Friday, February 18, 2011

சிறுவர் பாடல்

சிறுவர் பாடல்
ஆலமரம்
ஆலமரம் கிளை பரப்பி
ஆடி யசைந்து நின்றது
கோல வெயில் தனைவடித்து
குளிர் நிழலைத் தந்தது
கிளி கொக்கு மைனாக்கூட்டம்
களித்து வாழ்ந்து வந்தன
கிளை நிறைந்து பறவையாட்டம்
கலக லத்து மகிழ்ந்தன
கழுகுக் கூட்டம் எங்கிருந்தோ
காற்றாய்ப் பறந்து வந்தன
எழுந்து பறவைக் கூட்டமெலாம்
இடம் கொடுத்து நின்றன.
நாளுக் கொரு பறவையினம்
நாளும் விரட்டப் பட்டன
நாட்கள் செல்ல கழுகுக்கூட்டம்
நமது மரத்தை ஆண்டன.
இயக்கர் நாகர் பழங்குடிகள்
இலங்கை நாட்டில் இருந்தனர்
தயக்க மின்றி விஜயன்வந்தான்
தலைகீழ் கதையாய் ஆனது.

0 comments:

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP