந்து சாரிசாரியாக வந்தன. யானைகள், தனியாகவும் கூட்டமாகவும் வந்தன. பன்றிகள், காண்டாமிருகள், போன்றனவும் வந்தன. மான் கூட்டம் திரண்டு வந்தது. பெரிய பரந்த வெளியில் ஒன்று கூடின. அவற்றை விரைந்தோடும் அந்த ஆற்றங்கரைக்குச் செல்லுமாறு பணித்தார்கள். அவை ஆற்றங்கரையில் திரண்டு ஆரவாரித்தன. ஆறு இரைந்து அலையெறிந்து ஓடிக்கொண்டிருந்தது. மனிதர்கள் எட்டிப்பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
வேடிக்கை பார்க்கவென்று பல விலங்குகள் வந்தன. சில ஆற்றங்கரையில் உல்லாசமாக உலா வந்தன. கரடிக்கூட்டம் ஒருபுறம் வந்தது. நரிகள் கூட்டங்கூட்டமாக வந்து கூடின. குரங்குகளும் கூடின. குதிரைகள், ஆடு. எருதுகள் முயலும் வந்தது.புலிகள் பாய்ந்து வந்தன. பாம்பு, நாய்களும் பங்குகொள்ள வந்தன.





பல மிருகங்களுக்கு உதறல் எடுத்தது. சக்கரவர்த்தி ஜேட் வந்தார். அவருக்காக மேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது. அவர் வந்து மேடையில் அமர்ந்தார். மிருகங்கள் ஆரவாரமிட்டன. மனிதர்களும் மகிழ்ந்து வாழ்த்தினர். சக்கரவர்த்தி எழுந்தார். “நமது சீனநாட்டில் வருடங்களுக்குப் பெயரில்லை. ராசிகளின் பெயரால் வருடங்கள் அழைக்கப் படுகின்றன. நாம் நமது தேசத்தில் வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும். பன்னிரெண்டு ராசிகள் உள்ளன. பன்னிரெண்டு வருடங்களுக்குப் பெயரிடவேண்டும். இந்த ஆற்றைக் குறுக்காக நீந்திக்கடந்து வெற்றி பெறுபவர்களது பெயர்களால் பன்னிரெண்டு மாதங்களும் அழைக்கப்படும்”;. என்றார்.
மிருகங்கள் ஆரவாரித்தன. இந்தப் பயங்கர ஆற்றை எவ்வாறு கடக்கலாம்? கேள்விமேல் கேள்விகள் எழுந்தன.
நீச்சல் போட்டி ஆயத்தமானது. பல்வேறு மிருகங்களும் கரையோரமாக வரிசையில் நின்றன. யானை, கரடி. சிங்கம். புலி எனப் பல மிருகங்கள் நின்றன. அவைகளுள் ஓரு பூனையும். எலியும் குந்தியிருந்தன. அவை நீச்சலில் மிகவும் பின்தங்கியிருந்தன.
பக்கத்தில் பலமான எருது நின்றது. எருதுவிடம் மெதுவாகக் கதை தொடுத்தன. “ஐயா எங்களுக்கு நீந்தத்தெரியாது. நீங்கள் பலசாலியாக இருக்கிறீர்கள். நன்றாக நீந்துவீர்கள். எங்களுக்கு உதவமுடியுமா” எனக் கெஞ்சின. எருதுவுக்குப் பெருமையாக இருந்தது. எலியையும், பூனையையும் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. “இவ்வளவு மிருகங்கள்



இருந்தும் என்னிடம் உதவி கேட்கிறீர்கள். உங்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. என்ன செய்வது? நான் உதவுகிறேன்” எனக் கூறியது. “எப்படி என்னோடு வருவீர்கள்.? சரி என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள். அக்கரையில் விட்டுவிடுகிறேன்” என்றது.எலியும், பூனையும் பாய்ந்து எருதுவின் முதுகில் ஏறிக்கொண்டன. போட்டி தொடங்கியது.மிருகங்கள் ஆற்றில் பாய்ந்து நீந்தின. எருதும் பாய்ந்தது. எலியும், பூனையும் எருதின் முதுகைப் படித்திருந்தன. பல மிருகங்களை விரைந்தோடும் வெள்ளம் அடித்துச் சென்றது. கரடியை தண்ணீர் ஒருபுறம் இழுத்துச் சென்றது..சில மிருகங்கள் பின்வாங்கின. எருது விரைவாக நீந்தியது. அக்கரை தெரிந்தது. கரை கிட்ட வந்ததும் எலி பூனையை ஆற்றில் தள்ளிவிட்டது. பூனை ஆற்றில் அவதிப்பட்டது. எருது கரையை அடையுமுன் எலி துள்ளிப்பாய்ந்து கரையை அடைந்தது. எலி வெற்றி பெற்றது. “மிகக்கெட்டிக்கார எலி” என்று சக்கரவரத்;தி ஜேட் புகழ்ந்தார்.“இன்றுமுதல் ஏலியின் பெயரால் முதலாவது வருடத்தை அழைப்போம்.” என அறிவித்தார். பன்னிரெண்டு வருடங்களில் முதலாவது எலிதான். பாவம் எலிக்கு உதவிய எருதுவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. சீன ராசிகளில் முதலாம் இடம் எலிக்கும் இரண்டாம் இடம் எருதுவுக்கும் வழங்கப்பட்டது. “ஏன்னை நயவஞ்சகமாக ஆற்றில் தள்ளிவிட்டாய். ஏனக்குத் துரோகம் செய்து விட்டாய். உன்னைச் சும்மா விடமாட்டேன். என்று கூறியது. அன்றுமுதல் பூனைக்கும் எலிக்கும் பகை உருவாகியது. எலியைப் பூனை துரத்தத் தொடங்கியது. எல்லா மிருகங்களும் பார்த்து ச் சிரித்தன.

நரியும் காட்டுக் கோழியும்
அந்தக் காட்டில் மிருகங்களும், பறவைகளும் வாழ்ந்தன. தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தாமே பேசித் தீர்த்தன. அந்தக் காட்டில் ஒருநரிக் கூட்டம் வாழ்ந்தது. நரிக்கூட்டத்துக்கு ‘வல்லவன்’ என்ற நரி தலைவனாக இருந்தது. வல்லவன் தந்திரத்தில் வல்லது. மிகவும் புத்தியும் உள்ளது. “எந்தப் பிரச்சினை வந்தாலும் எங்கள் தலைவர் தீர்த்து வைப்பார். இனிய அன்பர்களே உங்கள் பிரச்சினையை எங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்.” என்று நரிக் கூட்டம் பரப்புரைகளைச் செய்தன.


விலங்குகளும், பறவைகளும் நம்பின. விலங்குகளும் பறவைகளும் வந்தன. தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை கேட்டன. நரி அவற்றைக் அனுதாபத்துடன் பார்க்கும். அவை சொல்வதைக் கவனமாகக் கேட்கும். மிருகங்கள் தங்கும் இடங்களைக் கேட்டறியும். பொருத்தமில்லாத இடங்களை மாற்றச் சொல்லும். பிரச்சினைகளுக்கு ஏற்றப் பதிலைக் கூறும். அவை சந்தோசத்துடன் கேட்டுப் போகும். வல்லவன் நரியின் புகழ் காடெங்கும் பரவியது. நாட்கள் நகர்ந்தன. ஒருதரம் வந்த விலங்கு
மீண்டும் வருவதில்லை. அதேபோல் பறவைகளும் வருவதில்லை. நரியாருக்குப் பின்னால் பல நரிகள் உதவிக்கு இருந்தன. தன்னிடம் வரும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தனது பெருமைகளைச் சொல்லும். தான் அவற்றுக்குச் சொன்ன பதில்களைச் சொல்லும். ஒரு நாள் ஒரு காட்டுக் கோழி வந்தது. அந்தக் கோழி கொழுத்து இருந்தது. நரியின் நாவில் எச்சில் ஊறியது. “என்ன பிரச்சினை”? என்று கேட்டது. “மரநாயும், கொடும்புலிகளும் என்னை வேட்டையாட வருகின்றன. நான் மரத்தின் உச்சங்கிளையில் தங்குகிறேன். நித்திரையில் விழுந்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது. நான் விழாது ஒருக்க வழி சொல்லுங்கள்.” என்றது.
நரி யோசனை செய்வது போல் நடித்தது. “நீ இப்போது தங்கும் இடத்தை மாற்று. நான் சொல்லும் இடத்தில் தங்கு. உனக்குப் பயம் இல்லாது போகும். மரநாயும், கொடும்புலிகளும் வராது. அது நான் வாழும் பகுதி” என்று ஒரு இடத்தைக் கூறியது.
காட்டுக் கோழி நம்பியது. நரி சொற்படியே செய்வதாகக் கூறியது. “எனது நண்பன் கரிக்குருவி. அவன் பக்கத்துக் காட்டுக்குப் போயிருக்கிறான். அவன் வந்ததும் சொல்லிவிட்டு வருகிறேன்”. என்றது. “நீ விரைவில் நான் சொன்ன இடத்துக்குப் பேய்விடு. மரநாய் பொல்லாதது. கவனம்.” என்றது. காட்டுக் கோழி போவதையே பார்த்துக் கொண்டிருந்தது.நாட்கள் சென்றன. கரிக்குருவி வரவில்லை. நரி குறிப்பிட்ட இடத்தில் தங்கியது. அந்தக் காட்டுக் கோழி திரும்பி வரவில்லை. நரி;யிடம் சென்ற மிருகங்கள் காணாமல் போயின. பறவைகளும் குறைந்து கொண்டு வந்தன. நரி கொழுகொழுவென்று கொழுத்திருந்தது. நரிக்கூட்டத்துக்கு இலகுவில் உணவு கிடைத்தது. நரிக்கூட்டம் அதிக தூரம் வேட்டையாடப் போவதில்லை.
கரிக்குருவி காட்டுக் கோழியைத் தேடி வந்தது. கோழியைக் காணவில்லை. தனது நண்பனைக் காணாது வாடியது. தனிமையில் இருந்து சீட்டியடிக்கும். அந்தச் சீட்டி அழகான கொக்கின் காதுகளில் விழுந்தது. மெதுவாக கரிக்குருவியிடம் வந்தது. “நண்பா நீ ஒவ்வொரு நாளும் அழகாகப் பாடுகிறாய். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. யாருக்காகப் பாடுகிறாய்?” கொக்குக் கேட்டது. “காட்டுக் கோழியை நினைத்துப் பாடுகிறேன்” கரிக்குருவி பதிலளித்தது.
“காட்டுக் கோழிக்கு என்ன நடந்தது”? கொக்கு வினவியது. “தெரியாது. எப்படியும் காட்டுக் கோழி வரும். அதுதான் பாடுகிறேன்”. என்றது.“கொக்கொக் கொக்” சத்தம் கேட்டது. கரிக்குருவி சத்தம் வந்த இடத்துக்கு விரைந்தது. பின்னால் கொக்கும் விரைந்தது. காட்டுக் கோழியைத் தேடியது. கோழி ஒரு புதருள் மறைந்திருந்தது. கரிக்குருவி கண்டு கொண்டது. சந்தோசத்தால் துள்ளியது காட்டுக் கோழி வாடி மெலிந் திருந்தது. பயத்தால் நடுங்கியது.
“நண்பா என்ன நடந்தது? கரிக்குருவி கேட்டது? கோழி பயந்து நடுங்கியது. நரி எனக்கு ஒரு மரத்தைக் காட்டியது. அந்த மரத்தின் ஒருகிளை பாறைத் தொடரை மூடியிருந்தது. அழகான கூடுபொல் இருந்தது. அதில் படுத்தால் நல்ல தூக்கம் வரும். சுகமாகவும் இருக்கும். அதில தங்குமாறு சொன்னது. நானும் இரண்டு நாட்கள் தங்கினேன். நல்ல சுகமாக இருந்தது. அடுத்த நாள் நான் விழித்திருந்தேன். நரிக்கூட்டம்
மெதுவாக வந்தது. அந்த நரி‘வல்லவன்தான்’ தலைவன்;. அது முன்னால் வந்தது. “இது நல்ல
கொழுத்த காட்டுக் கோழி. நான் முன்னுக்குப் போகிறேன். என்னைக் கண்டால் கோழி ஓடாது. நான் பிடித்துச் சாப்பிடுவேன். பின்னால் நீங்க வாங்க” சொல்லி பாறையில் ஏறியது.நான் பின்புறத்தால் வேறுமரத்தில் தாவியிருந்தேன். என்னைக் கண்டு கொள்ளவில்லை. “ஆஹா.. கோழி தப்பிப் போய்விட்டது. நான் ஏமாந்து போனேன். ஆனால் அந்தக் கோழியை விடமாட்டேன். என்று சொல்லிப் போனது. அதுதான் பயமாக இருக்கிறது.” கோழி சொல்லிக் கவலைப் பட்டது. இந்த நரிக்கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும். என்ன செய்யலாம்.”? காட்டுக் கோழி கேட்டது. மூன்றும் ஆலோசித்தன. கொக்கு குரங்குகளிடம் சென்றது. காட்டுக் கோழியின் செய்தியைக் கூறியது. குரங்குகள் பாய்ந்து வந்தன.
“சரி நாங்கள் நடவடிக்கை எடுக்கறோம். இன்றைக்கே கூட்டம் போட்டு முடிவை எடுப்போம்”. என்றன. மிருகங்களும் பறவைகளும் ஒன்று கூடின. நரியின் தந்திரத்தை விபரமாகக் கூறின. காட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்தன. அப்படியே நரியின் இடத்துக்கு நடந்தன. நரிக்கூட்டம் கண்டு கொண்டது. “இன்றைக்கு இவ்வளவு கூட்டமா? நமக்கு வேட்டைதான். தலைவனிடம் சொல்வோம்”. என்று ஓடின. செய்தி நரித்தலைவன் ‘வல்லவன்’; காதில் விழுந்தது. உடனே “ஒவ்வொருவராக உள்ளே விடுங்கள். கட்டளையிட்டது. வழமையாக நரி இருக்கும் இடத்தில் அரசனைப் போல் இருந்தது.குரங்குகள் பாய்ந்து வந்தன. அவற்றை நரிக்கூட்டம் தடுத்தது. “ஒவ்வொருவராக தலைவரிடம் போங்கள்”;. கட்டளை இட்டன. பின் தொடர்ந்து யானைகள் வந்தன. நரிகளின் வால்களைப் பிடித்துத் தூக்கி வீசின. கொம்பன் யானை உள்ளே போனது. “ஓ…. நண்பரே.. உங்களுக்குமா பிரச்சினை. சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே”? நரித்தலைவன் நையாண்டியுடன் சொன்னது. “பிரச்சினை நீதான். நீயும் உன் கூட்டமும் இந்தக் காட்டின் நிம்மதியைக் கெடுத்துப் போட்டீங்க. உங்களை இப்படியே விட்டால் காடு அழிந்து விடும். முதலில் உனக்குப் பாடம் படிப்பிக்க வேணும்.” கூறியது. நரித்தலைவனின் வாலைப் பிடித்து இழுத்தது. ஒரே சுற்றாகச் சுற்றி வீசியது. நரித்தலைவன் வல்லவன் தூரத்தே போய் விழுந்தது. பின்னால் யானைக்கூட்டம் வந்தது.கொக்குப் பறந்து வந்தது. யானையின் மேலிருந்து நரிகளைக் காட்டியது. சில நரிகள் பற்றைகளுள் பதுங்கின. அவற்றைக் காட்டுக் கோழி கண்டு கொண்டது. எங்களை ஏமாற்றி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. இனியும் உங்களை விட்டால் மற்ற மிருகங்க ளுக்கு ஆபத்து. விடமாட்டோம். துரத்துங்கள். சத்தமிட்டது. பதுங்கியிருந்த நரிகள் ஓடத்தொடங்கின. எல்லா மிருகங்களும் பறவைகளும் நரிக்கூட்டத்தை ஓட ஒட விரட்டின.
இப்போது அந்தக் காட்டில் நரிக்கூட்டம் இல்லை. காட்டு மிருகங்களும் பறவைகளும் நிம்மதியாக வாழ்ந்தன..




ஆமையும் கொக்கும்
மழை வேண்டிய காலத்தில் பெய்யவில்லை. அதனால் வரட்சி நிலவியது. குளம் வற்றிக் கொண்டு வந்தது. சனங்களுக்குத் திண்டாட்டம். குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் கிணறுகளில் தண்ணீர் நிற்கும். கிணற்று நீரும் வற்றிக் கொண்டு வந்தது. சிறுவர்கள் குளத்தைப் பார்த்தார்கள். தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. அவர்களுக்குக் கொண்டாட்டம். அவர்கள் மீன்களைப் பிடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குளத்தில் ஆமைகளும் வாழ்ந்தன. ஆமைக்குக் கவலை. தண்ணீர வற்றினால் குளத்தில் வாழமுடியாது.
ஆமைகள் தினமும் வானைப் பார்த்து ஏங்கும். இன்றாவது மழை வருமா? கவலையோடு காத்திருக்கும். மழை பெய்தபாடில்லை. மழை பெய்யாது போனால் என்ன செய்வது? நினைந்து வாடியிருக்கும்.
தாமரை இலைகள் வாடிக்கிடந்தன. பூக்கள் இல்லை. மிருகங்கள் தண்ணீர் குடிப்பதற்கு வந்தன. தூரத்தில் நின்று பார்த்தன. சிறுவர்கள் குளத்தில் இறங்கினார்கள். இந்தச் சிறுவர்கள் குளத்தைக் கலக்கி விட்டார்கள். தண்ணீர் எப்படிக் குடிப்பது? குளத்தின் மத்தியில் ஒரு பெரிய பாறையிருந்தது. ஆமை பாறையில் கவலையோடு இருந்தது. கொக்குக் கூட்டம் பறந்து வந்தது. வட்டம் அடித்து நடுக்குளத்தில் இறங்கியது. கொக்குகள் பாறையில் குவிந்து நின்றன.
“ மழை பெய்யவில்லை. இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டு வருகிறது. தண்ணீர் வற்றினால் நமக்கு உணவு கிடைக்காது. மனிதர்களையும் வறுமை வாட்டும். என்ன செய்வது”? ஆமை தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. ஆமையைக் கொக்குகள் சூழ்ந்து கொண்டன. சில கொக்குகள் கிண்டலடித்தன. “என்ன ஆமையண்ணா..கவலையா”? கேட்டன. “இருக்காதா பின்ன? குளத்தில தண்ணீர் இல்லை. உணவுப் பஞ்சம். காட்டு மிருகங்களுக்கும் குடிநீரும் இல்லை. சனங்கள் கஸ்டப்படப் போறங்க” கவலையோடு கூறியது.
“ஆமையண்ணா நீயேன் கவலைப் படுகிறாய்?. இந்தக் குளம் இல்லாட்டி இன்னொரு குளம். போகவேண்டியது தானே. நாங்க இந்த ஒரு குளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. பறந்து திரிந்து வசதியான குளங்களில் வாழ்வோம். இது இல்லாட்டி அது”. கொக்குகள் சேர்ந்து சிரித்தன. “எல்லாவற்றுக்கும் ஒரு நியதியிருக்கிறது. நீங்க பறவையினம். உங்களுக்குச் சிறகிருக்கிறது. உங்கள் வாழ்க்கை முறை வேறு. எங்களுக்கு உங்களைப் போல் வாழமுடியாது. இந்தக் குளத்தைச் சுற்றித்தான் வாழ்க்கை”. ஆமை அமைதியாகக் கூறியது.
“ஆமையண்ணா எங்களோடு வாங்க. நாங்க உங்களக் கூட்டிப்போகிறோம். நல்ல வசதியாக வாழலாம்.” கொக்குகள் கூறின. ஆமை சிரித்தது. “ஆமையண்ணா ஏன் சிரிக்கிறிங்க”? கொக்குகள் சேர்ந்து கேட்டன. “‘கொக்குகள் தூக்கிச் சென்ற ஆமை’ கதை தெரியுமா உங்களுக்கு?. ஆமையாகிய எங்களுக்கு புத்தியில்லை என்று கதை விடுறாங்க. இப்படித்தான் இந்த மனிதர்கள் தங்களுக்கு வேண்டியமாதிரிக் கதை விடுவாங்க. நாங்க யானையைப் போல பலசாலிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா?. நமக்குள்ளே ஒரு ஒற்றுமையிருக்கிறது.? கொக்குகளைப் பார்த்து ஆமை கேட்டது. “ என்ன ஒற்றுமை? சொல்லுங்க”. கொக்குகள் ஆவலுடன் கேட்டன. “நீங்களும் முட்டையில் இருந்துதான் வந்தீர்கள். நானும் முட்டையில் இருந்துதான் வந்தேன். அதுதான் நமக்குள் உள்ள ஒற்றுமை.” ஆமை சொல்வதைக் கொக்குகள் கவனமாகக் கேட்டன.
“எங்கள் அம்மா மணலில் ஒரு வீடமைத்து முப்பது முட்டைகளையாவது இடுவார். நாங்களாகவே குஞ்சு பொரித்து வெளிவருவோம். எங்கள் உணவை நாங்களே தேடிக் கொள்வோம். நீங்கள் அப்படியில்லை. உங்கள் அம்மா முட்டை விட்டபின் அடைகாக்கவேண்டும். உணவு ஊட்டி விடவேண்டும். பறவை காட்டவேண்டும். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நாங்கள் இந்தச் சூழலுக்குப் பழக்கப் பட்டவர்கள். எங்களால எதையும் சமாளிக்க முடியும். நாங்கள் மற்ற உயிர்களைப் பற்றிதான் கவலைப் படுகிறோம். நாங்கள் மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம். மனிதர்கள் நல்லவர்கள். அவர்களையும் சூழல்தான் பாதிக்கிறது. கண்டவற்றை எல்லாம் சாப்பிட்டுக் கொழுப்பேறிப் போச்சு. மருந்தும் மாத்திரையுமாக மனிதர் மாறிவிட்டார்கள். தாவர உண்ணிகளாக மாறிவருகிறார்கள். அங்கே பாருங்கள் சிறுவர்கள் எங்களை நண்பர்களாகச் சேர்த்து விளையாடுறாங்க. இதைவிட சந்தோசம் வேறென்ன இருக்கு”? ஆமை சொன்னது.
கொக்கு மேலெழுந்து பார்த்தது. ஒரு சிறுவன் பெரிய ஆமையில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தான். கொக்குகள் எழுந்து பறந்து பார்த்தன. வுhனம் இருட்டியது. மின்னல் வெட்டியடித்தது. “ஆமையண்ணா நாங்க போய்வாறம். மழைவரப் போகுது”. கூறியபடி வந்த வழியே வானில் பறந்து சென்றன. இடிமுழக்கத்தோடு மழை சோவெனப் பெய்தது. ஆமையின் மனதிலே குதூகலம் பொங்கியது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுதான் தவமாகும்.
தாமரைக் குளம்
அந்தக் காட்டில் மிகப்பழைய குளமிருந்தது. குளம் பெரியது. ஆழமானது. குளத்தின் மேற்காக வயல்நிலங்கள் பரந்து கிடந்தன. குளத்தில் நீர்நிறைந்து இருந்தது. குளம் நிறையத் தாமரை படர்ந்திருந்தது. தாமரை தண்ணீர் மட்டத்துக்கு வளர்ந்து பூத்திருக்கும். குளத்திலிருந்து நீர் வயல்களுக்குப் பாயும். வயல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். களத்தை நம்பிப் பல உயிரினங்கள் வாழ்ந்தன. காட்டு விலங்குகள் ஒருபுறம் தண்ணீர் குடிக்க வரும். மீன் கொத்தி மரத்தில் காவலிருக்கும். கொக்குநிரை சேர்ந்து கும்மாளமிடும். மைனாக்கள் கரையிலிருந்து கதையளக்கும்.
ஆமைகளும் வாழ்ந்தன. அவை தண்ணீருக்குள்ளும் வாழும். தரையிலும் வாழும். குளத்தையண்டிய புதர்களில் முயல்களும் வாழ்ந்தன. மாலைவேளைகளில் ஆமைகள் குளக்கரைக்கு வரும். பறவைகளும் கூடும். முயல்கள் சேர்ந்து விளையாடும். மைனாக்கள் சேர்ந்தால் இரைச்சாலாய் இருக்கும். அவை ஆளுக்காள் சண்டையிட்டுக் கட்டிப்புரளும். ஆமைகள் பார்த்துச் சிரிக்கும். கொக்குகள் வேடிக்கை பார்க்கும்.
“ஏன் சண்டை பிடிக்கிறீங்க. சந்தோசமாக இருங்கப்பா” மைனாக்கபை; பார்த்து ஒரு ஆமை கூறியது. வாய்க்கார மைனாக்களுக்குக் கோபம் வந்தது. “ஓகோ ஆமைக்கு வந்த ரோசத்தைப் பாரு. ஒரு மைனா ஏளனமாகச் பார்த்தது. “இருக்காத பின்ன? எல்லாம் அந்தா இருக்கிற முயல் செய்தவேலை” சுட்டிக் காட்டிச் சொன்னது. “முயல் என்ன செய்தது”? சின்ன மைனா கேட்டது . “உனக்கு விளங்காது. ஒரு ஓட்டப் போட்டி நடந்தது. ஆமை அரக்கியரக்கிப் போனது. முயல் வேகத்தோடு ஓடியது. ஆமையைக் காணவில்லை. இந்த ஆமை என்னை வெல்வதாவது. இடையில் ஓய்வெடுக்க எண்ணியது. அப்படியே நித்திரை கொண்டிற்று. ஆமை சத்தமில்லாமல் போய்
வெற்றிபெற்றது. அது தான் அவருக்குத் தலைக்கனம்.” பெரிய மைனா சத்தமாகக் கூறியது.. அந்த நேரம் பார்த்துக் “கா..கா..” என இரைந்து கொண்டு இரண்டுகாகங்கள் பறந்து வந்தன. மைனாக்கள் வரையாடுவதை உற்றுக் கேட்டன. மீண்டும் “கா..கா..” கரைந்தன. கொக்குக் கூட்டமும் வலந்து சேர்ந்து கொண்டது.
“இந்த ஆமையின் தலைக்கனத்தைக் குறைக்க வழியிருக்கிறது. நாங்க ஒன்று சொன்னால் செய்வீங்களா”? காகங்கள் இரைந்தன. மைனாக்களின் ஆரவாரம் அடங்கியது. “சொல்லுங்க செய்வோம்”;. உடன்பட்டன.
இந்தக் குளம் பெரியது. இந்தக் குளத்தின் அந்தப் பக்கத்தில் உள்ள மரத்தை யார் முதலில் போய் தொடுகிறாரோ அவருக்குத்தான் வெற்றி.” காகங்கள் ஆரவாரித்தன. “ நானும் திருத்தம் சொல்லவேணும்”.





இந்தப் போட்டியில் சிறிய விலங்குகளும்;, பறவைகளும் பங்கு பற்றலாம். பறவைகள் பறக்கக் கூடாது. குளத்தில் இறங்கி நீந்திச் செல்லலாம். தண்ணீரில் நடந்து செல்லலாம். அல்லது குளத்தைச் சுற்றி ஓடலாம். மரத்தை முதலில் தொடுபவருக்கு ஓரு தேன்வதை கொடுக்கப் படும். நரி உற்சாகமாகச் சொன்னது.
முயல் விரைந்து ஓடி வெற்றிபெறலாம் என எண்ணியது. கொக்கு நடந்து குளத்தைக் கடக்கலாம். என்று நினைந்தது. ஆமை தனக்குள் சிரித்துக் கொண்டது. “இந்தக் கரையில் வீழ்ந்தால் அந்தக் கரையில் மிதப்பேன்” என்று ஆயத்தமானது. போட்டி பற்றிய செய்தி எங்கும் பரவியது. நிபந்தனைகள் அறிவிக்கப் பட்டன. பங்கு கொள்ள பறவைகளும், சிறிய விலங்குகளும் வந்தன. தொடக்குநர் ஒருவர் வேண்டும். யாரை அழைப்பது? தண்ணீர் குடிப்பதற்காக யானைக்கூட்டம் வந்தது. தொடக்குநராகவும், நடுவர்களாகவும் செயற்பட யானைகள் சம்மதித்தன. சில யானைகள் குளத்தின் அக்கரையில் உள்ள மரத்தடிக்குச் சென்றன. குளத்தினைச் சுற்றியும் நின்றன. போட்டி தொடங்கும் தொடக்குநர் நினறது. போட்டியாளர்களை அழைத்தது. குறிப்பிட்ட இடத்துக்கு யாவும் வந்தன.
முயல், ஆமை, கொக்கு, கானாங்கோழி, காகம், மைனா ஆகியன ஆயத்தமாக நின்றன. அவதானிப்பாளர்களாகக் கடமையாற்ற மீன்கொத்தி, மைனா. நரி முன்வந்தன. யானை கடைப்பிடிக்க

வேண்டிய விதிகளை விளக்கியது. போட்டியாளர்கள் குளத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்தன. எப்படி ஓடுவதென்று தீர்மானித்தன. யானை தனது தும்பிக்கையை உயர்த்திப் பிளிறியது.
முயல் குளத்தைச் சுற்றி விரைந்தது. நரி முயலின் பின்னால் ஓடியது. ஆமை குளத்தில் வீழ்ந்து நீந்தியது. தாமரை ஆமைக்குத் தடங்கலாக இருந்தன. குளம் நிறைந்து தாமரை பூக்கள் விரிந்திருந்தன. இலைகள் பரவியிருந்தன. கொக்குத் தண்ணீரில் இறங்கியது. காகமும், மைனாக்களும் இறங்கின. கானாங்கோழி உற்றுப் பார்த்தது. இலைகள் பரந்துள்ள நிரையைக் கவனித்தது. பூக்களில் கால்கள் படாதவண்ணம் கால்களை வைத்தது. பூக்களின் ஊடே புகுந்து நடந்தது.
காகத்தால் விரைந்து நடக்க முடியவில்லை. சரியாக இலைகளின் மேல் கால்கள் வைக்கத் தடுமாறியது. தண்ணீரில் மூழ்கியெழுந்தது. மைனாவும் இலையில் ஓடிப் பார்த்து விழுந்தது. கானாங்கோழிக்கு நல்ல
பரீட்சையம் இருந்தது. இலைகளை அவற்றின் தண்டுகள் தாங்கும் இடத்தில் கால்களை வைத்து நடந்தது. மீன்கொத்தியுடன் மைனாவும் மரத்தில் இருந்து அவதானித்தன. எப்படி இந்தக் கானாங்கோழியால் இப்படி விரைந்து நடக்க முடிந்தது?. எப்படி அதன் கால்களைத் சரியாகத் தண்டு இலைகளைத் தொடும் இடத்தில் வைக்கிறது?. அதன் கால்கள் வைக்கும் இடைவெளியில் தாமரையிலைகள் பரந்து கிடந்தன. குளத்தின் ஓரத்தில் நரி அவதானித்துக் கொண்டிருந்தது.
கானாங்கோழி குளத்தைக் கடந்து மரத்தைத் தொட்டு நின்றது. யானைகள் கானாங்கோழியை வாழ்த்திப் பிளிறின. அதனைத் தூக்கித் தங்கள் முதுகில் வைத்து வாழ்த்தின. முயலை வென்ற ஆமை இன்னும் வெற்றிக்கம்பத்தை அடையவில்லை. முயல் விரைந்து ஓடியது. முயல் நரியை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவடவொன்று எளிதாகும்.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP