Monday, February 28, 2011

தங்கைக்கொரு பாட்டு -– சிறுவர் பாடல்
கல்வி கற்கவேண்டும்
கல்வி கற்க வேண்டும் - அதனைக்
கற்றுத் தேற வேண்டும்
தொல்லை நீங்கி வாழ – அது
துணை புரிய வேண்டும்
உன்னை உணர வேண்டும் - நீ
உலகை அறிய வேண்டும்
தன்னை உணர்ந்த பின்னால் - நீ
தலைவி யாக வேண்டும்.
சட்டம் பயில வேண்டும் - தங்கை
தலை நிமிர வேண்டும்
குட்டும் மனிதர் வெட்க -– நிமிர்ந்து
குலவு நடை போடு
மொழிகள் யாவும் கற்பாய் - கற்றால்
முன் அணியில் நிற்பாய்
வழிகள் பலதைக் காண்பாய் - மாந்தர்
வறுமை போக்க உழைப்பாய்.


புதுமைப் பெண்
அன்பை முகத்தில் காட்டு -– உன்
அகத்தில் மலர்ச்சி ஊட்டு
என்றும் இனிமை தேக்கு –- அந்த
இதயம் கோயில் ஆக்கு

வறுமைக் கோட்டை உடைப்பாய் - உன்
வரவைக் கண்டு விடியும்
சிறுமை ஓடி ஒதுங்கும் - உலகம்
சிலிர்த்து அழகு துலங்கும்.

அடிமை விலங்கை உடைப்பாய் - இந்த
அவனி உன்னைப் புகழும்
அடிக்க ஓங்கும் கைகள் - உன்னை
அன்பால் வணங்கித் தழுவும்.

வாழ்க்கை முழுதும் இன்பம் - நாம்
வாழும் முறையில் உண்டு
வாழ்க்கை இன்பத் தேராய் -- மாற்றி
வாழ்ந்து புகழைத் தேடு


வாழ்ந்து காட்டு
வளியை உற்றுப் பாரு –- அதன்
வலிமை பற்றிக் கேளு
வளி அசைந்து கொண்டால் - நம்
வாழ்க்கை விரிந்து கொள்ளும்.

வளி அசைந்து கொள்ள - வெப்பம்
வெய்யோன் அள்ளித் தருமாம்
தெளிந்து வீசும் போது –- அதனைத்
தென்றல் என்று கொள்வார்.

கடலை அமுக்கிப் பார்க்கும் - அலை
கரையைத் தொட்டுப் பார்க்கும்
உடலை உரைஞ்சிப் பார்க்கும் - மனிதர்
உள்ளம் மகிழ வைக்கும்.
வேகம் கொண்டு வந்தால் - அலை
விரைந்து அழிவைக் கொடுக்கும்
ஊகம் கொண்டு வாழ்வாய் - இந்த
உலகம் புகழ வாழ்வாய்


குளிர் நீராவாய்
மேகம் திரண்டு வந்தால் - வான்
விரைந்து கருமை கொள்ளும்
வேகம் கொண்டு உரசும் -– மின்
வெட்டி இடியாய் முழங்கும்.

வான் அலைகள் அதிரும் - மழை
வந்து மாரி பொழியும்
மீன் புரண்டு துள்ளும் - குளம்
மீது நிறைந்து கொள்ளும்.
தாகம் தீர்க்கும் நீராய் - என்
தங்கை வாழ வேண்டும்
சோகம் எல்லாம் ஓடும் - உன்
சொந்தம் எல்லாம் பாடும்

வருந்தும் ஏழைக் கிரங்கு –- அவர்
வருத்தம் போக்க இறங்கு
திருத்தம் வேண்டும் என்றால் - அதை
செய்து காட்டு நன்றாய்



சுழலும் சில்லு
சுழன்று செல்லும் வஸ்சின் சில்லு
சுழன்று சுழன்று போகும் –- தினம்
சுழன்று தூரம் போகும்
சுழன்று செல்லும் காரின் சில்லு
சுழன்று சுழன்று போகும் –- தினம்
சுழன்று தூரம் போகும்
சுழன்று செல்லும் சைக்கள் சில்லு
சுழன்று சுழன்று போகும் –- தினம்
சுழன்று தூரம் பொகும்.
பாரம் ஏற்றி செல்லும் லொறியின்
பக்கச் சில்லும் சுழலும் - தினம்
சுழன்று தூரம் செல்லும்
சக் புக் கோச்சி வண்டிச் சில்லு
சத்தம் போட்டுப் போகும் –- தினம்
சுழன்று தூரம் போகும்.
சிக்க னமாய் நமது கடமை
தினம் முடிக்க வேண்டும் - தங்காய்
தினம் முடிக்க வேண்டும்.

உப்புக் காற்று
உப்புக் காற்று வந்து –- ஊதி
உள்ளே புகுந்து வீசும்
வெப்பம் நீங்கி வியர்வை –- மெல்ல
விரும்பும் இதத்தை ஊதும்

யன்னல் கம்பி நிறமும் - மாறி
செதில் செதிலாய் மெலியும்
என்ன விந்தை என்று –- மனம்
எண்ணி அறிவும் விரியும்

வீட்டின் வேலிக் கம்பி - முதல்
வேறு இரும்பு பொருளும்
நாட்கள் செல்ல துருவால் - மெல்ல
நலிந்து துகளாய் ஆகும்

உப்புக் காற்று பட்டால் - அதன்;
உருவம் மாறிப் போகும்
எப்பொ ருளும் உலகில் - நிலைத்து
என்றும் நிற்ப தில்லை.




மழைக்காலம்
வானக் கோழி அழுகிறதாம்
வாடி தங்காய் பார்ப்போம்
வானம் எங்கும் இருண்டுளதாம்
வாடி தங்காய் கேட்போம்.

காலை விட்ட வெள்ளைமுட்டை
காவு கொண்டு போனதார்.?
மாலை விட்ட தங்க முட்டை
மறைத்துக் கொண்டு போனதார்?

துருவக் கரடி தொலைஞ்சு போச்சாம்
துயரால் வானம் அழுதாம்
பெருகும் வெள்ளிக் கூட்டமெல்லாம்
போன தென்று அழுதாம்.

வானம் அழுதால் வாழுமுலகு
வெள்ளக் கடலாய் மாறும்
மோன நிலைதான் மிகுதியாகும்
மாய்ந்து எல்லாம் அழியும்.

Read more...

Sunday, February 27, 2011

கல்வி கற்கவேண்டும்
கல்வி கற்க வேண்டும் - அதனைக்;
கற்றுத் தேற வேண்டும்
தொல்லை நீங்கி வாழ – அது
துணை புரிய வேண்டும்
உன்னை உணர வேண்டும் - நீ
உலகை அறிய வேண்டும்
தன்னை உணர்ந்த பின்னால் - நீ
தலைவி யாக வேண்டும்.
சட்டம் பயில வேண்டும் - தங்கை
தலை நிமிர வேண்டும்
குட்டும் மனிதர் வெட்க – நிமிர்ந்து
குலவு நடை போடு
மொழிகள் யாவும் கற்பாய் - கற்றால்
முன் அணியில் நிற்பாய்
வழிகள் பலதைக் காண்பாய் - மாந்தர்
வறுமை போக்க உழைப்பாய்.



புதுமைப் பெண்
அன்பை முகத்தில் காட்டு – உன்
அகத்தில் மலர்ச்சி ஊட்டு
என்றும் இனிமை தேக்கு – அந்த
இதயம் கோயில் ஆக்கு
வறுமைக் கோட்டை உடைப்பாய் - உன;
வரவைக் கண்டு விடியும்
சிறுமை ஓடி ஒதுங்கும் - உலகம்
சிலிர்த்து அழகு துலங்கும்.
அடிமை விலங்கை உடைப்பாய் - இந்த
அவனி உன்னைப் புகழும்
அடிக்க ஓங்கும் கைகள் - உன்னை
அன்பால் வணங்கித் தழுவும்.
வாழ்க்கை முழுதும் இன்பம் - நாம்
வாழும் முறையில் உண்டு
வாழ்க்கை இன்பத் தேராய் -- மாற்றி
வாழ்ந்து புகழைத் தேடு


வாழ்ந்து காட்டு
வளியை உற்றுப் பாரு – அதன்
வலிமை பற்றிக் கேளு
வளி அசைந்து கொண்டால் - நம்
வாழ்க்கை விரிந்து கொள்ளும்.
வளி அசைந்து கொள்ள - வெப்பம்
வெய்யோன் அள்ளித் தருமாம்
தெளிந்து வீசும் போது – அதனைத்
தென்றல் என்று கொள்வார்.
கடலை அமுக்கிப் பார்க்கும் - அலை
கரையைத் தொட்டுப் பார்க்கும்
உடலை உரைஞ்சிப் பார்க்கும் - மனிதர்
உள்ளம் மகிழ வைக்கும்
வேகம் கொண்டு வந்தால் - அலை
விரைந்து அழிவைக் கொடுக்கும்
ஊகம் கொண்டு வாழ்வாய் - இந்த
உலகம் புகழ வாழ்வாய்

Read more...

சிறுவர் பாடல்
வாழ்ந்து காட்டு
பூமித் தாயைப் பாரு –- அது
பொறுமை தன்னைக் காட்டும்
சாமி பெயரைச் சொல்லு –- மனம்
சாந்தி பெற்றுத் துள்ளும்
மாந்தர் தன்னைப் பாரு –- அவர்
மனதை கொஞ்சம் கேளு
சாந்தம் உள்ளே இருக்கா - இல்லை
சங்கடம் உள்ளே இருப்பா?
உன்னைப் போலே போற்று –- பிறர்
உன்னை நம்ப வாழு
உன்னை வெற்றி கொண்டால் - இறை
உன்னோடு இருப்பார் அன்பால்
எண்ணும் எழுத்தும் போற்று –- அதை
எழுதி வாழ்ந்து காட்டு
எண்ணம் தூய்மை காணும் - உன்
இதயம் கோயில் ஆகும்.
நன்றும் தீதும் யார்க்கும் – - தானாய்
நம்மைத் தொடுவ தில்லை
என்றும் நன்மை செய்வாய் - வாழ்வில்
இன்பம் காட்டும் எல்லை.
பறவை இனத்தைப் பாரு..

பறவை இனத்தைப் பாரு –- அவை
பாடும் பாட்டைக் கேளு
உறவை வளர்த்துக் கொள்ளு –- உன்
உணர்வு விரிந்து கொள்ளும்.
பூக்கள் மலர வண்டு –- சுற்றி
படை யெடுத்து வருது
ஈக்கள் மொய்க்கும் என்று –- தேனை
இதழுள் வைத்து இருக்கு

பாயைச் சுருட்ட வில்லை - இன்னும்
பணி தொடங்க வில்லை
தாயைப் பார்த்துப் பிள்ளை –- எல்லாம்
தானே கற்க வேண்டும்

கிழக்கு வானைப் பாரு –- ஒளி
கிழித்து வருது முகிலை
துலக்கிப் பல்லை குளித்து –- உன்னைத்
தூய்மைப் படுத்திக் கொள்ளு

Read more...

Saturday, February 26, 2011

சிறுவர் பாடல்.

தங்கைக்கொரு பாட்டு
எனது உரை
சிறுவர்கள் சிந்தனைத் திறன் படைத்தவர்கள். எதனையும் துருவி ஆராயும் ஆற்றல் கொண்டவர்கள். சிறுவர்களது உள்ளங்கள் நாற்றுமேடை போன்றன. அவர்களது உள்ளங்களில் சிந்திக்கத் தக்க எண்ணக்ருக்களை விதைக்க வேண்டும். அவ்விதைகள் நல்லனவாகவும், வல்லனவாகவும் இருத்தல் அவசியம். சில கல்விமான்கள் எனப்படுபவர்கள் அறக்கருத்துக்களைப் பிள்ளைகளுக்குப் போதிக்கத் தேவையில்லை. நவீன விஞ்ஞான, தொழில்நுட்பக் கருத்துக்களை சிறுவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
அறக்கருத்துக்கள் கொண்ட சிறுவர் இலக்கியங்கள் நமது சிறுவர்களுக்கு அவசியம் தேவை என்பதை இன்றைய சமூகம் போகின்ற போக்கை உணர்ந்தால் புரியும். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழும்’; கலையை நம் இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டியது அசியமாகிறது. பல்வேறு தலைப்புக்களில் சிறுவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டும். அவ்வகையில் நானும் என்னால் முடிந்தவரை சிறுவர்களுக்காக எழுதுகிறேன். அவர்களுக்கு இவ்வகை நூல்களை அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட வேண்டும்.
இச்செயற்;பாட்டினை பெற்றோரும், ஆசிரியர்களும் முன்னெடுக்க வேண்டும். நாங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வழிகாட்டல்களைச் செய்யத் தவறினால் அதன் எதிர் மாறான பிரதிபலிப்புக்களைத்தான் காணமுடியும். நல்ல சமூகத்தை உருவாக்க சிந்திக்கவைக்கும் ஆற்றலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் தமது தாய் திருநாட்டின் தேவையைப் புரிந்து இலங்கையில் சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும். எனது சிறுவர் பாடல்களைப் படிக்கும் நம்மவர்கள் பிரதியெடுத்துத் தமது பிள்ளைகளுக்குப் படிக்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களின் பின் உருவாகும் நமது தமிழ் சமூகம் நமது கலாச்சாரங்களை தூக்கி எறிந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.
பல்வகையான சிறுவர் பாடல்களைக் கலந்து இந்நூலில் புகுத்தியுள்ளேன். சிறுவருக்கு இவற்றை அறிமுகம் செய்து சிந்திக்க வையுங்கள்.
நன்றி
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்

தங்கைக்கொரு பாட்டு
காலை வணக்கம்.
காலை வணக்கம், காலை வணக்கம்
காலை வணக்கம் சொல்வோம்
காலை வணக்கம், காலை வணக்கம்
கடவுள் வாழ்த்துப் படிப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம்
கவலை இன்றிப் படிப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம்
சந்தோ சமாக இருப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம்
ஒன்றாய் ஆடி மகிழ்வோம்
காலை வணக்கம், காலை வணக்கம் சந்தோச மாய்ய் படிப்போம்
காலை வணக்கம், காலை வணக்கம
எப்படி உங்கள் நலம் காலை வணக்கம், காலை வணக்கம்
நலமாக நாமும் இருப்போம்



வரவேற்கிறோம்
வருக வருக என்று நாங்கள்
வரவேற்கிறோம் - உன்னை
வரவேற்கிறோம். வந்து சேர்ந்து பாடியாட
வரவேற்கிறோம் - நாங்கள்
வரவேற்கிறோம்
அன்பான எங்கள் செல்வம்
அறிவாயா நீ - இதை அறிவாயா நீ
இன்பம் பொங்க முறுவல் காட்டி
இங்கோடி வா - நீ
எழுந்தோடி வா
உன்னை நம்பி உலகம் இருக்கு
உணர்வாயா நீ – தங்காய்
உணர்வாயா நீ
உணர்ந்து கொண்டு உயரவேண்டும்
ஓடோடி வா – கற்போம்
ஓடோடி வா வந்து சேர்ந்து பாடியாட
வரவேற்கிறோம் - நாங்கள்
வரவேற்கிறோம்.


திக்கு முக்குத் தாளம்
திக்கு முக்குத் தாளம் - நீ
தினமும் போட்டு பாடு
தக்குப் புக்கு என்று – தட்டி
ததிங் கிணத்தோம் போடு
வலது கையை தூக்கு - அதை
வெளியில் நீட்டிக் காட்டு
வலது கையை விரைந்து – உடன்
வடிவாய் உள்ளே கூட்டு
இடது கையைத் தூக்கு - நீ
இடமும் வலமும் திரும்பு
உடலை அசைத்து ஆடு – உன்
உள்ளம் மகிழ்ந்து பாடு
காலை மெல்ல மடிப்போம் - நம்
கையை வெளியே எறிவோம்
வேலை தினமும் செய்வோம் - நாம்
விரைந்து பாடி அசைவோம்
திக்கு முக்குத் தாளம் - நீ
தினமும் போட்டு பாடு
தக்குப் புக்கு என்று - தட்டி
ததிங் கிணத்தோம் போடு



செல்வம் உனக்கே பாட்டு தங்கை என்றே சொல்வேன் - நீ
தாளம் போட்டு காட்டு
செங்கை ஆகும் கைகள் - என்
செல்வம் உனக்கே பாட்டு
அன்பு நிறைந்த உள்ளம் - அதில்
அறிவு பெருகித் துள்ளும்
என்றும் விழிகள் சிரிக்கும் - எனது
உள்ளம் சிறகை விரிக்கும்
ஊரார் புகழ வேண்டும் - உன்னை
உலகம் போற்ற வேண்டும் பாரில் உள்ள மக்கள் - பெரும்
பயனை அடைய வேண்டும்
விண்ணை வெற்றி கொள்ளும் - கல்வி
விரைந்து கற்க வேண்டும்
மண்ணின் தலைவி வாழ்க – என்றிம் மாந்தர் போற்ற வாழ்க.



அண்ணன் பாடும் பாட்டு
அண்ணன் பாடும் பாட்டு – நல்ல
அறிவைப் புகட்டும் பாட்டு
எண்ணம் கருத்தில் இருக்கும் - அறிவு
உள்ளத் திருந்து சுரக்கும்
முதியோர் சொல்லைக் கேட்போம் - அவர்நம்
முதிசம் என்று ஏற்போம்
பதியும் வண்ணம் கேட்போம் - அவற்றை
பகிர்ந்து வாழ்ந்து காப்போம்
ஆணும் பெண்ணும் சமமாய் - இங்கு
அன்பு கொண்டு வாழ்ந்தால்
காணும் உலகம் இன்பம் - என்றும்
காலம் எல்லாம் சொர்க்கம்
பூக்கள் எல்லாம் அழகு – அவை
பூக்கும் மரங்கள் பலது
பூக்கள் சேர்ந்தால் மாலை – போன்று
பொலிந்து சேர்ந்து வாழு. -தொடரும் -

Read more...

Friday, February 18, 2011

சிறுவர் பாடல்

சிறுவர் பாடல்
ஆலமரம்
ஆலமரம் கிளை பரப்பி
ஆடி யசைந்து நின்றது
கோல வெயில் தனைவடித்து
குளிர் நிழலைத் தந்தது
கிளி கொக்கு மைனாக்கூட்டம்
களித்து வாழ்ந்து வந்தன
கிளை நிறைந்து பறவையாட்டம்
கலக லத்து மகிழ்ந்தன
கழுகுக் கூட்டம் எங்கிருந்தோ
காற்றாய்ப் பறந்து வந்தன
எழுந்து பறவைக் கூட்டமெலாம்
இடம் கொடுத்து நின்றன.
நாளுக் கொரு பறவையினம்
நாளும் விரட்டப் பட்டன
நாட்கள் செல்ல கழுகுக்கூட்டம்
நமது மரத்தை ஆண்டன.
இயக்கர் நாகர் பழங்குடிகள்
இலங்கை நாட்டில் இருந்தனர்
தயக்க மின்றி விஜயன்வந்தான்
தலைகீழ் கதையாய் ஆனது.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP