<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4902898186215134864</id><updated>2011-10-02T19:50:58.957+05:30</updated><category term='சௌந்தரம்மா'/><category term='ஏன் வந்தாய்?'/><category term='கரோலின்'/><category term='சிறுகதை'/><category term='ஆத்ம விஜயம்'/><category term='மணல்திட்டு'/><category term='சிறுவர் பாடல்'/><category term='சந்திரன்'/><category term='மாமனிதர்கள்'/><category term='எத்தனை அற்புதம்?'/><category term='சாதனையாளர்கள்'/><category term='கிளி'/><category term='மைனா'/><category term='அடிமை வாழ்க்கை'/><category term='வீட்டுக்கொருவர்'/><category term='அவளும் அவனும்'/><category term='செவ்வந்திமாலைப் பொழுது'/><category term='சலனமற்ற வாழ்க்கை'/><category term='புறா'/><category term='தவம் கலைகிறது'/><category term='அறிவுக் காட்சி'/><category term='அனுபவம்'/><category term='பொறுமைக்கும் ஒரு எல்லை'/><category term='சிறுவர் கதைகள்'/><category term='விண்கலம்'/><category term='நான் பொய்யனாம்'/><title type='text'>ஆனந்தவெளி</title><subtitle type='html'>கேணிப்பித்தன் படைப்புக்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ananthavele.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ananthavele.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கேணிப்பித்தன்</name><uri>http://www.blogger.com/profile/14738073334753622762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_lCyp7Fd7PHk/SxukdVU7p1I/AAAAAAAAAAM/MAssfpmfmXo/S220/Untitled+-+1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>104</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4902898186215134864.post-909484767499237501</id><published>2011-08-27T23:54:00.000+05:30</published><updated>2011-08-28T00:02:12.105+05:30</updated><title type='text'>சந்திரன் கதை</title><content type='html'>சந்திரன் கதை&lt;br /&gt;முன்னுரை&lt;br /&gt;‘அற்புதமான வானம்’ என்ற சிறுவர்களுக்கான அறிவியல் நூலை எழுதி வெளியிட்டேன். அந்நூலைச் சிறந்த அறிவியல் நூலாகத் தேர்ந்தெடுத்து அகில இலங்கை அரச சாஹித்திய விழாவில் விருதும் ஐம்பத்தைந்து ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப் பட்டேன். இது இலங்கை அரசு சிறுவர் இலக்கியத்துக்குக் காட்டும் கரிசனையைக் காட்டுவதாக நான் நினைந்து கொள்கிறேன். அதே நூல் கிழக்கு மாகாண சாஹித்திய விழாவிலும் பரிசினைப் பெற்றுக் கொண்டது.&lt;br /&gt;எனது ‘அற்புதமான வானம்’ நூலினைப் படித்த பல அன்பர்கள் சந்திரன். சூரியன், மற்றும் கோள்களைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய தனித்தனி நூல்களாக ஆக்கித்தந்தால் சிறுவர் உலகம் பயன்பெறும் என்று அறிவுரை தந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஐதீகக் கதைகளும், அறிவுப+ர்வமான விடயங்களும் உண்டு. அவற்றைத் தனித்தனியாகத் தந்தால் மேலும்; சிறப்பாக இருக்கும் என்று வற்புறுத்தினார்கள். அதன் நிமித்தமே சந்திரனின் ஐதீகக் கதைகளை முதலில் எழுதி வெளியிடுகிறேன். இந்நூலில் சந்திரனின் இதிகாசக் கதைகள் அடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக அதன் இரண்டாவது பாகத்தில் நவீன அறிவியல் சார்ந்த உண்மைச் செய்திகளும் உள்ளடக்கப் படவுள்ளன. அதனை வெகுவிரைவில் வெளியிடுவேன்.&lt;br /&gt;இந்நூலில் அடங்கியுள்ள கதைகள் வாசிக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாசிப்பவர்கள் கற்பனை வானில் பறக்கலாம். வாசிப்பதால் நாம் சிந்திக்கிறோம். தொலைக்காட்சி நமக்குச் சிந்தனையைத் தருவதில்லை. நூல்கள் நமக்குக் கற்பனையையும், சிந்தனையையும், காரண காரியங்களையும் தருகின்றன. ஆதலால் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணினிகள் நமக்கு உறுதுணையாகின்றன. அதனை நாம் பயன்படுத்தவேண்டும். இணையதளங்களில் வரும் அறிவுசார் விடயங்களை வாசிக்கவேண்டும். நாமும் அவ்வாறான சிந்தனைகளில் ஈடுபட்டு நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்நூல் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகிறேன். வாசிக்கும் கலாசாரத்தை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;இந்நூல் வெளிவரக் காரணகர்த்தாவானவர்கள் பலர். வாசகர்களாகிய நீங்கள்தான் முதல் நன்றிக்குரியவர்கள். வேண்டியவிடத்துப் பொருத்தமான படங்களைத் தெரிந்து பொருத்திய எனது மகன் ச.அ.அருள்பாஸ்கரன், பதிப்புரை தந்துதவிய லங்கா புத்தகசாலை முகாமையாளர் திரு.க.சதீஸ், அழகாக அச்சிட்டுதவிய நிசான் பிறின்ரேர்ஸ் அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கேணிப்பித்தன் ச.அருளானந்தம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழும் உலகம்நாம் வாழும் பூமி ஒரு கிரகம் என்பார்கள். 4.57 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். சூரியனிலிருந்து மூன்றாமிடத்தில் பூமி உள்ளது. மிக அழகான கோளமாகப் பூமி திகழ்கிறது. அதில் தான் நாம் வாழுகிறோம். அண்ட வெளியில் இருந்து பார்த்தால் நமது பூமி நீல நிறமாகவும், வெள்ளி நிறமாகவும் பளபளக்கும். பிரபஞ்சத்தில் இந்தக் கிரகத்தில் மட்டுந்தான் உயிரினங்கள் உண்டு. வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனையிட்ட இடையறாத ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. பூமியை ‘காயா’, ‘ரெறா’ பூமாதேவி, பூமிமாதா’ என்றும் அழைப்பார்கள்.பூமியின் 71மூ பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது. பூமி ஒரு சமதளமான தட்டைப்போல் காட்சியளிக்கிறது. தட்டின்மேல் பெரிய கூரையைப்போல் வானம் தெரிகிறது அல்லவா? முற்காலத்தில் பூமி ஆமையின் முதுகில் உள்ளது என்றார்கள். மூன்று திமிங்கிலங்களின் மீது உள்ளது எனவும் நம்பினார்கள். பூமியின் ஓரங்களுக்குச் சென்று திமிங்கிலங்களைப் பார்க்க முடியவில்லை. சிறிது சிறிதாக மனிதர்கள் பயணங்கள் செய்ய ஆரம்பித்தனர். விலங்குகளில் பயணம்செய்தார்கள். படகுகளில் கடல்களில் பயணித்தார்கள். வழிதவறி விடாது இருக்க வானத்தைப் பார்த்தார்கள். அக்காலத்தில்தான் நட்சத்திரங்களை நம்பினார்கள். ‘வழிகாட்டும் நட்சத்திரம்’ என்ற சொற்தொடர் தோன்றியது. பூமியில் நிலநடுக்கம் தோன்றியது. பூமி நடுங்கியது. கடல் பொங்கி பெரும் அலைகளை வீசியது. எரிமலைகள் வெடித்துச் சிதறின. ஆனாலும் சூரியனும். சந்திரனும். நட்சத் திரங்களும் ஒரே மாதிரியாக நகர்ந்து கொண்டிருந்தன. பயணிகள் பலநாட்கள் பயணித்தனர். நட்சத்திரங்கள் தொடுவானத்துக்கு மேல் வருவதைக் கண்டார்கள். பின் கீழிறங்கி மறைவதையும் பார்த்தார்கள்.&lt;br /&gt;பூமி பிரமாண்டமானது. தட்டையானது. அதனாற்தான் கடல்நீர் அப்படியே கொட்டாமல் நிலைத்திருக்கிறது என நம்பினார்கள். பின்னர் பூமி வட்டவடிவமான ரொட்டியைப் போன்றது. அது வளைந்துள்ளது என மனிதர்கள் நம்பினார்கள். பின்னர் பூமி அரை உருண்டையானது என்றும் சமுத்திரங்கள் அதன்மேல் அப்பியுள்ளன எனவும் நம்பினார்கள்.&lt;br /&gt;சூரியனும். சந்திரனும். நட்சத்திரங்களும் கீழிறங்கி, மறுநாள் எதிர்திசையில் வருகின்றனவே. சிந்தித் தார்கள். சூரியன் கிழக்கே உதிக்கத் தாமத மானதில்லை. சந்திரனும் கிழக்கேதான் உதிக்கிறது. ஆனால் சந்திரனின் உதயம் வித்தியாசமானது. பூமி அரையுருண்டை வடிவானதல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் பூமி உருண்டையானது என நம்பினார்கள். கடலோடிகளான கொலம்பஸ், மகலன் உலகை உருண்டை என்பதை நிரூபித்தனர். இதற்காக அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.&lt;br /&gt;பூமிக்கு ஈர்ப்புச் சக்தியுண்டு. அதனாற்தான் பூமியில் உள்ள பொருட்கள் கீழே விழாதிருக்கின்றன. சமுத்திரங்களும். மலைகளும் அப்படியே இருக்கின்றன என அறிவுபூர்வமாகத் தெளிந்தனர். சூரியன் பூமியைச் சுற்றுவதாகத்தான் முதலில் நம்பினார்கள். பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதை ரசித்தார்கள். சந்திரன் புவியைச் சுற்றி வருவதை உணர்ந்தார்கள். சந்திரன் புவியின் உபகோள் என்பதைப் புரிந்து கொண்டனர்.&lt;br /&gt;வானத்தை அண்ணார்ந்து பாருங்கள். எப்படி இருக்கிறது? நமது வானம் அற்புதமானது. பகற்பொழுதில் நீலமாக இருக்கிறது. மேகக்கூட்டம் வெண்பஞ்சுபோல் பறந்து திரியும். இரவினில் கருமையாகத் தெரிகிறது. மழைக்காலத்தில் இருண்டு கிடக்கும். வெயிற்காலத்தில் அற்புதமாகவிருக்கும். பகலில் நீலவானில் சூரியன் உலாப்போகும்.. வெப்பத்தைத் தந்து உலகை இயக்கும். சூரியனை நாம் கண்களால் பார்க்க முடியாது. கண்கள் கூசும். வெற்றுக் கண்ணாடியில் குப்பி விளக்கின் புகையைப் படியவைக்கலாம். அதனூடாகப் பார்த்தால் சிவந்த கோளமாய்த் தெரியும். காலையிலும், மாலையிலும் சூரியன் சிவந்த கோளமாக அழகாகக் காட்சி தரும்.&lt;br /&gt;இது நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகம். இப்போது சூரியனைப் பார்ப்பதற்குப் பலவகைச் செயற்கைப் பொருட்கள் உலாவருகின்றன. அவற்றின் ஊடாகப் பார்;க்கலாம். ஆனால் சந்திரன் அவ்வாறல்ல. வெற்றுக் கண்களால் நாம் பார்க்கலாம். இரவில் நிலவின் ஆட்சி நடக்கும். நட்சத்திரங்கள் மின்விளக்குப் போடும். நிலவின் ஒளி இன்பத்தைத் தரும். சந்திரனின் உள்ளே கருமையான மறுக்கள் தெரியும்..&lt;br /&gt;வானில் நிலவு ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பிறையாக இருக்கும். பின் வளர்ந்து பூரண சந்திரனாகப் பிரகாசிக்கும். அதன்பின் படிப்படியாகத் தேய்ந்து மறைந்து போகும். அமவாசை தோன்றும். அமவாசையின் பின் கூனற்பிறை எட்டிப்பார்க்கும். ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு செல்லும். முதற் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகத் தெரியும். அதனைத் தொடர்ந்து பூரணசந்திரன் வரும். அதனை முழுநிலவு அல்லது நிறைமதி என்கிறோம். பின்னர் தேய்பிறையாகும். இதற்கெல்லாம் பல கதைகள் உண்டு. கிரேக்கர்கள், ரோமானியர்கள். பபிலோனிர்கள், எகிப்தியர். சீனர். அரேபியர், இந்தியர் போன்ற பலநாட்டு மக்களிடையேயும் பல்வேறு கதைகள் உலா வருகின்றன.&lt;br /&gt;இரவில் வானம் அழகாக இருக்கும். பல அளவுகளில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டும். பெரியனவாகவும், சிறியன வையாகவும் தெரியும். நட்சத்திரக் கூட்டம் இரவில் உலா வரும். அவை பகலில் எங்கே செல்கின்றன.? ஓடி ஒளிந்து கொள்கின்றனவா? சில மாலை நேரத்தில் தெரியும். இன்னும் சில காலை வேளைகளில் தெரியும். சில நட்சத்திரங்கள் மிக நெருங்கி இருக்கும். சில வெகுதூரத்தில் இருக்கும். சில பிரகாசமாக ஒளிவிடும். சில மங்கலாகத் தெரியும். எத்தனை ஆயிரம் கோடி நட்சத்திரக் கூட்டங்கள் வானில் தெரிகிறன. அவற்றுள் கிரகங்களும் உள்ளன. நாம் வாழும் பூமியும் ஒரு கிரகந்தான். அல்லவா?&lt;br /&gt;வானம்தான் மனிதர்களுக்கு ஆசிரியன். சூரியனும் சந்திரனும் காலத்தைக் காட்டிக் கற்றுக் கொடுத்தன. நாட்காட்டிகளான கலண்டர்களை வகுத்துக் கொள்ள உதவின. பூமி தன்னை ஒருமுறை தனது அச்சில் சுற்றிவருவதால் இரவுபகல் உருவாவதைக் கண்டார்கள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வரும் காலத்தைக் கணித்தார்கள். பூமி சூரியனைச் சுற்றி வருவதை அவதானித்தார்கள். நாள், கிழமை, மாதம் வருடம் ஆகியவற்றைக் கணிக்க வானம் உதவியது. பருவகாலங்களை அறியச் செய்தது. சந்திரனை மையமாக வைத்தே இவை கணிக்கப் றெ;றன.&lt;br /&gt;ந்திரனும், சூரியனும் நாம் வாழ உதவுகின்றன. கிழமையின் முதல்நாள் ஞாயிறு என்பார்கள். ஞாயிறு என்பது சூரியன் என்று பொருள். அன்று நம்மெல்லோருக்கும் ஓய்வு நாளாகும். அடுத்தநாள் திங்கள். திங்கள் என்பது சந்திரன் என்று பொருள். பூமிக்குச் சந்திரன் துணையாக உள்ளது. சந்திரனை வைத்தே மக்கள் காலத்தைக் கணித்தார்கள். சந்திரன் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.&lt;br /&gt;சூரியனையும், சந்திரனையும் மையமாகக் கொண்ட கதைகள் பல உள்ளன. உலகின் பல பாகங்களிலும் உலா வருகின்றன. இந்நூலில் அவற்றைப் பாடித்துச் சுவைகலாம்.&lt;br /&gt;சந்திரன் இயற்கையில் மிகவலுவான சக்தியாக உள்ளதை அவதானிக்கலாம். சந்திரனின் ஆதர்ஷண சக்தி அபரிமிதமானது. வானம் தெளிவாக உள்ள நேரத்தில் அவதானியுங்கள். சந்திரன் பவனிவருவதைப் பாருங்கள்.&lt;br /&gt;மனதைக் கொள்ளைகொள்ளும். அழகுக் காட்சியாக இருக்கும். கவிஞனின் உள்ளத்தில் கவிதையைப் பொங்கச் செய்யும். சிறுவர் உள்ளங்களில் களிப்பை ஏற்படுத்தும். நிலவொளியில் விளையாடி மகிழ்வார்கள். கிழக்கில் சந்திரோதயக் காட்சி மனதைக் கொள்ளை கொள்ளும். கடலை ஆர்ப்பரிக்கச் செய்யும். கடல் பேரலைகளைத் தள்ளி ஆரவாரம் செய்யும். வானத்தில் நட்சத்திரக் கூட்டத்துடன் சந்திரன் பவனிவரும். குளிர்நிலவைப் பொழியும்.&lt;br /&gt;வண்ண நிலவே வண்ண நிலவேவிண்ணில் நீந்தும் வண்ணநிலவேகண்ணை கவரும் கடற் பரப்பில்கோலம் போட எங்கே கற்றாய்.?&lt;br /&gt;என்று பாடச்சொல்லும். மனிதர்கள் சூரியனையும், சந்திரனையும் கடவுளாகப் போற்றுகிறார்கள். முற்காலத்தில் வானத்தில் உள்ள பொருட்களைப் போய்ப்பார்க்க முடியாது என்று எண்ணினார்கள். அதனால் பலவாறான கற்பனைக் கதைகளை இயற்றினார்கள். சந்திரனின் தோற்றம் இவ்வாறான கதைகளுக்கு வித்திட்டன. இவற்றை ஆணாகவும், பெண்ணாகவும் கொள்கிறார்கள். நிலவைப் பற்றிய கதைகளைச் சொன்னார்கள். உலகத்தில் உள்ள மொழிகளில் நிலவைப்பற்றிய கதைகள் ஏராளம் உண்டு.&lt;br /&gt;சந்திரனைப் பற்றிய கதைகள்.&lt;br /&gt;சந்திரனைப் பற்றிய கதைகள் பல்வேறு நாடுகளிலும் உண்டு. பல்வேறு மொழிகளிலும் உண்டு. அவை காலத்துக்குக் காலம் எழுந்த கதைகளாகும். இவை யாவும் பொய், கட்டுக் கதைகளென்று தள்ளிவிட முடியாது. அவைகளுள் உண்மைகளும் உண்டு. அவ்வாறான கதைகளையே இந்நூலில் உள்ளடக்கியுள்ளேன்.&lt;br /&gt;முற்காலத்தில் வானத்தில் உள்ள பொருட்களைப் போய்ப்பார்க்க முடியாது என்று எண்ணினார்கள். அதனால் பலவாறான கற்பனைக் கதைகளை இயற்றினார்கள். சந்திரனின் தோற்றம் இவ்வாறான கதைகளுக்கு வித்திட்டன. இக்கதைகள் யாவும் அன்பு, உண்மை, அழகு பற்றியதாகவே அமைந்தன. மனித இனம் உள்ளளவும் புதுப்புதுக் கதைகள் தோன்றத்தான் செய்யும். பல உண்மைகளும் தோற்றம் பெறத்தான் செய்யும். கருவினில் உருவாகும் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று சந்திரனின் வளர்தல், தேய்தல் மூலம் கணிக்கப் படுவதாகவும் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும் சந்திரனின் கதைகள் எம்மைப் பரவசப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.&lt;br /&gt;பூமியின் சந்திரன்&lt;br /&gt;நாம் வாழும் பூமிக் கோளுக்கு ஒரு சந்திரன் உள்ளது. அது நமது பூமியில் இருந்து 383,000 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இரவு நேரத்தில் வானில் பவனி வருவதைப் பார்க்கிறோம். சந்திரன் வளர்பிறையாகத் தோன்றும். பின் படிப்படையாக வளர்ந்து முழுநிலவாகத் தெரியும். பின்னர் படிப்படியாகத் தேய்ந்து ஒருநாள் முற்றுமுழுதாக மறைந்துவிடும். அன்றைய தினத்தை அமவாசை என்பார்கள். இவற்றுக் கெல்லாம் உலக நாடுகளிடையே ஐதீகக் கதைகள் உண்டு. அவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;நவீன விஞ்ஞான யுகத்தில் நாம் வாழுகிறோம். அறிவியல் ஆய்வுகள் தோன்றுவதற்கு முன் மக்கள் மத்தியில் உலாவந்த கதைகளைப் பார்த்தால் ஒரு வகையில் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். பின்னர் அறிவியலோடு தொடர்புடையதை அறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியும், சூரியனும் சந்திரனும்.&lt;br /&gt;நாம் வாழும் பூமியை உலகம் என்றும் சொல்வார்கள். நமக்கு ஆதாரம் இந்தப் பூமிதான். இந்தப் பூமியின் பலபாகங்களிலும் மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழி பேசுகிறார்கள். வாழுகின்ற முறைகளிலும் வித்தியாசங்கள் உள்ளன. உணவு, உறைவிடம், உடைகளில் பண்பாடுகளில் ஒற்றுமைகளும். வேற்றுமைகளும் உள்ளன. நமது புவியின் அமைப்பு விசித்திரமானது.&lt;br /&gt;கோளவடிவான நமது பூமியில் ஒரே அளவான சூரிய வெளிச்சம் படுவதில்லை. அதேபோல் வெப்பமும் நிலவுவதில்லை. இதற்கேற்றாற் போல் பல வலயங்களாகப் பிரிப்பார்கள். வெப்பவலயம், இடைவெப்பவலயம், குளிர்வலயம் என்று பிரித்துப் பார்ப்பார்கள்.&lt;br /&gt;துருவங்களில் சில காலங்களில் சூரியன் பிரகாசிப்பதில்லை. பலநாட்களுக்கு இருளாகவே இருக்கும். மறைந்த சூரியனை நினைப்பார்கள். சந்திரனைப் பார்ப்பார்கள். சந்திரன் இல்லாதபோது அதனையிட்டுக் கவலை கொள்வார்கள். உறைந்து போன காடுகளையும் பார்ப்பார்கள். கறுப்பு நிறக்கற்களையும் காண்பார்கள். குளிரும் தொடர்ந்து இருக்கும். அந்த நாட்களில் மக்கள் கூடியிருந்து கதைகளைக் கூறுவார்கள். இயற்கையை ரசிப்பவர்கள், கற்பனை வளமுடையவர்கள். அறிவியலை நமக்குக் கற்பனைத் தேனைத் தடவித் தருபவர்கள். அக்கதைகளுள் மூழ்கினால் விஞ்ஞான விந்தைகளைக் காணலாம்.&lt;br /&gt;வானமும் சந்திரனும்.&lt;br /&gt;வானம் என்பதென்ன? பரந்து விரிந்த பெருவெளி. அதனைத்தான் பிரபஞ்சம் என்கிறோம். வானத்தில்தான் நமது பூமியும் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ளதுதான் சந்திரன். அதனால் சந்திரனின் ஆதர்ஷண சக்தி பூமியைத் தாக்குகின்றது. பூமியில் வற்றுப் பெருக்கில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றது. சுந்திரனுக்கு ஒளியில்லை. ஆனால் சூரியனது ஒளியைப் பெற்று ஒளிர்கிறது. சந்திரனின் கதிர்கள் குளிரானவை. ஆனால் அக்கதிர்கள் மனிதருக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதுவோரும் உண்டு. சந்திரன் உதயங்கொள்ளும் போது கடலலை ஆர்ப்பரித்து எழும். கடல் பெருக்கெடுக்கும். உயிரினங்களையும் சந்திரனின் ஒளி தாக்குகின்றதாகக் கருதுவோரும் உண்டு. சூரியனைப் போல் குறிபிட்ட நேரத்தில் சந்திரன் உதிப்பதில்லை.&lt;br /&gt;நம்பிக்கைகள்&lt;br /&gt;சந்திரன் வளர்பிறையாக இருக்கும்போது வீடுகட்டுவதற்குரிய மரங்களை வெட்டமாட்டார்கள். அவை விரைவில் பழுதாகிவிடும் என்பதாக ஐதீகம். பூரணை அல்லது முழுமதி நாட்கள் கனத்த நாட்களாகக் கருதுவோரும் உண்டு. நோயுற்றவர்களுக்கு அந்நோய் அதிகரிக்கும். மனநோயாளிகளுக்கு மனநோய் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். பொதுவாக மனிதர்களுக்குச் சித்தம் கலங்கும் நாள் என்றும் கூறுவார்கள். இலங்கையில் அவ்வாறான மக்கள் அதிகமுள்ளனரா என்ற வினாவும் எழுகிறது. அதனால்தான் நமது இலங்கை அரசு போயாநாட்களை அரச விடுமுறையாக ஆக்கியது என்று கூறுபவர்களும் உண்டு.&lt;br /&gt;மூதாட்டியின் கதை&lt;br /&gt;இந்த வானம் அடிக்கடி பூமியைத் தொட்டு விளையாடும். ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் காலையும் மாலையும் முற்றத்தைப் பெருக்குவாள். கைகளில் விளக்குமாறு இருக்கும். முற்றத்தை அழகாக வைத்திருப்பாள். சந்திரன் வானில் இருந்து பார்க்கும். சந்திரனுக்கு மூதாட்டியோடு சீண்டி விளையாட விருப்பம். ராமனும் அப்படித்தானே செய்தான். கூனி தண்ணீர் குடத்தோடு போகும்போது கல்லெறிவான். அது குடத்தைத் தாக்கும். தண்ணீர் வழிந்தோடும். அவன் சிரித்து மகிழ்வான். கூனி ஆத்திரத்தில் நிற்பாள். பின்னர் கூனியின் விளையாட்டு ராமனைப் பாதித்தது. இல்லையா?&lt;br /&gt;நமது சந்திரனும் அப்படித்தான். சந்திரன் அடிக்கடி பூமிக்கு வரும். வழித்துணைக்கு வானத்தை அழைக்கும். மூதாட்டி முற்றத்தைக் கூட்டுவாள். சந்திரன் மெதுவாகக் கீழிறங்கி வந்து முதுகில் தட்டிவிட்டு ஓடும். மூதாட்டிக்குக் கோபம் வரும். இது பலநாட்கள் தொடர்ந்தது. ஒருநாள் சந்திரன் வானத்தை விளையாட அழைத்தது. வானத்தோடு சேர்ந்து வந்து மூதாட்டியின் முதுகில் தட்டியது. மூதாட்டி நிமிருமுன் மேலே ஓடியது. அன்று இப்படிப் பலமுறை நடந்தது. மூதாட்டி திட்டம் போட்டுக் காத்திருந்தாள்.&lt;br /&gt;மூதாட்டி முற்றத்தைக் கூட்டுவது போல் பாசாங்கு செய்தாள். விழிப்பாக இருந்தாள். சந்திரன் வானத்தையும் அழைத்துக் கொண்டு வந்தது. மூதாட்டி விளக்குமாற்றால் அடித்தாள். அத்துடன் “ஏ... சந்திரனே நீ தேய்ந்து தேய்ந்து போவாயாக”. என்று சாபம் போட்டாள்.&lt;br /&gt;வானம் பயந்து விட்டது. “ஏ...வானமே இனி நீ கீழே இறங்கி வராதிருப்பாயாக”. என்று சாபமிட்டாள். சந்திரன் பயந்து நடுங்கி மூதாட்டியிடம் பாவமன்னிப்புக் கேட்டது. பதினைந்து நாள் தேய்ந்து போவாய். பின் படிப்படியாக வளர்ந்து வருவாயாக. ஒருநாள் மட்டும் நீ முழுநிலவாக ஒளிவீசுவாயாக”. என்று விமோசனம் அளித்தாள். அதன்பின்னர் வானம் கீழிறங்கி வருவதில்லையாம். சந்திரன் மாதத்தில் பதிநாலு நாட்கள் தேய்ந்து போகும் பதினைந்தாவது நாள் முற்றாகத் தேய்ந்து மறைந்துவிடும். அன்று அமவாசையாகும். பின்னர் வளர்ந்து வரும். பதினைந்தாவது நாள் முழமையாகத் தோற்றம் தரும்.. அதுதான் பூரணை முழநிலவு ஆகும். இப்படியான கதைகள் நமது கிராமங்களில் உலா வருகின்றன.&lt;br /&gt;சந்திரன் தேய்ந்து வளர்தல்.&lt;br /&gt;சந்திரன் அழகும் ஆற்றலும் கொண்டவர். சந்திரனைக் கடவுளாகப் போற்றினார்கள். அவரது அழகில் மயங்காதோர் இல்லை. அவர் வானில் பவனிவரும் போது மக்கள் திரளாக நின்று ரசிப்பார்கள். கடல் மகிழ்ச்சியால் அலைகளை வீசி ஆர்ப்பரிக்கும். காற்று வீசி இசை யெழுப்பும். முன்னொரு காலத்தில் தக்சன் என்றொருவர் வாழ்ந்தார். அவர் பல ஆற்றல்களைக் கொண்டவர். தவவலிமைமிக்கவர். சக்தி வாய்ந்தவர்.&lt;br /&gt;அவருக்கு இருபத்தியேழு மகள்மார் இருந்தார்கள். அவர்கள் சந்திரனின் அழகில் மயங்கி விட்டார்கள். திருமணம் செய்தால் சந்திரனையே செய்வோம் என்றார்கள். தக்சன் சந்திரனை அணுகினார். அவரிடம்&lt;br /&gt;மகள்மாரின் விருப்பத்தைக் கூறினார். அவர்கள் அனைவரையும் ஒரேமாதிரியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சந்திரனும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதனால் சந்திரனுக்கே திருமணம் செய்துவைத்தார்.&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன. சகோதரிகள் சந்தோசமாக வாழ்ந்தனர். சந்திரன் இருபத்தேழு மனைவிகளுள் ரோகினியை அதிகம் நேசித்தார். இது மற்றச் சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சந்திரன்மேல் கோபமாக இருந்தார்கள். தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். எங்கள் கணவர் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ரோகினியிடமே பாசமாக இருக்கிறார் என்றார்கள். தந்தையின் முன் கண்ணீர் விட்டார்கள். தக்சனுக்குச் சங்கடமாகப் போய்விட்டது. தக்சன் சந்திரனுக்கு அறிவுரை வழங்கினார்.&lt;br /&gt;ஆனாலும் சந்திரனில் எந்த மாற்றமும் இல்லை. முறைப்பாடு அதிகரித்தது. “எவ்வளவு சொன்னாலும் அவர் ரோகினியையே அதிகம் விரும்புகிறார்”. என்றார்கள். அடிக்கடி மகள்மார் சந்திரன்மேல் புகார் கூறிக்கொண்டே வந்தார்கள். ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பார்கள். தக்சனுக்குக் கோபம் பொங்கியது. அவர் சந்திரனைப் பார்த்தார்.&lt;br /&gt;“நான் சொல்லியும் நீ கேட்கவில்லை. என்னால் இனியும் பொறுக்க முடியாது. நீ சொன்னபடி செய்யவில்லை. உனது உடல் ஒளியற்றுத் தேய்ந்து போகட்டும்” தக்சன் சந்திரனுக்குச் சாபமிட்டார். சந்திரன் உடலில் மாற்றம் தோன்றியது. அவரது உடல் தேய்ந்து கொண்டு வந்தது.சந்திரன் வருந்தினார். பிரமாவிடம் முறையிட்டார். அவர் “நீ சிவனைச் சிந்தையில் கொண்டு அவரிடம் முறையிடு. எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பார். உனக்காக நானும் சிவனை வேண்டுகிறேன்”. என்று அறிவுரை கூறினார்.&lt;br /&gt;சந்திரன் சிவனைச் சிந்தையில் கொண்டு பிரார்த்தனை செய்தார். தற்காலிகத் தீர்வு கடைத்தது. ரோகினியை நோக்கிச் சந்திரன் நகரும்போது உடல் வளர்ந்துபோகும். ரோகினியிடம் இருக்கும்போது பிரகாசமான உடலோடு இருப்பார். அந்த ஒருநாள் மட்டுந்தான் அவருக்குச் சந்தோசம். ரோகினியை விட்டுப் பிரிந்து செல்லும்போது உடல் தேய்ந்துபோகும். ஒருநாளைக்கு உடல் இருளாகவே இருக்கும். அதனைத்தான் அமவாசை என்பார்கள். முதல்நாள் சந்திரன் சிவனோடு அவரது சடாமுடியில் இருப்பார். சந்திரனைச் சடாமுடியில் வைத்திருப்பதாலே சிவனுக்குச் ‘சந்திரசேகரர்’ என்ற பெயரும் வந்தது. அப்போது தற்காலிகத் தீர்வு கிடைத்தது.&lt;br /&gt;விநாயகரும் சந்திரனும்.&lt;br /&gt;விநாயகருக்கு மோதகம் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் அதிகளவு மோதகம் கிடைத்தது. நல்ல சுவையான மோதகங்கள். வயிறு முட்டும்வரை நன்றாகச் சாப்பிட்டார். மிகுதி இருந்தது. அவற்றைச் சுருட்டிக்கட்டினார். அவருக்கு வயிறு ஏதோ செய்தது.&lt;br /&gt;வெளியில் சற்றுக் காலாற நடக்கவேண்டும் போலிருந்தது. மோதக முடிச்சும் அவரிடம் இருந்தது. தனது எலி வாகனத்தில் ஏறியமர்ந்து புறப்பட்டார். ஒரு காட்டையண்டி எலிவாகனம் சென்றது. அப்போது ஒரு பாம்பு குறுக்கறுத்தது. அவரது வாகனமான எலி பயந்து தடுமாறியது. விநாயகர் வீழ்ந்துவிட்டார். விநாயகர் விழுந்ததும் மோதகமுடிச்சு அவிழ்ந்து விழுந்தது. வைத்திருந்த மோதகங்கள் உருண்டோடின. விநாயகர் சிறுபிள்ளைபோல் ஓடியோடீ மோதகத்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.&lt;br /&gt;இவற்றையெல்லாம் சந்திரன் தனது மனைவியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை ரசித்து வாய்விட்டுச் சிரித்தார்கள். விநாயகருக்கு வந்ததே கோபம். தன்னை அவமதித்துச் சிரிப்பதாக நினைத்துக் கொண்டார். “ என்னை எள்ளி நகையாடுகிறீர்களா? சந்திரனே! நீ ஒளியற்று மங்கிப் போகக் கடவாய்” என்று சபித்துவிட்டார். சந்திரன் பயந்து நடுங்கினார். அப்போதிருந்தே சந்திரனன் ஒளி மங்கத்தொடங்கியது. சந்திரன் ஒளியற்றுத் தடுமாறினார். சிவன் இயற்கையின் சமமின்மையை உணர்ந்து கொண்டார். சந்திரனை விநாயகரிடம் மன்னிப்புக் கோருமாறு அறிவுறுத்தினார்.&lt;br /&gt;சந்திரன் விநாயகரிடம் மன்னிப்புக் கோரினார். தனது சாபத்தைக் குறைக்குமாறு வேண்டினார். விநாயகரும் சாபத்தைக் குறைப்பதற்குச் சம்மதித்தார். “நீ ஒவ்வொரு நாளும் படிப்படியாக உனது ஒளியை இழப்பாய். ஒரு நாளைக்கு மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாமல் தேய்ந்து ஒளியிழந்து நிற்பாய். அது அமவாசையாக இருக்கும். அன்று நீ சிவபெருமானை அணைந்திருப்பாய். மீண்டும் படிப்படியாக ஒளிபெற்று வெளிவருவாயாக. ஒரு நாள் மட்டும் பூரணமான ஒளியைப் பெறுவாயாக” என்று வரமளித்தார். அது இப்போதும் தொடர்கிறது.&lt;br /&gt;சந்திரனையும் சூரியனையும் பாம்பு விழுங்குதல் சூரியனையும், சந்திரனையும் இராகு என்னும் பாம்பு விழுங்குவதாக இந்துசமயப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள் நீடு வாழ்வதற்காக அமிர்தம் வேண்டி நின்றார்கள். அமிர்தம் எங்கே கிடைக்கும். திருப்பாக் கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என விஷ்ணு கூறினார். தேவர்கள் மட்டும் கடையமுடியாது. ஆதலால் அசுரர்களையும் அழைத்தார்கள். மகாமேரு மலையை மத்தாகப் பயன்படுத்தினார்கள். ஆதிசேஷன் என்ற பாம்பை கயிறாகப் பயன் படுத்தினார்கள். தேவர்கள் ஒரு புறம் நின்றார்கள். அசுரர்கள் மறுபுறம் நின்றார்கள். மலையசைந்தது. திருப்பாக் கடல் கடையப்பட்டது. ஆதிசேஷனுக்கு வலித்தது. அமிர்தம் உருவாகிக் கொண்டு வந்தது. வலியினால் ஆதிசேஷன் விஷத்தைக் கக்கிவிட்டது. அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவர் உடனே அந்த விஷத்தைக் கையிலேந்தி விழுங்கினார். அவரது மனைவி உமாதேவியார். அவர் ஓடோடி வந்தார். சிவனாரின் தொண்டையை அழுத்திப் பிடித்தார். விஷம் கீழிறங்க வில்லை. தொண்டைக் குழியோடு நின்றுவிட்டது. சிவனின் தொண்டையில் விஷம் இருந்தது. அதனால் அவரது தொண்டை நீலம்பாரித்துவிட்டது. அமிர்தம் கிடைத்துவிட்டது. தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க வேண்டும். அசுரர்களுக்குக் கிடைக்கக் கூடாது. கிடைத்தால் அவர்கள் சாகாவரம் பெற்றுவிடுவார்கள். என்ன செய்வது.? தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்தார். அசுரர்கள் அந்த அழகியின் அழகில் மயங்கிக் கொண்டிருந்தார்கள். இராகு என்ற அசுரன் தேவர்கள் போல் மாறுவேஷத்தில் வந்தார். தேவர்களோடு கலந்து கொண்டார். அவரை யாரும் அடையாளம் காணவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதுவாக விஷ்ணுவிடம் கூறிவிட்டார்கள். தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப் பட்டது. தேவர்கள் போன்று இருந்த இராகுவுக்கும் கொடுபட்டது.அவர் அமிர்தத்தைக் குடிப்பதற்கு முயற்சித்தார். மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணு இராகுவின் கழுத்தைத் துண்டம் செய்தார். வாய்க்குள் அமிர்தம் சென்றிருந்தது. அதனால் தலைப்பகுதி உயிரோடிருந்தது. உடல் கேதுவாக மாறியது. இராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டன. சூரியனையும் சந்திரனையும் விழுங்கிவிடச் சபதமெடுத்தன.இன்றுவரை ராகு சூரியனை விழுங்க முயற்சிக்கிறது. கேது சந்திரனை விழுங்க முயற்சிக்கிறது. இந்நிகழ்ச்சி காலத்துக்குக் காலம் நடைபெறுகிறது. அதுதான் கிரகணம். என்று புராணம் கூறுகிறது. &lt;br /&gt;பொஹ்யொலா என்றொரு நாடு&lt;br /&gt;நமது உலகத்தில் பல நாடுகள் நீண்ட நாட்களுக்குச் சூரிய ஒளியைப் பெறுவதில்லை. சிறப்பாகத் துருவப்பகுதியில் உள்ள நாடுகளில் இவற்றை அவதானிக்கலாம். பொஹ்யொலா என்றொரு நாடு இருந்தது. பொஹ்யொலா என்றால் நீண்ட நாட்களுக்குச் சூரியன் மறையும் நாடு என்று பொருள். இவ்வாறான நாடுகள் பல நமது உலகத்தில் உண்டு. அவற்றை பொஹ்யொலா என்றழைப்பார்கள். அங்கே இருளும் குளிரும் நிலவும். பொஹ்யொலா நாட்டை லோவுஹி என்ற சூனியக்காரி ஆண்டுவந்தாள்.&lt;br /&gt;அவளொரு சூனியக்காரி என்பார்கள். ஆனால் அவள் கிழவியல்ல. சகலகலா வல்லி. வீரதீரத்தில் சிறந்தவள். அவளது குதிரை பயங்கரமானது. அதன் கண்கள் சிவந்து இருக்கும். அவளோடு கூடவே ஒரு குட்டிச்சாத்தான் திரியும். அது ஓணானின் சாயலில் இருக்கும். அவளுக்கு அழகான மகள் ஒருத்தி இருந்தாள். அனுக்குய் அவளது பெயர். அவள் ஏழுநிற வானவில்லில் இருப்பாள். வெள்ளி ராட்டையில் தங்க நூலைக் கோர்ப்பாள். அழகான துணிகளை நூற்பாள்.&lt;br /&gt;லோவுஹி அவளை பலசாலிகளுக்கு மணம் முடித்துக் கொடுக்க எண்ணினாள். பலரைத் தெரிவு செய்து மகளிடம் அனுப்பினாள்.&lt;br /&gt;காலெவாலா என்பது சூரிய ஒளிமிக்க நாடு. காலெவாலா நாட்டில் மூன்று வல்லவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். ஒருவனின் பெயர் வாய்மனன். அவன் இசையில் வல்லவன். மற்றவன் இல்மாரினன். அவன் பொறியியல் வல்லுனன். இரும்பினால் பல பொருட்களைச் செய்ய வல்லவன். மூன்றாமவன் லெமின்காய்னன். பலசாலியும் சிறந்த வேட்டைக்காரனும் ஆவான். இவர்களைத் தன்வசப் படுத்தித் தன்பிடியில் வைத்திருக்க லோவுஹி திட்டமிட்டாள்.&lt;br /&gt;வாய்மனன்&lt;br /&gt;வாய்மனன் இசைஞானம் உள்ளவன். இனிமையாகப் பாடுவான். அவனது இசையில் பறவைகளும் விலங்குகளும் மயங்கும். அவன் பாடலை ருசிக்கத் தேடி வரும். அவனால் தனக்குப் பெருமை கிடைக்கும் என நினைந்தாள். அவனை தனது அடிமையாக்க விரும்பினாள். லோவுஹி அவனை தனது மகளுக்கு மணம்முடித்து வைக்க முடிவு செய்தாள்.&lt;br /&gt;வாய்மனனைத் தேடி தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். வாய்மனனும் லோவுஹியின் மகளை நாடி வந்தான். அவளை வாய்மனனுடன் வாழச் செய்தாள். சிறிது காலம் வாய்மனன் அவளோடு வாழ்ந்தான். ஆனால் அவள் வாய்மனனை மதிக்கவில்லை. மந்திரக்காரி லோவுஹி அவனைக் கையாலாகதவன் என்று கேலிசெய்தாள். பல கடினமான வேலைகளைச் செய்யத் தூண்டினாள். தாயும் மகளும் சேர்ந்து கேலி செய்தார்கள். வாய்மனன் நொந்து போனான். எதற்கும் ஓரு&lt;br /&gt;எல்லையுண்டு. அவனுக்கு ஆத்திரம் வந்தது. ஒரு முடிவுக்கு வந்தான்.&lt;br /&gt;“சீ..நீங்கள் பெண்களா? பேய்கள். உங்களோடு வாழ்வது கொடுமை. கூறிக்கொண்டு வெளியேறிவிட்டான்.&lt;br /&gt;இல்மாரினன்.&lt;br /&gt;ஒரு நாள் லோவுஹி இல்மாரினனைச் சந்தித்தாள். அவனது வீரதீரச் செயல்களை லோவுஹி அறிந்திருந்தாள். தனது மகளை இவன் மணம்செய்தால் தனக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்று எண்ணினாள். அவனால் பல பொருட்களைச் செய்து பொருளீட்டலாம் எனக் கனவு கண்டாள். எப்படியாவது அவனை அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள். தனது மகளின் அழகைக் கூறிவியந்தாள். தனது விருப்பத்தையும் கூறினாள். இல்மாரினனும் அவள் கூறியதை நம்பினான். அவளது வேண்டுகொளை ஏற்றான்.&lt;br /&gt;லோவுஹி இல்மாரினனை மகளிடம் அழைத்து வந்தாள். மகளை அழைத்தாள். “மகளே இவர் ஒரு பொறியியல் வல்லுனன். இவர் இரும்பு வேலைசெய்வதில் வல்லவர். பொறிகளைத் தயாரிப்பதில் கெட்டிக்காரன். மிகுந்த பலசாலி. அவரது கரங்கள் அற்புதமானவை. அழகான வேலைப்பாடுகளைச் செய்ய வல்லவர். சிறந்த வேட்டைக்காரன்.” என்று புகழ்ந்து தள்ளினாள். அவளும் தாயின் வேண்டுகொளை ஏற்றாள். தனது மகளை இல்மாரினனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். வாழ்க்கை இன்பமாகக் கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. லோவுஹி மகளை இயக்கினாள். அவள் இல்மாரினனைத் தூண்டினாள். ஒரு பொறியைச் செய்யும்படி வற்புறுத்தினாள். இல்மாரினனும் அதனை ஏற்றுக் கொண்டான்.&lt;br /&gt;இல்மாரினன் ‘சாம்போ’ என்ற மந்திரப் பொறியைச் செய்து கொடுத்தான். அந்தப் பொறி தானாகவே இயங்கியது. அதனுள் ஒன்றையும் போட வேண்டியதில்லை. அப்பொறியிலிருந்து வேண்டியவற்றைப் பெறலாம். மா, அரிசியுடன் பணமும் தந்தது. மாயக்காரி லோவுஹி மகிழ்ந்தாள். ‘சாம்போ’ மந்திரக்காரி லோவுஹிக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்தது. லோவுஹிக்கு சந்தோசம். அதனால் தனது மகளை அன்புடன் இருக்குமாறு அறிவுரை செய்தாள். இல்மாரினனும் மகிழ்ந்திருந்தான். ஒருநாள் இல்மாரினன் தனது மனைவியை அழைத்தான். தனது வீட்டுக்குப் போய்ச் சிலநாட்கள் தங்கிவிட்டு வரலாம் என்றான். அவளுக்கும் சந்தோசம். அவளும் சம்மதித்துப் புறப்பட்டாள். இல்மாரினன் வீட்டுக்குப் போனார்கள். அங்கு ஆடுகள் நிறைய இருந்தன. அவற்றை மேய்ப்பதற்கு இடையன் ஒருவன் இருந்தான். இல்மாரினனின் மனைவி பொல்லாதவள். ஆணவம் பிடித்தவள். அவள் சூனியக்காரி லோவுஹியின் மகள் அல்லவா?. ஆடு மேய்ப்பவன் பசியோடு வந்தான். அவன் ரொட்டி கேட்டான். அவள் முகத்தைச் சுழித்தாள். “இந்த இடையனுக்கு நான் ரொட்டி செய்வதா? செய்து காட்டுகிறேன்”; என்று நினைந்து கொண்டு ரொட்டி செய்தாள். அதனுள் சிறுகற்களைப் பொறுக்கிப் போட்டாள். மாவைப் பிசைந்தாள். ரொட்டி செய்தாள். அதனை இடையனிடம் கொடுத்தாள். இடையன் ரொட்டியை உண்டான். கற்கள் கடிபட்டன. அவள் வேண்டுமென்றே செய்ததை உணர்ந்தான். அவனுக்குக் கோபம் வந்தது. தனது ஆடுகளை ஓநாய்களாக மாற்றி விட்டான்.&lt;br /&gt;அவை எஜமானியைக் கடித்துக் குதறின. அனுக்குய் ஆத்திரமடைந்தாள். இல்மாரினனுடன் பெரிய சண்டையிட்டாள். இல்மாரினனைக் கண்டபடி ஏசினாள். வாய்க்கு வந்தபடி திட்டினாள். அவள் தனது தாய் வீட்டுக்குப் புறப்பட்டாள். இல்மாரினன் எவ்வளவோ தடுத்தான். ஆனாலும் அவள் கேட்கவில்லை. தாய்வீட்டுக்குப் போய் விட்டாள்.&lt;br /&gt;இல்மாரினன் இரக்க சுபாவம் உடையவன். அவனுக்குக் கவலை பொங்கியது. தனது மனைவியைத் தேடி வந்தான். லோவுஹி இல்மாரினனைத் திட்டினாள். அவனைத் தகாத வார்த்தைகளால் ஏசினாள். ‘கையாலாகாதவன்’ எனக்கேலி செய்து அனுப்பிவிட்டாள். மனவருத்தத்தோடு இல்மாரினன் போய்விட்டான். மாயக்கிழவி லோவுஹி சந்தோசமாக இருந்தாள். ‘சாம்போ’ அவளிடம் இருந்தது. அவள் சாம்போவினால் சொத்துக்களைச் சேர்த்தாள். மாயக்காரியின் பேராசையை இல்மாரினன் புரிந்து கொண்டான்.&lt;br /&gt;லெமின்காய்னன்&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன. லோவுஹி தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றெண்ணினாள். லெமின்காய்னன் பற்றி அறிந்திருந்தாள். லெமின்காய்னன் பயமில்லாதவன். சிறந்த பலசாலி. நல்ல வேட்டைக்காரன். அத்துடன் அவன் சிறந்த போர்வீரன். அவனைப் பற்றி லோவுஹி அறிந்திருந்தாள். தனது மகளை இவன் மணம்செய்தால் தனக்கு பேரும் புகழும் கிடைக்கும். அத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும் என்று எண்ணினாள்.&lt;br /&gt;எப்படியாவது அவனை அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள். அவனை அணுகினாள். தனது மகளின் அழகைக் கூறிவியந்தாள். தனது விருப்பத்தையும் கூறினாள். இல்மாரினனும் அவள் கூறியதை நம்பினான். அவளது வேண்டுகோளை ஏற்றான். &lt;br /&gt;லோவுஹி லெமின்காய்னனை மகளிடம் அழைத்து வந்தாள். மகளை அழைத்தாள். “மகளே இவர் சிறந்தபோர் வீரன். மிகுந்த பலசாலி. அவரது கரங்கள் அற்புதமானவை. அழகான வேலைப்பாடுகளைச் செய்ய வல்லவர். அத்துடன் சிறந்த வேட்டைக்காரன்.” என்று புகழ்ந்து தள்ளினாள். அவளும் தாயின் வேண்டுகோளை ஏற்றாள். தனது மகளை லெமின்காய்னனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். வாழ்க்கை இன்பமாகக் கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. லோவுஹி மகளை இயக்கினாள். லெமின்காய்னன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தான். நாட்கள் நகர்ந்தன. லோவுஹி லெமின்காய்னனைப் பல கடினமான வேலைகளைச் செய்யத் தூண்டினாள்.&lt;br /&gt;லெமின்காய்னன் லோவுஹியின் திட்டங்களை அறிந்திருந்தான். மாயக்கிழவி அவனை நையாண்டியும் கேலியும் செய்யத் துணிந்தாள். அவனுக்கு வெறுப்பு வந்து விட்டது. அவள் சொல்வதை ஏறெடுத்தும் பார்க்காதிருந்தான். தனது திட்டப்படி வேலைசெய்ய மறுத்த லெமின்காய்னனையும் துரத்தி விட்டாள். லெமின்காய்னன் மனம் வருந்தி தான் செய்த தவறை உணர்ந்தான். அவனும் வெளியேறிவிட்டான்.&lt;br /&gt;லோவுஹியிடம்பொருள்வளம் இருந்தது. ‘சாம்போ’ வேண்டியவற்றைக் கொடுத்தது. ஒரு சர்வாதிகார மகாராணிபோல் வாழ்ந்தாள். அவளிடம் போர்வீரர்கள் இருந்தார்கள். மக்களையும் தன்வசப் படுத்தினாள். அவளது கொடுமையைப் பொறுக்காத மக்கள் வருந்தினார்கள்.&lt;br /&gt;இல்மாரினன் வாய்மனிடம் சென்றான். அவர்கள் இருவரும் லெமின்காய்னனைச் சந்தித்தார்கள். தங்களுக்கு லோவுஹி செய்த கொடுமைகளை நினைத்து வருந்தினார்கள். மூவரும் மாயக்கிழவி லோவுஹியைப் பழி வாங்க நினைத்தார்கள். அவளை எதிரக்கத் திட்டமிட்டார்கள். ‘சாம்போவை’ மீட்டெடுக்கும் வழிகளை ஆராய்ந்தார்கள். இச்செய்தியை லோவுஹி அறிந்தாள். அவர்கள் எதிர்க்குமுன் தான் தயாராகிவிட்டாள். லோவுஹி மூர்க்கமடைந்தாள். பணமிருந்தால் பத்தும் செய்யலாம். அட்டகாசமாகச் சிரித்தாள்.&lt;br /&gt;பொஹ்யொலா மக்களை ஏவினாள். அவர்களுக்குப் பணத்தினை அள்ளிக் கொடுத்தாள். மக்களும் அவள் பக்கமே நின்றார்கள். மக்களும் பலசாலிகளை எதிர்க்கப் புறப்பட்டனர். மக்கள் மூர்க்கத்தோடு புறப்பட்டார்கள். அவர்களது கைகளில் ஆயுதங்கள் இருந்தன. போர்வீரர்களையும் அனுப்பினாள். வாய்மனன் இதனைக் கண்டு கொண்டான். அவன் அந்த மக்களை நோகவில்லை. இப்போது வாய்மனன் தனது வல்லமையைக் காட்டினான். அவன் தனது இசைக்கருவியை எடுத்தான். இனிய பாடலைப் பாடினான். பாடல் காற்றில் பரவியது.&lt;br /&gt;என்ன அதிசயம்? கோபாவேசத்தோடு வந்தவர்கள் அப்படியே நின்றார்கள். பாடலின் இசை அவர்களை மெய்மறக்க வைத்தது. வந்த வேலையை மறந்தார்கள். அப்படியே உறங்கி விட்டார்கள்.&lt;br /&gt;மூவரும் விரைந்தார்கள். சாம்போவைத் தூக்கிப் படகில் ஏற்றினார்கள். படகு விரைந்து சென்றது. சூனியக்காரி லோவுஹி ஆத்திரமடைந்தாள். அவர்களைத் துரத்த ஆரம்பித்தாள்.&lt;br /&gt;பனி மூட்டத்தை ஏவிவிட்டாள். பனிமூட்டம் படகைச் சூழ்ந்து கொண்டது. படகு திசைதெரியாது திக்குமுக்காடியது. வாய்மனன் வாளை எடுத்தான். பனிமூட்டத்தைச் சாடினான். பனிமூட்டம் கலைந்தது. ஆவேசம் கொண்ட லோவுஹி அலைகளைத் தூண்டினாள்.&lt;br /&gt;பேரலைகள் ஆர்ப்பரித்தன. படகைத் தாக்கின. அலைகளை எதிர்த்துப் படகைச் செலுத்தினார்கள். லோவுஹி காற்றை அழைத்தாள். கடுமையாகத் தாக்கக் கட்டளையிட்டாள். காற்று வீசியது. எனினும் படகு காற்றின் எதிர்திசையில் விரைந்தது. போர் வீரர்களையும் ஏவினாள். பெரும் சண்டை நடந்தது. படகு உடைந்தது. பலசாலிகள் உயிர் தப்பிச் சென்றார்கள். சாம்போ உடைந்து கடலில் வீழ்ந்தது.&lt;br /&gt;வாய்மனன் முதிர்ந்த ஞானி அல்லவா? அவன் சாம்போவின் பாகங்களைத் தேடிப்பிடித்தான். ஒன்று சேர்த்தான். சாம்போ உருவாகி இயங்கியது. “காலெவாலா நாட்டில் மகிழ்ச்சி நிலவும்” என்றான். சூரியனும், சந்திரனும் வந்தன. அவ்வளவுதான். அங்கு உறைபனி உருகியது. வரட்சி பறந்தோடியது. மரங்கள் துளிர்விட்டன. பசுமை இலைகள் காற்றில் அசைந்தன. மரஞ்செடி கொடிகளில் மொட்டுக்கள் நிறைந்தன. பூக்கள் மலர்ந்தன. காய் கனிகள் தொங்கின. வயல்கள் விளைந்து கூத்தாடின. பறவைகள் பாடின. மக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கியது. எங்கும் சந்தோசம் பொங்கியது.&lt;br /&gt;லோவுஹி சாம்போவை இழந்ததால் ஆத்திரம் அடைந்தாள். வல்லவர் மூவரையும் பழி வாங்கும் திட்டத்தில் இறங்கினாள். மாயக்காரி லோவுஹி சந்தர்ப்பத்தைப் பார்த்தி ருந்தாள். அவள் மனதில் பழிவாங்கும் உணர்வு வளர்ந்தது. யாருமே எதிர்பார்க்காத திட்டத்தைத் தயாரித்தாள். மூவரையும் வேவு பார்த்தாள். வாய்மனன் அடிக்கடி பாடி உயிரினங்களை மகிழ்வித்து வந்தான். அதனைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தக் காத்திருந்தாள். வாய்மனன் காட்டில் பாடும் நாளைத் தேர்ந்தெடுத்தாள்.&lt;br /&gt;ஒருநாள் வாய்மனன் மெய்மறந்து பாடினான். அந்தப் பாடல் அற்புதமாக இருந்தது. சகல உயிரினங்களும் கூடியிருந்து ரசித்தன. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. சூரியனும் சந்திரனும் கீழிறங்கி வந்தன. மரக்கிளைகளில் அமர்ந்தன. பாடலை மெய்மறந்து ரசித்தன. மெதுவாக சூனியக்காரி லோவுஹி வந்தாள். சூரியனையும் சந்திரனையும் சிறைப்பிடித்தாள். அப்படியே தூக்கிக் கொண்டு போனாள்.&lt;br /&gt;பூமிக்கடியில் ஒரு அறை இருந்தது. அந்த அறையில் போட்டுப் பூட்டிவிட்டாள். சூரியனும் சந்திரனும் எங்கே?. வானில் அவற்றின் பவனி இல்லை. சூரிய ஒளியில்லை. சந்திரனின் சுடரில்லை. இருளும் குளிரும் வந்தன. வெப்பம் இல்லை. உறைபனி உறைந்தது. பூமி அழுதது. காடு மலைகள் இருண்டு கிடந்தன. காலெவாலா நாடு வாடியது. சூனியக்காரி லோவுஹி மகிழ்ந்தாள்.&lt;br /&gt;சூனியக்காரி லோவுஹிவுக்கு மனதில் பயமிருந்தது. பலசாலிகளை நினைத்தாள். அவர்கள் வந்தால் என்ன செய்வது.? அவர்கள் இந்தக் குளிரில் மாண்டிருப்பார்கள். இனியெங்கே வரப்போகிறார்கள். எனினும் அவள் அடிக்கடி குழம்பினாள். அவர்களைப் போய்ப் பார்த்தால் என்ன? ஒரு கழுகாக மாறினாள். காலெவாலா நாட்டுக்குப் பறந்து போய்த் தேடினாள். &lt;br /&gt;இல்மாரினனைக் கண்டாள். இவன் சாகவில்லையே. அவள் அவனருகில் கழுகாகச் சென்றாள். அவன் பட்டறையில் வேலையில் ஈடுபட்டிருந்தான். கழுகு அவன் பக்கத்தில் போயிருந்தது. உற்றுப்பார்த்தது. “நீ என்ன செய்கிறாய்.”? கழுகு கேட்டது. “கழுத்துப் பட்டை செய்கிறேன்.” என்றான். “எதற்காகச் செய்கிறாய்”;? கழுகு தொடர்ந்தது. “பொல்லாத மாயக்கிழவி லோவுஹி இருக்கிறாள். அவளைப் பிடிக்கப் போகிறோம். அவள் தப்ப முடியாது. மலையடிவாரத்தில் இரும்புப் பாறை இருக்கிறது. அதில் மாயக்கிழவி லோவுஹியின் கழுத்தில் இதனை மாட்டிவிடுவோம். பின் அவளைப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்து கட்டப்போகிறோம்”. என்றான். அவனைப் பயத்துடன் உற்றுப்பார்த்தாள். புறப்பட்டு விட்டாள்.&lt;br /&gt;பலசாலிகள் முன் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தாள். குளிரும் இருட்டும் அவர்களைக் கொல்லவில்லை. தனது நாட்டுக்குப் பறந்தாள். பூமியடி அறைக்குப் போனாள். அறையைத் திறந்தாள்.&lt;br /&gt;“நீங்கள் போகலாம்.” என்று சூரியனையும் சந்திரனையும் விடுவித்தாள். சூரியனும் சந்திரனும் வானில் பவனி வந்தன. அவற்றைப் பார்த்து மக்கள் ஆரவாரித்தனர்.&lt;br /&gt;காலெவாலா நாட்டில் ஒளிபரந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள். குளிரையும் இருளையும் வெற்றி கொண்டார்கள். அவர்கள் சூனியக்காரி லோவுஹியைக் கண்டு பயப்படுவதில்லை. இப்போது சூரியன் மலைகளில் மறைந்தாலும் அவர்களுக்குப் பயமில்லை.&lt;br /&gt;சோலும் மானியும்.&lt;br /&gt;இக்கதையும் சூரியனையும் சந்திரனையும் பற்றியது. ஸ்கன்டிநேவியா நாட்டில் நிலவுகிறது. கேட்பதற்கு நல்ல கதை. வாசிப்பதற்கு ஏற்றது. கற்பனையை வளர்க்க வல்லது. வாசித்துப் பார்ப்போமா?&lt;br /&gt;முற்காலத்தில் சூரியனோ சந்திரனோ இல்லை. பூமியில் இருட்டின் ஆட்சி நிலவியது. எங்கும் இருளாக இருந்தது. வெப்பம் இல்லை. காற்று வீசுவதில்லை. மரஞ்செடிகள் அசைவதில்லை. மரங்கள் உயிர்ப்பற்று நின்றன. இலைகளோ, பூக்களோ இல்லை. புல்பூண்டுகள் வளரவில்லை. மனிதர்கள் கஸ்டமான வாழ்க்கையை நடத்தினர். விலங்குகளும் துன்புற்றன. பறவைகள் பாடுவதில்லை. பூக்கள் மலர்வதில்லை. ஆறுகள் சலசலத்து ஓடுவதில்லை. இதனையிட்டு மனிதர்கள் தேவர்களுக்கு முறையிட்டார்கள். அவர்களது வேண்டுதலைத் தேவர்கள் உணர்ந்தனர்.&lt;br /&gt;தேவர்கள் ஒன்றுகூடினார்கள். தேவர்கள் வல்லமையுடையவர்கள். மந்திர தந்திரங்கள் தெரிந்தவர்கள். சேர்ந்து ஆலோசித்தார்கள். தேவலோகத்தில் ஓதின் என்ற தேவன் இருந்தான். அவன் தனது சகோதரர்களை அழைத்தான். அவர்களோடு நெருப்பு நாட்டுக்குச் சென்றான். பலநாட்களின் முயற்சியின் பின் நெருப்பைக் கண்டார்கள். அங்கிருந்து நெருப்பை எடுத்து வந்தார்கள்.&lt;br /&gt;பலநாட்களாகக் கடும்முயற்சி செய்தார்கள். ஒரு சூரியனைச் செய்தார்கள். அது கதகதப்பாக இருந்தது. அதனைச் சோல் என்று பெயரிட்டு அழைத்தார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். சந்திiனைப் பற்றிச் சிந்தித்தார்கள். ஆறுதலாக இருந்து சந்திரனைச் செய்தார்கள். அதற்கு மானி என்று பெயரிட்டார்கள்.&lt;br /&gt;அது தண்மையாகவும் அழகாகவும் இருந்தது. அவர்களது படைப்பில் இவை அற்புதமானவையாக இருந்தன. இவற்றால் பூமிக்கு நன்மை உண்டாகும் என்று நினைத்தார்கள். இவை வானத்தில் வந்தால்தான் பூமிக்கு நன்மை கிடைக்கும். எப்படி இவற்றை வானத்துக்கு எடுத்துச் செல்வது. யாரால் முடியும். வல்லமை படைத்தவர்களால்தான் முடியும். பல தேவர்கள் வந்து பார்த்துச் சென்றார்கள்.&lt;br /&gt;இவற்றை எடுத்துச் செல்ல இரண்டு திறமையானவர்கள் வேண்டும். அவர்களைத் தேடும் படலத்தில் இறங்கினார்கள். பலநாட்களாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். எங்கு தேடியும் பயனில்லை. ஈற்றில் பூமியில் ஆதனைப் பற்றி அறிந்தார்கள்.&lt;br /&gt;பூமியில் ஆதன் இருந்தான். தேவர்களின் அற்புதப் படைப்பைக் கேளிவியுற்றான். தேவர்கள் இரண்டு பொருட்களைச் செய்துள்ளமையை ஆதன் அறிந்திருந்தான். அவற்றின் செயற்பாட்டையும் கேள்விப்பட்டான். ஆதனுக்கு இரு குழந்தைகள் இருந்தார்கள். அந்தப் பொருட்களின் பெயரை&lt;br /&gt;வைக்கத் தீர்மானித்தான். முதற்குழந்தை ஆண். அவனுக்குச் சோல் என்று பெயரிட்டான். சோல் என்பது சூரியனைக் குறிப்பது. இரண்டாவது பெண் குழந்தை. அவளுக்கு மானி என்று பெயரிட்டான். மானி என்பது சந்திரனைக் குறிப்பதாகும். குழந்தைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார்கள். &lt;br /&gt;குழந்தைகள் இருவரும் மிகவும் அழகாகனவர்கள். தேவர்களை விடவும் அழகானவர்கள். பூமியில் அவர்களை விடவும் அழகானவர்களே இல்லை. தேவலோகத்திலும் இல்லை. அதனால் தந்தை தலைக்கனம் கொண்டிருந்தான். அகங்காரம் தேவர்களுக்குப் பிடிக்காதது. அவனது தலைக்கனத்தைக் குறைக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தார்கள். தேவர்கள் அவனைத் தண்டிக்க எண்ணினார்கள்.&lt;br /&gt;ஓதின் தனது பரிவாரங்களோடு பூமிக்கு வந்தார். சோலையும் மானியையும் பிடித்தார். தேவலோகத்துக்கு அழைத்து வந்தார். ஓதினிடம் தங்கத்தேர் இருந்தது. அந்தத் தேரில் நான்கு வெண்குதிரைகள் பூட்டப்பட்டன. சோலை அழைத்தார்கள். அவன் செய்ய வேண்டியவற்றை விளக்கினார்கள். அதில் சோல் என்ற சூரியனை ஏற்றினார்கள். அந்தத் தேரை சோல் ஓட்டினான். சோல் என்ற சூரியன் கிழக்கிலிருந்து புறப்பட்டான். ரதம் வானை நோக்கி விரைந்தது. சோல் என்னும் சூரியன் வானில் பவனி வந்தான். வெயில் பூமியைத் தொட்டது. பூமி இயக்கம் கொண்டது.&lt;br /&gt;வயல்கள் விளைந்தன. மரங்கள் பூத்தன. காய்களும் பழங்களும் தோன்றின. பூக்கள் மலர்ந்தன. காற்றசைந்தது. ஒலி பிறந்தது. மக்கள் மகிழ்ந்தனர். ஒரு நாட்பயணத்தின் பின் சூரியன் மேற்காக மறைந்தான்.&lt;br /&gt;மானிக்கும் தங்கரதம் கொடுபட்டது. சந்திரனை ரதத்தில் ஏற்றினார்கள். சோலைப்போல் கிழக்கிருந்து சந்திரனின் பயணம் தொடங்கியது. மானி ரதத்தில் முன்னிருக்கையில் இருந்தாள். மானி குதிரைகளை முடுக்கினாள். குதிரைகள் வானில் விரைந்தன. பூமியில் நிலவொளி பரவியது. எங்கும் மகிழ்ச்சியின் ஆட்சி. இரவு முழுவதும் ஓய்வில்லாப் பயணம். மானியின் ரதமும் மேற்காகச் சென்று மறைந்தது.&lt;br /&gt;சோலுக்கு இரவு மட்டுமே ஓய்வு. மானிக்கு பகல் மட்டுமே ஓய்வு. எப்போதாவது வெகு தூரத்தில சோலின் உருவம் தெரியும். அப்போது மானி கையசைத்துக் கொள்வாள்.&lt;br /&gt;சகோதர பாசம் அவர்களைப் பிணைக்கும். மானியைக் கண்ட சந்தோசத்தில் சோலும் கையசைப்பான்.&lt;br /&gt;எப்போதாவது நெஞ்சு பொறுக்காமல் அழுவார்கள். அப்போது புகைமூட்டம் சூழ்ந்திருக்கும். &lt;br /&gt;கிர்கிஸ்யா நாட்டில் நிலா.&lt;br /&gt;சோவியத் நாட்டின் தெற்கே கிர்கிஸ்யா நாடு உள்ளது. அங்குள்ள மக்கள் சந்திரனைப் பற்றி இவ்வாறு கூறுவார்கள். சந்திரனை அவர்கள் பெண்ணாகக் கருதுகிறார்கள். கிர்கிஸ்யா நாட்டில் தனவந்தர் ஒருவர் வாழ்ந்தார்.&lt;br /&gt;அவர் பெரிய பணக்காரர். அவருக்கு அழகான மகள் இருந்தாள். அவளது முகம் ஒளிவீசும். கண்கள் பளபளக்கும். உடல் தங்கம்போல் மின்னும். அவளுக்கு நிலா என்று பெயரிட்டனர். நிலா பேரழகியாக இருந்தாள்.&lt;br /&gt;அவளை மணம்செய்யப் பலர் முன்வந்தனர். ஆனால் அவர்களை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் ஒரு மாலுமியைக் காதலித்தாள். அவனும் அவளை நேசித்தான்;. ஆனால் அவளது தந்தை எதிர்ப்புத் தெரிவித்தார். ஊர் பேர் தெரியாத மாலுமியை அவர் வெறுத்தார்.&lt;br /&gt;மாலுமி மனமுடைந்தான். பேரும் புகழும் இ;ல்லாததால்தானே இந்த நிலை?. அவனுக்குக் கவலையாக இருந்தது. கடுமையாக யோசித்தான்.தூரநாட்டுக்குச் சென்று வீரதீரச் செயல் புரியவேண்டும். மாபெரும் வீரனாகத் திரும்ப வேண்டும். பேரும், பொருளும் புகழும் தேடவேண்டும். தான் செல்வந்தனாக வந்தால் மறுப்பு இருக்காது. நிலாவின் தந்தை ஏற்றுக் கொள்வார். இது அவனது பெருவிருப்பாக மாறியது. நிலாவிடம் தனது முடிவைச் சொன்னான். அவள் அழுதாள். தனது தந்தையின் மனதை மாற்றுவதற்கு வேறுவழி தெரியவில்லை. எப்படிப் பிரிந்து வாழ்வது? எனினும் அவனது விருப்பத்துக்கு அவள் தடைபோடவில்லை. “நான் திரைகடல் தாண்டிச் சென்று பொருள் தேடப்போகிறேன். உனது தந்தையின் முன் செல்வந்தனாக வருவேன். அப்போது அவர் நமது திருமணத்துக்குத் தடைபோட மாட்டார். நீ கவலையை மறந்து இரு” என்றான். அவள் கண்ணீர் விட்டாள். அவன் விடை பெற்றுச் சென்றான்.&lt;br /&gt;தூரதேசம் நோக்கிக் கடலில் பயணமானான். நாட்கள் நகர்ந்தன. காலங்கள் புரண்டோடின. அவன் வரவே இல்லை. நிலா அழுதாள். கடற்கரைக்கு வருவாள். அவன் வருகிறானா எனத் தேடுவாள். ஏங்கி அழுவாள். ஆனாலும் அவன் வரவே இல்லை. கோமானாகிய அவள் தந்தை இறந்துவிட்டார். ஆடம்பரமான மாளிகையில் நிலா மட்டுமே இருந்தாள். நிலா திருமண ஆடையை அணிவாள். கடற்கரைக்குச் செல்வாள். தனது மனம் கவர்ந்தவனைத் தேடுவாள். தொலைதூரத்தை நோக்குவாள். ஏமாற்றத்தோடு ஏங்குவாள். ஒவ்வொரு இரவும் தங்கப் படகில் ஏறுவாள். நட்சத்திரத் தோழிகளுடன் தனது காதலனைத் தேடுவாள். தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறாள். அதனால்தான் வெளிறிப் போய் வருத்தமாக உள்ளாள். இப்படிச் சந்திரனின் கதை செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் சூரியனும் சந்திரனும்.&lt;br /&gt;தென்னாபிரிக்காவில் நைஜீரியா என்ற நாடு இருக்கிறது. அங்கு சூரியனையும் சந்திரனையும் கணவன் மனைவியாகப் பார்க்கிறார்கள். அக்கதையைப் பார்ப்போம்.&lt;br /&gt;சூரியனின் மனைவிதான் சந்திரன். சூரியன் தனது மனைவி சந்திரனோடு பூமியில் சந்தோசமாக வாழ்ந்தார். அவர்களுக்கு அழகான வீடு இருந்தது. இல்லறம் சந்தோசமாக நடந்தது. விருந்தோம்பல் நடக்கும். அவர்களது வீட்டுக்கு அடிக்கடி நண்பர்கள் வருவார்கள். ஒரே கொண்டாட்டமாக இருக்கும். தண்ணீர்க் கடவுளும் இருந்தாற்போல் வருவார். விருந்துண்பார். பின் சென்றுவிடுவார். அவரை வெள்ளம் என்று அழைத்தார்கள். &lt;br /&gt;கொஞ்ச நாட்களாக அவரைக் காணவில்லை. ஒருநாள் சூரியன் அவரைக் கண்டார். “ஹலோ நண்பரே! என்ன எங்கள் வீட்டுப் பக்கம் வரக்காணோம்? ஒரு நாளைக்கு வாருங்களேன்” என்றார். திருவாளர் வெள்ளத்துக்குச் சந்தோசம். “வரலாம்தான். நேரம் கிடைப்பதில்லை.” எனத் திருவாளர் வெள்ளம் கூறியது. “நேரம் கிடைக்கும்போது வாருங்கள்”. சூரியன் அழைப்பு விடுத்தது.ஒருநாள் நண்பர் வெள்ளம் அவர்களது வீட்டுக்கு வந்தார். கூடவே தனது நண்பர்களையும் அழைத்து வந்தார்.&lt;br /&gt;அந்த நண்பர்கள் வேறு யாருமல்ல. நீர்வாழ் உயிரினங்கள்தான். மீன்களும், ஏனைய நீர்வாழ் உயிரினங்களும் வந்தன. வீடு நிறைந்துவிட்டது. வீடு முட்டப்பரவியது. இடமின்மையால் கணவனும் மனைவியும் கூரையில் ஏறினரகள்;. கூரையையும் மூடி வெள்ளம் வந்தது. அவர்களால் பொறுக்க முடியாது போய்விட்டது.&lt;br /&gt;“உங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து சென்று வாருங்கள்”;. என்று சூரியன் கூறியது. திருவாளர் வெள்ளம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. வெள்ளம் மென்மேலும் வந்தது. வெள்ளத்தில் நண்பர்களும் வந்தார்கள். நண்பர்களுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். செய்வதற்கு வேறு வழியுமில்லை. “நீங்களே இனி இந்த வீட்டில் இருங்கள். நாங்கள் போகிறோம். என்னால் இங்கு இருக்க முடியாது. நான் வெளியேறுகிறேன்” சந்திரன் கூறிக்கொண்டு ஒரு தாவுத் தாவியது. வானில் வெகுதூரம் சென்று விட்டது.&lt;br /&gt;“நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வது. நானும் வருகிறேன். சூரியனும் பின்னால் சென்றது.” ஆனால் இருவரும் வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டார்கள். வெகுதூரத்தில் இருந்து ஆளையாள் பார்த்துக் கௌ;வார்கள். இருவரும் இதுவரை ஒன்;றாகச் சேரவில்லை.&lt;br /&gt;வானிலிருந்து தங்கள் நண்பர்களைப் பார்ப்பார்களாம். அவர்களோடு உரையாடுவார்களாம். அவர்களது சந்தோசத்தில் இன்பம் காண்பார்களாம். அப்படியே வானத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்களாம். அவர்களுக்கு வெள்ளத்தின் தொந்தரவுகள் இப்போது இல்லையாம்.&lt;br /&gt;சந்திரப் பெண்ணின் கதை&lt;br /&gt;அமெரிக்க நாட்டில் இப்படியொரு கதை வழங்குகிறது. சந்திரன் என்ற நிலா அழகிய பெண்ணாக இருந்தாள். அவளைச் சூரியன் திருமணம் செய்தார். அவர்களுக்கு நிறையக் குழந்தைகள் இருந்தனர். அவைதான் வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள். சூரியன் நட்சத்திரக் குழந்தைகளைத் துரத்தும். பிடிபட்ட குழந்தைகளை விழுங்கி விடுவிடும்.&lt;br /&gt;சூரியனைக் கண்டால் குழந்தைகளுக்குப் பயம். பகலில் சூரியன் வானவீதியில் வரும். அப்போது நடசத்திரக் குழந்தைகள் வானில் ஓடி ஒளிந்து கொள்ளும். அதனால்தான் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை. &lt;br /&gt;நிலா சூரியனிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முனைந்தாள். பலவழிகளைத் தேடினாள். சூரியன் நட்சத்திரக் குழந்தைகளை வேட்டையாடிவிடும். அப்போது சந்திரன் மனம் வருந்தும். துக்கத்தோடு வாடியிருக்கும். இது தொடர்கதையாக இருக்கும். அதனால் ஓவ்வொரு மாதமும் முகத்தை ஒருபக்கம் வைத்துக் கொள்ளும். அப்பொழுது தேய்பிறையாகத் தெரியும். எப்படியோ நட்சத்திரக் குழந்தையைச் சூரியன் வேட்டையாடி விடும்.&lt;br /&gt;ஒரு மாதத்தில் ஒரு நட்சத்திரக் குழந்தைiயாயவது பிடித்து விழுங்கிவிடும். அந்த நாளில் சந்திரன் வெளியே வருவதில்லை. வீட்டினுள் அடைந்து கிடக்கும். அன்றுமுழுதும் சந்திரன் வெளியே வருவதில்லை குழந்தைகளை இழந்த துக்கத்தில் இருப்பாள். அன்று அமவாசையாகும். இரவுவேளையில் சூரியன் உறங்கிவிடும். அப்போது நிலா தனது நட்சத்திரக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வாளாம்.&lt;br /&gt;சகோதரர் சண்டை.&lt;br /&gt;கெனியா என்பது கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நாடு. அங்கே சந்திரனும் சூரியனும் சகோதரர்களாக விளங்கினார்கள். சந்திரன் மூத்தவர். மகவும் அழகானவர். தங்கமாக ஜொலிப்பவர். அவரது ஒளியில் பலர் மயங்கினார்கள். அவரைப் புகழ்ந்தார்கள். சூரியன் இளையவர். அழகில் குறைந்தவர். அதனால் சூரியனுக்குப் பொறாமையாக இருந்தது. அடிக்கடி சூரியன் சந்திரனோடு சண்டை பிடிப்பார். ஒருநாள் கடும் சண்டை நடந்தது. இருவரும் கட்டிப்பிடித்துப் புரண்டார்கள். மல்யுத்தம் நடந்தது.&lt;br /&gt;சூரியன் கோபத்தோடும் வேகத்தோடும் சண்டையிட்டார். சந்திரனைச் சேற்றுக்குள் தள்ளி விட்டார். சந்திரன் சேற்றில் புதையுண்டார். மெதுவாக எழுந்தார். அவரது ஒளி மங்கியது. மக்கள் வேதனையடைந்தார்கள்.&lt;br /&gt;சண்டை ஓயவில்லை. மக்களும் தேவர்களும் கடவுளிடம் முறையிட்டார்கள். அவர் இருவரையும் சமாதானப் படுத்தினார். இருவரையும் எச்சரித்தார். சூரியனைப் பார்த்து “நீ பகலில் மட்டும் வெளியில் வானவீதியில் வரவேண்டும்.” என்றுசொன்னார். சந்திரனைப் பார்த்தார். “இரவில் திருடர்களும், சூனியக் காரர்களும் திரிவார்கள். அவர்களது தீயசெயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு உனது இந்த ஒளிதான் ஏற்றது. அதனால் நீ இரவில் பிரகாசிக்க வேண்டும்”. என்று கட்டளை இட்டார்.&lt;br /&gt;“இருவரும் ஒன்றாக இருந்தால் சண்டை பிடிப்பீர்கள். அதனால் உங்களைப் பிரித்து வைக்கின்றேன்”;. என்று பிரித்துத் தூரத்தில் வைத்தார்.&lt;br /&gt;கடவுளின் கட்டளையைச் சிரமேற்கொண்டார்கள். சூரியன் பகலில் வானவீதியில் பிரகாசிக்கிறது. சந்திரன் இரவில் வானவீதியில் பிரகாசிக்கிறது.&lt;br /&gt;நிலாப் பெண்&lt;br /&gt;இந்தோனேசியாவில் வேடிக்கையான கதையுண்டு. ‘நவங் வுலன் ’ என்ற சந்திரத் தேவதை இருந்தாள். அவள் பூவுலகில் உள்ள ஏரியில் குளிக்க வருவது வழக்கம். அன்னத்தின் இறக்கையினாலான போர்வையுள் புகுந்து பூமிக்கு வருவாள். இதனைப் பலர் கண்டார்கள். அவளிடம் பல சக்திகள் இருந்தன. ஒரு தானிய மணியிருந்தால் போதும். ஆயிரம் பேருக்குச் சமைத்துப் போடுவாள். அவளது சக்தியை எவராவது பார்த்தால் அந்தச் சக்தியை அவள் இழந்துவிடுவாள்.&lt;br /&gt;குவான் அழகிய வாலிபன். கற்பனை மிக்கவன். ‘நவங் வுலன் ’ என்ற சந்திரத் தேவதையைப் பற்றி அறிந்திருந்தான். அவளைப் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.&lt;br /&gt;ஒருநாள் அவள் பூமிக்கு வந்தாள். தனது போர்வையைக் கழற்றி வைத்துவிட்டு நீராடினாள். இதனை குவான் நோட்டம் விட்டான். மெதுவாக குவான் வந்தான். அவளது போர்வையை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு ஓடினான். அதனை ‘நவங் வுலன்’ கண்டு கொண்;டாள். அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள். அவன் அதனை ஒளித்து விட்டான். அவள் அழுது புலம்பினாள். தனது ஆடையில்லாது அவளால் தனது உலகத்துக்குப் போகமுடியாது.&lt;br /&gt;‘நவங் வுலன்’ குவானோடு தங்கிவிட்டாள். அவனோடு வாழ்க்கை நடத்தினாள். அவனது நண்பர்கள் வந்தார்கள். அனைவரையும் அனுசரித்து விருந்தோம்பினான். தனது மனைவியைப் பற்றிப் புகழ்ந்தான். தனது மனைவி அத்தனை பேருக்கும் சமையல் செய்து விருந்தோம்புவது குவானை பிரமிக்கச் செய்தது. குவானுக்கு ஆச்சரியம். தனது வருவாய்க்கு இது எப்படிக் கட்டுப்படியாகும்.? யோசித்தான். எப்படி இவள் சமைக்கிறாள் என்பதை ஒளிந்திருந்து பார்த்தான்.&lt;br /&gt;‘நவங் வுலன்’ ஒரு தானிய மணியை எடுப்பாள். அதனைக் கொண்டே பலருக்குச் சமைத்தாள். அவனுக்கு வியப்பு. அவள் எப்படிச் சமைக்கிறாள் என்பதை பார்க்க அவாக் கொண்டான். ஒரு நாள் அவள் சமைக்கும்போது எட்டிப்பார்த்தான். அவ்வளவுதான். அவளது சக்தி மறைந்து விட்டது.&lt;br /&gt;இப்போது அவளால் அப்படிச் செய்யமுடியவில்லை. மற்றப்பெண்களைப் போல் இயங்கினாள். குவான் தனது மனைவியை வருத்தினான். மற்றப் பெண்களைப்போல் தானியங்களை உரலில் போட்டுக் குற்றிச் சமைத்தாள். ‘நவங் வுலன்’ வருந்தினாள். கவலையில் ஆழ்ந்து போனானள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.&lt;br /&gt;ஒருநாள் தனது வேலையில் ஆழ்ந்திருந்தாள். சமையலுக்கான பொருட்களைத் தேடினாள். வீட்டினுள் நுழைந்து பார்த்தாள். தற்செயலாக தனது போர்வையைக் கண்டு கொண்டாள். எடுத்துப் போர்த்தினாள். அவ்வளவுதான். எடுத்துப் போர்த்தினாள். பறந்துவிட்டாள். ஆனால் அவளால் அங்கு நிம்மதியாய் இருக்க முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாய் மாறினாள். இரவில் தனது உலகத்தில் பிரகாசித்தாள். பகலில் பூவுலகத்தில் தனது கணவனுடனும் குழந்தையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.&lt;br /&gt;சீனாவில் சந்திர விழா.சீனா தேசத்தை ஜேட் மன்னன் ஆண்டார். அப்பொழுது பத்துச் சூரியர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாக வந்து வானில் பிரகாசித்துச் சூரிய சக்தியைக் கொடுத்தார்கள். பயிர்கள் நன்றாக விளைந்ன. மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பஞ்சம் இல்லை. மக்கள் சந்தோசமாக மகிழ்ந்திருந்தார்கள்.சூரியர்களுக்கு ஒரு ஆசை பிறந்தது. ஒரே நாளில் பத்துப்பேரும் வானவீதியில் ஒன்றாக வரும் எண்ணம் உதயமாகியது. ஒருநாள் பத்துப்பேரும் ஒன்றுசேர்ந்தார்கள். அவர்களுக்கு ஓரே சந்தோசம். வான்வீதியில் பத்துப்பேரும் ஒரே நேரத்தில் வந்தார்கள்.திடீரென எல்லாம் மாறின. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. மரஞ்செடி கொடிகள் வாடின. பயிர்கள் கருகியழிந்தன. உயிரினங்கள் பதைபதைத்தன. மக்கள் வாடினர். ஜேட் மன்னன் கோபம் கொண்டார்.பத்துச் சூரியர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார். சீனாவில் ஹொயுய் என்றொரு வீரன் இருந்தான். அவனது மனைவி சேஞ்ஜி அழகானவள். அவர்கள் இருவரும் சந்தோசமாக இருந்தார்கள்.ஹொயுய் சிறந்த வேட்டைக்காரன். வில்லில் அம்பைப் பூட்டினால் குறிதவறாது. நமது வல்வில் ஓரியைப் போன்றவன். அவனை அழைத்தார். ஒன்றாகத் தோன்றி வெப்பத்தை அளிக்கும் சூரியர்களைத் தண்டிக்கப் பணித்தார்.ஹொயுய் தனது வில்லை வளைத்தார். ஒவ்வொரு சூரியனாக வீழ்த்தினான். ஒரு சூரியனை உலகமக்களுக்காக எஞ்சவிட்டான். ஜேட் மன்னர் ஹொயுய் வீரனைப் பாராட்டிப் பரிசளித்தார். அவனுக்கு ஒரு மாத்திரையை அன்பளிப்புச் செய்தார். அது சிரஞ்சீவி மாத்திரை. அதனை உண்பவருக்கு மரணம் இல்லை. அதனைக் கொடுக்கும்போது “ஹொயுய், இது சிரஞ்சீவி மாத்திரை. இதன் பாதியை நீ சாப்பிட்டாலே போதும். உனக்கு மரணம் இல்லை. இதனை உடனேயே சாப்பிடக் கூடாது. ஒரு வருசமாக நீ விரதமிருந்து பிரார்த்திக்க வேண்டும். ஒரு வருடம் கழித்ததும் சாப்பிடலாம்” என்று கூறிக் கொடுத்தார்.ஹொயுய் நன்றியுடன் பெற்றுக் கொண்டான். வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அதனை ஒரு சிறிய பெட்டியுனுள் வைத்தான். அதன் மகத்துவத்தைப் பற்றி மனைவி சேஞ்ஜியிடம் சொன்னான். ஒரு வருடம் முடிந்தபின் இருவரும் உண்ணுவோம். என்று கூறினான். பின் யாருக்கும் தெரியாத இடத்தில் அதனைப் பத்திரமாhக வைத்தான். பலநாட்கள் சென்றன. ஹொயுய் அடிக்கடி ஜேட் மன்னர்pன் அழைப்பை ஏற்றுச் செல்வான். அன்றொரு நாள் ஜேட் மன்னனின் அழைப்பை ஏற்றுச் சென்றான். வீட்டில் அவனது மனைவி வேலைகளில் மூழ்கியிருந்தாள். தற்செயலாக ஒரிடத்தில் இருந்து ஒளிவருவதை அவதானித்தாள். அதனை விரைந்து எடுத்துப் பார்த்தாள். சஞ்சீவி மாத்திரை தெரிந்தது. இதனைச் சுவைத்துப் பார்த்தால் என்ன? யோசித்தாள். வாயில் போட்டுச் சுவைத்தாள். அப்படியே விழுங்கி விட்டாள். அவளுள் ஒரு மாற்றம் தெரிந்தது. தான் பாரமில்லாது இருப்பதை உணர்ந்தாள். அவளது உடல் காற்றில் பறக்கத் தொடங்கியது. ஹொயுய் அப்போதுதான் வந்தான். தனது மனைவி பறந்து போவதை அவதானித்தான். அவனும் பின்தொடர்ந்து வழி மறித்தான். வழியில் கடும் காற்றுத் தடுத்தது. ஆனால் அவனால் தடுத்து நிறுத்தமுடியாது போய்விட்டது. சேஞ்ஜி பறந்துவிட்டாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. அவள் நிலவுக்குச் சென்றுவிட்டாள். அங்கு போனபின்தான் வருந்தினாள். ஒருமுறை வாந்தி யெடுத்தாள். சஞ்சீவியின் ஒருபாதி விழுந்தது. தனது கணவனை நினைந்து வருந்தினாள்.அவளுக்குத் தனிமை வாட்டியது. ஆனாலும் ஜேட் மன்னனின் முயல் அங்கிருந்தது. அதனை அவள் கண்டு கொண்டாள். முயலின் உதவியை நாடினாள். இதேபோன்ற சஞ்சீவி மாத்திரையைத் தயாரிக்கும்படி முயலிடம் வேண்டினாள். முயல் மூலிகைகளைத் தேடிச் சஞ்சீவி மாத்திரையைத் தயாரிக்கும் வேலையில் தொடர்ந்து செய்கிறது.&lt;br /&gt;இன்னும் அது முடியவில்லை.ஹொயுய் தனது மனைவியின் பிரிவால் வாடினான். சூரியனில் குடியேறினான். அங்கு ஒரு மாளிகையை அமைத்தான்.அங்கிருந்து பார்த்தால் சேஞ்ஜி தெரிவாள். சந்திரக் கலண்டரின் இலையுதிர் கால நடுப்பகுதி முக்கியமான நாளாகும். அன்றுதான் சந்திரனில் உள்ள தனது மனைவியைச் சந்திக்க ஹொயுய் செல்வார். ஹொயுய் வருகையால் சந்திரன் பிரகாசமாக இருக்கும். சீனர்கள் ‘சந்திரக்கேக்’ விழாவினைக் கொண்டாடுவார்கள். கடவுளரின் முடிவுகாலம்.முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் பெரியபோர் மூண்டது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கடும் குளிர் நீடித்தது. கடவுளரின் இருப்பைத் தீர்மானிக்கும் யுத்தமாக இருந்தது. அதனால் போர் இறுதிக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. இப்போர் பழைய யுகத்தின் முடிவாகவும், புதிய யுகத்தின் தொடக்கமாகவும் இருந்தது.&lt;br /&gt;ஒதின் இப்போரைத் தடுக்க முயற்சித்தார். ஏற்கனவே நடந்த யுத்தத்தில் இறந்த தேவர்களை சிரஞ்சீவிகளாக்கி, உயிர்ப்பித்து தேவர்களின் பலத்தை மங்காதிருக்கப் பாடுபட்டார். தேவர்களது வெற்றிக்காகக் காத்திருந்தார்.&lt;br /&gt;அசுரர்களுக்கு நெருப்புக் கடவுள் லோகி தலைமை தாங்கினார். நரகத்தில் உள்ளவர்களை எழுப்பி யுத்தத்தில் ஈடுபடுத்தினார். அத்துடன் உலகத்தின் பலபாகங்களிலும் இருந்த அசுரர்களையும், பூதங்களையும் அழைத்திருந்தார். தேவர்களா, அசுரர்களா? என்பதைப் பார்த்து விடுவோம் என்று செயற்பட்டார்.&lt;br /&gt;நயவஞ்சக ஓநாய்கள் சூரியனையும், சந்திரனையும் பிடித்து விழுங்கிவிட்டன. நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டன. உலகம் முழு இருளில் மூழ்கிவிட்டது.&lt;br /&gt;உலகமரத்தின் அடிவேர்களைக் கடித்துக் குதறப் பாம்பு எண்ணியது. கடல் அலைகளில் இருந்து வந்த பாம்பு விஷத்தை உலகில் படரவிட்டது. பயங்கரமான வெள்ளம் உலகத்தை ஆட்டிப்படைத்தது. வெள்ளம் உலகத்தை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. அவ்வேளையில் லோகி பூதங்கள் புடைசூழப் பெரும்படையோடு கப்பல்களில் வந்திறங்கினான். அக்கப்பல்கள் இறந்த மனிதர்களின் வெட்டப்படாத நகங்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதை ஓதின் உணர்ந்தார். சண்டை நடந்து கொண்டிருக்கும் போது ஓநாய்ப்பூதத்தின் பிடியில் சிக்குண்டார். ஓதினை அது வளைத்துப் பிடித்து விழுங்கி விட்டது. ஒருவர்பின் ஒருவராக எல்லாத் தேவர்களும் தேவதைகளும் கொல்லப் பட்டார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் மனிதர்களும் கொல்லப்பட்டார்கள்.&lt;br /&gt;ஓதினின் மகன் தோர் தந்தையைக் கொன்ற ஓநாய்ப்பூதத்தைப் பழிவாங்கினான். எனினும் பாம்பின் விஷத்தினால் அவனும் சகல உயிரினங்களும் அழிவுக்குள்ளாகின.&lt;br /&gt;தித்திக்காகா ஏரியில்&lt;br /&gt;தித்திக்காகா ஏரி கடல்மட்டத்தில் இருந்து 3850 மீற்றர் உயரத்தில் உள்ளது. 8000 வருடங்களுக்கு முன் எட்னா எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பினைக் கக்கியது. நூற்றுக்கணக்கான தொன்னளவு சாம்பலைப் பரப்பியது. பலமாதங்களாக அப்பிரதேசம் இருளில் மூழ்கியிருந்தது. பெருவெள்ளமும் அழிவும் ஏற்பட்டது. எரிமலை கக்கிய சாம்பல் கடல்மட்டத்தில் இருந்து 3000 மீற்றர் உயரத்துக்குப் பரவியது.&lt;br /&gt;இன்கா நாகரிகம் இங்குதான் பிரபலமாக இருந்தது. இன்கா நாகரீகத்தின் கர்ணபரம்பரைக் கதைகள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தித்திக்காகா ஏரியில்தான் பிறந்தன எனக் கூறுகின்றன.&lt;br /&gt;இன்கா புராணக் கடவுளான விரக்கோச்சா பூமியைப் பார்த்தார். எங்கும் வெறுமையே தெரிந்தது. பெரு வெள்ளம் அழிவை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. தித்திக்காகா ஏரியைப் பார்த்தார்.&lt;br /&gt;“நீ சூரியனையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும் உருவாக்கு” என்று கட்டளையிட்டார். அவ்வாறே தித்திக்காகா ஏரியில் சூரியனும், சந்திரனும் நட்சத்திரங்களும் பிறந்தன. சந்திரத் தேவதை இசெல்&lt;br /&gt;இசெல் என்ற பழங்காலச் சந்திரத் தேவதையை மாயா இனத்தவர்கள் வணங்கினார்கள். இசெல் அழகே வடிவமானவள். அவளை மாயன் வம்சத்தின் குலதேவதையாகப் போற்றினார்கள். அவளே மாயன் இனத்தின் தாயாக விளங்கினாள். மாயன் இனத்தவரின் வாழ்வுக்கும் சாவுக்கும் அவளே பொறுப்பாக இருந்தாள்.&lt;br /&gt;ஒரு காலத்தில் இசல் சூரியனைக் காதலித்தாள். ஆனால் அவளது தாத்தா அவளை மின்னல் தாக்கத்தின் மூலம் கொன்றுவிட்டார். அவளை நினைந்து பெரியதும்பி கவலையில் ஆழ்ந்தது. அது பதின்மூன்று நாட்களாகக் கவலையில் மூழ்கி துன்பகீதம் இசைத்தது. அந்த அற்புத இசை இசெலை உயிர்ப்புறச் செய்தது. அவள் சூரியனிடம் சென்றாள். சந்தோசமான வாழ்க்கை நடந்தது.&lt;br /&gt;அவர்களுக்கு முதலில் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் எவரின் கண்களிலும் படமாட்டார்கள். ஆனால் இரவில் இருளில் புகுந்து திசைகளுக்கு காவலாக இருப்பார்கள். பின்னர் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள்தான் திசைக் காவலர்களான அட்ட திக்குப்பாலகர்கள்.&lt;br /&gt;இசெல் அடிக்கடி காலை நட்சத்திரத்துடன் பழகுவதாகச் சூரியன் குற்றஞ்சாட்டினார். இடையிடையே வாக்கு வாதங்கள் தோன்றின. வாக்குவாதம் முற்றியது. சூரியன் இசெலைப் பார்த்து “நீ தூய்மையானவள் இல்லை. காலை நட்சத்திரத்தோடு நீ தொடர்பு வைத்துள்ளாய்.” என்று அவளைக் குற்றம் சாட்டினார். “என்னிடம் வராதே” என அவளை விரட்டிவிட்டார். இசெல் வருந்தினாள். அவளுக்குக் கவலை. பொங்கியது. இசெல் சென்றுவிட்டாள்.&lt;br /&gt;ஆனால் இசெல் இல்லாமல் சூரியனுக்கு வாழ்வு கசந்தது. “நீ இல்லாத வாழ்வு நிலவில்லாத உலகு. நீ என்னிடம் வந்து விடு” என்றழைத்தார். இசெல்லின் மனம் மாறியது. இசெலும் வந்தாள். நாட்கள் நகர்ந்தன. இசெல் அழகாகப் பிரகாசித்தாள். சந்தோசமாக இருந்தாள்.&lt;br /&gt;காலை நட்சத்திரம் இசெலோடு சில காலங்களில் தோன்றும். அப்போது கதைத்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;சூரியனுக்குச் சந்தேகம் வந்தது. பொறாமையும் கூடவே வளர்ந்தது. காலை நட்சத்திரத்தோடு அடிக்கடி சல்லாபிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். ஒரு நாள் கோபத்தோடு அவளது பிரகாசத்தைப் பறித்துவிட்டார். இசெல் பிரகாசத்தை இழந்து வாடினாள்.&lt;br /&gt;இசெல் சூரியனை விட்டு விலகினாள். சூரியன் வரும்போது இசெல் வருவதில்லை. அவள் தனது விருப்பப்படி வானில் உலா வருகிறாள். இசெல் என்ற சந்திரத் தேவதை உலகினுக்கு மழையை அனுப்புபவள். அவள்தான் வானவில் பெண். என்பார்கள். பெண்கள் தன்காலில் நிற்பதற்கு இசெலைப் பின்பற்ற வேண்டும். இசெலை ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டி என மாயன் இனப் பெண்கள் கருதுவார்கள். மாயன் இனத்தவர்கள் சந்திரத் தேவதையை வணங்கி வழிபட்டுக் கொண்டாடுவார்கள்.&lt;br /&gt;ஹவாய் தீவின் ஹினா தேவதை&lt;br /&gt;உலகின் ஹவாய் தீவுக்கூட்டங்களை "சுiபெ ழக குசைந" தீ வளையம் அல்லது அக்கனி வலயம் என்று அழைப்பார்கள். தீவுகள் மோதிர வடிவில் உள்ள. அதனால் "சுiபெ ழக குசைந" தீ வளையம் என்பார்கள்.&lt;br /&gt;ஹவாய் தீவுக்கூட்டங்களில் ஆறு தீவுகள் பெரியன. இவை எரிமலை வலையத்தினுள் உள்ளன. இத்தீவுகள் அழகானவை.&lt;br /&gt;ஹினா தேவலோகத்தின் தேவதை. ஒருநாள் பூவுலகத்துக்கு வந்தாள். ஹவாய்த்தீவுகளைக் கண்டாள். ஹினாவுக்குக் ஹவாய்த்தீவுகள் மீது கொள்ளை ஆசை ஏற்பட்டுவிட்டது. அத்தீவுகளைச் சுற்றி வந்தாள். இயற்கை அழகில் சொக்கி நின்றாள். அங்கேயே வாழத்திட்டமிட்டாள். ஒரு மனிதனைத் திருமணம் செய்தால்தான் பூவுலகில் வாழலாம். ஒரு கணவனைத் தேடிக் கொண்டு வாழ்ந்தாள். எனக் ஹாவாய் கதைகள் கூறுகின்றன.&lt;br /&gt;தனது கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். அவள் ஏராளமான பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். சந்தோசமான வாழ்க்கை மெல்ல மெல்லக் கசந்தது. ஹினாவின் கணவன் அவளைக் கொடுமைப் படுத்தத் தொடங்கினான். அவளை அடித்துத் துன்புறுத்தினான். பிள்ளைகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கவில்லை. அவர்கள் பாராமுகமாக இருந்தார்கள். ஹினா தனிமைப் படுத்தப்பட்டாள். தனது வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை அவளே சம்பாதிக்க வேண்டியிருந்தது. அழகான அலங்கரிக்கப் பட்ட ஆடைகளை நெய்தாள்.&lt;br /&gt;இப்படி இருந்து வாழ்வதால் பயனொன்றும் இல்லை என்பதை உணர்ந்தாள். அங்கிருந்து விட்டு விடுதலையாகிப் போகப் புறப்பட்டாள். பூமியில் இருந்தவாறே வானில் வானவில்லைப் படரவிட்டு அதில் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தாள்.&lt;br /&gt;ஒருநாள் வானவில்லைப் பரத்தி அதில் நடந்து சொர்க்கத்தை அடைய முயற்சித்தாள். வானவில்லைப் பரத்தினாள். அதில் ஏறிப் புறப்பட்டாள். அவள் புறப்படும்போது ஒன்றையும் கையில் எடுக்கவில்லை. பசியும் தாகமும் வாட்டியது. கடுமை யான வெப்பமாகவும் இருந்தது. பாதி யிலேயே வீட்டுக்குத் திரும்பி விட்டாள்.&lt;br /&gt;ஹினாவை உபசரிப்பதற்கு யாருமே இல்லை. அவள் மனம் வருந்தினாள். ஒருநாள் இரவு உணவைத் தயாரிக்கவில்லை. அவளது பிள்ளைகள் அவளைத் தூற்றினார்கள். அவளது கணவன் முரட்டுத் தனமாகத் தாக்கினான்.அவளுக்கு மயக்கம் வந்தது. அறையினுள் மயங்கிக் கிடந்தாள். மயக்கம் தெளிந்ததும் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டாள்.&lt;br /&gt;பொழுது விடியுமுன் புறப்பட்டாள். எப்படியோ அவளது கணவன் மோப்பம் பிடித்து விட்டான். பின்னால் துரத்தினான். ஹினா தனது வானவில்லைப் பரத்தினாள். அதில் ஏறினாள். நடக்கத் தொடங்கினாள். ஹினாவுக்கு இயலாமல் இருந்தது. இதனைக் கடவுள் பார்த்தார். ஹினாவுக்கு உதவ முன்வந்தார்.&lt;br /&gt;அதே நேரம் கடவுள் ஹினாவின் பக்கத்தில் சந்திரனைத் தள்ளி விட்டார். ஹினாவுக்கு உதவி கிடைக்கின்றதை உணர்ந்தாள். கணவன் தன்னைப் பிடிக்க மாட்டான் என்று எண்ணினாள். ஆனால் அவளது பிடி தளர்ந்தது. கால் இடறியது. அவளது கணவன் ஓடிவந்தான். அவளது கால்களைப் பற்றி இழுத்தான். வானவில்லில் இருந்து புரண்டாள். அவளது கணவன் அவளின் கால்கபை; பிடித்துக் கொண்டான். இழுபறி நடந்தது. ஹினாவுக்கு வேறு வழி தெரியவில்லை. காலை ஒருவாறு மடக்கி அவனது முகத்தில் ஒரு உதைவிட்டாள்.&lt;br /&gt;அவளது கணவன் கீழே விழுந்து சுருண்டான். இப்போது சந்திரனில் அழகிய ஆடைகளை நெய்து கொண்டு இருக்கிறாள். பூவுலக வாழ்க்கையை மறந்து விட்டாள். ஹவாய்த் தீவுகளில் மழை பெய்யும். அப்போது ஹினா மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுப்பதாக நினைப்பார்கள். ஹவாய் தீவுகளை இடிமின்னல் புயல் தாக்கும். அப்போது ஹினா தனது கணவனின் பிடியில் இருந்து தப்புவதற்கு எடுத்த செயலாகக் கொள்வார்கள்.&lt;br /&gt;மாலை வெள்ளியும் சந்திரனும்&lt;br /&gt;றொடிஸியாவில் வகறங்கா என்பது மாலை வெள்ளியைக் குறிக்கும். மாலை வெள்ளி ஒரு பெண்தெய்வமாகும்.&lt;br /&gt;சந்திரன் பொலிவோடு சுற்றும் அழகான மணவாளன். வகறங்கா சந்திரனைக் கண்டாள். சந்திரனைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கினாள். மணந்தால் சந்திரனையே மணப்பேன் என்றாள். பெரியோர்கள் சம்மதம் பெறப்பட்டது. இருவரும் திருமணமாகி சந்தோசமாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஆடு, மாடு, ஏனைய வீட்டு விலங்குகளும் பிறந்தன. இரண்டாவதாக பறவைகளும். ஏனைய விலங்குகளும் பிறந்தன. மூன்றாவதாக மனிதக் குழந்தைகள் பிறந்தன.&lt;br /&gt;இனிமேலும் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்ற கட்டளையை தேவன் கொடுத்தார். ஆனால் சந்திரன் கேட்கவில்லை. தனது மனைவியை விட்டு விலகி இருப்பதா? அவளை நாடினார். அவர்களுக்கு நான்காவதாக பயங்கரமான விலங்குகள் பிறந்தன.&lt;br /&gt;சந்திரனுக்குப் பயமுண்டாகியது. மாலைவெள்ளியை விட்டுப் பிரிந்திருந்தார். தன்னை ஓரங்கட்டி விட்டதாக மாலைவெள்ளி நினைத்தது. சந்திரனைப் பழிவாங்கத் தீர்மானித்தது. ஒரு பாம்பைப் பிடித்துச் சந்திரனைத் தீண்டுமாறு ஏவியது. பாம்பு சென்று சந்திரனைத் தீண்டியது.&lt;br /&gt;சந்திரன் நோய்வாய்ப்பட்டார். நாடும் வாடியது. வரட்சி நிலவியது. விளைச்சல் குறைந்தது. மக்கள் சந்திரனில்தான் பிழை என்று கருதினார்கள். ஒன்றாகச் சேர்ந்து சந்திரனைப் பிடித்துக் கட்டினார்கள். இழுத்துக் கொண்டு போனார்கள். அப்படியே கடலில் தூக்கி எறிந்து&lt;br /&gt;விட்டார்கள். அதன்பின் சந்திரன் கடலில் இருந்தே மாலையில் வெளிவருகிறது. இன்றுவரை மாலைவெள்ளியை வானத்தில் தேடித்திரிகிறது.&lt;br /&gt;சந்திரனும் சூரியனும்&lt;br /&gt;சூரியனும் சந்திரனும் கணவனும் மனைவியுமாவர். அவர்களுக்கு ஏராளமான பிள்ளைகள். நடசத்திரங்கள்தான் அவர்களது பிள்ளைகள். இருவர் பக்கமும் பிள்ளைகள் இருந்தனர். சந்திரனின் பக்கத்தில் உள்ள பிள்ளைகளை ஒழிக்க வேண்டும் என்று சூரியன் தீர்மானித்தது. ஒருநாள் சந்திரனோடு உரையாடியது. “அன்பானவளே! நமது இருவர் பக்கமும் நமது குழந்தைகள் உள்ளனர்தான். ஒரே பிள்ளைகளை எத்தனை தடவைகள் பார்ப்பது.? ஒரு மாற்றம் வேண்டுமல்லவா? எனகச்கு அலுப்புத் தட்டிவிட்டது. நாங்கள் இருவரும் பிள்ளைகளை மாற்றிக் கொள்வோம்”;. என்றது.&lt;br /&gt;“நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் பிள்ளைகளைப் பார்க்க ஆசைதான். சந்திரனும் ஒத்துக் கொண்டது. “ஆனால் ஒரு ஒப்பந்தம்” என்றது. “என்ன ஒப்பந்தம்?” சூரியன் கேட்டது. “ஒவ்வொரு நாளும் உங்கள் பக்கமுள்ள ஒரு பிள்ளையை முதலில் அனுப்புங்கள். நான் பதிலுக்கு எனது பக்கமுள்ள ஒரு பிள்ளையை அனுப்புகிறேன்”. என்றது.&lt;br /&gt;“இது மிகவும் நல்ல புத்திசாலித்தனமான முடிவு”. சூரியன் ஏற்றுக் கொண்டது. அடுத்த நாள் சூரியன் தனது முதலாவது பிள்ளையை அனுப்பியது. பிள்ளையைக் கண்டதும் தாய்க்குச் சந்தோசம். சந்திரன் அந்தப் பிள்ளையை வரவேற்றுக் குளிப்பாட்டியது. நல்ல உடைகளை அணிவித்து அழகு பார்த்தது.&lt;br /&gt;பதிலுக்குத் தனது முதற்பிள்ளையை சூரியனிடம் அனுப்பியது. சூரியன் அப்பிள்ளையை உண்டு ஏப்பம் விட்டது. இவ்வாறு வரும் பிள்ளைகளைச் சூரியன் விழுங்கிவிட்டது. சந்திரன் பாதுகாப்பாகத் தன்னிடம் வரும் பிள்ளைகளை வைத்திருந்தது. இது&lt;br /&gt;தொடர்ந்தது. இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. பிள்ளைகள் வெருண்டு ஒளிந்தார்கள். சூரியனைக் கண்டு வெகுதூரம் ஓடினார்கள்.&lt;br /&gt;இதனால் சூரியன் காலையில் வெளிவரும்போது வானம் வெறுமையாக இருக்கும். ஆனால் சந்திரன் இரவில் வரும்போது பிள்ளைகள் புடைசூழ பவனி வரும். பிள்ளைகளுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.&lt;br /&gt;சூரியனும் சந்திரனும்&lt;br /&gt;சூரியன் சந்திரப் பெண்ணின் அழகில் மயங்கினார். அவள்மேல் காதல் கொண்டார். பல தூதுகளை அனுப்பினார். சந்திரப் பெண் மசியவில்லை. சூரியனும் விடாது தொடர்ந்து தூதுகளை அனுப்பிக் கொண்டிருந்தார். “நீ இல்லாமல் நான் இல்லை. என்னைத் திருமணம் செய்துகொள்” என்றார். சந்திரப் பெண்ணுக்குப் பெருந் தொல்லையாகிவிட்டது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.&lt;br /&gt;“எனது உடலின் அளவுக்கேற்ற நல்லதொரு நினைவுப் பரிசொன்றைத் தாருங்கள். நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சந்திரன் செய்தி அனுப்பியது. சூரியனுக்குப் பெரிய சந்தோசம். அவர் அழகான ஆடையைத் தயாரித்தார். எடுத்துச் சென்று கொடுத்தார். ஆனால் அது அளவில்லாதிருந்தது. இப்படிப் பலநாட்கள் சென்றன. சூரியன் எடுத்துச் செல்லும் ஆடைகள் அத்தனையும் அளவானதாக இல்லை. சந்திரன் சிலகாலங்களில் உடல் வளர்ந்து ஜொலிக்கும். சூரியன் கொண்டு வரும் சட்டை அளவில்லாது இருக்கும். சந்திரன் தேய்பிறையாக இருக்கும் காலத்தில் சட்டைகள் பெரிதாக இருக்கும். ஒன்றில் சிறிதாக இருக்கும். அல்லது பெரிதாக இருக்கும்.&lt;br /&gt;சந்திரனின் தந்திரத்தைச் சூரியன் புரியவில்லை. இன்னும் சூரியன் ஆடைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. அவை சந்திரப் பெண்ணுக்கு அளவில்லாது இருக்கிறது. ஏனேன்றால் சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவில் வளர்ந்தும், தேய்ந்தும் இருக்கிறது.&lt;br /&gt;பூமறாங் பிறைச் சந்திரன் .&lt;br /&gt;அவுஸ்திரேலியாவில் ஆதிவாசிகள் வாழுகின்றனர். அவர்களை அபரோஜீனிஸ் எனவும் கூறுவர். அவர்களிடம் பூமறாங் என்னும் எறிதடி இருக்கும். அது வளைந்திருக்கும் தடி. அதனால் அந்த ஆதிவாசிகள் வேட்டையாடுவார்கள். பூமறாங் எறிந்தால், குறிவைத்த பொருளைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவரிடமே வரும்.&lt;br /&gt;முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் இரவினில் வேட்டையாடுவதில் சிரமத்தை எதிரநோக்கினார்கள். பூமறாங் குறியைத் தாக்கிவிட்டு மீண்டும் வருவதைக் கண்களால் பார்க்க முடியாதிருந்தது. அதனால் பூமறாங் ஆயுதத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சத்தை ஏற்படுத்த முனைந்தார்கள். பெரியதொரு பூமறாங்கைச் செய்து அதனை மேலெறிந்தால் அந்த வெளிச்சத்தில் பூமறாங்கைக் காணலாம் அல்லவா? பெரியதொரு பூமறாங்கைச் செய்து பார்த்தார்கள். அதனை மேலே எப்படி எறிவது? அனைவரும் முனைந்தார்கள். அது மேலே செல்லவில்லை.&lt;br /&gt;ஈற்றில் ஒரு மெலிவானவர் முன்னால் வந்தார். தான் எறிந்து பார்க்கச் சந்தர்ப்பம் தரும்படி கேட்டார். அவரை மக்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள். சிலர் “யாரிந்த நெத்தலிப் பயில்வான்” என்றார்கள். சிரித்துக் கொண்டார்கள். “சரி கொடுத்துப் பார்ப்போம்” என்றார்கள். சத்தமிட்டவாறு கொடுத்தார்கள். அவர் மக்களை விலக்கிவிட்டு முன் வந்தார். தனது எலும்புக் கையால் பூமறாங்கை எடுத்து மேலே எறிந்தார்.&lt;br /&gt;என்ன அதிசயம்? பூமறாங் வானில் மேலே மேலே சென்றது. திரும்பவே இல்லை. பொழுது போய் இருள் மெல்லப் படர்ந்தது. “அங்கே பாருங்கள். பூமறாங். வானில் தெரிகிறது”. சிறுவர்கள் சத்தமிட்டார்கள்.&lt;br /&gt;பெரியவர்கள் அண்ணார்ந்து வானைப் பார்த்தார்கள். அவர்களது பூமறாங் இன்றும் வானில் தெரிகிறது. &lt;br /&gt;சோமா என்ற சந்திரன்.&lt;br /&gt;இந்துப் பண்பாட்டில் பல கதைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று சந்திரனைப் பற்றியது. இங்கு சந்திரன் சோமா என்ற பெயரோடு வானில் உலா வருகிறார். அவர் வெண்குதிரைகள் பூட்டிய தேரில் வானில் இரவினிலே பவனி வருவார். &lt;br /&gt;சோமாவின் பொறுப்பில் தேவர்கள் அருந்தும் சோமபானம் இருக்கும். அப்பானத்துக்குச் சோமாவே பொறுப்பு. அவரிடமே சோமபானக் களஞ்சியம் இருக்கிறது. தேவர்கள் சோமபானத்தை அருந்த வருவார்கள். அந்த நாட்களில் சந்திரனாகிய சோமா ஒளியினைப் படிப்படியாக இழந்து விடுவார். தேவர்கள் அனைவரும் சோமபானத்தைக் குடித்து முடித்து விடுவார்கள். களஞ்சியம் வெறுமையாக இருக்கும் அன்று சோமா வெளியில் தெரியமாட்டார். ஒளியாவற்றையும் இழந்து நிற்பார். அன்று அமவாசையாகும். படிப்படியாக சோமபானம் ஊறத்தொடங்கும். சோமா படிப்படியாக வளர்ந்து முழுமதியாக நிறைந்து நிற்பார்.&lt;br /&gt;சந்திரனும் நட்சத்திரங்களும்&lt;br /&gt;பிலிப்பின்ஸ் தீவுகள் பல உண்டு. அத்தீவுகளில் எரிமலைத் தாக்கங்களும் உள்ளன.&lt;br /&gt;பிலிப்பின்ஸ் தீவொன்றில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்தில் சிரோமி என்றொரு சிறுமி இருந்தாள். அவள் தனது தாய்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பாள். தானியங்களை உரலில் போட்டு உலக்கையால் கைகளை மாற்றி மாற்றிக் குத்திச் சுத்தப் படுத்துவாள். அக்காலத்தில் வானம் கீழிறங்கி வந்து பூமியில் வேடிக்கை பார்க்கும்.&lt;br /&gt;அவள் தன்னை அலங்கரிப்பதில் கெட்டிக்காரி. தனது தலையை வாரி அழகாக வைத்திருப் பாள். கழுத்தில் அழகான கழுத்து மாலையை அணிந் திருப்பாள். அவள் அம்மாவுக்கு உதவி செய்யும்போது அணிகளைக் கழற்றிப் பக்கத்தில் உள்ள உயரமான மேடையில் வைத்திருப்பாள். அக்காலத்தில் வானம் கீழிறங்கி வருவது வழக்கம். கீழே வந்து வந்து மேலே உயர்ந்து போகும். அன்றும் அப்படித் தான் நடந்தது.&lt;br /&gt;சிரோமி உரலில் தானியங்களைப் போட்டாள். தான் அணிந்திருந்தமாலை யையும், ஏனைய அணிகளையும் கழற்றி உயரத்தில் வைத்தாள். வானம் கீழிறங்கி வந்தது. உலக்கையை ஓங்கிக் குற்றினாள். உலக்கை வானத்தில் பட்டது. வானம் மேலுயர்ந்து போனது. திரும்பி வரவே இல்லை. சிரோமியின் அணிகலங்கள்; வானத்தில் பிரகாசிப்பதைப் பார்த்தார்கள். அவை இன்றும் ஒளி வீசிப்பிரகாசிக்கின்றன.&lt;br /&gt;சந்திரக் கழுத்தணி&lt;br /&gt;முன்னொரு காலத்தில் ஒரு ராணி இருந்தாள். அவளுக்கு அவளது தாயார் ஒரு கழுத்து மாலையைப் பரிசாகக் கொடுத்தார். ராணி பகலில் அந்தக் கழுத்தணியை அணிவாள். இரவில் படுக்கைக்குப் போகும்போது அணிகளைக் கழட்டி வைத்துவிட்டுச் செல்வாள். விடிந்ததும் தனது கடமைகளை முடித்ததும் அணிகளை அணிந்து கொள்வாள்.&lt;br /&gt;அன்று அழகான காலைப் பொழுது. ராணி குளித்து விட்டு வந்தாள். ராணி உடையணிவதில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள். உடைகளை அணிந்து கொண்டதும் கழுத் தணியைப் பார்த்தாள். அவள் வைத்த இடத்தில் அதனைக் காணவில்லை. அரண்மனை எங்கும் தேடினார்கள். ஆனால் அதனைக்காணவில்லை.&lt;br /&gt;அதனை 32ம் பால்வீதி அரசன் திருடி வைத்துக் கொண்டான். தனது படையணித் தளபதிகளை அழைத்தாள். “அந்தக் கழுத்தணியை எனது தாயார் ஆசையோடு எனக்குத் தந்தவர். அதனை எப்படியாவது பெற்றுத் தாருங்கள்”. தனது படைத்தளபதிகளுக்குக் கட்டளையிட்டாள். &lt;br /&gt;படையணியினர் பால்வீதி மன்னனோடு போரிட்டார்கள். கடும் மோதல் ஏற்பட்டது. இறுதியில் மன்னனிடம் இருந்து அக்கழுத்தணியைப் பெற்றார்கள். ராணியிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அதை அவள் அணியவில்லை. அதனைத் தனது படைத்தளபதிகளிடம் பத்திரமாகப் பாதுகாக்கும்படி கொடுத்தாள். அதனை இன்றும் படையணியினர் பாதுகாக்கின்றார்கள். அதனை முதலாம் பிறையன்று வானில் இன்றும் பார்க்கலாம்.&lt;br /&gt;கொயட்டும் கழுகும்&lt;br /&gt;மிகப்பழங்காலத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ இருக்கவில்லை. எங்கும் ஒரே இருளாகவே இருந்தது. கொயட் என்ற வேட்டைக்காரன் இருந்தான். அவன் சரியான சோம்பேறி. எப்போதாவது வேட்டைக்குப் போவான்.&lt;br /&gt;அவன் ஒருநாள் ஒரு கழுகைச் சந்தித்தான். “ஒருவரைவிட இருவர் சேர்ந்தால் அதிகம் வேட்டையடலாம்” என்று கூறிக்கொண்டான். “இருளில் வேட்டையாட முடியாதுள்ளது. ஏதேனும் வெளிச்சம் வேண்டும். வெளிச்சம் இருந்தால் எவ்வளவு நல்லது. நாம் இருவரும் சேர்ந்து வேட்டையாடலாம்”. என்று பேசிக் கொண்டார்கள். அதனைத் தேடிப் பெறவேண்டும் என்று தீர்மானித்தார்கள். என்ன செய்யலாம்.? யோசித்தார்கள். இருவரும் எங்காவது போய்த் தேடலாம் என்று புறப்பட்டார்கள்.&lt;br /&gt;தூரத்தில் செவ்விந்திய இனத்தவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் முகமூடி அணிந்து நடனமாடுவார்கள். அவர்களைக் கசினாஸ் என்றழைப்பார்கள். கசினாஸ் என்றால் ‘முகமூடி ஆட்டம்’; என்று பொருள். கசினாஸ் வாழும் பகுதிக்குச் சென்றார்கள். கசினாஸ் இரண்டு பெட்டிகள் வைத்திருந்தார்கள். ஒன்றினுள் சூரியன் இருந்தது. மற்றதில் சந்திரனை வைத்திருந்தார்கள். அவை அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்தன. அவர்கள் அவற்றைப் பயன்படுத்தித் தங்களது வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழித்தார்கள். “இந்தப் பெட்டிகளைக் கவர்ந்து சென்றால் நமக்கு வேட்டையாட வசதியாக இருக்கும். நாம் இதனைக் கவர்ந்து செல்வோம்.” இருவரும் கவர்ந்து செல்லத் திட்டமிட்டார்கள்.&lt;br /&gt;சந்தர்ப்பத்தைப் பார்த்தி ருந்தார்கள். கசினாஸ் இனத்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மெதுவாக கொயட் முன்னால் நடந்தான். கழுகு பின்னால் நடந்தது. இருவரும் பெட்டிகள் பக்கம் வந்தார்கள். இரண்டு பெட்டிகளையும் பெரிய தொரு பெட்டியினுள் வைத்தார்கள். கழுகு அப்படியே அலக்காகப் பெரிய பெட்டியைத் தூக்கியது. விரைந்து பறந்தது. பின்னால் கொயட் ஓடினான். கழுகு விரைந்து பறந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்டது. சற்று ஓய்வெடுக்க நினைத்தது. பெட்டியைக் கீழே வைத்தது. கொயட்டைப் பார்த்தது. அவன் இன்னும் வந்து சேரவில்லை. கழுகுக்கு ஆர்வம் மிகுந்தது. கொயட் வருமுன் இவற்றைப் பார்க்கும் ஆவலில் பெட்டியைத் திறந்தது.&lt;br /&gt;பெட்டிகள் திறபட்டதும் இரண்டு வெளிச்சப் பந்தங்களும் துள்ளியெழுந்து புரண்டு பறந்தன. சூரியன் ஆகாயத்தை நோக்கி வெகுதூரத்துக்குப் போனது. அங்கேயே நிலைத்து விட்டது. சந்திரன் எங்கே போவதென்று தெரியாமல் தவித்தது. அது பூமியைச் சுற்றிப் பறந்தது. சந்திரன் இன்றும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;மலினாவும் அனிங்கனும்.&lt;br /&gt;கிறீன்லாந்து மக்களை இனுக் இன மக்கள் என்று அழைப்பார்கள். அந்த மக்களின் கடவுளராக சூரியனும். சந்திரனும் விளங்குகிறார்கள். சூரியனை மலினா என்றும் சந்திரனை அனிங்கன் என்றும் அழைப்பார்கள். மலினா என்ற சூரியன் பௌ;. அனிங்கன் என்ற சந்திரன் ஆண். இருவரும் சகோதரர்கள். கிறீன்லாந்து மக்களின் கூற்றாக இக்கதை வழங்குகிறது.&lt;br /&gt;மலினா தனது தம்பியுடன் விளையாடுவாள். இருவரும் சிறுவயதி லிருந்தே ஒன்றாக விளையாடுவது வழக்கம். இருளிலும் விளையாடு வார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர் களது மனங்கள் மாறி விட்டன. மலினா அழகானவள். அவளது அழகை அனைவரும் புகழ்ந்தார்கள். மலினா அனிங்கனை விடவும் அழகானவள். நல்ல ஒளியினை உடையவள் என்று ஊரார் புகழ்ந்தனர்.&lt;br /&gt;இப்புகழ்ச்சி அனிங்கனுக்குப் பொறாமையை வளர்த்தது. ஆளுக்காள் சண்டையிட்டனர். அனிங்கன் கோபம் கொண்டான். கிறீன்லாந்தில் சீல்மீன் கொழுப்பில்தான் விளக்குகளை எரிப்பார்கள். அது அதிக புகையைக் கொடுக்கும். எரிந்த கொழுப்பு கரியநிறத்தில் இருக்கும். அவர்களது சண்டையில் சீல்மீன் விளக்குக் கவிழ்ந்து வீழ்ந்தது. அதன் கரியபுகை கலந்த கொழுப்பு மலினாவின் கைகளில் படிந்துவிட்டது.&lt;br /&gt;அந்தக் கைகளால் கரியபுகை கலந்த கொழுப்பை அனிங்கனின் முகத்தில் தேய்த்துப் பூசிவிட்டாள். அனிங்கனின் முகம் கறுத்து விட்டது. கோபம் கொண்ட அனிங்கன் மலினாவைத் துரத்தினான். இன்றும் வானில் துரத்திக் கொண்டே இருக்கிறான்.&lt;br /&gt;அவுஸ்திரேலியாவில் இன்னுமொரு கதை&lt;br /&gt;முற்காலத்தில் அவுஸ்திரேலியா இருளில் மூழ்கியிருந்தது. எங்கும் இருளாகவே இருந்தது. வெப்பமோ. வெளிச்சமோ இருக்கவில்லை. அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மிகக் கஸ்டப் பட்டார்கள். பழங்காலத்தில் தமது உணவுக்காக இருளில் அலைந்தனர். வெளிச்சமும் இல்லை. நெருப்புப் இல்லை. வேட்டையாடிக் கிடைத்த உணவினைப் பச்சையாகவே உண்டனர்.&lt;br /&gt;அவுஸ்திரேலியரின் கதைப்படி உலகத்தின் முதல் மனிதரான புறுக்குப்பாளியும், அவரது நண்பர் ஜபறாவும் இரண்டு தடிகளை எடுத்தனர். அவற்றை ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துத் தேய்த்தனர். என்ன அதிசயம்? நெருப்பு வந்தது. புறுக்குப்பாளி தனது கண்டு பிடிப்பால் தீ உண்டானதைப் பறைசாற்றினார். அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். உறியுப்றனலா என்பது அவள் பெயர்.&lt;br /&gt;ஒருநாள் புறுக்குப்பாளி மரப்பட்டைகளைச் சேர்த்தார். அவற்றை ஒழுங்காக இணைத்துக் கட்டினார். பெரியதொரு பந்தமாக்கினார். அப்படி இரண்டு பந்தங்களைச் செய்தார். தீயினை மூட்டி ஒன்றைத் தனது தங்கை உறியுப்றனலாவுக்குக் கொடுத்தார். மற்றதை நண்பர் ஜபறாவிடம் கொடுத்தார். இந்தப் பந்தங்களை அணையவிடாது பாதுகாக்கும் படி கூறினார். அவுஸ்திரேலியாவில் வெளிச்சம் உண்டானது. காலம் கரைபுரண்டோடியது. புதுயுகம் பிறந்தது. உறியுப்றனலா தீப்பந்தம் சூரியனாக மாற்றம் பெற்றது. சூரியன் பெண் கடவுளாகப் போற்றபெற்றாள். ஜபறா சந்திரனாக மாற்றம் பெற்றது. சந்திரன் ஆணாக மாற்றம் பெற்றார்.&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் சூரியப்பெண் தனது தீப்பந்தத்தோடு கிழக்கில் உதிக்கும். அப்போது மக்கள் எழுந்து வெளிச்சத்தில் வேட்டையாடச் செல்வார்கள். மாலையில் மேற்கே மறைந்து விடும். அப்போது இருள் சூழும். சந்திரப் பெண் இரவில் சிறிய தீப்பந்தத்துடன் வானில் வந்து வெளிச்சத்தைக் கொடுக்கும்.&lt;br /&gt;மௌரி இனத்தவர் கதைகள்&lt;br /&gt;தங்கறோ என்ற சமுத்திரக் கடவுள் இருந்தார். அவருக்கு அழகான மகள் இருந்தாள். றோனா என்பது அவளது பெயர். றோனா கடலின் வற்றுப் பெருக்குக்குப் பொறுப்பாக இருந்தாள். அவள் தனது பிள்ளைகளுக்கு ஆற்றிலே தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் இரவு தண்ணீரை வாளியில் எடுத்துக் கொண்டு சென்றாள்.&lt;br /&gt;சந்திரன் மேகத்திரையில் சட்டென மறைந்து கொண்டான். எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. இருளில் றோனா தண்ணீர் வாளியுடன் நடந்தாள். நிலத்தில் மரத்தின் வேர் துருத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு இருளில்&lt;br /&gt;தெரியவில்லை. நிலத்தடியில் இருந்த வேர்க் கட்டை அவளது கால் விரலைத் தாக்கி விட்டது&lt;br /&gt;அவளுக்கு வலித்தது. வலி பொறுக்க முடியவில்லை. சந்திரனைப் பார்த்துக் கோபத்தில் இரக்கமில்லாது ஏசினாள். அவளின் குரல் சந்திரன் காதுகளுக்கு எட்டியது. சந்திரனுக்குக் கோபம் வந்து விட்டது. றோனாவை அவளது தண்ணீர் வாளியுடன் பிடித்துச் சென்றார். அங்கேயே அவளை வைத்து விட்டார். இப்போதும் ஒரு பெண்ணைத் தண்ணீர் வாளியுடன் சந்திரனில் பார்க்கலாம்.&lt;br /&gt;றோனா தண்ணீர் வாளியுடன் செல்வாள். அவள் தடுமாறி விழுந்தால் தண்ணீர் கொட்டும். அப்போது பூமியில் மழை பெய்யும். இப்போதும் பூமியின் வற்றுப் பெருக்குக்குப் பொறுப்பாக றோனா இருக்கிறாள்.&lt;br /&gt;அமெரிக்க இந்தியர்களின் கதை&lt;br /&gt;சூரியன் மறையும் எல்லையில் இரண்டு கிராமங்கள் இருந்தன. அங்குள்ள மக்கள் சந்திரனை தங்கள் கிராமத்தில் வைத்திருந்தார்கள். வேறு கிராமத்து மக்கள் வந்து சந்திரனைத் திருடி வானில் வைத்து விடுவார்கள் என்று பயந்தார்கள். அதனால் அவர்கள் சந்திரனைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்தார்கள். அதனைத் தடுப்பதற்காக காவலும் இருந்தார்கள்.&lt;br /&gt;அதேவேளை இரண்டு கவரிமான்கள் சந்திரனைக் கவர்ந்து செல்லத் திட்டமிட்டன. அதற்காகக் காத்திருந்தன. ஒருநாள் கிராம மக்கள் அயர்ந்திருந்தனர். கவரி மான்கள் மெல்ல வந்தன. சந்திரனைக் கவர்ந்து கொண்டு விரைந்தன. கிராமமக்கள் துரத்தினார்கள். அவற்றோடு ஓடமுடியாது போயிற்று. பாதி வழியில் நின்றார்கள். கவரிமான்கள் விரைந்து வெகுதூரம் ஓடின. அதனால் களைத்து விட்டன. மேலும் ஓடமுடியாதிருந்தது. ஒரு கிராமத்தின் எல்லைக்கு வந்துவிட்டன. சற்று ஓய்வெடுக்க நினைத்து சந்திரனை மரத்தடியில் வைத்தன.&lt;br /&gt;அதனை கொயட் கண்டான். கவரிமான்களுக்குத் தெரியாமல் சந்திரனை களவாட நினைத்தான். மெல்ல நடந்து சென்றான். சந்திரனைப் பற்றியெடுத்தான். எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். அவன் வெகுதூரம் சென்றபின்னரே மான்கள் கண்டன. அவையும் பின்னால் துரத்தத் தொடங்கின. அவை பின்னால்&lt;br /&gt;வருவதை கொயட் கண்டுவிட்டான். அவனெதிரே ஒரு ஏரி தென்பட்டது. தனது பலமெல்லாம் திரட்டிச்&lt;br /&gt;சந்திiனை ஏரிக்குள் வீசிவிட்டான். ஏரிக்குள் சந்திரன் போய் விழுங்தது. அந்த ஏரிக்குள் இன்றும் சந்திரன் கிடக்கிறது. இரவில் தண்ணீருக்குள் பாருங்கள் சந்திரன் தெரியும்.&lt;br /&gt;இப்படியும் ஒரு மௌரிக் கதையுண்டு&lt;br /&gt;முற்காலத்தில் றோனா என்றொரு இளைஞன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகான மனைவி இருந்தாள். இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். அடிக்கடி கோபித்துக் கொள்வார்கள். பின் கோபம் முடிந்து சந்தோசமாக வாழ்வார்கள்.&lt;br /&gt;ஒருநாள் றோனா வெளியில் சென்றான். அவன் நேரம் கழித்தே வீடு வந்தான். வீட்டில் அவன் மனைவி இல்லை. அவளைத் தேடினான். அவள் வரவே இல்லை. எங்கும் தேடியும் அவளைக் காணவில்லை. தேடியலைந்து களைத்து விட்டான். அவள் சந்திரனில் இருப்பதைக் கண்டான். அவளிடம் சென்றான். அவனது முகம் மலர்ந்தது. மனைவியும் மகிழ்ந் திருந்தாள்.&lt;br /&gt;அவர்களுக்கிடையில் பழையபடி வாக்குவாதம் தோன்றியது. ஆளுக்காள் சண்டைபிடித்துக் கொண்டார்கள். அச்சண்டையினால் நிம்மதி மெதுவாக மறையத் தொடங்கியது. சந்திரன் மெலியத் தொடங்கியது. ஒருநாள் சண்டை முற்றியது. அன்று சந்திரன் யார் கண்களுக்கும் தெரியவில்லை. மக்களுக்கு வேதனை பிறந்தது. இதற்கான காரணத்தை அறிய அலைந்தார்கள். கணவன் மனைவியுடன் சண்டையிடுவது வழமையானது. சண்டை முற்றிக் கொள்ளும் நாளில் சந்திரன் வெளியில் தெரிவதில்லை. இருவரும் சந்தோசமாக இருக்கும் நாளில் சந்திரன் பிரகாசமாக இருப்பதையும் கண்டு கொண்டார்கள். முற்றாக மறைந்து கொள்ளும் நாள் அமவாசையாகும். இருவரும் மகிழ்ந்திருக்கும் நாள் ஒளிமயமாகிப் பிரகாசிக்கும். அன்று பூரணையாகும். தன் உண்மையைப் புரிந்து கொண்டார்கள்.&lt;br /&gt;சந்திரக் கடவுள்&lt;br /&gt;நமது பூமிக்குச் சொந்தமான சந்திரனைப் பலநாடுகள் கடவுளாகப் போற்றி வணங்குகின்றன. தென்னாசிய நாடுகளிலும், இந்து சமயத்தின் இதிகாச புராணங்களில் சந்திரனுக்கு முக்கிய இடமுண்டு. பலநாடுகளின் இனங்கள் தாங்கள் சந்திரனின் நேரடி வாரிசுகள் எனக்கருதுகிறார்கள். பபிலோனிய, சுமேரிய நாகரீககாலங்களில் சந்திரனுக்குக் கோயில்கள் இருந்தன. கி.மு.2100ல் மொசப்பெத் தேமியாவின் ‘சிக்குறாற்’ கோவிலில் சந்திரக் கடவுளின் திருவிழாக் காட்சி படத்தில் காட்டப் பட்டுள்ளது.&lt;br /&gt;ஊர்வலமாக சந்திரக்கடவுள் அவரது கோயிலான ’சொர்க்கத்தின் மலை’க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பிரித்தானிய அரும் பொருட் காட்சியகத்தில் உள்ள சந்திரக்கடவுளின் கோயிலின் வரைபடம் உள்ளது. அதனைப்படத்தில் காணலாம்.&lt;br /&gt;‘சின்’ என அழைக்கப்பட்ட சந்திரக் கடவுள் மத்திய கிழக்கு நாடுகளில் போற்றப்பட்டுள்ளதை வரலாறுகள் கூறுகின்றன. ஏப்ரகாம் காலத்தில் சந்திரக்கடவுளின் வணக்கமுறை பரவி யிருந்தது. ரோமானியர்கள் சந்திரனை ‘தயானா’ என அழைத்து வணங்கினார்கள். வேட்டைக்குச் செல்லும்போது காவற்கடவுளாகவும். வேட்டைக்கு உதவும் பெண்கடவுளாகத் தயானா விளங்கியது. படத்தில் தயானா தனது வேட்டை நாயுடன் காணப்படுகிறார்.&lt;br /&gt;தயானா இத்தாலியரின் வனதேவதையாகும். ஜூபிற்றர் என்ற சீயஸ் கடவுளுக்கும், லரோனாவுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மூத்தது ஆண். அதற்கு அப்பலோ என்று பெயர் சூட்டினார்கள். இளையது பெண்குழந்தை. அதற்குத் தயானா எனப்பெயர் சூட்டினார்கள். கிரேக்கர்களின் பெண்கடவுளான அர்த்தமீஸ் சந்திரக்கடவுளாகும். அர்த்தமீஸ்தான் ரோமர்களின் தயானா எனக் கொண்டனர். கிரேக்க புராணங்களில் அர்த்தமீஸ் அப்பலோவின் தங்கையாவார். அதேவேளை அர்த்தமீஸ் வேட்டைக்குரிய பெண்கடவுளுமாவார். தாயும் தந்தையும் சீயஸ_ம் லரோனாவும் ஆவார்கள். தயானாவுக்கு கப்புவா என்ற தேசத்தில் கோயில் உண்டு. அதேபோல் ஆபிரிக்காவிலும் கோயில்கள் உண்டு. சந்திர வணக்கம் இன்றும் உள்ளது.&lt;br /&gt;ஆதியில் சந்திரன் பிரதான கடவுளாக விளங்கியது. சந்திரனை ‘சின்’ எனும் பெயரால் அழைத்தார்கள். சின் கடவுளின்&lt;br /&gt;மனைவி ‘பெருந்தகைப் பெண்’ அவர் பெயர் திங்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தார்கள். ஒரு குழந்தை ‘சமாஸ்’; என்ற பெருடைய சூரியன். இரண்டாவது ‘இஸ்தர்’P என்ற பெயருடைய வீனஸ் கிரகம். மூன்றாவது ‘நுஸ்கு’ எனும் நெருப்புக் கடவுள். ‘ஊர்’ ‘ஹரான்’ ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.&lt;br /&gt;மொசப்த்தேமியாவில்&lt;br /&gt;வானில் மிதந்துவரும் பெரிய தேவதையாகச் சந்திரனைப் பார்க்கிறோம். சில சந்தர்ப்பங்களில் சந்திரன் ஆண்தெய்வமாகவும் வர்ணிக்கப்படுகிறது. 5000 ஆயிரம் வருடங்களுக்கு முன் மொசப்பத்தேமிய தேசத்தில் ஊர் என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்குக் கோயில் இருந்தது. சந்திரனை சின் என்ற பெயரால் அழைத்தார்கள். சந்திரக் கடவுளான ஹ_பால் என்ற சொல்லில் இருந்தே ‘அல்லாஹ்’ என்ற சொல் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.( வுhந எநசல யெஅந ழக யுடடயாஇ அயல ளவநஅ கசழஅ வாந அழழn பழன ர்ரடியட.)&lt;br /&gt;இவை பபிலோனிய சாம்ராச்சி யத்தில் இருந்தன. ஆப்பிரகாம் காலத்தில் சின் கடவுளின் வழிபாடு பெருமளவில் இருந்தது. சின்கடவுள் அறிவும் சூட்சுமப் புத்தியும் கொண்டவர் என நம்பினார்கள். அவரே நாட்காட்டியில் தலைவரும் ஆவார். சந்திரனை ‘நன்னா’ என்று பெருமையோடு அழைத்து வணங்குவார்கள். ஒவ்வொரு மாதமுடிவிலும் சந்திரக்கடவுள் காட்சி கொடுத்து அவர்களுக்காகத் தீர்மானம் எடுப்பார் என நம்பினார்கள். பபிலோனியாவின் இறுதி மன்னன் நபோனிடஸ் கி.பி.550 ல் சந்திரனுக்கான கோயிலைப் புதுப்பித்தான் என வரலாறு கூறுகிறது.&lt;br /&gt;சந்திரன் இளமையும், அழகும் கொண்டவர். ஒரு கையில் சிறு ஆயுதமும், மறுகையில் தாமரைப்பூவையும் வைத்துள்ளார். அவரது தேர் அழகானது. அதில் பத்து அழகிய வெண்குதிரைகள் பூட்டியிருக்கும். இரவு வேளையில் வானவீதில் தேரில் செல்லுவார். மனிதர்களையும், விலங்குகளையும் பல்வேறு உயிரினங்களையும் பாதுகாக்கவே அவர் அவ்வாறு செல்வதாகக் கதைகள் கூறுகின்றன. சிறப்பாக எல்லா முயல்களும் அவர் பாதுகாப்பில் உள்ளனவாம். படத்தில் உள்ள சந்திரனின் சிலை பிரித்தானிய அரும்பொருட்காட்சியறையில் உள்ளது.&lt;br /&gt;கிரகணங்கள் பற்றிய கதைகள்.கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன? கிரகணங்கள் கோள்களின் அசைவினால் ஏற்படுகின்றன. சூரியன், சந்திரன் பூமி ஆகியவை நேராக நிலைகொள்ளும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. பொதுவாகச் சந்திர, சூரிய கிரகணங்கள்தான் ஏற்படுகின்றன.சூரியனின் ஒளிக்கற்றைகள் சந்திரன் மேல் படும். சந்திரனின் நிழல் பூமியில் விழும். அப்போது சூரியகிரகணம் தோன்றும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நிலைகொள்ளும் போது சந்தரனின் நிழல் பூமியில் விழும். அப்போது சந்திர கிரகணம் தோன்றும். இக்கிரகணங்களின் தோற்றம் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் நிறையவே உண்டு. பலநாடுகளிலும் பல்வகையான கதைகள் உள்ளன. இங்கே சந்திர கிரகணத்தை மட்டும் பார்ப்போம்.கொலம்பஸ்கொலம்பஸின் நாடுகாண் படலத்தில் ஈடுபட்டிருந்தார். 1503 ஜூன் 25ந் திகதி ஜமேக்காவில் உள்ள சென்ற் ஆன்ஸ் குடாவில் அவரது கப்பல் கரைதட்டியது. அங்கு பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். கொலம்பஸ் குழுவினருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.. கொலம்பஸ் பலரிடம் உதவி கோரினார். கொலம்பஸ் சந்திரகிரகணம் பற்றி அறிந்திருந்தார். அவர் கேத்திரகணித முறையில் சந்திரகிரகணம் எப்போது ஏற்படும் என்று அறிந்திருந்தார். மக்களிடம் தங்களுக்கு உணவு தருமாறு உதவி கேட்டார். அவர்கள் மறுத்தார்கள். எங்களுக்கு உணவு தராவிட்டால் கடவுள் உங்களைத் தண்டிப்பார். நாளை இரவு சந்திரன் வானத்தில் வரும். திடீரென சந்திரன் மறையும். உலகத்தை இருள் மூடிக்கொள்ளும். என்றார். அந்நாட்டுப் பழங்குடியினர் சிரித்தார்கள். சிரித்தபடி “பார்ப்போம்” என்றார்கள். பழங்குடி மக்களுக்குச் சந்திர கிரகணம் ஏற்படுவது பற்றித் தெரியாது. ஆனால் கோலம்பஸ் மறுநாள் அதவாவது 1504ம் ஆண்டு பெப்ருவரி 29ல் சந்திரகிரகணம் நிகழவிருப்பதை அறிந்திருந்தார்.கொலம்பஸ் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. கொலம்பஸ் சொன்னபடியே அடுத்தநாள் 1504ம் ஆண்டு பெப்ருவரி 29 இரவு நடந்தது. வானத்தில் சந்திரன் பிரகாசத்தோடு வந்தது. அந்நாட்டு மக்கள் குதூகலித்தனர். எங்கிருந்தோ வந்தவன் எங்களை ஏமாற்றுவதா? என்று ஆரவாரித்தனர். என்ன ஆச்சரியம்? சந்திரன் படிப்படியாக மறையத் தொடங்கியது. சற்று நேரத்தால் முழுமையாக மறைந்தது. சந்திரகிரகணம் நிகழ்ந்தது. செவ்விந்தியர்கள் பயந்துவிட்டார்கள். கொலம்பஸைப் பயத்துடன் சூழ்ந்து கொண்டார்கள். “எங்களைக் காப்பாற்றுங்கள்.” என்று நின்றார்கள். “உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்”; எனறு பலர் சத்தமிட்டார்கள். கொலம்பஸ் அம்மக்களைப் பார்த்தார். “நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்” என்று ஆறுதல் கூறினார். மெதுவாக இருள் விலகியது. மக்கள் ஆரவாரித்தனர். இசையெழுப்பினார்கள். குரவை வைத்தார்கள். அன்றிலிருந்து கொலம்பஸின் மேல் மதிப்பு ஏற்பட்டது. அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவுவகைகளைக் கொடுத்து உபசரித்தார்கள்.இந்துசமயத்தில் கிரகணம்.சூரியனையும், சந்திரனையும் இராகு என்னும் பாம்பு விழுங்குவதாக இந்துசமயப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள் நீடு வாழ்வதற்காக அமிர்தம் வேண்டி நின்றார்கள். அமிர்தம் எங்கே கிடைக்கும். திருப்பாக் கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என விஷ்ணு கூறினார். தேவர்கள் மட்டும் கடையமுடியாது. ஆதலால் .வ்வுலகில் உள்ள அசுரர்களையும் அழைத்தார்கள். மகாமேரு மலையை மத்தாகப் பயன்படுத்தினார்கள். ஆதிசேடன் என்ற பாம்பை கயிறாகப் பயன் படுத்தினார்கள். தேவர்கள் ஒரு புறம் நின்றார்கள். அசுரர்கள் மறுபுறம் நின்றார்கள். திருப்பாக்கடலைக் கடையும் நிகழ்ச்சி நடந்தது.மலையசைந்தது. திருப்பாக் கடல் கடையப்பட்டது. ஆதிசேஷனுக்கு வலித்தது. அமிர்தம் உருவாகிக் கொண்டு வந்தது. வலியினால் ஆதிசேஷன் விஷத்தைக் கக்கிவிட்டது. அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவர் உடனே அந்த விஷத்தைக் கையிலேந்தி விழுங்கினார். அவரது மனைவி உமாதேவியார். அவர் ஓடோடி வந்தார். சிவனாரின் தொண்டையை அழுத்திப் பிடித்தார். விஷம் கீழிறங்க வில்லை. தொண்டைக் குழியோடு நின்றுவிட்டது. சிவனின் தொண்டையில் விஷம் இருந்தது. அதனால் அவரது தொண்டை நீலம்பாரித்துவிட்டது. அமிர்தம் கிடைத்துவிட்டது. தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க வேண்டும். அசுரர்களுக்குக் கிடைக்கக் கூடாது. கிடைத்தால் அவர்கள் சாகா வரம் பெற்றுவிடுவார்கள். என்ன செய்வது. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள். மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்தார். அசுரர்கள் அந்த அழகியின் அழகில் மயங்கிக் கொண்டிருந்தார்கள். இராகு என்ற அசுரன் தேவர்கள் போல் மாறுவேஷத்தில் வந்தார். தேவர்களோடு கலந்து கொண்டார். அவரை யாரும் அடையாளம் காணவில்லை. ஆனால் சூரியனும் சந்திரனும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதுவாக விஷ்ணுவிடம் கூறிவிட்டார்கள்.தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப் பட்டது. இராகுவுக்கும் கொடுபட்டது. அவர் குடிப்பதற்கு முயற்சிக்கையில் மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணு இராகுவின் கழுத்தைத் துண்டம் செய்தார். வாய்க்குள் அமிர்தம் சென்றிருந்தது. அதனால் தலைப்பகுதி உயிரோடிருந்தது. உடல் கேதுவாக மாறியது. இராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டன. சூரியனையும் சந்திரனையும் விழுங்கிவிடச் சபதமெடுத்தன. இன்றுவரை அவை சந்திரனையும், சூரியனையும் விழுங்கும் நிகழ்ச்சி காலத்துக்குக் காலம் நடைபெறுகிறது. அதுதான் கிரகணம். என்று புராணம் கூறுகிறது. ரோமர்கள்.&lt;br /&gt;உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் கிரகணம் பற்றிய கதைகள் உண்டு. அவை ஒவ்வொரு விதமாக இருக்கும். அவர்களது கற்பனைக்கு ஏற்ப பல்வேறு உருவங்களில் அமைந்திருக்கும். ரோமசாம்ராச்சியத்தில் சந்திரனை வானில் உள்ள பயங்கரமான வேதாளம் விழுங்க வருவதாக நம்பினார்கள். அதன் நிழல் சந்திரன்மேல் விழத்தொடங்கியதும் மக்கள் ஒன்றாகக் கூடி ஒலிகளை எழுப்பி “சந்திரனை விடு, சந்திரனை விடு” என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்.&lt;br /&gt;சீனாதேசத்தில்&lt;br /&gt;சீனதேசத்திலும் வானில் உள்ள ட்ரகன் என்ற பயங்கர விலங்கு சந்திரனைக் கடித்து விழுங்குவதாக நம்பினார்கள். ட்ரகன் சந்திரனைப் பின் தொடர்ந்து துரத்தி வரும். சந்திரனை எப்படியாவது தனது இரையாக்கிக் கொள்ள அதற்கு மிக விருப்பம். அதனால் வான் வீதிவழியாக விரட்டிக் கொண்டிருக்கும். கிட்ட நெருங்கிப் பிடித்து விழுங்கும்போது சந்திரனின் ஒளி மங்கும். அப்போது கிரகணம் உருவாகும.; சீனதேசத்து மக்கள் சீற்றங்கொள்வார்கள்.&lt;br /&gt;கிரகணத்தின் போது உயரமான மரக்கிளைகளில் பெரிய மணிகளைக் கட்டித் தொங்கவிடுவார்கள்.&lt;br /&gt;பயங்கர விலங்கின் நிழல் சந்திரனில் விழத்தொடங்கியதும் மணிகளை அடித்து ஒலியெழுப்பி ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் எழுப்பும் சத்தத்தினால் விலங்கு சந்திரனை விட்டு ஓடிவிடும் என்று நம்பினார்கள். அத்துடன் சந்திரன் கண்ணாடியைப் பிரதிபலிக்கும். சந்திர கிரகணத்தின் போது கண்ணாடியைத் தட்டி ஆரவாரம் செய்தால் ட்ரகன் ஓடிவிடும் என்று நம்புகிறார்கள். கிரகணம் ஏற்பட்டு முடியும் வரை சத்தமிடுவார்கள். அதே வேவைளை கிரகணம் முடியும்வரை விரதமிருப்பார்கள்.எஸ்கிமோவர்துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவ மக்கள் சந்திரன் நோய்வாய்ப்படுவதாகக் கருதுவர். அதனால் அந்த நேரம் சந்திரன் மரணமாகிவிடுவதாக நம்பினார்கள். கிரகணநேரத்தில் தாங்கள் வீட்டில் பாவிக்கும் பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இன்றும் அந்த வழக்கம் எஸ்கிமோவப் பெண்கள் மத்தியில் பெருவழக்காக இருக்கிறது. செத்தவர்களிடம் இருந்து தொற்றுப் பரவும் என்ற ஐதீகம் இ;ன்றும் நிலவுகிறது. சந்திரனுக்கு வந்த நோயின் கிருமி தங்களையும் தாக்கும் என்று நம்பினார்கள். அதற்காகவேதான் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கவிழ்த்து வைத்து விடுவார்கள்.&lt;br /&gt;மேற்கு ஆபிரிக்கக் கரையோரத்தில்மேற்கு ஆபிரிக்கக் கரையோர நாடுகளில் வசிப்போர் சூரியனின் நிழல் விழுவதால் சந்திர கிரகணம் தோன்றுவதாக நம்பினார்கள். சந்திரனைச் சூரியன் பின் தொடர்வதாக நம்பினார்கள். அதனாலேயே சந்திரனுக்குத் துன்பம் ஏற்படுவதாக நம்புகின்றனர். சந்திர கிரகணம் தோன்றும்போது மக்கள் வீதிகள்தோறும் நின்று “சந்திரனை விடு. அப்பால் போ. அப்பால் போ. சந்திரனை விடு. சந்திரனை விடு” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள்.ஒஜிபாவா செவ்விந்தியர்ஒஜிபாவா என்ற செவ்விந்தியர்கள் சந்திரகிரகணத்தின் போது சந்திரனின் ஒளி படிப்படியாக மங்கிவிடும். ஒளியை மீண்டும் பெறுவதற்காக தீப்பிளம்பு உள்ள அம்புகளை வானை நோக்கி செலுத்துவார்கள். சூரிய சந்திர ஒளி மீண்டும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தீப்பந்தங்களை வானை நோக்கிச் செலுத்துவார்கள்.இந்திய நீலகிரி மலையில்இந்திய நீலகிரி மலைப் பகுதியில் ‘ரோடாஸ்’ இனமக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சந்திரனில் முயல் உள்ளதென நம்புகின்றனர். அந்த முயலோடு சந்திரனையும் பெரிய பாம்பு வளைத்துப் பிடித்து விழுங்குவதால் கிரகணம் தோன்றுகின்றது என்று நம்புகின்றனர். பாம்பை விரட்டுவதற்காக மேளங்களைத் தட்டி ஆரவாரிப்பார்கள். அத்துடன் சந்திரனுக்கும் முயலுக்கும் ஆபத்து வரக்கூடாதென்று விரதமிருப்பார்கள். ‘டான்கோ’ என்ற வேதாளம் விழுங்குதல்.இந்தியாவில் மத்திய பிரதேசம் உள்ளது. அங்குள்ள பீகார் மாநிலத்தில் முண்டாஸ் இனமக்கள் வாழ்கிறார்கள். முன்னொரு காலத்தில் டான்கோ என்ற பயங்கர வேதாளம் வாழ்ந்தது. அது பெருஞ்செல்வத்துக்கு அதிபதி. வட்டிக்குப் பணம் கொடுத்து வாழ்ந்தது. ஒருமுறை சூரியனுக்கும், சந்திரனுக்கும் பெரும் கஸ்டம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள்வதற்குப் பணம் தேவைப்பட்டது. அவர்களிடம் பணம் இல்லை. இருவரும் வேதாளத்திடம் சென்றார்கள். வேதாளத்திடம் கடன் கேட்டார்கள். வேதாளம் பல நிபந்தனைகளை விதித்தது. “கடனை உரிய நேரத்தில் கட்டவேண்டும். இல்லையேல் உங்களைப் பிடித்து விழுங்கி விடுவேன்”. என்றது. சூரியனும் சந்திரனும் உடன்பட்டுக் கடனைப் பெற்றார்கள். ஆனால் உரிய நேரத் தவணையில் கடனை மீளச் செலுத்தத் தவறினர். அதனால் வேதாளம் அவர்களைப் பிடித்து மறியலில் போட்டது. அதனால் சூரியனும் சந்திரனும் வெளியில் வரவில்லை.உலகம் இருளில் மூழ்கியது. மக்கள் துயருற்றனர். கிரகணம் ஏற்படும் நாளில் மக்கள் அரிசி. மளிகைச் சாமான்கள், ஆயுதங்கள் அனைத்தையும் தங்கள் வீட்டு முற்றத்தில் படைத்து நிற்பார்கள். அவற்றைப் ஏற்றுக் கடனை அடைக்கும்படி வேண்டுதல் செய்வார்கள்.வடமேற்கு அமெரிக்க போமோ இனமக்கள்.வடமேற்கு அமெரிக்காவில் போமோ இனமக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் சூரியனை கரடி கடித்துவிடுவதாக ஒரு நம்பிக்கையுண்டு. பரந்த பால்வெளியூடாக பெரிய கரடி நடந்து போய்க்கொண்டிருந்தது. அவ்வழியால் சந்திரனும் வந்தது. இரண்டும் நேருக்கு நேர் சந்தித்தன.&lt;br /&gt;விலகிச் செல்வது யார் என்ற பிரச்சனை எழுந்தது. வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. சந்திரனுக்கும் கரடிக்கும் சண்டை வந்தது. கரடி சந்திரனைப் பிடித்தது. பின்னர் சேற்றில் தள்ளி வீழ்த்தி விட்டது. சந்திரன் சேற்றில் விழுந்ததால் கருமையாகியது. அது கிரகணம் ஏற்பட வாய்ப்பானது. பிறேசில் நாட்டில் ஒரு கதைசூரியனும் சந்திரனும் சகோதரர்கள். சூரியனின் தங்கைதான் சந்திரன். இருவரும் சிறுவயதில் ஒற்றுமையாகவே வாழ்ந்தார்கள். வளர்ந்தபின் பொறாமை பற்றிக் கொண்டது. இருவருக்கும் இடையில் சண்டை உருவாகிவிட்டது. இருவரும் பேசுவதில்லை. வேறுவேறு திக்கில் வாழ்ந்தார்கள். ஒருநாள் சூரியன் பயணம் போனார். சந்திரனும் அதே வழியால் பயணம் செய்தாள். இருவரும் விலகிப்போதாக இல்லை. வழியில் பிரச்சினை தோன்றியது. யார் வழிவிட்டு விலகிச் செல்வது. என்ற பிரச்சினை. வாக்குவாதம் முற்றியது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இழுபறி நடந்தது. சண்டை தொடர்ந்தது. வானமும் உலகும் இருளானது.சண்டையின் போது ஒரு பையன் அம்பை விட்டான். அது சூரியனின் கண்களை ஊடுருவிச் சென்றது. சந்திரனின் கண்களையும் ஊடுருவியது. இருவர் கண்களும் இருளாகின. இரத்தம் வழிந்து சிவந்தது. அதனால் சூரிய கிரகணம் தோன்றியது. ஓரு தேவன் வந்தான். கண்களுக்கு வைத்தியம் செய்தான். உடனே சுகமானது. வட கலிபோர்னியாவட கலிபோர்னியா ஹ_பா இந்திய இனத்தவர் உள்ளனர். அவர்கள் மத்தியில் உலாவரும் கதையிது.&lt;br /&gt;சந்திரனுக்கு இருபது மனைவியர் இருந்தனர். அவரது வீட்டில் எல்லாவகையான விலங்குகளும் இருந்தன. மலைபோன்ற சிங்கம், கரடி, பாம்பு வகைகள் பூச்சிகள் போன்றனவும் இருந்தன. சந்திரன் இவை யாவற்றுக்கும் உணவளிப்பதற்காகக் கடினமாக உழைத்தார்.&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் வேட்டையாடப் போவார். வேட்டையாடியவற்றைக் கொடுப்பார். யாவும் உண்டபின் நிம்மதியாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் சந்திரன் வேட்டையாடப் போனார். ஒன்றும் அகப்படவில்லை. வெறும் கையோடு வந்தார். வளர்ப்பு விலங்குள் சந்திரனிடம் வந்தன. “சாப்பிடுவதற்கு உணவு வேண்டும்.” என்றன. “இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளை வேட்டையாடிக் கொண்டு வருகிறேன். பொறுமையாக இருங்கள்” என்றார். “எங்களுக்குப் பசிக்கிறது. இப்போது உணவு வேண்டும்”. என்றன. சந்திரன் பேசாமல் இருந்தார். நாங்கள் கேட்கிறோம். பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்”;. கூறிக் கொண்டு சந்திரனைத் தாக்கத் தொடங்கின. சந்திரன் விழுந்து சந்திரன் ஒளியிழந்து கிடந்தார். இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அது கிரகணமாகியது.&lt;br /&gt;சந்திரனின் மனைவிகளில் தவளையும் ஒன்று. தனது கணவனின் நிலைகண்டு பாய்ந்து வந்தது. சந்திரனைத் தாக்கிய பூச்சிகளை அடித்து விரட்டியது. இதனைப்&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருந்த மற்ற மனைவியர்கள் வந்தார்கள். சந்திரன் சிந்திய இரத்தம் யாவறi;றயும் சேர்த்தார்கள். சந்திரனின் உடலில் சேர்த்தார்கள். சந்திரன் மீண்டும் ஒளியெற்;று வந்தார்.&lt;br /&gt;மொசப்த்தேமியாவில்&lt;br /&gt;வானில் மிதந்துவரும் பெரிய தேவதையாகச் சந்திரனைப் பார்க்கிறோம். சில சந்தர்ப்பங்களில் சந்திரன் ஆண்தெய்வமாகவும் வர்ணிக்கப்படுகிறது.&lt;br /&gt;5000 ஆயிரம் வருடங்களுக்கு முன் மொசப்பத்தேமிய தேசத்தில் ஊர் என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்குக் கோயில் இருந்தது. சந்திரனை ‘சின்’ என்ற பெயரால் அழைத்தார்கள். சந்திரக் கடவுளான ஹ_பால் என்ற சொல்லில் இருந்தே ‘அல்லாஹ்’ என்ற சொல் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;இந்து சமயச் சந்திரா சந்திரன் பத்து வெண்குதிரைகய் பூட்டிய தேரில் இரவு வானில் பவனி வருகிறார். அவரது ஒரு கையில் ஆயதமும் மறு கையில் தாமரையும் ஏந்தியபடியே வருகிறார். உலகத்தின் உயிரினங்களைக் காப்பதற்காகவே வானில் இரவு வேளையில் வருகிறார். சந்திரன் தக்சனின் இருபத்தியேழு மகள்மாரையும் திருமணம் செய்தார். சோகினியைத் தவிர மற்றவர்களைப் புறக்கணித்தார். தக்சன் சபித்தார். அவருக்கு தேய்ந்து வளரும் நோயைத் கொடுத்தார். சிவனைத் தியானித்து சாபவிமோசனம் கேட்டார். சிவன் தேவர்களைத் தூது அனுப்பினார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதமொருமுறை தேய்ந்து வளர வரம் கொடுத்தார். ஒருநாள் சிவனின் சடாமுடியில் இருக்கும் வரத்தையும் பெற்றார். அதனாலேயே சிவனின் சடாமுடியில் சந்திரன் இருந்து அலங்கரிக்கிறார். திங்கள் அணிந்தவன் என்ற திருப் பெயரையும் சிவன் பெற்றார். சந்திரனைப் பின்பற்றிய வம்சம் தோன்றியது. சந்திர வம்சத்து அரசர்கள் தேமான்றினார்கள். முயல்களைக் காக்கும் தேவனாக சந்திரன் விளங்குகிறார். சிவனுக்குக் கோயில் அமைத்துக் கொடுத்தார்.&lt;br /&gt;கொயொல்சாக்குய் என்ற சந்திரத் தேவதைகௌரிக்குய் எல்லாத் தேவதைகளுக்கும் தாயாவாள். அவளே சந்திரன்,சூரியன், நட்சத்திரங்கள், அனைத்தையும் பெற்றாள். அவள் பயங்கரத் தேவதையாவாள். அவளே பிறப்புக்கும். இறப்புக்கும் வேதையாவாள். அவளது கழுத்தில் அவளது பிள்ளைகளின் தலைகளும். எலும்புகளும் மாலையாகத் தொங்கும். கருவறையும், சுடுகாடும் அவளிடம் இருந்தது. பறக்கும் சிறகுகளையும் கொண்டிருந்தாள். அவளுக்கு நாநூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவளுக்கு மகளாக கொயொல்சாக்குய் பிறந்தாள். தாயின் நடவடிக்கைகள் மகளுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவளது பிள்ளைகளை அழைத்துத் தாயைக் கொலைசெய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.கௌரிக்குய் மரணப்படுக்கையில் கிடந்தாள். உடனே அவளது மகன் குயிற்சிலோபோச்ரிலி ஆயுதத்தை எடுத்தான். நாநூறு பிள்ளைகளையும் கொன்றொழித்தான். கொயொல்சாக்குய்யின் தலையைக் கொய்து வானில் வீசினான். அத்தலை சந்திரனாக இன்றும் பிரகாசிக்கிறது.‘கிகேற்’ - கிரேக்கரின் சந்திரத் தேவதைகீகேற் கிரேக்கர்களின் சந்திரத் தேவதை. அவள் கிரேக்கர்களின் காவல் தெய்வம் ஆகும். அதன் தோற்றம் பயங்கரமானது. கீகேற் தேவதை மூன்று தலைகளுடன் காட்சியாகும். நாய், பாம்பு, குதிரைதம் தலைகளுடன் காட்சி கொடுப்பாள். அவளுக்குத் துணையாக இரண்டு பூதங்கள் கூடவே இருக்கும். அந்தத் தேவதையைச் சூனியக்காரர் போற்றுவார்கள். அவளை வாலாயமத் செய்து சூனியக்காரர்கள் தங்கள் தேவைகளை முடித்துக் கொள்வார்கள். கீகேற் தேவதையின் இருப்பிடம் சுடலையாதகும். அத்துடன் முற்சந்திகளிலும் இருப்பாள். மந்திரவாதிகள் சுடலைக்குச் சென்று இந்தத் தேவதையை வணங்குவார்கள். முற்சந்திகளில் நடுச்சாமத்தில் கிரியைகளைச் செய்வார்கள். இந்த இடங்களில்தான் மக்கள் தமது நேர்த்திகளைச் செலுத்துவார்கள்.செலின்- கிரேக்க சந்திர தேவதைகிரேக்கம் பெரிய நாடு. அஙற்குள்ள ஒரு பகுதி மக்கள் சந்திரனைச் செலின் என்றழைப்பார்கள். செலின் சந்திரத் தேவதை கிரேக்கர்களின் தெய்வமாவாள். அவள் அழகும் கவர்ச்சியும் கொண்டவள். வெண்குதிரைகள் பூட்டிய வெள்ளி ரதத்தில் வானில் பவனி வருவாள். பகலில் சகோதரனான ஹேலியோஸ் என்ற சூரியனின் பவனி நடக்கும். ஹேலியோஸ்; நேரந் தவறாமல் அதிகாலையில் புறப்படுவார். அப்போது விடியலின் தேவதை இயோஸ் வழியனுப்பி வைப்பாள். தனது கடமையை முடித்து மேற்கில் மறைந்து போவார். அங்கேயும் இயோஸ் வரவேற்கக் காத்திருப்பாள்.அவரைத் தொடர்ந்து செலின் செல்வாள். செலினுக்குக் குறித்த நேரத்தில் வானில் பவனி இருக்காது. அவளது பவனி வித்தியாசமான நேரங்களில் இருக்கும். அவள் விலங்குகளைக் காப்பாற்றும் தெய்வம். விலரங்குகளுக்குத் தீங்கு வராமல் இருப்பதற்காகவே இரவில் வானில் பவனி வருகிறாள். எனினும் அவளைச் சில விலங்குகள் எதிர்க்கும். அவள் போரிடுவாள். போரிடுவதால் அவளது பிரகாசம் குறைவடையும். விலங்குகள் சில நாட்களில் வெற்றி கொள்ளும். அப்போது அவள் காணாமல் போய்விடுவாள். அன்று அமவாசை நாளாகும். வெற்றிகொண்ட நாள் முழமையான பிரகாசமாக இருக்கும். அன்று முழுமதி நாளாகும். விலங்குகள் அவளை மடக்கி வெற்றி கொள்ளும். அவள் தோற்றம் வானில் சடுதியாக மறையும். அவ்வேளை கிரகணம் தோன்றும். உலகத்து மக்கள் சத்தமிட்டு, ஒலியெழுப்பி ஆரவாரம் செய்வார்கள். விலங்குகள் பயந்து விலகி ஓடிவிடும். செலின் மீண்டும் பிரகாசமாக வானில் பவனியைத் தொடங்குவாள்.தாங்கள் செலின் தேவதையை மீட்டெடுத்து விட்டதாக மக்கள் கொண்டாடுவார்கள். விடியலின் தேவதை இயோஸ். அவள் செலினின் சகோதரி. இயோஸ் மேற்கில் செலின் வருகையை எதிர் பார்த்து நிற்பாள். அதிகாலைப் பொழுதில் இயோஸைச் சந்திப்பாள். முடிவுரைமுற்காலத்தில் வானத்தில் உள்ள பொருட்களைப் போய்ப்பார்க்க முடியாது என்று எண்ணினார்கள். அதனால் பலவாறான கற்பனைக் கதைகளை இயற்றினார்கள். சந்திரனின் தோற்றம் இவ்வாறான கதைகளுக்கு வித்திட்டன. இக்கதைகள் யாவும் அன்பு, உண்மை, அழகு பற்றியதாகவே அமைந்தன. மனித இனம் உள்ளளவும் புதுப்புதுக் கதைகள் தோன்றத்தான் செய்யும். பல உண்மைகளும் தோற்றம் பெறத்தான் செய்யும். கருவினில் உருவாகும் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று சந்திரனின் வளர்தல், தேய்தல் மூலம் கணிக்கப் படுவதாகவும் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும் சந்திரனின் கதைகள் எம்மைப் பரவசப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4902898186215134864-909484767499237501?l=ananthavele.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananthavele.blogspot.com/feeds/909484767499237501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4902898186215134864&amp;postID=909484767499237501' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/909484767499237501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/909484767499237501'/><link rel='alternate' type='text/html' href='http://ananthavele.blogspot.com/2011/08/blog-post.html' title='சந்திரன் கதை'/><author><name>கேணிப்பித்தன்</name><uri>http://www.blogger.com/profile/14738073334753622762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_lCyp7Fd7PHk/SxukdVU7p1I/AAAAAAAAAAM/MAssfpmfmXo/S220/Untitled+-+1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4902898186215134864.post-1867430183865722411</id><published>2011-07-31T23:16:00.001+05:30</published><updated>2011-07-31T23:17:43.985+05:30</updated><title type='text'>வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி</title><content type='html'>வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி&lt;br /&gt;யாழ்நூல் “ஐயிரண்டு ஆண்டுகளாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் முயன்று குருவருளினாலும், தமிழ்த் தெய்வத்தின் கடைக்கண் நோக்கினாலும், இவ்வாராய்ச்சி நூலினை ஒருவாறு எழுதிமுடித்தேன்”;. என வுpபுலானந்த அடிகள் யாழ்நூலில் கூறுவதன் மூலம் பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலமாக ஈடுபட்டு உழைத்துள்ளதை அறியலாம். பழமை வாய்ந்த இசைநூல்களை ஆராய்ந்து தமது பன்மொழித்திறத்தினாலும் கணித, விஞ்ஞான அறிவின் துணைகொண்டும் யாழ்நூலை எழுதியுள்ளார்.&lt;br /&gt;யாழ்நூலில் அடிகள் ‘சரித்திர கால எல்லைக்கு எட்டாத காலத்தில் வில்யாழ் எனப் பெயரிய குழவியாய் உதித்தாள்.. மழலைச் சொற்பேசி, இடையர் இடைச்சியரை மகிழ்வித்தாள். சீறியாழ் என்னும் பேதைப் பருவச் சிறுமியாகி, பாணனொடும், பாடினியொடும்; நாடெங்கும் திரிந்தாள். ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன் சொற்கூறினாள். பின்பு ‘பேரியாழ்’ என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப் , பெரும்பாணரோடு சென்றாள். குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடை வள்ளல்களும். கேட்டு வியப் பெய்தும் வண்ணம். நயம்பட உரைபகர்ந்தாள்;. அதன்பின் மங்கைப்பருவம் எய்தி, அப்பருவத்துக்கு ஏற்ப. புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக அரங்கத்திலே திறமை காட்டி, மடந்தைப் பருவம் வந்தெய்தலும், திருநீலகண்டப் பெரும்பாணரோடும், மதங்க சூளாமணியாரோடும், அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம்வந்து, தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் விரகரால் பாராட்டப்பட்டு, அரிவைப் பருவம் வந்தெய்துதலும், அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர் பாங்கியாகி, அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்து. சீரும் சிறப்பும் எய்தி நின்ற யாழ் என்னும் மென்மொழி நங்கை இருந்தவிடம் தெரியாமல் மறைந்துபோனாள்”. என யாழ்நூலில் மனம் வருந்துகிறார்.&lt;br /&gt;உழை, இளி, விளரி, தாரம். குரல், துத்தம். கைக்கிளை என்னும் ஏழிசையோசையின் சிறப்புக்களும் தனித்தன்மைகளும், நூலில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் யாழினின்று எழும் இனிய இசை பற்றிய குறிப்புக்கள் இருப்பதாக பாயிரவியல் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;பாயிரவியல், தேவாரவியல், ஒழிபியல், சேர்க்கை எனும் பகுதிகளாக யாழ்நூல் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். யாழ்நூலைப் புரிந்து கொள்ள மூவகை அறிவான இசையறிவு, கணித அறிவு, தமிழறிவு தேவையென பேராசிரியர் சி.மௌனகுரு கருதுவர். இசைநுணுக்கம் தெரியாதோரும் படித்து இன்புறும் பல பகுதிகளும் உண்டு என்று உடுவை தில்லைநடராசா கூறுவர். பழந்தமிழ் இலக்கியங்களில் யாழினின்று எழும் இனிய இசை பற்றிய குறிப்புக்கள் உள்ளதை பாயிரவியலில் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;“புனத்திலும் பொழிலிலும், குன்றத்தின்மீதும், மருதத் தண்பணையிலும், முல்லைப் புறவத்திலும், கடற்கானலிலும், கான்யாற்றடைக் கரையிலும், அஞ்சுரத்திலும், மனையகத்திலும், தேவர்கோட்டத்தும், அறவோர் பள்ளியிலும், இசை வழங்கிய நாடு தமிழ்நாடு. மெல்லென்றிசைக்கும் தென்றலின் உயிர்ப்பிலும், இழுமென இழிதரும் அருவி நீரிலும், நறுமலரில் முரலுகின்ற தேன்வண்டின் ஒலியிலும், இசையினைக் கேட்டு உவந்த பழந்தமிழர், பாடன் மகளது மிடற்றுப் பாடலையும், பாணனிசைத்த யாழ்ப்பாடலையும், குழலோன் தந்த வங்கியப் பாடலையும் செவியாரக் கேட்டு இன்பமெய்தினர்” எனக்குறிப்பிடுவர்.&lt;br /&gt;யாழ் உறுப்பியல்உறுப்பியல் பகுதியில் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் அகியவசற்றின் உறுப்புக்களின் அமைதிபற்றிக் கூறுகிறார். வில்வடிவில் அமைந்த யாழை வில்யாழ் எனக்கூறுவர். யாழ்வகைகளில் முதன்மை பெறுபவை பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டியாழ் என்பவையாகும். இந்த நான்கு வகைகளைத் தவிர, நாரதயாழ், கீசகயாழ், தும்புரயாழ், மருத்துவயாழ் போன்றனவும் உள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க் கருவியின் படத்தைப் பாருங்கள். விபுலானந்தர் யாழ்நூலில் காட்டும் சில யாழ் வகைகளைப் படத்தில் காணலாம் ஏனைய இயல்கள்.யாழ்நூலில் இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.பண்ணியலில் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ் என்ற நாற்பெரும் பண்களும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல், என்னும் நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும், நான்காகி பதினாறு பண்களாகி வரும் நிலை கூறப்படுகிறது..தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விபரங்களைக் குறிப்பிடுகிறார். பழந்தமிழிசை மரபிற்கும், வடநாட்டு மரபிற்கும், அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார். யாழ் உறுப்பியலில் வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், சகோடயாழ் எனும் ஐவகை யாழ்களை விபரிக்கிறார். வில் யாழுக்கு விளக்கம் தருவதற்காக இசைவான இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். “நண்பகற் காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையில் பாலிட்டுக் காய்ச்சிய கூழ்கொண்டு வருகிறாள். இடையன் கூழுண்டு நீரருந்துகிறான். பின் கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம்மூங்கிற் குழல் இடையனால் ஆக்கப்பட்டது. குழலிலே பாலைப் பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழ்கிறாள்.”&lt;br /&gt;அவள்போனபின் வில் வடிவமான கருவியை எடுக்கிறான். அஃது ஒரு வில்யாழ். அக்கருவியையும் தானே செய்து கொண்டான். உள்ளே துளையுடைய குமிழ மரக் கொம்புகளை வில்லாக வளைத்து, மரநாரிலே திரித்த கயிற்றினை நாணாகக் கட்டியிருக்கிறான். ஒரே அளவான ஏழு விற்கள் இருக்கின்றன. நாண்கள் மாத்திரம் தாழ்த்தியும், உயர்த்தியும் கட்டப்பட்டனவாய், அளவு வேறுபட்டிருக்கின்றன. இடையன் நரம்புகளைத் தெறித்து இசை யொப்புமையினையை ஆராய்கிறான்” எனக் காட்டுகிறார்.&lt;br /&gt;தமிழ் நிகண்டு நூல்கள், சங்க இலக்கியங்கள், வடமொழிநூல்கள் ஆகியவற்றிலுள்ள யாழ் பற்றிய குறிப்புக்களோடு பிறதேசங்களிலும் தமிழ்க்குலத்தோர் வாழ்ந்து நாகரீகம் பரப்பினார்கள் எனவும், அந்நாடுகளில் யாழ்க்கருவிகள் போற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார். யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் 1947ல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் 1974 ல் வெளியிடப் பெற்றது. அதன்பின்னர் வெளிவந்ததற்கான சான்றுகள் கிடைத்தில.&lt;br /&gt;‘சகோடயாழ்’ பலவழிகளிலும் சிறப்புடையது எனக் அடிகளார் குறிப்பிடுவர். “சிறப்பு வாய்ந்த கருவியின் இசையினை மீண்டுமொருமுறை தோற்றுமாறு செய்தல் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு சிறந்ததோர் ஏதுவாகும் என்கிறார்.‘சிறப்பு வாய்ந்த யாழ் எழுப்பும் ஒலி தமிழ் வழங்கும் இடமெல்லாம் ஒலிக்க வேண்டுமாயின் இசை ஆர்வலர் மத்தியில் ‘யாழ்நூல்’; என்னும் இனிய நூல் வலம்வரவேண்டும். இசைக்கலைஞர்கள் யாழ்நூலை நன்கு பயின்று மீண்டும் தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் ‘யாழ்’ ஒலிக்க வகை செய்தல் வேண்டும்’ என்று உடுவை தில்லைநடரசா தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;யாழ்நூலை பல்கலைக்கழகத்தில் பாடநூலாகக் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்களா? சுவாமி விலானந்தர் இசை நடனக்கல்லூரி பல்கலைக்கழக வளாகமாகத் தரமுயர்ந்துள்ளது. அவரது நூல்களைப் பாடநூல்களாக ஏற்றுக் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைச் செய்வோர் அவர் விட்டுச் சென்ற சேவையினைத் தொடர்பவர்கள் என்ற வரிசையில் சிறப்பார்கள்.&lt;br /&gt;ஒரு வரலாறு முடிந்தது. ‘யாழ்நூல்’; அரங்கேற்றம் நிகழ்ந்து முடிந்தபின் சுவாமி விபுலானந்தர் இலங்கை திரும்பினார். பல்கலைக் கழகத்துப் பணியினை மேற்கொண்டார். அவரது உடல் நோய்வாய்ப் பட்டிருந்தது. ஓய்வு தேவைப்பட்டது. கொழும்பு மருத்துவ விடுதியிலே சிகிச்சையளிக்கப் பட்டது. எனினும் அது பயனற்றுப் போயிற்று. ‘யாழ்நூல்’; அரங்கேற்றம் நிகழ்ந்து நாற்பத்துநான்கு நாட்களே இப்பூவுலகில் வாழ்ந்தார். அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகவே இருந்து 1947 ஜூலை 19ம் நாள் அவர் இவ்வுலகை நீத்தார்.&lt;br /&gt;வவுனியா சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் ‘உள்ளக்கமலம்’ என்னும் மலரினை வெளியிட்டார்கள்.&lt;br /&gt;அதில் ‘விபுலாநந்த அலை’ எனும் தலைப்பில் ஆலன் இப்படி எழுதியுள்ளார். “உடல்நலம் குன்றிய விபுலானந்தர் கொழும்பு மருத்துவ மனையில் ஓய்வெடுக்கிறார். அவரது உடல் களைப்புற்றுக் கிடக்கிறது. உள்ளம் உயிர் எங்கோ.. வெகுதூரத்தில் ..மட்டக்களப்பு வாவியினடியில் எழும் அந்த இசையை நாடிச் செல்கிறது. அவரது காதுகளில் ‘ச,ரி,க..ம.ப.த,நி’.. இசை பரவுகிறது.&lt;br /&gt;‘நீல வானிலே நிலவு வீசவேமாலை வேளையே மலைவு தீருவோம்சால நாடியே சலதி நீருளேபாலை பாடியே பலரொ டாடுவோம்’&lt;br /&gt;அந்த இசையோடு இசையாகி உயிர் பிரிகிறது. தமிழ்த்தாய் கண்ணீர் வடிக்கிறாள். தமிழ் பேசும் மக்கள் ஆறாத்துயரால்&lt;br /&gt;அலைமோதுகின்றனர். மட்டக்களப்புப் புகைவண்டி நிலையத்தில் இருந்து சுவாமிகளது ஊனுடம்புப் பேழை ஊர்வலமாக வருகிறது. ஸ்ரீ இராமக்கிருஷ்ண சதுக்கத்தை அடைகிறது. அவர் உருவாக்கிய சிவானந்த வித்தியாலயத்தில், சிவபுரிக் கோட்டத்தில் கமலாலயத்தின் முன்னால் வீதியோரமாக ஆலமரம் உள்ளது. அந்த ஆலைநிழலில் சமாதியடைகிறது.&lt;br /&gt;‘சிலம்பு தந்த இளங்கோபோல் யாழ்நூல் தந்த விபுலன்’ எனக்கூறிச் சாரிசாரியாக மக்கள் கூட்டம் அஞ்சலி செலுத்தி அலைமோதுகிறது”. எனக்குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;அந்த இடத்தில் நினைவுச்சின்னமாக அழகிய சமாதி எழுப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;‘வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மா மலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது’.&lt;br /&gt;என அச்சமாதியில் அவரது பாடல் பொறிக்கப் பட்டுள்ளது நான் மாணவனாக சிவானந்த வித்தியாலயத்தில் கற்கும்போது மணிமண்டபம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. குறிப்பிட்ட பழைய மாணவர்கள் ஒன்றுகூடினார்கள். அந்தக்காலகட்டத்தில் 1957ல் படித்துக் கொண்டிருந்த மாணவர்களும் சேர்ந்துகொண்டார்கள். ஒரு நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றினால் சிறிதளவு தொகை நிதியினை மணிமண்டபம் கட்டுவதற்குச் சேர்த்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.&lt;br /&gt;அதற்கேற்ப கல்லடி உப்போடை கிராமசபையில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிய திரு.கனகலிங்கம் கதைவசனம் எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தைப் பழகினோம். வீரபாண்டியக் கட்டப்பொப்மன் தமிழகத்தில் படமாக வருமுன்னமேயே விபுலானந்தருக்காக நாங்கள் நாடகமாக்கி அரங்கேற்றினோம். அதனை சிவானந்த வித்தியாலயத்தில் கற்று ஆரையம்பதியில் ஆசிரியராகவும் சிவானந்த வித்தியாலயத்தின் விடுதியின் பொறுப்பாளராகுவும் இருந்த திரு. நேசராசா என்ற சாமித்தம்பிதான் நெறியாள்கை&lt;br /&gt;&lt;br /&gt;செய்தார். ஆனைப்பந்தி விவேகானந்த வித்தியாலய மாணவியரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு நகர மண்டபத்திலும், கல்முனை நகர மண்டபத்திலும் நிகழ்திப் பங்களிப்புச் செய்தமை எனது மனதில் இன்றும் நிறைந்து சிவானந்த வளாகத்தினுள் உள்ள மணிமண்டபம்.&lt;br /&gt;இனிக்கின்றது. 1957 – 60 களில் விபுலானந்தருக்கு மணிமண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் படத்தைப் பாருங்கள்.&lt;br /&gt;விபுலானந்தரின் நினைவுகள் தொடர்கின்றன.&lt;br /&gt;சுவாமி விபுலானந்தரின் சேவையினைப் புரிந்தவர்கள் சிலரே இருந்தார்கள். அவர் மறைந்தபின்னரும் அவர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்தவர்கள் வெகு சிலரே. கிழக்கு மாகாணத்தில் அவரது சேவை அளப்பரியது. சுவாமி விபுலானந்தர் கிழக்கிலங்கையில் இல்லாதிருந்தால் இன்றைய மறுமலர்ச்சி சூனியமாக இருந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் நாவலரைப் போல், கிழக்கிலங்கையில் விபுலானந்தர் ஏற்றிவைத்த சுடர் இன்றுவரை பிரகாசிக்கிறது.&lt;br /&gt;குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள் செல்வநாயகம் அவர்கள் சுவாமி விபுலானந்தரது ஆக்கங்களைத் தொகுத்தளித்தார். அவரே விபுலானந்தரது ஆக்கங்களை வெளியுலகினுக்கு அறிமுகப் படுத்தியவராக மதிக்கப்படுகிறார்.&lt;br /&gt;விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை.&lt;br /&gt;1992ல் ‘மட்டக்களப்பு சுவாமிவிபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை’ உருவாக்கம் பெற்றது. அச் சபையின் தலைவராக திரு. க.தியாகராஜா அவர்கள் அருந்தொண்டாற்றினார். திரு.க.தியாகராஜா அவர்கள் சுவாமி விபுலானந்தரினால் கட்டியெழுப்பிய கலைக்கோயிலான சிவானந்த வித்தியாலயத்தில் கற்றவர். சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றியவர். வடக்குக் கிழக்கு மாகாணத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும். கல்விச் செயலாளாராகவும் சேவை செய்தவர்.&lt;br /&gt;அவரோடு தோளோடு தோள்நின்று உழைத்தவர்கள் பலர் அவர்களுள் வித்துவான் ச. இ. கமலநாதன், த.செல்வநாயகம். வ.சிவசுப்பிரமணியம். காசு. நடராஜா. பி.யுவராஜன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களைத் தேடித் தொகுத்துள்ளார்கள். பல தொகுதிகளாக அவை நூலாக்கம் செய்யப்பட்டன. இவை பாராட்டப் படத்தக்கனவாகும். இவ்வறிஞர்கள் சுவாமி விபுலானந்தருக்கும் தமிழ்கூறும் நல்லுலகினிற்கும் செய்த மாபெரும் கைங்கரியமாகும்.&lt;br /&gt;வவுனியாவில் விபுலானந்தர் நூற்றாண்டு விழா.&lt;br /&gt;1992ல் வவுனியாவில் திரு. எஸ்.நவரத்தினராஜா பிரதேசக்கல்விப் பணிப்பாளராகக் கடமையினைப் பொறுப்பேற்றார். வவுனியமாவட்டப் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் நலிந்திருந்தன. திரு.எஸ்.நவரத்தினராஜா கல்விப் பணிப்பாளராகக் கடமை ஏற்றபின்புதான் வவுனியா மாவட்டப் பாடசாலைகள் மாடிக்கட்டிடங்களைக் கண்டன. சுமார் 58 புதியபாடசாலைகள் திறப்பதற்கு உதவியாக இருந்தார். அவரது காலத்தில் வவுனியாவில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினைத் தொடங்கினோம்.&lt;br /&gt;அப்போது கொத்தணி முறை இருந்தது. ஒவ்வொரு கொத்தணியிலும் கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தோம். ஆசிரியர்களினதும், பாடசாலைப் பிள்ளகைளினதும் ஒத்துழைப்பு நிறையவே கிடைத்தது. பெற்றோரது வரவேற்பு பயனுள்ளதாக அமைந்தது. சுவாமி விபுலானந்தர் நிதியத்தை உருவாக்கினோம். ‘உள்ளக்கமலம்’ என்ற மலரை வெளியிட்டோம். இன்று அந்த நிதியம் பல ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர்வதற்கு உதவுகிறது. அதற்காக உழைத்த உத்தமர்களான திரு.க.சீனிவாசகம். அருட்சகோ.மடுத்தீன், திரு. மர்மலானந்தகுமார், திருமதி தெய்வச்சிலை முத்துக்குமாரசாமி. திரு. வீ. பேரம்பலம் திரு.ஜி.அலெக்சாந்தர், திரு. பத்மநாதன் ஆகிய கொத்தணி அதிபர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள்.&lt;br /&gt;இன்று காரைதீவில்…&lt;br /&gt;காரைதீவில் இன்று அவர் பிறந்த வீட்டை நினைவாலயமாக மாற்றியுள்ளார்கள்.&lt;br /&gt;அவரது இறுதி நினைவுகளாகப் பல படங்களையும் காணலாம். கரைதீவு மக்கள் அவருக்கு நினைவு மண்டபமும் நிறுவியுள்ளார்கள். காரைதீவில் எழுப்பப்பட்ட மணிமண்டபத்தின் முன்னால் விபுலானந்தரின் உருவச்சிலை உள்ளது. அவரது வீட்டின் ஒரு அறையில் விபுலானந்தரின் உருவச்சிலை உள்ளது.&lt;br /&gt;சாரதா இல்லமும் இயங்கிக் கொண்டு பல நூறு மாணவியருக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் வாழ்ந்த வீடு நினைவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது நினைவுகளைத் தாங்கிய எச்சங்களாக இறுதிக் காலங்களில் எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன. அவரது அறையில் இப்போது அவரது உருவச்சிலை உள்ளது. அவற்றின் படங்களை உங்களுக்காகத் தந்துள்ளேன். இலங்கையில் தமிழ் மொழித்தினமும் விபுலானந்தரும்&lt;br /&gt;1968 முதல் இலங்கையில் கல்வி அமைச்சு தமிழ் மொழித்தினத்தினைப் பாடசாலைகளில் நடத்தி வருகிறது. பாடசாலை மட்டம், வட்டாரமுறை இருந்த காலத்தில் வட்டார மட்டம், மாவட்ட மட்டம் என விரிந்து தேசிய மட்டம் வரை தமிழ்மொழித் தினத்தை நடத்தினர். இந்நிகழ்வு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். முதல்நாள் பாடசாலை மாணவரிடையே போட்டிகள் நடைபெறும். இரண்டாம் நாள் நிகழ்வு பரிசளிப்பு நடைபெறும். சிறந்த நிகழ்வுகளை மேடையேற்றி பெருவிழாவாக எடுத்தனர். அமரர் வெற்றிவேல் சபாநாயகம் தமிழ்மொழிப்பிரிவின் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமனம் பெற்றார்.&lt;br /&gt;அன்று முதல் சுவாமி விபுலானந்தர் அமரரான ஜூலை 19ம் திகதியை அகில இலங்கைத் தமிழ்மொழித் தினமாகப் பிரகடனப்படுத்தி பெருவிழா வாக எடுத்து வந்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலும், எனைய மலைநயக நகரங்களிலும் சிறப்பாக நடத்தி வந்தார். அவரது சேவையை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. திரு. வெ. சபாநாயகம். &lt;br /&gt;அவரைத் தொடர்ந்து திரு. அல்பிரட் அவர்கள் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் இருக்கும்வரை வெகு விமரிசையாக நடத்தி வந்தார். ஆனால் அவர்களின் பின் அவை யாவும் போய்விட்டன.&lt;br /&gt;வடக்குக் கிழக்கு மாகாணத்தில்&lt;br /&gt;வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தபோது கல்வி அமைச்சும், மாகாணக் கல்வித் திணைக்களமும் திருகோணமலையில் அமைந்திருந்தன. தமிழ்மொழித்தின நடைமுறை சிறப்பாக இருந்தது. அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் இரண்டு நாட்கள் மாகாண மட்டத்திலும் நடந்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா எனப்பல நகர்களிலும் கொண்டாடப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் மொழி. கலை இலக்கியப் பண்பாடு யுத்த சூழ்நிலைகளுக்குள்ளும் வெளிக் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு மாகாணமட்ட தமிழ்மொழித் தினவிழாக்களில் பங்கு கொள்ளும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்குமிட வசதியுடன் உணவும் கொடுக்கப்பட்டது. போக்கு வரத்துக்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட்டன. இவை யாவும் அரச பணத்தில் நடைபெறவில்லை. தமிழ்ப்பற்றாளர்களின் தயவுடன் நடந்தேறின. அதற்கேற்பக் கனதியான விழா மலர்கள் வெளியிடப்பட்டன. திரு. க. தியாகராஜா அவர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராக இருந்தார்.&lt;br /&gt;தமிழ்மொழித்தின விழாச்சபை அவரது காலத்தில் உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;திரு. க. தியாகராஜா&lt;br /&gt;போசகராக மாகாணக் கல்விச் செயலாளர் இருந்தார். தலைவராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் செயற்பட்டார். பொருளாளராக கல்வி அமைச்சின் கணக்காளர் கடமையாற்றினார். செயலாளராக மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் செயற்பட்டார். திரு.க.தியாகராஜா கல்விச் செயலாளராக இருந்தபோது செல்வி. திலகவதி பெரியதம்பி அவர்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளராக இருந்தார்கள். தமிழ்மொழித் தினத்தினை நடாத்தும் பொறுப்பை மேலதிக மாகாணகக் கல்விப்பணிப்பாளர் திரு.ச.அருளானந்தம் ஏற்றார். ‘சுவைத்தேன்,’ ‘பார்த்தேன்.’ ‘மலைத்தேன்’ என மலர்களை வெளியிட்டார்.&lt;br /&gt;அகில இலங்கைத் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கெனத் தனியான விழாச்சபை இருந்தது. தலைவராக அப்போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. க. தியாகராசா இருந்தார். செயலாளராக திரு.ச.அருளானந்தம் இருந்தார். செயற்குழு உறுப்பினர்களாக அதிபர் திரு. வ.தங்கவேல் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஒ.குலேந்திரன் அவர்களும் இருந்தனர்.&lt;br /&gt;முதலாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 700 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு வழங்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களையும். வெற்றிபெற உழைத்த அதிபர்களையும் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்நிகழ்வு 1997 வரை ஆண்டுதோறும் ஒரு பெரு விழாவாகவே நடைபெற்றது.&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழித்தினம்&lt;br /&gt;பல ஆண்டுகளின் தொய்வின் பின்னர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஒரு புதிய பாதையில் பிரவேசித்துள்ளது. தமிழ் மொழி ‘செம்மொழி’யாகப் பிரகடணப் படுத்தப்பட்டு பெருவிழாவை தமிழகம் கொண்டாடியது. அந்த எழுச்சி கிழக்கிலங்கையில் பற்றிக் கொண்டது. தமிழ்மொழித் தினத்தை ‘தமிழ் செம்மொழி விழா’வாக எடுக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டது.&lt;br /&gt;சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமான 19 – 07 – 2010 ல் அவர் பிறந்த காரைதீவில் ‘தமிழ் செம்மொழி தினவிழா’வினை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் பெருவிழாவாக எடுத்துப் பெருமையைத் தேடிக்கொண்டது. ‘தமிழ் செம்மொழித் தினம்’ என்ற மகுடத்தின்கீழ் பெருவிழாவாக நிறைவேறியது.&lt;br /&gt;இவ்வகையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்கள் பெருமைக்குள்ளாகிறார். அவரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவரது பெருமுயற்சியும், பிரதிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. எஸ்.சிவநித்தியானந்தா அவர்களினதும், உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.விக்னராஜா அவர்களினது ஒத்துழைப்பும் மெச்சத்தக்கது. கல்முனையில் காமல் பத்திமாக் கல்லூரியில் தமிழ் மொழித்தினத்துக்கான முதலாம் நாள் நிகழ்வுகள் நடந்தேறின.&lt;br /&gt;இரண்டு நாட்கள் இவ்வைபவம் நடைபெற்றது. முதல்நாள் மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வும் வழக்கம்போன்று பெருவிழாவாகவே நடைபெற்றது.&lt;br /&gt;மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் எனப் பெருந்திரளானோர் கூடினார்கள். இன்னியம் காற்றில் பரவ ஊர்வலம் விழா மண்டபத்தை அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்சிகள் சம்பிரதாயங்களோடு தொடங்கப் பட்டன. இவற்றையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? என்ற வினாக்கள் எழுப்பப்படுவது வழக்கமானவைதான். ஆனால் இவ்வாறு நாம் செய்ய மறந்தால் நமக்குப் பினனால் வரும் சமூகம் மறந்துவிடும். பண்பாடு அழிந்துவிடும். நமது பாரம்பரிய பண்பாட்டம்சங்களைப் பேணிப் பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைப்பது நமது தலையாய கடமையாகும்.&lt;br /&gt;பாடசாலைகள்தான் பண்பாட்டுக் காவிகளான மாணவர்களை வழிப்படுத்துவது. அங்கேதான் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்கள் ஊடாக, அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்குத் தரப்படுகிறது. அதிதிகளாக வருபவர்களை ஆலத்தி எடுத்து வரவேற்பது தமிழர்தம் பாரம்பரியப் பண்பாடாகும். அதனை ஆசிரியர்கள் செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;தமிழ் அன்னைக்கும், தமிழை வளர்க்கப் பாடுபட்ட சுவாமி விபுலானந்தருக்கும் மாலையணிவித்து, மங்கல விளக்கேற்றி விழா தொடங்கியது.&lt;br /&gt;தமிழ்த் தாய் வணக்கத்தின்போது தமிழ் முஸ்லின் மாணவியர் கலந்து நின்று பாடினார்கள்.பார்வையாளர்கள் பெருந்திரளாக வருகைதந்து பெருமைப் படுத்தினர்&lt;br /&gt;19 – 07 – 2010 அன்று சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமாகும். தமிழ்மொழித் தனத்தின் இரண்டாவது நாள் விழாவாகும். ‘தமிழ் செம்மொழி தினவிழா’வின் ஊர்வலம் காலை நீலாவணையில் இருந்து தொடங்கியது. அலங்கரிக்கப் பட்ட ஊர்திகளின் பவனி மெய்மறக்கச் செய்தது.&lt;br /&gt;விழாவில் பங்கு கொண்டவர்களுக்கு விபுலானந்தரின் திருவுருவப்படம் கொண்ட சின்னம் அணிவிக்கப்பட்டது. அதன் வடிவமைப்புக் கண்ணைக் கவருமாறு இருந்தது. மக்கள் வீதிகளின் இருமருங்கும் நின்று விபுலானந்தரை வாழ்த்தினார்கள். வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள், வண்ணக் கொடிகள் கொண்ட அலங்காரங்கள் மகிழ்ச்சியை ஊட்டின. “வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ”? என்று பாடியவாறு மக்கள் ஊர்வலம் வந்தார்கள். தங்களது பாரம்பரிய உடைகளில் அவர்களைக் கண்டபோது உள்ளம் உவகையால்&lt;br /&gt;துள்ளியது.சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படங்களைத் தாங்கிய ஊர்திகளின் தொடரணிகள் பவனிவந்தன. சிலப்பதிகாரத்தின் சில காட்சிகளும் ஊர்திகளில் உலாவந்தன. ஆச்சியர் குரவையை நினைவூட்டும் குரவையொலி காற்றில் மிதந்து பரவசமூட்டியது. முஸ்லிம் மக்களும் பேதமறக் கலந்து கொண்டு தமது பாரம்பரியக் கலைநிகழ்வுகளை நிகழ்த்தினர்.&lt;br /&gt;இவ்விழாவுக்கு தமிழகத்தில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் பல அறிஞர்கள் வந்திருந்தனர். முனைவர் அறிவுடை நம்பி அவர்களளும், முனைவர் வெங்கடேஸ்வரனும் கலந்து கொண்டனர். தமிழுக்காகத் தொண்டாற்றிய நமது நாட்டுப் பேராசிரியர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.&lt;br /&gt;சிறப்பாகத் தமிழ் முஸ்லிம் மக்கள் பெருந்திரளாகத் திரண்டிருந்தனர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களின் இன்னிய இசை அற்புதமாக இருந்தது. காரைதீவில் ஊர்வலத்தினை வரவேற்க முன்வளைவில் மக்கள் கூடியிருந்தனர்.&lt;br /&gt;ஊர்வலத்தில் வலய மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலைகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியரும். ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் பிள்ளைகள் அணியணியாகப் பவனி வந்தார்கள்.&lt;br /&gt;சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் ஊர்வலம் வளைவைக் கடந்து வந்து கொண்டிருந்தது. தொடரணியாக வந்த ஊர்திகளின் பின்னால் பல பிரமுகர்களும் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பெருந்திரளாக மக்களும் திரண்டு வந்தார்கள். ஊர்வலம் காரைதீவு விபுலானந்த கல்லூரியை அடைந்தது. அங்கு குழுமியிருந்தவர்கள் ஊர்வலத்தை வரவேற்று விழா மண்டபத்தினுக்குள் அழைத்துச் சென்றனர்.&lt;br /&gt;கிழக்கு மாகாண முதலமைச்சர் அன்றைய நாள் முழுவதும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். பேராசிரியர் முனைவர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் முனைவர் அறிவுடை நம்பி ஆகியோருடன் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்களைப் புடைசூழ ஏனைய பிரமுகர்களை கல்லூரி வளாகத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வரவேற்றனர்.&lt;br /&gt;இந்நிகழ்வு பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் படவேண்டிய தொன்றாகும். சிறப்பாக கிழக்கு மாகாண மாணவரிடையே ஒரு எழுச்சியைக் காணக் கூடியதாக இருந்தது. சுவாமி விபுலானந்தர் கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளி. அவர் ஆற்றிய சேவை அளப்பெரியது. உழைப்பால் உயர்ந்த உத்தமர். சான்றோரில் சான்றோன். தானும், தனது சுற்றத்தாரும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்ற இந்த உலகத்தில் தனது உழைப்பை சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று பாடுபட்டவர். சிறப்பாக ஆநாதைகளாக யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு உதவி உயர்த்திவிட வேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றிய உத்தமர்.&lt;br /&gt;‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’; என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடலுக்கேற்ப அவர் நிறுவிய கல்விக்கூடங்கள் இயங்கின. தமிழ் மொழியின் சிறப்பை வெளியுலகத்தினர் உணரும்படி செய்த பெருமையுடையவர். நடைமுறைப்படுத்தினார். இன மத, மொழி பேதங்களைக் கடந்து சேவையாற்றிய உத்தமர். ‘உள்ளக்கமலம்தான் உத்தமனார் வேண்டுவது’ என்று பறைசாற்றிய மகான் அவர். அவர் பிறந்த மண்ணில் அவரை நினைவு கூர்ந்த நிகழ்வு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியதொன்றாகும்.&lt;br /&gt;2004ல் கடற்கோள் காரைதீவுக் கடற்கரையைக் காவு கொண்டது. மாற்றமாம் வையகத்தில் மாற்றம் வருவது இயல்பு. மீண்டும் அமைந்த விபுலானந்தா மத்திய கல்லூரி விழாக்கோலத்தில் ஆழ்ந்தது. ஒரு புயலின்பின் அமைதி வருவதுபோல, ஒரு துயரின் பின்னால் ஒரு மகிழ்வு உதயமாகும். சுவாமி விபுலானந்தர் விளையாடித் திரிந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் சமுத்திரமாகக் கூடியிருந்தனர். அந்த உத்தமரை நினைந்து கொண்டாடுவதற்காக தமிழறிஞர்கள் கூடியிருந்தனர். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி புதுப்பொலிவு கொண்டிருந்தது.&lt;br /&gt;மாணவர் அலையலையாகத் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர். கற்றவர்களும், கல்லாதவர்களும் சுவாமியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்தனர். அவர் பிறந்த மண் அவரினால் புனிதம் அடைகிறது. காரைதீவு மக்கள் பாக்கியசாலிகள். நமது நாட்டுப் பேராசிரியர்களான திரு. தில்லiநாதன். முனைவர். அ. சண்முகதாஸ் போன்றவர்கள் கௌரவிக்கப் பட்டார்கள். அதேபோல் வெளிநாட்டு அறிஞர்களையும் கௌரவப்படுத்தினார்கள்;.&lt;br /&gt;“நாங்கள் புண்ணியவான்கள். அதனால்தான் சுவாமி விபுலானந்தர் பிறந்த இந்தப் புண்ணிய பூமியில் எங்களது கால் தடம்பதிக்கிறது. அவர் பிறந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம். அவராலன்றோ நாங்கள் வந்தோம். அவரது நினைவாக ‘தமிழ் செம்மொழித் தின விழாவெடுப்பது’ போற்றுதற்குரியது. அதனை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் செய்திருக்கிறது.” என வெளிநாட்டுப் பேராசிரியர்கள் குறிப்பிட்டார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இலங்கையின் தேசிய பத்திரிகைகள் பாராட்டி எழுதின.&lt;br /&gt;நிறைவாக தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்றது. தமிழ் முஸ்லீம் மாணவியர் ஒருங்கிணைந்து பாடினார்கள்.&lt;br /&gt;“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழிய வே !வான மளந்த தனைத்தும் அளந்திடும்வண் மொழி வாழிய வே !ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழிய வே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ் மொழிஎன்றென்றும் வாழிய வே!சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையக மே!தொல்லை வினை தரு தொல்லை யகன்றுசுடர்க தமிழ்நா டே! “ பாடலைக் கேட்டதும் பாரதியின் கருத்தை ஆழமாகச் சிந்தித்தேன். “சுடர்க தமிழ்நா டே!” என்று தமிழ்நாட்டை மட்டும் ஏன் வாழ்தினார்? ஏன் இப்படிப் பாரதி பாடினார்? என்று எண்ணிப் பார்த்தேன். தமிழர் உள்ள இடமெல்லாம் தமிழ்நாடுதான் என்ற ஒரு உண்மையை வைத்துத்தான் பாடியிருக்கிறான். தமிழரிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டித்தான் இப்படிப் பாடியிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.&lt;br /&gt;கிழக்கிலங்கையின் ஒரு மூலையில் இருந்து கொண்டும் தமிழ்நாட்டை வாழ்த்தும் ஈழத்தவரின் இதயத்துடிப்பை எந்த இந்தியத் தமிழர்களும் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மொழியால் உலகத்தில் வாழும் அத்தனை தமிழர்களையும் ஈழத்தவர்கள் நினைவு கொள்கிறார்கள். ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சேவை செய்த சுவாமி விபுலானந்தரின் புகழைத் தமிழர் உள்ளவும் போற்ற வேண்டும். தமிழகத்தார் சுவாமி விபுலானந்தரது சேவையை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. காந்தியத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தியர்கள் இதுவரை சாதியை எதிர்த்துக் குரல்கொடுக்க வில்லை. பாரதியின் பாடல்களை தமிழர்களுக்குப் புரியவைக்க ஒரு விபுலானந்தர் தேவைப்பட்டார். இன்று தமிழகம் பாரதியின் பாடல்களை ஏற்றுக் கொண்டாடுகிறது.&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரலெழுப்பினார். அவர்களது வாழ்வில் ஒளியேற்படக் கல்விப் பயிர் விதைத்தார். அவருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அண்டிய மேட்டுக்குடியினர் நன்நீரைப் பெறத் தடைவிதித்தனர். அதனைப் பொருட்படுத்தாது உப்புநீரை உட்கொண்டு சேவை செய்தார். விபுலானந்தரின் சேவை தமிழகத்துக்கு ஒரு பாடமாக இருக்கும். அதனைப் பலர் இன்னும் புரியவில்லை. தமிழ் பேசும் சமூகத்துக்கு விபுலானந்தரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமையும்.&lt;br /&gt;ஈழநாட்டில் பிறந்து உலகத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த நமது விபுலானந்தரை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். இசையாராச்சியில் ஈடுபட்டுழைத்து யாழ்நூலை தமிழுலகத்துக்குத் தந்தவர். சாதி, சமய, இன, மொழி பேதங்களைக் கடந்து மனிதர்கள் எல்லோரும் ஒரே குலம். ஒருவனே தேவன் என்ற அறநெறியில் வாழ்ந்து காட்டிய உத்தமனை நாமெல்லோரும் போற்றி உலகத்தோருக்குப் புரியவைப்போம்.&lt;br /&gt;தொடர்ந்தும் இக்கைங்கரியத்தை சுவாமி விபுலானந்தரின் நினைவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களது பேரவாவாகும். இவற்றை வெறும் புகழுக்காக அல்லாது நமது மண்ணில் பிறந்து கல்விக்காகவும் மக்களுக்காகவும் தம்மைத் தியாகம் செய்த உத்தமர்களை மனங்கொண்டு வாழ்த்திப் போற்றவேண்டும். இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இவை அமையவேண்டும்.இந்த வகையில் கிழக்கு மகாண முதலமைச்சர் மாண்புமிகு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்களும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம். ரி. ஏ. நிசாம் அவர்களும், அவர்களுடன் தோழோடு தோள் கொடுத்து உழைத்த அனைத்து அன்புள்ளங்களும் வெகுவாகப் பாராட்டபட வேண்டியவர்களே. என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டியவர்களே. அவர்கள் அனைவரும் பெருநன்றிக்குரியவர்கள் எனப் போற்றுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;இந்த நூலில் பல அறிஞர் பெருமக்களது ஆக்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் நிறையவே உண்டு. தனித்தனியே அந்நூல்களை அடிக்குறிப்பாக்கிப் போடமுடியாதுள்ளேன். தங்களது கருத்துக்கள் இடம்பெறுவதைக் கண்ணுற்றால் உங்களது ஆக்கங்களால் இந்நூல் பெருமையுறுவதாகப் பெருமனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;ஆசிரியர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4902898186215134864-1867430183865722411?l=ananthavele.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananthavele.blogspot.com/feeds/1867430183865722411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4902898186215134864&amp;postID=1867430183865722411' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/1867430183865722411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/1867430183865722411'/><link rel='alternate' type='text/html' href='http://ananthavele.blogspot.com/2011/07/blog-post_5259.html' title='வித்தகன் விபுலாநந்தன் - தொடர்ச்சி'/><author><name>கேணிப்பித்தன்</name><uri>http://www.blogger.com/profile/14738073334753622762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_lCyp7Fd7PHk/SxukdVU7p1I/AAAAAAAAAAM/MAssfpmfmXo/S220/Untitled+-+1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4902898186215134864.post-9149082789488150242</id><published>2011-07-31T22:58:00.001+05:30</published><updated>2011-07-31T23:02:21.387+05:30</updated><title type='text'></title><content type='html'>பயிலுநர் ஆசிரியர்.&lt;br /&gt;1908ம் ஆண்டு ‘கேம்பிறிஜ்’ பரீட்சை நடந்தது. அப்பொழுது அவருக்குப் பதினாறு வயது. ‘கேம்பிறிஜ்’ பரீட்சையில் வெற்றி பெற்றார். அவரின் திறமையைப் பலரும் பாராட்டினார்கள். சிறப்பாகச் சித்தியெய்திய மயில்வாகனத்தை சென் மைக்கல் கல்லூரி ஆசிரியர் பதவி கொடுத்துக் கௌரவித்தது. பயிலுநர் ஆசிரியராகப் பதவியினைத் தொடர்ந்தார். 1909 முதல் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1911ம் ஆண்டில் மயில்வாகனம் தனது அன்னையை இழந்தார். அந்தச் சோகம் அவரை வாட்டியெடுத்தது. அதனால் கல்முனை புனித மரியாள் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.&lt;br /&gt;ஆசிரியர் கற்பித்தல் துறையில் பயற்சியினைப் பெற்றிருக்க வேண்டும். அப் பயிற்சியைப் பெறவிரும்பினார். மகரகமை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி உட்புகுமுகத் தேர்வை எழுதினார்.பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாண்டுக் கால ஆசிரியர் பயிற்சியின் போது பலவிடயங்களைக் கற்றறிந்தார். அத்துடன் கொழும்பில் பல நல்லறிஞர்களின் நட்பையும் பெற்றார். பயிற்சியின் போது அங்கே விரிவுரையாளராகக் கடமையாற்றிய தென்கோவை கந்தையாபிள்ளையிடம் பழந்தமிழ் இலக்கியங்களையும், தமிழ் இலக்கணத்தையும் பயின்றார்.&lt;br /&gt;ஆசிரியர் பயிற்சியின் போது இலங்கை அரசினரால் பெருமதிப்புப் பெற்ற கலைச்செல்வராகிய கைலாசபிள்ளை முதலியார் அவர்களைச் சந்தித்துச் சிலப்பதிகாரத்தைக் கற்றார். “கலைச்செல்வராகிய கைலாசபிள்ளை முதலியார் அவர்கள் பரம்பரைக் கலைவாணர் குலத்தில் உதித்தவர். பழைய இசைமரபு தவறாது கம்பீரமான குரலிலே மங்கல வாழ்த்துப் பாடலினைப் பாடக்கேட்டது இன்னும் என் அகச்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது”. என சுவாமி விபுலானந்தரே யாழ்நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;1912ல் ஆசிரியர் பயிற்சி முடிந்தது. பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியானார். சென் மைக்கல் கல்லூரியில் மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். மயில்வாகனம் தனது மாணவர்களுக்கு மிகத் திறமையாகக் கற்பித்தார். ஆசிரிய பயிற்சியினைப் பெறாது கற்பித்ததையிட்டு அசைபோட்டுப் பார்த்தார். பயிற்சி பெற்றதன் பின்னர் தான் கற்பிக்கும் முறையினையும் கண்டு பிரமித்தார். கல்வி உளவியலைக் கற்றதனால் அவர் பெற்ற நன்மைகளை எண்ணிப் பார்த்தார்.&lt;br /&gt;மாணவர்களின் சந்தேகங்களை எளிய முறைகளைக் கையாண்டு தீர்த்தார். அவர்களுடன் அன்பாகப் பழகினார். இரண்டாண்டுகள் சிறந்த ஆசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து வாசித்தார். அத்துடன் பல கட்டுரைகளையும் எழுதினார். சென்மைக்கல் கல்லூரியின் 1914ம் ஆண்டு வெளிவந்த வருடாந்த மலருக்கு அவர் எழுதிய (ழுரச ஐகெயவெ னுநியசவஅநவெ) ‘மழலையர் பிரிவு’ அற்புதமான கட்டுரையாகும். 1872ல் தொடங்கப்பட்டட சென்மைக்கல் இக்கல்லூரி இப்போது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரியதாக ஏற்றம் பெற்றுள்ளது.&lt;br /&gt;இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;1903ல் கொழும்பில் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1915ல் மயில்வாகனம் இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் நுழைந்து 1916ல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றார். ஆசிரிய பயிற்சியின் போதும், தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும்போதும் தென்கோவை வித்துவான். கந்தையாபிள்ளை, முதலியார்; சிற். கைலாயபிள்ளை, வதிரி வித்துவான் சி. தாமோதரம்பிள்ளை ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றார்.&lt;br /&gt;அதன்பேறாக மதுரைச் தமிழ்ச்சங்கத்தால் நடத்திய பரீட்சையில் தோற்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையில் இருந்து முதன்முதலாக பண்டிதர் பட்டத்தைப் பெற்ற பெருமை மயிலவாகனனையே சாரும். பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற திறனுடன் பண்டிதர் பட்டமும் சேர்ந்து கொண்டது. உழைப்பால் உயர்ந்த பண்டிதர் மயில்வாகனம் படித்துக் கொண்டே இருந்தார். &lt;br /&gt;‘கல்வி கரையில’ என்பதவர் கொள்கை. திறமை சாலிகளுக்கு எந்நாளும் கதவு திறந்தே இருக்கும். முயற்சிக்கு எந்நாட்களிலும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். ‘நீ எதுவாக வரவேண்டும் என்று விரும்புகிறாயோ ஒருநாளைக்கு அதுவாக வந்தே தீருவாய்.’ என்பதற்குப் பண்டிதர் மயில்வாகனம் சான்றாக விளங்கினார&lt;br /&gt;இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், கதையும் இசையும். நாடகமும் கலந்து ஓருருவான இலக்கியத் திருவுருவம். எனினும் இந்நூலின் அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை என்பவற்றில் காணப்படும் இசை நாடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கத் தமிழறிஞர்களால் முடியவில்லை.&lt;br /&gt;முத்தமிழ்க் காப்பியத்தினை முற்றும்படித்து இன்புறுவதற்கு ஏற்ற கருவியாக இசையியல் நாடகவியல்களை ஆராய்ந்து தெளியவேண்டும். இதனைச் சுவாமி விபுலானந்தர் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை நாடக நுணுக்கங்களைத் துருவி ஆராயத் தொடங்கினார்.&lt;br /&gt;தமிழிலக்கிய இலக்கண நூல்களில் இருந்த ஆழ்ந்த அறிவும், கணிதம். பௌதிகம், பன்மொழியாற்றல் சிலப்பதிகார இசை நாடக நுட்பங்களை வெளிக்கொண்டுவர பேருதவியாகின. சிலப்பதிகாரத்தை முத்தமிழ் என்ற வட்டத்தில் இருந்து பிரித்தெடுத்து அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதன் நல் விளைவுதான் மதங்கசூளாமணியாகவும், யாழ் நூலாகவும் பின்னர் மலர்ந்தன.&lt;br /&gt;கொழும்பு தொழில் நுட்பக்கல்லூரி;யில் டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்றினார். பரீட்சையில் தேறியவுடன் அக்கல்லூரி அவரை இராசாயன விரிவுரையாளராகத் தேர்ந்தெடுத்தது. அதனை விரும்பியேற்றார். தனது பணியைச் செவ்வனே செய்தார். அவரது பெருமை இலங்கை எங்கிலும் பரவியது. படித்தோர் மட்டத்திலும், அறிஞர்கள் மத்தியிலும் மயில்வாகனத்தின் பெயர் பேசப்பட்டது.&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலுள்ள சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியர் தேவையிருந்தது. மயில்வாகனத்தை விஞ்ஞான ஆசிரியராகச் சேவைக்கு அழைத்தது. சம்பத்தரிசியார் கல்லூரியின் அழைப்பை ஏற்றுச் சென்றார். ஆசிரியராகத் தனது சேவையைத் தொடங்கினார். மாணவர்களுக்குக் கற்பிக்கும் அதேநேரம் தானும் கற்றலில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் குருநகருக்கு அருகில் உள்ள மரகத மடத்தில் (ஐஅயசயடன ஐnn) சில காலம் தங்கியிருந்தார்.&lt;br /&gt;பின்னர் ஆனைப்பந்தியில் இருந்த விவேகானந்த சபையில் குடியிருந்தார். கற்றுக் கற்பிக்கும் முறையினால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொண்டார். கல்லூரியில் ஆசிரியர் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதற்குப் பண்டிதர் மயில்வாகனம் சிறந்த சான்றாக விளங்கினார். அதற்கு சம்பத்தரிசியார் கல்லூரி உதவியாக இருந்தது. லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி பரீட்சைக்குத் தன்னைத் தயார்ப்படுத்தினார். அப்பரீட்சையில் தோற்றி 1920ல் பி.எஸ.;சி பட்டத்தைப் பெற்றார். மயில்வாகனம் பன்மொழிப் புலவராக விளங்கினார்.&lt;br /&gt;மயில்வாகனம் பி.எஸ்.சி – அதிபர்&lt;br /&gt;திருவிளங்கத்தார் மானிப்பாய் தந்த மூதறிஞர். அவர் மானிப்பாயில் இந்துக்கல்லூரியின் முகாமையாளராக இருந்தார். அவர் திருப்புகழுக்கு உரையெழுதியவர். மானிப்பாய் இந்துக்கல்லூரி சிறந்ததொரு அதிபரைத் தேடிக் கொண்டிருந்தது. பண்டிதர் மயில்வாகனத்தின் மொழிப் புலமையையும் ஆற்றலையும் வழக்கறிஞர் திருவிளங்கத்தார் அறிந்தார். அந்தப் பதவி புனிதமும் உயர்வும் அடையும் என்றெண்ணினார். மயில்வாகனத்தினால் தனது கனவு நிறைவேறும் என நினைந்தார். அதற்குத் தகுதியுடையவர் மயிலவாகனம்தான் என்று முகாமையாளர் தீர்மானித்தார். &lt;br /&gt;அந்தப் பதவி புனிதமும் உயர்வும் அடையும் என்றெண்ணினார். மயில்வாகனத்தை அணுகி தனது விருப்பத்தை எடுத்தியம்பினார். மயில்வாகனமும் மறுக்காது அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானக் கல்விக்கு ஆய்வுகூடம் அவசியம் என வலியுறுத்தினார். மயில்வாகனனின் தலைமையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஏற்றம்பெற்றது. அதனை நிறுவும் முயற்சியில் இறங்கி ஆய்வு கூடத்தை நிறுவினார். சதாசிவ ஐயர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்தவர். அதேபோல் பண்டிதர் மகாலிங்கசிவம் தமிழ்ப்பற்றுள்ளவர். இவர்களது நட்பு பண்டிதர் மயில்வாகனத்துக்குப் பெருந்துணையாயிற்று. இவர்களடன் சேர்ந்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தைத் தொடங்கினார். அதற்கெனப் பாடத்திட்டத்தையும் வகுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான பண்டிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். இன்னும் பலருக்கு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் களமமைத்துக் கொடுக்கிறது.&lt;br /&gt;பண்டிதர் மயில்வாகனம் யாழ்ப்பாணத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் வரை வாழ்ந்தார். அக்காலத்தில் அரிய பணிகளை ஆற்றினார். பல தமிழறிஞர்களின் நட்புக்கிட்டியது. அதிபரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார். திருவிளங்கம் பிள்ளை கொழும்பில் இருந்தார். அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் வருவார். பண்டிதர் மயில்வாகனத்துக்கும் யோகர் சுவாமிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. திருவிளங்கம் பண்டிதர் மயில்வாகனத்தின் விடுதிக்கு வருவார். அப்போது யோகர் சுவாமிகளும் வருவார்.&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் சிறந்த அறிஞர்களும் வருவார்கள். சமயப் பிரசங்கங்கள் நடைபெறும். பக்தி மயமாக இருக்கும். உலக வாழ்க்கை பற்றிய விவாதங்கள் நடைபெறும். அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தார். யோகர் சுவாமியின் நடத்தைக் கோலங்கள் ஆச்சரியமாக இருந்தன&lt;br /&gt;யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தமது விடுதியில் விவேகானந்த சபையை நிறுவினார். 1917ல் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்துறவியான சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். அப்பொழுது இச்சபை முன்னின்று தொண்டாற்றியது. சுவாமி சர்வானந்தருக்கும் பண்டிதர் மயில்வாகன்துக்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அந்த நட்பு ஆன்மீகம் கலந்ததாக அமைந்தது. மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்னும் அருட்டுணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. சுவாமி சர்வானந்தரின் வருகையும், நட்பும் வழிகாட்டலும் கிடைத்தது. பண்டிதரின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் துளிர்விடத் தொடங்கியது.&lt;br /&gt;ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கம்.&lt;br /&gt;இந்தியாவில் கல்கத்தா பெரியதொரு நகரம். கங்கைக்கரையில் உள்ளது. அதனை இப்போது கொல்கொத்தா என அழைப்பார்கள். கொல்கொத்தாவின் வடக்கே வேலூர் உள்ளது.&lt;br /&gt;வேலூரில் பஞ்சவடி தீரத்தில் தட்சநேஸ்வர ஆலயம் இருக்கிறது. இங்குதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சதேவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவமிருந்தார். உலகத்தை உய்விக்க வேண்டிப் பல அவதார புருசர்கள் தோன்றினார்கள். தட்சநேஸ்வர ஆலயம்அவர்களுள் ஒருவர்தான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். அவரது சீடர்களாக பதினெட்டுப் பேர்கள் இருந்தார்கள். அவர் தனது சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்து மறைந்தருளினார்.&lt;br /&gt;கடவுளைப் பற்றிய தேடலில் இறங்கிய இளைஞனாக நரேந்திரன் விளங்கினான். ஸ்ரீஇராமகிருஷ்ணர் அவனை ஈர்த்து ஞானோபதேசம் செய்தார். நரேந்திரன் துறவு பூண்டு விவேகானந்தர் ஆனார். சுவாமி விவேகானந்தர் உலக நாடுகளில் இந்து தர்மத்தின் புகழைப்பரப்பினார்.&lt;br /&gt;வேலூரில் ஸ்ரீஇராமக் கிருஷ்ண சங்கம் அமைந்தது. அதுவே தலைமைச் செயலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் சின்னம் மிகவும் அழகாக உள்ளது.&lt;br /&gt;உலகின் பலபாகங்களிலும் ஸ்ரீ இராம கிருஷ்ண சங்கம் மக்களுக்காகச் சேவை செய்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணிச் சேவை செய்வதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பணியாகும். வங்கதேசத்தின் இளைஞன்தான் தாரக். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச தேவரினால் ஈர்க்கப்பட்டுத் துறவு பூண்டவர்.&lt;br /&gt;உலகின் பலபாகங்களிலும் ஸ்ரீ இராம கிருஷ்ண சங்கம் மக்களுக்காகச் சேவை செய்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணிச் சேவை செய்வதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் பணியாகும். வங்கதேசத்தின் இளைஞன்தான் தாரக். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச தேவரினால் ஈர்க்கப்பட்டுத் துறவு பூண்டவர். பின்னர் சுவாமி சிவானந்தராகச் சேவை செய்தவர். இவர்கள் ஸ்ரீ இராமகிருஷ்ண பமஹம்சரின் நேரடிச் சீடர்கள். சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து இலங்கைக்கும் வந்தார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களைத் தரிசித்தார்.&lt;br /&gt;விவேகானந்தர் ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளைப் பரவ வழிசமைத்தார். ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகளை ஸ்ரீஇராம கிருஷ்ண சங்கத்தின்&lt;br /&gt;துறவிகள் இலங்கையிலும் வேரூன்றச் செய்தார்கள். சுவாமி சர்வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.&lt;br /&gt;பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளத்தை ஸ்ரீஇராம கிருஷ்ண பமஹம்சரின் போதனைகள் ஆட்கொண்டு விட்டன. பரமஹம்சரின் போதனைகளில் அதிக ஈடுபாடு கொண்டார். பண்டிதர் மயில்வாகனத்தின் உள்ளம் துறவைநாடிச் சென்றது. உலக இன்னல்களுக்குக் காரண காரியம்தேடிப் புறப்பட்ட சித்தார்தன்போல் மயில்வாகனமும் புறப்பட்டு விட்டார்.&lt;br /&gt;பிரபோத சைத்தன்யர் எனும் பெயருடன் துறவறம் &lt;br /&gt;1922ல் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமக்கிருஷ்ண மடத்தை அடைந்தார். தனது அங்கலாயும் உள்ளத்துக்கு ஸ்ரீராமக்கிருஷ்ண மடம் விருந்தளித்தது. அங்கே பிரமச்சரிய விரதம் பூண்டு துறவு மார்க்கத்தில் காலடியைப் பதித்தார். தந்தையாரிட்ட மயில்வாகனம் பெயர் நீங்கியது. பிரபோத சைத்தன்யர் என்ற பிரமச்சரியப் பெயரால் அழைக்கப் பெற்றார்.&lt;br /&gt;மடத்தின் அமைதியும், சாந்தமும் அவரை ஆட்கொண்டு விட்டது. தியானம் அவரை நிதானிக்க வைத்தது. நிறைய வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அவரது சிந்தனை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்களின் எழுச்சிக்காக விரிந்தது. பண்டிதராய் இருக்கும் போது தொடர்ந்த தமிழ்ப்பணியையும், சமயப்பணியையும் தொடர்ந்தார்.&lt;br /&gt;ஏழைகளின் கண்ணீரில் இறைவனைக் காணமுடியும் என்பதைப் புரிந்து கொண்டார். படமாக இருக்கும் பரமனுக்கு அன்பின் நிமித்தம் நாம் ஒன்றைக் கொடுத்தால், அது அருக்குப் போய்ச் சேராது. அதே பொருளை அவனாகக் கருதி நடமாடும் ஏழைக்குக் கொடுத்தால் படமாக இருக்கும் பரமனுக்குச் சேரும் எனத் திருமூலரின் கூற்றாகும். திருமூலரின் சிந்தனை அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டது.‘படமாடக் கோயில் பரமர்க்கு ஒன்றீந்தால்நடமாடக் கோயில் நம்மவர்க்கு அது ஆகாநடமாடக் கோயில் நம்மவர்க்கு ஒன்றீந்தால்படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆகும்மே’&lt;br /&gt;என்பதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்டார். அந்த உணர்வுதான் மட்டக்களப்புக்குக் கல்விப் பயிர் செழிக்க உதவியது.&lt;br /&gt;பத்திரிகை ஆசிரியராகப் பணி &lt;br /&gt;ஸ்ரீராமக்கிருஷ்ண சங்கம் தமிழில் வெளியிடும் ஸ்ரீராமக்கிருஷ்ண&lt;br /&gt;விஜயம், ஆங்கிலத்தில் வெளியிடும் வேதாந்தகேசரி மாதாந்த இதழ்களின் ஆசிரியராகச் சேவைசெய்தார். அரிய பல கட்டுரைகளையும் எழுதினார். இக்கட்டுரைகளை எழுதியவர் பண்டிதர் மயில்வாகனம் எனக் குறிப்பிடப்பட்டது. சில நாட்களின் பின்னர் பிரபோத சைத்தன்யர் எனக்குறிப்பிடப்பட்டது. துறவு மார்க்கத்தில் செல்லுவதற்குரிய பயிற்சிகளிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டார்.&lt;br /&gt;ஸ்ரீராமக்கிருஷ்ண விஜயத்தில் பெரும்பாலும் சமயம்சார்ந்த ஆக்கங்களையே எழுதினார். அருநிதியம் விலை சரசம், அறத்துப்பாலாராய்ச்சி, உறக்கமும் விழிப்பும், வரகுணதேவர் சரித்திரம், விநாயகக்கடவுள், வினைப்பயன், வைதிகநெறி, தமிழ்மொழியின் தற்கால நிலையும் தமிழரது கடமையும், உயிர்வாழ உழைப்பு, அழுத பிள்ளை பால்குடிக்கும், நம் நாட்டின் பெருமை, பெரியோரின் வாழ்க்கையும் அவரது திருநட்சத்திரங்களும், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் மன்னவர் நீதியும், மானிடனும் அவன் மனத்தின் ஆற்றலும், இளமைப்பருவத்தின் பெருவனப்புப் போன்ற பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தினுள் புதைந்திருந்த இசை நாடக நுணுக்கங்களையும் ஆராயத் தொடங்கினார்.&lt;br /&gt;ஸ்கொட்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர் வால்டர் ஸ்கொட.; ஸ்கொட்லாந்தின் யாழைத்தேடி எழும் ஏக்கக் குரலாக லேடி ஒஃப் த லேக்(டுயனல ழக வாந டுயமந) எனும் அழகிய கவிதையில் மூழ்கி அதனை ‘நீர்நிலைக் கன்னிகை’ என்ற தலைப்பிட்டு மொழி பெயர்த்து எழுதினார். அதன் சாரம் இவ்வாறுள்ளது.&lt;br /&gt;“நல்யாழே துயிலொழிந்து எழுவாயாக, நினது நரம்புகளில் படருங் கையானது பயிற்சியற்ற கையெனினும் செழிய பழம் பாடல்களின் இன்னொலியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்கு ஒர் இதயமாவது துடிப்புறு மெனின், நின் செயல் வீண் செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய் திறவாதிருத்தல் தகுதி யன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே, எழுந்திரு!இன்னும் ஒருமுறை எழுந்திரு”&lt;br /&gt;வால்டர் ஸ்கொட்டின் பாடல் அடிகளது உள்ளத்தை உருக்கி உள்ளொளியைத் தூண்டியது.&lt;br /&gt;தமிழரின் சொத்தான யாழ்கள் துயிலில் மூழ்கியிருப்பதை உணர்ந்தார். அவற்றை மீட்டெடுக்க ஆராய்ச்சியில் இறங்கினார். வேதாந்த கேசரியில் அரிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார்.&lt;br /&gt;மொழிபெயர்ப்புக் கலை&lt;br /&gt;“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ் மொழியில் பெர்ததல் வேண்டும்” என்ற பாரதியின் கனவுக்கு உயிர் கொடுத்தவர் சுவாமி விபுலாநந்தரே. ஒரு மொழியில் உள்ளதை இன்னொரு மொழிக்கு மாற்றிச் சொல்வது ஒரு கலை. அக்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். மொழி மாற்றம் செய்யும்போது மூலக்கரு சிதையாவண்ணம் பாரத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியவர். பிறமொழி இலக்கியங்களைக் கற்று தான் சுவைத்தவற்றைத் தமிழில் மொழிமாற்;றம் செய்து பல பத்திரிகைகளில் வெளியிட்டார். லத்தின் மொழியில் உள்ள ‘எயினெயிட்’; என்ற நூலைத்; ‘ஏநேய காவியம்’ என தமிழில் எழுதினார். ஷேக்பியரை செகப்பிரியர் என்று பெரிட்டழைத்தவர் விபுலாநந்தர். ஷேக்ஸ்பியரின் சிறந்த ஆக்கங்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றை செயல்மூலம் உணர்த்தியவர். தமிழின் தொன்மையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். மதங்கசூளாமணியில் அவர் எடுத்துக் காட்டியலில் சேக்ஸ்பியரின் கவிதைகளை சிதைவின்றி மொழி பெயர்த்துக் காட்டியதைத் தமிழ் உலகம் வியக்கிறது.&lt;br /&gt;யூலியஸ்சீசர் உரோம மக்களின் பண்டைய தலைவன். உரோமப்பேரரசை விரிவு படுத்தியவன். அவன் புகழ் கண்டு அவனது நண்பர்கள் பொறாமை கொண்டனர். சீசரைக் கொல்லத் திட்டமிடுகின்றார்கள். சீசரின் மனைவி கல்பூர்னியா தீயகனவு காணுகிறாள். அரச சபைக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சுகிறாள். தடுக்கிறாள். சீசர் புன்னகைத்தவாறே பதிலளிக்கிறான். அதனை சேக்ஸ்பியர் அழகாகச் சித்தரிக்கிறார். நம் அடிகள் அதனை மொழிமாற்றம் செய்து மூலக்கரு சிதைவுறாது வீறுபெறச் செய்கிறார். அவரது மொழிமாற்றம் அற்புமதாக உள்ளது.&lt;br /&gt;“அஞ்சினார்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத்துஆடவர்க்கு ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர்துஞ்சுவர் என்றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன்நான்இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்தில் அறிவாய்இளம் சிங்கக்குருளைகள் நாம்: யான் மூத்தோன்எனதுபின் வருவது இன்னல் எனப் பகைமன்னர் அறிவார்பேதுறல் பெண்ணங்கே யான்போய் வருதல் வேண்டும்”&lt;br /&gt;எனத் தன் மனைவிக்குக் கூறிச் செல்கிறான். சீசரின் அஞ்சாமையை அழகாகக் காட்டுகிறார். இதேபோல் அற்புதமான எடுத்துக் காட்டுகளை மதங்க சூளாமணியில் காணலாம்.&lt;br /&gt;சிறந்த ஆங்கிலப் புலவர்களாகிய மில்ரன், வேட்ஸ்வேர்த்,ஷெல்லி, கீற்ஸ் போன்ற பலரின் கவிதைகளைத் தமழில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்தார். நோர்வே நாட்டைச்சேரந்த் நாடகாசிரியர் இப்சனின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். வங்ஙக் கவி ரவீந்திநாத் தாகூரின் ஆக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளார்.&lt;br /&gt;கட்டுரையாசிரியர் - எழுத்துப்பணி&lt;br /&gt;சுவாமி விபுலானந்தர் சிறந் எழுத்தாளர். அவர் காலத்தில் இருந்த பத்திரிகைகளுக்கு நிறையவே எழுதினார். தான் ஆசிரியராக இருந்த ஸ்ரீராமக்கிருஷ்ண விஜயம், ஆங்கிலத்தில் வெளிவந்த வேதாந்தகேசரி மாதாந்த இதழ்களில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் கலைமகள், மணிக்கொடி, மஞ்சரி, நலசக்தி, குமரன், செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, இந்து சாதனம், இலங்கையில் வெளிவந்த விவேகானந்தன், ஈழகேசரி, ஆகிய பத்திரிகளுக்கும் எழுதினார். இலங்கையில் அமையவிருக்கும் பல்கலைக்கழகம் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி ‘இந்து ஓகன்’ (ர்னைனெர ழுசபயn) பத்திரிகையில் தொடர் கட்டுரைகளை எழுதினார். யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விவேகானந்தன் பத்திரிகையில் எழுதினார். விவேகானந்தன் பத்திரிகையில் வெளியான பதிநாலு கட்டுரைகளைத் தொகுத்து ‘விபுலானந்தர் உள்ளம்’ என்ற தலைப்பில் 1976ல் ச. அம்பிகை பாகன் வெளியிட்டார்.&lt;br /&gt;கலைச்சொல்லாக்கப் பணி&lt;br /&gt;பாரதியின் ஏற்றமிகு கருத்துக்களை விபுலாநந்தர் செயல்மூலம் சிறப்படையச் செய்தவர். அதிலொன்று கலைச்சொற்களை உருவாக்குவதாகும். தமிழ்மொழி உயர்நிலை அடைவதற்கு அறிவியல் நூல்கள் வேண்டும். அறிவியல் நூல்களை எழுதுவதற்குக் கலைச் சொற்கள் முக்கியம். ஆகவே கலைச் சொல்லாக்கத்தினை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;1934ல் சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டில் சொல்லாக்கக் கழகம் உருவாயிற்று. இச்சொல்லாக்கக் கழகத்தின் பொதுத்தலைவராக விபுலாநந்த அடிகளாரே தெரிவு செய்யப்பட்டார். சொல்லாக்கக் கழகம் 1934 ஒக்டோபர் 14ந் திகதி தனது வேலையைத் தொடங்கியது. கணிதம், பௌதிகம், வேதியல். தாவரவியல், விலங்கியல். உயிரியலும் நலவியலும், புவியியல், வரலாறு, வேளாண்மை போன்ற ஒன்பது தலைப்புக்களில் கலைச்சொல்லாக்கக் குழுக்கள் தமது கடமைகளில் ஈடுபட்டன. பொதுத்தலைவராகக் கடமையாற்றிக் கொண்டு, பௌதீகவியற் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார். 1935, 1936ம் ஆண்டுகளில் புதியகலைச் சொற்கள் ஆக்கப்பட்டன.&lt;br /&gt;கலைச் சொற்களை ஆக்கும்போது முகக்pயமான கருத்துக்களை வெளியிட்டார். முதலில் தமிழில் உள்ள மருத்துவ, தத்துவ நூல்களை ஆராயும்ப டிவற்புறுத்தினார். அவற்றுள் பொதிந்து கிடக்கும் விஞ்ஞான நுண்மொழிச் சொற்களை தெரிந்தெடுக்க வேண்டும். அவற்றின் பொருளை நிச்சயித்துக் கொள்ளவும் வேண்டும். சுருக்கம், விளக்கம், தெளிவு, தமிழுருவம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும்படி தெளிவு படுத்தினார். வழக்கில் உள்ள சொற்களைப் புறக்கணியாது அவற்றையும் சேர்க்கும்படி கூறினார். பொருத்தமான தமிழ் மொழிச் சொற்கள் கிடையாது போகுமிடத்து தமிழ்மணம் குன்றாமல் சொற்களை ஆக்கலாம் என்றார்.&lt;br /&gt;1936ம் ஆண்டு சேர் . சீ. பி. இராமசாமி ஐயரவர்கள் மகாநாட்டினைத் திறந்து வைத்தார். சுவாமி விபுலாநந்தர் தலைமையில் மகாநாடு நடந்தேறியது. ஒன்பது துறைகளையும் சேர்ந்த அறிஞர்களது பதினாயிரம் கலைச் சொற்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. 1938ம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினால் “கலைச்சொற்கள் அகராதி“ வெளியிடப் பட்டது. “…இவ்வாறு அடிகளார் தொடங்கி வைத்த நன்முயற்சியினால் விஞ்ஞானக்கலை இன்று தமிழில் விரைவாக வளர்ந்து வருகின்றது…” எனப் பேராசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை கூறியுள்ளார்.சுவாமி விபுலானந்தா தனது கடும் பயிற்சியினால் துறவறவாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடுந்தவம் நோற்றார். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்களாக பதினெட்டுப் பேர் இருந்தார்கள். முதன்மைச் சிடராக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். அவரைத் தொடர்ந்து பலர் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுவாமி சிவானந்ததர் ஆவார். பிரபோத சைத்தனயரின் பக்குவத்தை உணர்ந்தார்கள்.&lt;br /&gt;1924 சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி கூடிவந்தது. சுவாமி சிவானந்தர் பிரபோத சைத்தன்யரை அழைத்து ஞானோபதேசம் கொடுத்தார். தொடர்ந்து ‘விபுலானந்தா’ என்ற துறவறப் பெயரைச் சூட்டினார். தந்தையார் சூட்டிய மயில்வாகனம் எனும் பெயரைத் துறந்தார். பண்டிதர் மயில்வாகனம் .பி.எஸ்.சி என்ற தகைமைப் பெயர் நீங்கியது. &lt;br /&gt;பிரபோத சைத்தன்யர் என்ற மடாலயப் பெயரும் நீங்கியது.‘சுவாமி விபுலானந்தா’ என்ற துறவறப் பெயர் வந்து சூழ்ந்து கொண்டது. சேரத்து இளங்கோவைப்போல் ஈழத்து விபுலாநந்தர் உருக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார். சிலப்பதிகாரத்தினுள் இளங்கோ அடிகள் புகுத்திய இசைநாடக மரபினை ஆராய்ந்து தமிழ் உலகத்துக்கு அளிக்க விபுலானந்தர் வந்தார். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, என்பவற்றில் காணப்படும் இசை நாடக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். தமிழரின் சொத்தான யாழ்களை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியிலும் இறங்கினார். 1924ல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாம் ஆண்டு உற்சவ விழாவைக் கொண்டாடினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக ஹைகோட் வக்கீல் திரு.வு.ஊ. சீனிவாச ஐயங்கார் இருந்தார்கள்.&lt;br /&gt;அந்த ஆண்டு விழாவிலே பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் தலைமை வகித்தார். இளந்துறவி இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார். இதுவே பின்னர் “மதங்கசூளாமணி” என்ற நூலாக வெளிவந்தது.&lt;br /&gt;இளந்துறவி விபுலாநந்தருக்குப் பல பணிகள் காத்திருந்தன. இலங்கை மக்களுக்கு அவரது சேவை அவசரமாகத் தேவைப்பட்டது. சர்வானந்தர் இளந்துறவியை அழைத்தார். திருகோணமலைப் பயணம் பற்றிக்கூறினார். அங்கு ஆற்றவேண்டிய சேவைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இலங்கைப் பயணம் தொடங்கியது.&lt;br /&gt;இலங்கையில் ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகள்.&lt;br /&gt;1924 டிசம்பர் மாதம் சர்வானந்தர் விபுலானந்தருடன் திருகோண மலைக்கு வருகை தந்தார். இலங்கையில் ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலைகள் சிலவே இருந்தன. அவற்றை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ இராமக் கிருஷ்ண சங்கமே மேற்பார்வை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இலங்கை அரசாங்கத்தின் சட்ட அங்கீகாரம் இல்லாதிருந்தது. அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சுவாமி சர்வானந்தர் ஈடுபட்டார்.&lt;br /&gt;வட இலங்கையில் ஆறுமுக நாவலரின் அரியசேவை வேரூன்றியிருந்தது. சைவ பரிபாலன சபையும், இந்து மகாசபையும் அனுசரணையாக இருந்தன. ஆறுமுக நாவலரும் கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி கற்றவர். விவிலியநூலை நன்கு கற்றுணர்ந்தவர். அதனை தமிழில் மொழிபெயர்த்தவர். &lt;br /&gt;வேற்றுச் சமயத்தைக் கற்றால்தான் தனது சமயத்தின் மகிமை புரியும். எல்லாச் சமயங்களும் அன்பினையே சுட்டிக்காட்டுவன. வேற்றுச் சமயக்கருத்துக்களை அவர் ஏற்கவில்லை. சைவசமயத்தின் உள்ளார்ந்த தத்துவத்தை உணர்ந்தார்.&lt;br /&gt;தமிழ் மொழியின் அருமையையும், பெருமையையும் உணர்ந்தார். இளம் துறவி சுவாமி விபுலானந்தரின் தோற்றம்.அதனால் சைவசமயத்தின்பால் அவரது பற்று வளர்ந்தது. ஆங்கிலக் கல்வியின் தேவையை உணர்ந்து அம்மொழியைக் கற்றுத்தேறவும். அதே வேளை தமிழைக் கற்கவும் பிடியரிசி முறையைக் கைக்கொண்டு கல்விப் பயிர் வளர்த்தார். தமிழுக்காகவும், சைவத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஆறுமுக நாவலரை விபுலாநந்தர் வியந்து போற்றினார். ஆறுமுக நாவலரின் மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.&lt;br /&gt;விபுலானந்தரின் சிந்தையில் கிழக்கிலங்கை மக்களது மிகப் பின்தங்கிய வாழ்க்கை முறைகள் பதியத் தொடங்கின. கிழக்கிலங்கையில் ஒரு மாற்றம் தேவை என்பதை உணரத்தொடங்கினார். அந்த மக்களது வாழ்க்கையில் கல்வியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பினார்.&lt;br /&gt;கிழக்கிலங்கையில் விபுலானந்தரின் வருகைக்கு முன்பே பல சைவப் பெரியார்களினால் பாடசாலைகள் தொடங்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பில் ஆனைப்பந்தி, ஆரையம்பதி, கல்லடி உப்போடை, காரைதீவு, மண்டுர், முறக்கட்டாஞ்சேனை, ஈச்சந்தீவு போன்ற கிராமங்களில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. 1925ல் இவை யாவும் சுவாமி விபுலானந்தர் மூலம் இராமக்கிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.&lt;br /&gt;திருகோணமலையில் கிறிஸ்தவப் பாடசாலைகளே அதிகம் இருந்தன. அந்நியரின் ஆட்சி அவர்களது சமயம் பரப்பும் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. ஐரோப்பியர்கள் தமது சமயத்தைப் பரப்பும் ஊடகமாகக் கல்வியைக் கைக்கொண்டனர். அதற்கெனப் பல்வேறு கிறிஸ்தவ சமயச் சபைகள் தோன்றி தென்னாசிய நாடுகளில் சமயத்தைப் பரப்பின. இலங்கையிலும் அமெரிக்க மிசன்சபை, மெதடிஸ்த சபை, லண்டன் மிசனரிச் சபை, பப்ரிஸ்ற் சபை, சேர்ச் மிசனரிச் சபை, றோமன் கத்தோலிக்க சபை போன்றன தமது சமயத்தைப் பரப்பின.&lt;br /&gt;திருகோணமலையில் 1817 ல் சாமுவேல்பிரோட் பென்ற் என்ற மெதடிஸ்த திருச்சபைக் குருவானவரால் ஆலயங்களும். பாடசாலைகளும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 1823ல் மூன்று மெதடிஸ்த மிசன் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. ஒன்று சின்னமுத்தவெளி எனப்படும் றைபிள் கிறீன் விளையாட்டரங்கத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டது. அது இப்போது பெண்கள் கல்லூரியாக இயங்குகிறது. அடுத்து பெருந்தெருவில் அமைந்த பாடசாலையாகும். அது இப்போது விக்னேஸ்வரா மகா வித்தியாலயமாகக் கல்விப் பயிர் வளர்க்கிறது. இன்னுமொன்று உப்புவெளியில் கட்டப்பட்டது. பலலாண்டுகளாக மெதடிஸ்த தமிழ் வித்தியாலயமாகச் சேவைசெய்த பாடசாலை ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயமாக பெயர்மாற்றப்பட்டு விட்டது.&lt;br /&gt;1862ல் நான்கு றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலைகளும்; இயங்கின. 1867ல் ஜூலை 27ல் அருட்தந்தை லூயிஸ் மேரி கீரிங் அவர்களால் புனித சூசையப்பர் ஆங்கிலப் பாடசாலை தொடங்கி வைக்கப்பட்டது. இவை கிறிஸ்தவ சமயத்துக்கும், ஆங்கில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தன. மேல்நாட்டுக் கலாச்சாரப் பாரம்பரியமும் திருகோணமலையில் வேரூண்றத் தொடங்கியது.&lt;br /&gt;ஆங்கிலம் கற்றவர்களை நாடி அரச உத்தியோகங்கள் வந்தன. ஆங்கிலம் கற்றவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்துக் கிடைத்தது. தொழில் வாய்ப்புக் கிட்டியது. சுகபோக வாழ்வும் கிடைத்தது. கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர்கள் மதிக்கப்பட்டார்கள். புதிய பாரம்பரியம் உருவாகத் தொடங்கியது. பழையன மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. &lt;br /&gt;சைவசமய வழிபாடடீடங்கள் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆங்கிலம் படித்த சமூகத்தின் முன் ஏனையவர்கள் கூனிக்குறுகி நின்றனர். ஆறுமுகநாவலரும், சுவாமி விபுலானந்தரும் அவர்களை நிர்த்த வந்த ஆசான்களானார்கள். அதனைத் தொடர்ந்து புனித மரியாள் கல்லூர் கட்டப்பட்டது&lt;br /&gt;பல இந்து ஆலயங்கள் இருந்தாலும் அதற்கேற்ப இந்துப் பாடசாலைகள் தொடங்கப் படவில்லை. எனினும் சில இந்துப் பெரியார்கள் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடத்தினார்கள். ஆர்வங்கொண்ட சில இந்துப் பெரியார்களினால் 1897ல் ஆண்களுக்கான இந்து ஆரம்பப்பாடசாலை தொடங்கப்பட்டது.&lt;br /&gt;1910 இல் இந்து ஆங்கிலப் பாடசாலையும், சைவப் பெரியார்களினால் தொடங்கப்பட்டது. இந்து ஆங்கிலப் பாடசாலையும், கோணேஸ்வர வித்தியாலயமும் 1922 ஆண்டு உத்தியோக பூர்வமாகப் பதியப்பட்டன. அதன் முகாமையாளராக முதலியார் வல்லிபுரம்பிள்ளை இருந்தார். முதலியார் வல்லிபுரம்பிள்ளை அவர்கள் தமது முகாமைத்துவத்துக்குக் கீழிருந்த இந்து ஆங்கிலப் பாடசாலையும், கோணேஸ்வர வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் 01-06-1925ல் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைத்தார்.&lt;br /&gt;சுவாமி சர்வானந்தரும், சுவாமி விபுலானந்தரும் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் இருந்த ரோசாத்தோட்டம் (சுழளந குநைடன) என்ற வீட்டில் குடியிருந்தனர். சுவாமி விபுலானந்தரின் இருப்பு கிழக்கிலங்கைக்கு அத்தியாவசியமாக இருந்தது. இதனை ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கமும் உணர்ந்திருந்தது. 1925ல் விபுலானந்தர் கிழக்கிலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் ஈடுபட்டார். 1925 தொடக்கம் கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி உதயமாயிற்று எனலாம்.&lt;br /&gt;அதேவேளை பெண்பிள்ளைகளுக்கான பாடசாலையின் தேவையை திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளை உணர்ந்தார். 1923ல் இந்துப் பெண் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பாடசாலையைத் தொடங்கிவைத்தார். இன்று ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலையாக விளங்குகிறது.&lt;br /&gt;சிவானந்த வித்தியாலயம்.&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் கிறிஸத்தவ மிசனரிப் பாடசாலைகளே அதிகமாக இருந்தன. அரசாங்கமும் அதற்கு உதவியாக இருந்தது. இந்துப்பாரம்பரியத்தில் ஊறிய பெரியார்கள் தமது முயற்சியினால் ஆங்காங்கே இந்துப் பாரம்பரிய பாடசாலைகளை நிறுவி இயக்கி வந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே நிலை தொடர்ந்தது. சுவாமி விபுலானந்தரின் வருகையினால் இந்துப் பாரம்பரியப் பாடசாலைகளை ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்தன.&lt;br /&gt;இந்துப்பாரம்பரியத்தில் ஒரு ஆங்கில மொழிமூலப் பாடசாலையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1925 ஆண்டு மார்ச் மாதம் மட்டக்களப்புப் பெரியோர்கள் கொண்ட மகாசபையைக் கூட்டினார். அடிகளாரது ஆவலைப் புரிந்து கொண்ட பெரியோர்கள் கல்லடி உப்போடையில் பாடசாலை அமைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். 06-11-1925ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மட்டக்களப்புப் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமும் 1927ல் கட்டி முடிக்கப்பட்டது.&lt;br /&gt;சிவானந்த வித்தியாலயத்தைக் கவியரசர் தாகூரின் சாந்திநிகேதனை ஒத்ததாக அமைக்கத் திட்டமிட்டார். பாடசாலைகள் நல்ல அமைதியான சூழலில் அமைந்திருப்பது பொருத்தமானது. அதற்கேற்ற இடமாகக் கல்லடி உப்போடை திகழ்ந்தது. ஒருபுறம் கிழக்காக வங்காள விரிகுடாக் கடல் ஆரவாரிக்கிறது. மறுபுறம் இயற்கையழகை அள்ளி வீசும் பாடு;மீன் நிறைந்த மட்டக்களப்புவாவி. இவற்றின் நடுவிலே வெண்மணல்பரப்பிலே வகிடெடுத்து நீண்டு கிடக்கும் மட்டக்களப்பு – கல்முனை கரிய தார்வீதி. வீதியை ஒட்டினாற்போல் சிவானந்த வித்தியாலயம் அமைந்துள்ளது. தனது ஆத்ம குருவான சிவானந்தரின் பெயரைச் சூடி 20 – 04 - 1929 ல் திறக்கப்பட்டது.&lt;br /&gt;பாடசாலை வளாகத்தை ஒட்டினாற்போல் சிவபுரி ஆச்சிரமம். மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகள். வேம்பு, மஞ்சவர்ணா, மரமுந்திரிகை மரங்கள் நிறைந்த சோலையாக சிவானந்த வளாகம் பரிணமிக்கிறது. சாந்திநிகேத்தன் இன, மத, மொழி பேதங்களற்று, எல்லோருக்கும் அறிவினை வாரி வழங்குதல்போல், சிவானந்த வித்தியாலயமும் திகழ்வதே அவரது நோக்கமாகும். அதற்கேற்ப இந்துக்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், பொளத்தரும் கல்வி கற்க வழி செய்தார். ஆங்கிலம் போதனா மொழியாக இருந்தாலும், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், அத்துடன் சிங்களமும் கற்பிக்கும் ஏற்பாட்டைச் செய்தார்.&lt;br /&gt;திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் கல்விப்பயிர் வளர்க்கும் அதே நேரம் மட்டக்களப்பில் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடப் பணியினையும் நிறைவேற்றினார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று இப்பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலைகளாகத் திகழ்கின்றன. 1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. அப் பரிசளிப்பு விழாவில் அன்றையக் கல்வி அமைச்சராகவும், இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தையுமான ஊ.று.று.கன்னங்கரா அவர்கள் கலந்து சிறப்பித்தார். இன்று பல அறிஞர்களையும், பேராசிரியர்களையும். டாக்டர்களையும். பொறியிய லாளர்களையும். சட்ட வல்லுநர்களையும், அரசியல் வாதிகளையும். நல்லாசிரியர்களையும். பல்துறை விற்பன்னர்களையும் உருவாக்கும் உன்னத நிறுவனமாகத் திகழ்கிறது. இந்துக் கல்வி முறையில்…&lt;br /&gt;சுவாமி விபுலானந்தரின் வருகையினால் சிறப்பாக இந்துக் கல்வி முறையில் ஒரு உத்வேகம் தோன்றியது. 16-02-1926ல் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம் சுவாமி விபுலானந்தர் மூலமாக ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் உள்ள ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்பப் பாடசாலைகள் எல்லாம் மைலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்தின் மேற்பார்வையில் இருந்தது 03-11-1926 ல் சுவாமி அவிநாசானந்தர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். அவர் கொழும்பில் இருந்துகொண்டு ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கு கொண்டார். இலங்கை அரசின் அனுமதியைப் பெறுவதற்கு முயற்சித்தார். சுவாமி அவிநாசானந்தரின் பெருமுயற்சியினால் அப்போதிருந்த தேசாதிபதியினால் 17-07-1929 ல் இலங்கையில் பதிவு செய்யப்பட்டு;ச் சட்ட அந்தஸ்தைப் பெற்றது. &lt;br /&gt;ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளர்&lt;br /&gt;சுவாமி விபுலானந்தர் பாடசாலைகளின் வளர்ச்சியில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். 1928 தொடக்கம் 1930 ஜூலை வரை அதிபர் பதவியையும் ஏற்றுக் கடினமாக உழைத்தார். 20 – 04 – 1929ல் சிவானந்த வித்தியாலயம் திறக்கப்பட்டது. ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் தொகை இலங்கையில் பெருகின. அவற்றை நெறிபடுத்து வதற்கும் முகாமைப்பதற்கும் முழுநேரமும் தேவைப்பட்டது. அதனால் அதிபர் பதவியைத் துறந்து கிழக்கிலங்கை முழுவதிலுமுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராகச் செயற்பட்டார்.காந்தியடிகளோடு …..யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த இளைஞர் காங்கிரஸ் நம் நாட்டுக்குப் பொருத்தமான தேசியக் கல்விச் சிந்தனைகளை உருவாக்குவதில் கனதியான பங்களிப்பைச் செய்தது. இச்சங்கத்தில் மக்கள் மத்தியில் பெருமதிப்புப் பெற்ற ஹண்டி பேரின்பநாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, சைவப்புலவர் நவரத்தினம், சிவபாதசுந்தரனார், நேசையா போன்றோர் உறுப்பினர்களாக இருந்தனர். சங்கத்துக்கும் சுவாமி விபுலானந்தருக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருந்தது. 1927ல் காந்தியடிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டார். மகாத்மா காந்தி பிரித்தானியரின் ஆட்சியை எதிர்த்துப் போர்க்கொடி எழுப்பியவர். அந்நிய ஆதிக்கம் நீங்கினால்தான் நம் மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும். அதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். அதேவேளை முதலாவது உலக மகா யுத்தம் நடந்தபோது பிரித்தானிய அரசுக்காகப் படையும் பணமும் அனுப்பி உதவினார்.&lt;br /&gt;அதே யுத்தத்தின் போது விபுலானந்த அடிகள் பிரித்தானியருக்கு உதவியாகக் கரையோரக் காவல்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்து பணிபுரிந்தார். சங்கத்தின் சார்பில் சுவாமி விபுலானந்தரே காந்தியடிகளை வரவேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார். காந்தியடிகள் தமதுரையில் “இத்தகைய துறவி இளைஞர் குழாத்துக்குத் தலைமை தாங்க முடியுமானால் உங்களுக்கு என்ன குறை”? எனக் கூறினார். “என்னைப் பொறுத்தமட்டில் முத்திக்கு வழி எங்கே இருக்கிறது என்றால், எனது தேசத்துக்காகவும், மனித சமுதாயத்துக்காகவும் ஓயாமல் தொண்டு செய்து கொண்டிருப்பதுதான்”; எனக் காந்தியடிகள் ஒரு இடத்தில் கூறினார். அதனையே விபுலானந்த அடிகளும் செய்தார்.&lt;br /&gt;காந்தியக் கல்விக் கருத்துக்களான சமய சமரசம், கிராம எழுச்சி, சாதிப்பாகுபாடு ஒழிப்பு, தொழிற்கல்வி, பெண்கள் கல்வி, தாய்மொழிக்கல்வி, எல்லோருக்கும் கல்வி, நலிந்தோருக்கு உதவுதல், என்பன சுவாமி விபுலானந்தருடன் இணைந்து கொண்டன. இவற்றை ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளில் நடைமுறைப் படுத்தினார்.&lt;br /&gt;அண்ணாமலை பல்கலைக்கழகம் - தமிழ்ப் பேராசிரியர்&lt;br /&gt;1857ல் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம் இல்லாததைப் பலர் உணர்ந்தார்கள். சென்னை அரசை வற்புறுத்தியும் வந்தார்கள். அதன்பயனாக விசாரணைச் சபை நிறுவப்பட்டது. அச்சபையின்முன் சாட்சியமளிக்க சுவாமி விபுலானந்தர் அழைக்கப்பட்டிருந்தார். செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் அளித்த கட்டிடங்கள், நிலம். பணம் ஆகியவற்றைக் கொண்டு 1929ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.&lt;br /&gt;ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கத்தின் அனுமதியுடன் 1931 அண்ணாமலை பல்கலைக்கழகம் விபுலானந்தரை அழைத்துப் பேராசிரியர் பதவியைக் கொடுத்துக் கௌரவித்தது. அவர் தனது சேவையை நேர்த்தியாக 1933 வரை செய்தார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, அடிகளாரின் அன்பைக் கவர்ந்த கந்தசாமி ஆகியோர் விரிவுரையாளர்களாகச் சேவை செய்தனர். சுவாமியிடம் அ.மு.பரமசிவானந்தம், மு.ஆலாலசுந்தரஞ் செட்டியார், இலங்கையைச் சேரந்த க.கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகியோர் தமிழ்கற்றனர்.&lt;br /&gt;இந்தியநாடு பிரித்தானியர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது லெப்ரினனட் கேணல் சேர் ஜோர்ஜ் பெடறிக் ஸ்ரான்லி அவர்கள் 1929 தொடக்கம் 1934 வரை மாட்சிமைமிக்க கவர்ணராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933ல் பட்டமளிப்பு விழா சிறந்த முறையில் நடந்தது. அதற்காகக் கவணர் வருகை தந்தார். மண்டபம் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு பேராசிரியர்களின் விடுதிகள் மேல் மாடியிலும் ‘ஜூனியன் ஜாக்’ கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனால் சுவாமி விபுலானந்தர் வீட்டின் மேல்மாடியில் இந்திய தேசியக் காங்கிரஸ் கொடி கட்டப்பட்டிருந்தது. மாட்சிமைமிக்க கவர்னர் பட்டமளிப்பு மண்டபத்துக்கு வருமுன் பொலிசார் அடிகளாரின் வீட்டைச் சோதனையிட்டனர். இந்தியர்கள் செய்யத் துணியாத சாதனையினை இலங்கையில் பிறந்த அடிகள் செய்தார்கள். அந்நியர் ஆட்சியை எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட அடிகள் அஞ்சவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்பன்றோ? என அவரது மாணவரில் ஒருவரான பூ.ஆலாலசுந்தரம் எழுதுகிறார்.&lt;br /&gt;சுவாமி விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அப்போதுதான் மானிடத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டார். தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்தார். திருவேட்களத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேரிக்குடி யிருப்புக்களில் வாழ்ந்தார்கள். அம்மக்களின் துயரத்தைத் துடைக்க எண்ணினார். அங்கு இரவுப் பள்ளியினைத் தொடங்கிச் சேவை செய்தார். பகல் முழுவதும் பல்கலைக் கழகத்தில் சேவை செய்வார். இரவானதும் திருவேட்களத்தில் சேரிப்பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துதல் எனச் சேவை செய்தார். தான் வருந்தி உழைக்கும் பணத்தை இந்த ஏழைகளின் ஏற்றத்துக்காகச் செலவு செய்தார்.&lt;br /&gt;மாலையானதும் பொட்டுக்கடலையும், சர்க்கரையும் வாங்கிப் பொட்டலமாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பாடம் முடிந்ததும் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார்கள். அதனால் மேட்டுக்குடியினர் நல்லநீர்க் கேணியில் சுவாமி விபுலாநந்தருக்குத் தண்ணீர் எடுப்பதற்கும் தடைபோட்டார்கள். உவர்நீரையே பயன்படுத்தி வாழ்ந்தார். இந்திய மக்களது விடுதலைக்காகச் சுவாமி விபுலானந்தர் காட்டிய தீவிர ஆதரவுக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு மகத்தானது. அதனைத்தான் ஈழப்போராட்டத்திலும் இந்திய மக்கள் ஒதுங்கியிருந்து காட்டினார்கள்.&lt;br /&gt;அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அனைவரையும் கவரும் வகையில் தனது சேவையினைத் தொடர்ந்தார். கற்றவர்களுக்கும் விளங்கிக் கொள்ளச் சிரமமாக இருந்த சிலப்பதிகாரம் நூலின் அரங்கேற்று காதையினைச் சுவைபடக் கற்பித்தார். அதன் ஊடாக இசை நுணுக்கங்களையும், இசைக் கருவிகளையும், யாழ்வகைகளையும் பற்றிய ஆராய்ச்சியை ஆழமாக மேற்கொண்டார். இவற்றுக்கு உதவியாக பழந்தமிழ் இலக்கிய, இலக்கண அறிவும், விஞ்ஞான, கணித, பன்மொழியாற்றலும் கைகொடுத்துதவின.&lt;br /&gt;சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழாராய்ச்சிப் பிரிவுக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். இசை ஆராய்ச்சி பற்றிய சிந்தனையைத் தூண்டும் விரிவுரைகளைச் செய்தார். சென்னைப் பல்கலைக் கழகம் சுவாமி விபுலானந்தரைத் தமிழாராய்ச்சித்துறை அங்கத்தவர் களில் ஒருவராகவும், தமிழ் பரீட்சகர்களுள் ஒருவராகவும் நியமித்துக் கொண்டது.&lt;br /&gt;அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதி கழகம்&lt;br /&gt;பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளைக் கவிதகைளே இல்லை எனப் பலர் வாதாடி வந்தார்கள். அவர்களுள் கல்கி, வ.ரா, கு.ப.ராஜகோபால், புதுமைப்பித்தன், பிச்சைமூர்த்தி, ராமையா, சுந்தரராஜன், போன்ற அக்கால பிரபல எழுத்தாளர்கள் முக்கிய இடங்களை வகித்தார்கள். அதனை எதிர் கொண்டு பாரதியின் கவிதைகள் உலகத் தரமிக்கது என முழங்கிய பெருமகன் சுவாமி விபுலானந்தரே. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதி கழகத்தைத் (டீhயசயவாi ளவரனல உசைஉடந) தோற்றுவித்து மாதமிருமுறை பாரதியின் பாடல்களின் சிறப்புக்களை பரவச் செய்தார். பண்டிதர்க்கே சொந்தமாக இருந்த தமிழ் மொழியைப் பாமரரின் சொத்தாக மிளிரச் செய்த பெருமை பாரதியாரைச் சாரும். ‘பாரதி தமிழ்மொழியைச் செம்மைப் படுத்திய சாரதி’ என சுவாமி விபுலாந்தர் முழங்கினார்.&lt;br /&gt;சுவாமி விபுலாநந்தர் 1933ல் பேராசிரியர் பதவியினைத் துறந்தார். சுவாமியவர்களது பிரிவு திருவேட்களத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களைப் பெரிதும் பாதித்தது. அம்மக்கள் அளித்த பிரியாவிடை மடலில் ‘ஏழைக்கிரங்கும் எந்தாய்,’ ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்றறிந்த பெரியீர்;’எனக் குறிபிட்டிருந்தனர். இலங்கை திரும்பிய சுவாமி விபுலானந்தர் சிவானந்த வித்தியாலயத்தின் அதிபர் பதவியினையும் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியைத் திறம்பட நடத்திய சுவாமி விபுலானந்தர் சிறிய பாடசாலையின் அதிபர் பதவியை மனதார ஏற்றுச் சேவைசெய்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பரின் திருவாக்குக்கு ஏற்ப பணியினை மேற்கொண்டார். கிழக்கிலங்கை முழுவதிலுமுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.&lt;br /&gt;பிரபுத்த பாரதத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.&lt;br /&gt;இமயமலைச் சாரலில் மாயாவதி ஆச்சிரமம் உள்ளது. அங்கிருந்து ‘பிரபுத்த பாரத’ என்ற ஆங்கில இதழ் மாதாமாதம் 1896ம் ஆண்டு தொடக்கம் வெளிவருகிறது. அந்த இதழ் தரமான வேதாந்த தத்துவங்களையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் தாங்கி வருவது. வாசிப்பவர்களது மனங்களைத் திருப்தியடையச் செய்வது. சுவாமி விபுலானந்தருக்கு ‘பிரபுத்த பாரத’ ஆங்கில இதழின் ஆசிரிய பீடத்தை அலங்கரிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.&lt;br /&gt;சுவாமி விபுலானந்தர் 1939 ம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஸ்ரீ;ராமகிருஷ்ண சங்கத்தின் அனுமதியுடன் இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தை அடைந்தார்.&lt;br /&gt;தமிழ் நூல்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துக்களை ஆங்கிலத்தில் பிரபுத்த பாரதம் தாங்கி வெளிவரத் தொடங்கியது. ‘பிரபுத்த பாரத மூலம் மறைந்து போன தமிழிசைக் கருவிகளான யாழ் வகைகளையும், இசை நுணுக்கங்களையும் பிரித்துத் தொகுத்து ஒழுங்கமைத்து உலகத்தவர் அறிந்திடச் செய்தார்.அடிகளார் மாயாவதி ஆச்சிரமத்தில் இருந்து மயிலை- சீனி. வெங்கடசாமி அவர்களுக்கு “இப்பொழுது தமிழ் நிதியத்தை வெளிநாட்டவருக்கு ஆங்கில மொழிமூலமாக அறிவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து சில மொழிபெயர்ப்புக்களைச் செய்து கொண்டி ருக்கிறேன்”; என எழுதியிருந்தார். சுவாமி விபுலானந்தர் சிறந்த ஆசிரியர். பேராசிரியர். சிறந்த கல்விமான்.&lt;br /&gt;‘மனிதனில் உள்ள முழுநிறைவை விருத்தி செய்வதே கல்வி. கல்வியும் மனிதனின் விருத்தியுமே மனித வரலாறாகும்;’ என்று கூறிய கார்ல்மாக்ஸ்சின் சிந்தனையில் ஊறியவர். சிறந்த கல்விக் கட்டுரைகளை எழுதினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கிய வகைகளை மொழிமாற்றம் செய்து கட்டுரைகளை எழுதினார். அவர் தமது நண்பரொருவருக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந் தத்திலிருந்து சில பகுதிகளை மொழிமாற்றம் செய்து கொண்டிருப்பதாய் எழுதியிருந்தார். பிரபுத்த பாரத இதழின் ஆசிரியராக 1941 வரை தொடர்ந்தார்.&lt;br /&gt;இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்.&lt;br /&gt;இலங்கையில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன், கலாயோகி ஆனந்தக் குமாரசாமி முதலியோர் வலியுறுத்தியும் பாடுபட்டும் வந்தனர். அதன்பயனாக 1921ல் இலங்கைப் பல்கலைக் கழகக்கல்லூரி நிறுவப்பட்டது. 1941ல் இலங்கைப் பல்கலைக் கழகக்கல்லூரி பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப் பட்டது. ஆனாலும் ஒரு தமிழ்ப் பேராசிரியரை 1943ல் தான் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கென தமிழ்பேராசிரியராக சுவாமி விபுலாநந்தர் நியமனம் பெற்றார். இதனை ஸ்ரீ இராமக்கிருஷ்ண சங்கமும் ஏற்றுக் கொண்டது.&lt;br /&gt;சுவாமி விபுலாநந்தர் பேராசிரியராக வந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவரிடம் கற்ற க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகிய இருவரும் விரிவுரையாளர்களாக இருந்தனர். திரு. சு. வித்தியானந்தன் கற்றுக் கொண்டிருந்தார். பின்னர் இவர்கள் ஒருவர்பின் ஒருவராக தமிழ்ப் பேராசிரியர் பதவியினை வகித்தார்கள். திரு. சு. வித்தியானந்தன் யாழ்ப்பணத்தில் பல்கலைக்கழகம் அமைந்த போது அதன் உபவேந்தராகப் பணியாற்றினார்.&lt;br /&gt;சுவாமி விபுலாநந்தர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுமானி (ஆ.யு) வகுப்பை 1944ம் ஆண்டு தொடக்கி வைத்தார். தமிழ் வித்துவான் வகுப்புக்களையும் 1946ல் தொடக்கி வைத்தார். சிங்கள மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். பல்கலைச் சேவையினைச் செய்து கொண்டு கல்விப்பகுதியின் பாடநூற் சபை, பரீட்சைச்சபை, கல்வி ஆராய்ச்சிக்குழு போன்னவற்றில் முக்கிய பங்கினை வகித்தார்.&lt;br /&gt;இலங்கையின் இடைநிலைக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினார். பள்ளிக்கூடங்களில் கலைத்திட்டத்தில் இசை ஒரு பாடநெறியாக சேர்ப்பதற்கு அரும்பாடு பட்டார். இசைக்கான பாடத்திட்டத்தினையும் அமைத்துக் கொடுத்தார். சுவாமி விபுலானந்தர் இறக்கும்வரை இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவே இருந்தார்.&lt;br /&gt;அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசை பற்றிய விரிவுரைகளை நடத்தி, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் யாழ்நூலாக வடிவமைத்தார். தமிழர் இசை பற்றி ஆராய்ந்து கண்ட முடிபுகளைக் கட்டுரைகளாக்கி பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.&lt;br /&gt;செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்தன. தமது பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் கண்ட முடிபுகளை யாழ்நூலாக எழுதிமுடித்தார்.; 1943 ஆண்டு ஆனி மாதம் யாழ்நூலை எழுதி முடித்துவிட்டார். அதனைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பி விட்டார். இரண்டாம் உலகப்போர் போன்ற இடர்களினால் நூல் அச்சிடும் பணிகள் தாமதமாகின. அது 1947ல்தான் முடிவுற்றது. தனது மாணவர்களில் ஒருவரான வெள்ளைவாரணனார் யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரமும் எழுதி, கையெழுத்துப் படிகளை எழுதியும், ஒப்பு நோக்கியும் உதவி புரிந்ததையும் விபுலாநந்த அடிகள் குறிப்பிட்டுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் அரங்கேற்றம் செய்வதற்குரிய ஆயாத்தங்களைச் செய்தது.&lt;br /&gt;சுவாமி விபுலானந்தர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது சம்பளம் பெற்றுக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்தவர்தானே என்று பலர் விமரிசித்தனர். அவர்களுள் ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்துறவிpயான சுவாமி நிஷ்காமானந்தரும் ஒருவர்;. அவரே கூறுகிறார். சுவாமி விபுலானந்தரும் சுவாமி நிஷ்காமானந்தரும் கடற்கரையில் பேசிக்கொள்கிறார்கள். சுவாமி நிஷ்காமானந்தர் “தங்களுக்குத் தமிழ்ப்பணி ஆற்ற ஆர்வமிருந்தால் தாராளமாக ஆற்றுங்கள். பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவோ அல்லது அத்தியட்சராகவோ இருங்கள். ஆனால் தாங்கள் ஏன் அவ்வளவு ஊதியம் பெறவேண்டும்.? நாம் துறவிகளல்லவா”? ஆத்திரத்துடன் சொற்கள் வெளிவந்தன.&lt;br /&gt;அமைதியுடன் சுவாமி விபுலானந்தர் விடையளிக்கிறார். “நமது வளர்ப்புக் குழந்தையான சிவானந்த வித்தியாலயத்தைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகத்தான் ஊதியம் பெறுகிறேன். அங்கே உள்ள ஏழைமாணவர்களின் வயிற்றுப் பசிக்கும். அறிவுப்பசிக்கும் யார் உதவுவார்கள்?” அதனைக் கேட்ட சுவாமி நிஷ்காமானந்தர் விக்கித்துப் போகிறார். “பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. என்பதற்கு இலக்கணமாக அடக்கம், அன்பு, அமைதி, பொறுமை இவையெல்லாம் ஓர் உருவெடுத்து என்முன் நிற்பதுபோல் அவர் காட்சியளித்தார்” என சுவாமி நிஷ்காமானந்தர் கூறுகிறார்.&lt;br /&gt;சுவாமி தானே வருந்தி உழைத்த பணத்தை அநாதைகளுக்கு வழங்கினார். அவர் பவணத்தைக் கையால் தொட்டதே இல்லை. அவரது வங்கிக் கணக்குகளை இலங்கைப் பல்கலைக் கழகப் பதிவாளராக இருந்த ஏ.எம்.கே. குமாரசாமிதான் கவனித்துக் கொண்டார்.பண்டிதர் மயில்வாகனத்துக்குத் தந்தைவழிச் சொத்தாக கிடைத்த வீடும் வளவும் அவர் துறவு பூண்டதும் சமய சமூகப் பணிகளைச் செய்யும் நிலையமாக்கி அதனை நிர்வகிக்க தர்மகர்த்தாச் சபையையும் நியமித்திருந்தார். அத்தர்மகர்த்தாக்களின் பின் அச்சொத்து ஸ்ரீஇராமகிருஷ்ண சங்கத்தைச் சேரவேண்டும் என்று எழுதிவைத்து விட்டார். இன்று அவரது நினைவாலயமாகத் திகழ்வதை காரைதீவில் காணலாம்.&lt;br /&gt;யாழ்நூல் அரங்கேற்றம்&lt;br /&gt;1947 ஆம் ஜூன் மாதம் 5ம் 6ம் திகதிகளில் திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயிலில் அரங்கேற்றம் இடம்பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் யாழ்நூல் அரங்கேற்றம் பற்றி தமிழ்ப் பொழில் பத்திரிகையில் &lt;br /&gt;அறிக்கை ஒன்றை விடுத்தார். அதன் சுருக்கம் இவ்வாறுள்ளது.‘அருள்மிகு விபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகளாக இடைவிடாது இயலிசை ஆராய்ச்சியினை நிகழ்த்தினார். அவர் நுண்ணிதிற் கண்டுணர்ந்த பழந்தமிழிசை நூன்முடிபுகளை ஒரு கோவைப்படுத்தி யாழ்நூலாக தமிழகத்திற்கு இயற்றி உதவியுள்ளார். நம் தமிழ்ச்சங்கச் சார்பில் வெளிவரும் இவ் யாழ்நூல் அரங்கேற்றம் நிகழும் சர்வசித்து வைகாசி உஉ, உங (5, 6 – 6 47) வியாழன், வெள்ளி இரண்டு நாட்களிலும் திருக்கொள்ளம்பூர்த் திருக்கோயிலிலே ஆளுடையபிள்ளையார் திருமுன்னர் நிகழவிருக்கிறது.&lt;br /&gt;இவ்விரண்டு நாட் காலையிலும் அருண்மிகு அடிகளார் அவர்கள் சிவபுரியில் சுவாமி சுவாமி விபுலானந்தர் யாழ்நூலில் உள்ள இசைகளின் முடிபுகளை எடுத்துரைத்து விளக்குவார்கள். நண்பகலுக்கு மேல் புதுவதாக அமைக்கப்பெற்ற வீணைக்கருவிகளிலே அவர்கள் அராய்ச்சியிற் கண்ட இசை உருவங்கள் இசைத்துக் காட்டப் பெறுவ. இவ்வரங்கேற்றத்தை ஒட்டிய இயற்புலவர், சொற்புலவர்களும் இசைப்புலவர் இசையரங்கும் நிகழும். அன்பர்கள் இவ்விழாவினைச் சிறப்பித்தருள்வார்களாக. 05-06-1947 வியாழக்கிழமை சென்னை மாகாணக் கல்வி அமைச்சர் திரு.தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் நீ.கந்தசாமி, கோலூர் ஜமீந்தார் திரு. ராம.தி. சிதம்பரம் செட்டியார், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார், போன்ற அறிஞர்பெருமக்கள் புடைசுழ்ந்து வந்தனர். யாழ்நூல் குறித்த கணக்குப்படி அமைக்கப்பெற்ற முளரியாழ், சுருதி வீணை, பாரிசாதவீணை, சதுர்த்தண்டி வீணை போன்ற இசைக்கருவிகளைச் சிலர் தாங்கி வந்தார்கள். திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோயில் தெற்கு வாசல் ஊடாக அடிகள் பிரவேசித்தார்கள்.&lt;br /&gt;ஒளவை துரைசாமிப்பிள்ளை அழகிய நாச்சியார் சேவடி பரவிய பாடலைப் பாடினார்கள். அரங்கேற்று மண்டபம் குதூகலித்தது. திருமுறை ஓதப்பட்டது. திரு. சிதம்பரம்செட்டியாரும், நீ. கந்தசாமி அவர்களும் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள். “யாழ்நூலாசிரியர் அவர்கள் தமது வாழ்வு முழுவதையும் தமிழன்னையின் திருப்பணி யொன்றிறற்கே உரிமை செய்து வாழ்பவர்”;. எனத் தலைவர் அவிநாசலிங்கம் செட்டியார் வலருணித்தார். விபுலானந்த அடிகள் யாழ்நூலின் வரலாற்றினையும், தாம் ஆராய்ந்து கண்ட உண்மைகளையும் விளக்கினார்.&lt;br /&gt;மாலைநிகழ்வின்போது இசையறிஞர் க.பொ.சிவானந்தம் பிள்ளையவர்கள் பாரிசாத வீணையை இசைத்தார். அதில் சங்கராபரணம், அரிகாம்போதி, பிந்துவராளி, என்னும் நிறங்கள் பரவி கானமழை பொழிந்தது. சதுர்த்தண்டி வீணையில் மாயாமாளகௌளை, கானமூர்த்தி, காயகப்பிரியா, தவளாம்பரி, என்ற நிறங்களை இசைத்தார். சபை களைகட்டி ரசித்திருந்தது.அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க தலைவர் சிவானந்தம் பிள்ளை அவர்களுக்கு ‘வீணைவித்தகர்’ என்னும் பட்டத்தைப் பொற்பூவுடன் சூட்டினார்.&lt;br /&gt;06-06-1947 வெள்ளிக்கிழமை அவை கூடியது. அடிகளாரின் அருந்திறனைப் பாராட்டி சோமசுந்தர பாரதியார், வித்துவான் துரைசாமிப்பிள்ளை போன்றோர் பேசினார்கள். இசைப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி யாழ்நூலிற்காட்டும் அரிய இசைக் கருத்துக்களை விளக்கினார்கள். ‘வீணைவித்தகர்’; சிவானந்தம்பிள்ளை அவர்கள் யாழ்நூலில் குறிப்பிடப்பட்ட விதிப்படி அமைந்த சுருதி வீணையில் பண்டைத்தமிழர் இசை உருவாகிய ஏழ்பெரும்பாலைகளை கிரகசுகவரம் மாற்றியமைக்கும் முறையில் இனிமையாக வாசித்துச் சபையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். “இது இறைவனின் திருவருளால் நிகழ்ந்தது”. என அடிகள் பலரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.&lt;br /&gt;தொடரும் -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4902898186215134864-9149082789488150242?l=ananthavele.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananthavele.blogspot.com/feeds/9149082789488150242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4902898186215134864&amp;postID=9149082789488150242' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/9149082789488150242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/9149082789488150242'/><link rel='alternate' type='text/html' href='http://ananthavele.blogspot.com/2011/07/blog-post_31.html' title=''/><author><name>கேணிப்பித்தன்</name><uri>http://www.blogger.com/profile/14738073334753622762</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_lCyp7Fd7PHk/SxukdVU7p1I/AAAAAAAAAAM/MAssfpmfmXo/S220/Untitled+-+1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4902898186215134864.post-8495075741589877986</id><published>2011-07-31T22:44:00.001+05:30</published><updated>2011-07-31T22:45:26.421+05:30</updated><title type='text'>வித்தகன் விபுலாநந்தன்</title><content type='html'>வித்தகன் விபுலாநந்தன்&lt;br /&gt;சிறுவர் ஆய்வு இலக்கியம். கேணிப்பித்தன். ச. அருளானந்தம் &lt;br /&gt;அணிந்துரை&lt;br /&gt;நாடறிந்த நல்லெழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் சிறுவர் தொடர்பில் ஏராளமான இலக்கிய வடிவங்களை ஆக்கியளித்து வருகின்றார். சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், சிறுவர் நாவல்கள், சிறுவர் செயல் விளையாட்டுக்கள் போன்ற பல்வேறு இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து அவ்வப்போது படைத்துவரும் பாங்குடையவர். அவ்வரிசையில் சிறுவர் ஆய்வு இலக்கிய வடிவாக அமைகின்ற வித்தகன் விபுலானந்தன் எனும் நூலுக்கு அணிந்துரை அளிப்பதில் அகமகிழ்வு அடைகிறேன்.&lt;br /&gt;விபுலானந்தர் பன்முகச் சிந்தனையாளரும். பயன்தரு படைப்பாளியுமாவார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த புலமைவாய்ந்தவர். இலத்தின், வங்காளம், சிங்களம், போன்ற ஏனைய மொழிகளையும் கற்றிருந்தார். இப் பன்மொழிப்புலமை அன்னார் பல்வேறு பதவிகளைப் பொறுப்பேற்று அலங்கரிப்பதற்கு அடிகோலின. சீரிய கரத்தும், நற்பெறுமதியும் நிறைந்த விடயங்களைப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழிப்படுத்தவும். தமிழிலுள்ள தரமான அறிவுப் பொக்கிசங்களை பிறமொழியினர் புரியும் விதத்தில் வெளிப்படுத்தவும், ஒப்பீட்டுரைக்கவும் வாய்ப்பாக அமைந்தது.&lt;br /&gt;அவரது கல்விச் சிந்தனைகளும் - தொண்டுகளின் பரவலாக்கமும் நம் மட்டுமன்றி பாரதநாடு உட்பட பல பிறநாடுகளுக்கும் பயன்படும் பாங்குடைத்தவை. விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள், தொண்டுகளின் உண்மைநிலை, பெறுமதி, தாக்கம் என்பன குறித்து முறையாகக் கூறுவோரும், எழுதுவோரும் மிகவும் குறைவே. வசதியற்ற மாணவர்தம் கல்விக்கென அநாதைகள் இல்லங்கள் அமைத்தலும், அவற்றில் உரிய வசதிகள் வழங்க “விவேகாநந்த வித்தியா தருமநிதியத்தை” நிறுவுதல் வேண்டுமெனவும் உள்ளார்த்தமாக வெளியிட்டவர் விபுலாநந்த அடிகளாவார். அவர் மனிதநேயப் பெருமனங்கொண்ட கல்வித் தத்துவவியலாளராகக் கணித்துக் கௌரவப் படுத்தப்பட வேண்டியவராவார்.&lt;br /&gt;விபுலாநந்தரின் பல்வேறு வகிபாகங்கள் குறித்து இலக்கிய நயத்துடன் இனிதாகவும், எளிதாகவும் சிறுவர் நன்கு விளங்கும் வண்ணம் இந்நூலை அருளானந்தம் அவர்கள் வடிவமைத்துள்ளார். விபுலாநந்தர் குறித்துத் துல்லியமாக .ன்றையச் சிறார்கள் தெரிந்து கொள்ள, அவரின் கல்விப்புலமை, பணிகள், சிறப்புக்கள் பற்றித் தெளிவுறத் தகுந்தமுறையில் ஆங்காங்கு அரிய விளக்கப் புகைப்படங்களையும் புகுத்தியிருப்பது இன்னுமொரு விசேட அம்சமாகும்.&lt;br /&gt;விபுலானந்தரின் மதங்கசூளாமணி, யாழ்நூல் குறித்து விபரமான விளக்கங்கள் இலக்கியப் பாங்கில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்குக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இன்றையச் சிறார்களின் அறிவுத் தாகத்தணிப்புக்கு இந்நூல் தனது பங்களிப்பை நல்குதற்கு இசைவாக அமையுமென்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;கல்வித்துறையில் நல்ல பயிற்சியும், ஆழமான ஈடுபாடும், பரந்த அனுபவமும் கொண்ட கலாபூஷணம் அருளானந்தம் தமக்கே தனித்தான இலக்கியப் பாங்கில் விபுலாநந்தரின் வித்தகத் தன்மையை விளக்கியுள்ளார். இவ்வாறான நூல்கள் சிறுவர் வட்டத்துள் மட்டுமன்றி, இளையோர், வளர்ந்தோர் அடங்கலாக அனைவர் மத்தியிலும் வரவேற்புப் பெறுமென்று எதிர்பார்க்கின்றேன். கேணிப்பித்தன் அருளானந்தத்தின் எழுத்தாக்க முயற்சிகள் வெற்றியுற இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;29ஃ 2, மத்திய வீதி செ.அழகரெத்தினம்.உவர்மலை முன்னாள் பீடாதிபதிதிருகோணமலை தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா&lt;br /&gt;பதிப்பாளர் உரை‘வித்தகன் விபுலாநந்தன்’ என்ற சிறுவர் ஆய்வு நூலைப் பிரபல எழுத்தாளரும், கல்விமானும், கவிஞருமான கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதியுள்ளார். படிப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் மொழிநடையில் சுவாமி விபுலாநந்தரின் சரிதையை வரைந்துள்ளார். திரு.ச.அருளானந்தம் அனுபவமிக்கவர். நல்லாசானாய் விளங்கியவர். நிறைந்த கற்பித்தல் அனுபவமிக்கவர். ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர். அதிபராகவும், கல்வி நிர்வாக சேவைப் பணிப்பாளராகவும் சேவை செய்தவர். &lt;br /&gt;நமது சிறார்களுக்காக இடைவிடாது பல ஆக்கங்களை எழுதிவருபவர். அவற்றைப் படிப்படியாக உங்களுக்குத் தரவிருக்கிறோம். இந்நூலில் வித்தகன் விபுலாநந்தனின் சரிதையுண்டு. விபுலானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றும் விரும்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது. சின்னச் சின்ன விடயங்களை உங்கள் மனங்களில் தங்க வைப்பதற்காக இலகுவான நடையில் எழுதியுள்ளார்.&lt;br /&gt;சிறுவர்களுக்காகவே எழுதி வெளியிட்ட இந்நூலைச் சிறுவர்கள் வாங்கிப் படித்து இன்புறவேண்டும். இந்நூல் அனைவரும் படிக்கவேண்டியதொன்று. நீங்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்நூலை வாங்கித் தம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து படிக்கத் தூண்டவேண்டும். வாசிப்பதால் நமது அறிவு விரிவடைகிறது. அத்துடன் நம் நாட்டுப் பேரறிஞர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஆதலால் இவ்வகை நூல்களை வாங்கிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;க.சதீஸ்முகாமையாளர்லங்கா புத்தக சாலை கொழும்பு -12&lt;br /&gt;எனது உரை&lt;br /&gt;சுவாமி விபுலானந்தரைப் பற்றிச் சிறுவருக்கு ஏற்ற வகையில் எழுத வேண்டும் என்ற அவா தொடர்ந்து கொண்டிருந்தது. சுவாமி விபுலானந்தரையும். ஈழத்திருநாட்டில் தமிழுக்காகத் தொண்டு செய்த அறிஞர் பெருமக்களையும் அறியச் செய்யவேண்டும் என்ற முயற்சியில் இந்தச் சிறு நூலினை எழுதமுனைந்தேன். சுவாமி விபுலானந்தரது அயரா முயற்சியினால் எழுந்த கல்விக்கூடமான சிவானந்த வித்தியாலயம் எனது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.&lt;br /&gt;ஆங்கிலம் போதனாமொழியாக இருந்தும், இந்துப்பாரம்பரியக் கல்விமுறை பேணப்பட்டது. அங்கு ஓரளவில் குருகுல முறையான கல்வி கிடைத்தது அதற்கு வித்திட்டவர்களாக சுவாமி விபுலானந்தரை அடியொற்றி வந்து அக்காலத்தில் கடமையாற்றிய இராமகிருஷ்ண மிசன் துறவிகளான சுவாமி. நடராஜானந்தா, சுவாமி. சர்வானந்தா, சுவாமி. ஜீவனாநந்தா போன்றவர்களும், அதிபர்கள் திரு.எஸ்.அம்பலவாணர், திரு.க.கணபதிப்பிள்ளை, அவர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த அதிபர்களும். ஆசிரியர்களுமாவார்கள். நான் மாணவனாக இருந்த காலத்தை நினைந்து பேருவகை அடைவேன். இன்று சிவானந்த வித்தியாலய வளாகம் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. நவீன வசதிகளைக் கொண்டு தேசியபாடசாலையாக மாறியுள்ளது. வவுனியாவில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்தபோது திரு.எஸ். நவரத்தினராசா கல்விப்பணிப்பாளராக இருந்தார். அவரோடு இணைந்து அறுபத்தைந்து புதிய பாடசாலைகளைத் திறந்தோம். அப்பாடசாலைகளுக்குத் தமிழ் வளர்த்த அறிஞர்களாகிய வீரமாமுனிவர், சுவாமி.ஞனப்பிரகாசர், போன்றோரது பெயர்களோடு, சுவாமி விபுலாநந்தா, சுவாமி நடராஜானந்தா, சுவாமி சிவானந்தா, சுவாமி விவேகாந்தா போன்ற இராமகிருஷ்ண துறவிகளது பெயர்களையும் சூட்டினோம். அத்துடன் வவுனியாவில் விபுலானந்த நூற்றாண்டு விழாக்குழுவையும் உருவாக்கி, ‘உள்ளக்கமலம்’ எனும் நூற்றாண்டு மலரையும் வெளியிட்டு, பல்கலைக்கழகம் சென்று படிக்கமுடியாத வறுமைக்கோட்டுக்குக் கீழ்வாழும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குவதற்கான நிதியத்தையும் நிறுவினோம்.&lt;br /&gt;இன்று அந்த நிதியம் பேருதவி செய்கிறது. இவற்றை நினையும்தோறும், ஏதோ ஒருவகையில் சுவாமி விபுலானந்தரின் சேவையில் ஒரு துளியை நிறைவு செய்த நிம்மதி உருவாகிறது. இந்நூல் உருவாக உழைத்த அனைருக்கும் -சிறப்பாக அணிந்துரையுடன் சில ஆலோசனைகளையும் வழங்கிய முன்னாள் திருகோணமலை மாவட்டக் கல்விப் பணிப்பாளரும், வவுனியா கல்வியியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி திரு. செ.அழகரத்தினம் டீ.யு.னுip.in நுன. ஆ.நன அவர்களுக்கும், பதிப்புரை நல்கி எனது நூல்களைச் சந்தைப்படுத்தும் கொழும்பு லங்கா புத்தகசாலை முகாமையாளர் திரு .க . சதீஸ், அட்டைப்படத்தினை வடிவமைத்த எனது மகன் திரு.ச.அ.அருள்பாஸ்கரன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகை நூல்களை வாங்கி. நமது இளையோருக்கு வாசித்தறியும் படி செய்வது தங்கள் அனைவரதும் கடமையாகும் என்பது எனது அவாவாகும். அதற்கான ஆதரவை நல்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;கேணிப்பித்தன் -ச.அருளானந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வித்தகன் விபுலானந்தர்; தந்த மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்&lt;br /&gt;மதங்க சூளாமணியில் சுவாமி விபுலானந்தரின் மொழி நடையினைக் காணலாம். அதனையே இங்கு தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;“நாடகவியலினை ஆராயப்புகுந்த இச்சிற்றாராய்ச்சியில் கண்ட முடிபுகள் அனைத்தும் பலநாளாக என்னுள்ளத்தினுள் பயின்று கிடந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்து மூன்றாம் வருட உற்சவத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினைத் தொகுத்துத் தமிழ்நாட்டுப் பெரும்புலவர் குழுமியிருந்த வித்தகக் கழகத்தில் பெரும் புலவருள் பெரும்புலவராகிய மஹாமஹோ பாத்தியாய சாமிநாதையர் அவர்களது தலைமையின் கீழ் இயன்றவரை விரித்துக் கூறினேன்.&lt;br /&gt;இவ்வாராய்ச்சி பயன்தரத் தக்கதென மஹாமஹோ பாத்தியாயர் அவர்களும் எனைய புலவர்களும் பாராட்டினார்கள். ஆதலினாலும், சங்கத்துக் கௌரவ காரியதரிசியாக இருந்து தமிழ் அபிவிருத்திக்காகப் பலவாற்றாலும், முயற்சித்துத் தம் கைப்பொருளையும், நேரத்தையும் செலவிட்டு வருபவரும், எனது நண்பருமாகிய மதுரை ஹைகோர்ட் வக்கீல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசஐயங்கார் அவர்கள், இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிட வேண்டுமென்று பலமுறை கூறி என்னை ஊக்கப்படுத்தினார்.&lt;br /&gt;ஆதலினால் இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமிழாராய்ந்த நான்மாடக் கூடலில் இருந்து இவ்வாராய்ச்சியை எழுதப்பெற்ற பெரும்பேற்றினை நினைக்குமபோது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனாகிய யான் எடுத்துக் கொண்ட இக்கருமம் இனிது நிறைவுறும் பொருட்டு உலகமாதாவாகிய மீனாட்சியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக” என சுவாமி விபுலானந்தர் “மதங்கசூளாமணி” நூலில் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் தமது இருபத்து மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். அந்த விழாவிலே பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையர் தலைமை வகித்தார். சாமிநாதையர் ஏட்டுச்சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்துத் தந்தவர். அவர் இருந்திராவிட்டால் நாம் இன்று காணும் பல இலக்கியங்களை இழந்திருப்போம். இளந்துறவி விபுலானந்தர் இவ்விழாவில் கலந்து கொண்டு “நாடகத் தமிழ்” என்ற சொற்பொழிவு மூலம் தான்கண்ட இசைநாடக முடிபுகளை வெளியிட்டார். அதனை நூலுருவாக எழுதித்தருமாறு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் கேட்டுக் கொண்டார்கள். அதனை ஏற்று நூலுருவில் எழுதிக் கொடுத்தார். மதங்கர் என்பது கூத்தாடுபவரைக் குறிக்கும் சொல். சூடாமணி என்பது விலைமதிக்க முடியாத ரத்தினம். அதுவே மதங்கசூளாமணி ஆகும்.&lt;br /&gt;‘நானிலம் யாவுமோர் நாடக மேடையே – அதில்நடிப்பவர் ஆண் பெண் அனைவருமாவோம்’&lt;br /&gt;என்ற கூற்றை தமிழ்க் கவிஞர்களும். அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள். கம்பரது கவிகள், நயம்பல கொண்டவை. அவரது கவிதைகள் முத்திரை பதிக்கப்பெற்றவை. முதன்மை பெற்று விளங்குபவை. ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல் சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என சுவாமி விபுலானந்தர் போற்றுகிறார். சேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியதோடு மட்டுமல்லாது மேடையில் நடித்துமுள்ளார்.&lt;br /&gt;“உலக வாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக் கூறிய இக்கவிவாணர் வனப்பின்மிக்க நாடக நூல்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அரங்கினுட் புகுந்து தாமும் கூத்தருள் ஒருவராக நின்று நடித்துள்ளார். நாடகக் கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரில்லை. ஆதலால் சேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக்கவிவாணரை யாம் மதங்கசூளாமணி என வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்து கிடந்த வனப்பினுட் சிலவற்றை ஆராயப்புகுந்த இவ் உரைத்தொடரும் மதங்கசூளாமணி என வழங்கப் பெறும்” என சுவாமி விபுலானந்தர் மதங்கசூளாமணியில் கூறுகிறார். எந்த நாட்டவரும் சேக்ஸ்பியருக்குக் கொடுக்காத கௌரவத்தையும் முதன்மையையும் நமது அடிகள் கொடுத்துக் கௌரவித்துள்ளார்.&lt;br /&gt;மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் உறுப்பியல். எடுத்துக்காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமையவேண்டும் என்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து மதங்கசூளாமணியில் தந்துள்ளார். மாணவர்களும் மதங்கசூளாமணி பற்றி அறியவேண்டும் அல்லவா? அதற்காகச் அதனைச் சுருக்கமாகத் தருகிறேன்.&lt;br /&gt;உறுப்பியல்&lt;br /&gt;உறுப்பியல் சிலப்திகார அடியார்க்கு நல்லார் உரையினால் பெறப்பட்ட அழிந்துபோன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை விளக்குகின்றார். இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்துக்கு உரிய கட்டுக்கோப்பு, என்பவற்றுடன் நாடகத்துக்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவையுணர்வு என்பன பற்றியும் எடுத்துக் கூறப்படுகிறது.எடுத்துக் காட்டியல்இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களை மொழிமாற்றம் செய்து உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கேற்ப விளக்கியுள்ளார். நாடகத்தின் அமைப்பை, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், என விளக்கி, அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டுகிறார். அத்துடன் நாடகம் தரும் சுவையுணர்வுகiளான வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுவுநிலை என்ற ஒன்பது சுவைகளையும் விளக்கி, அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார். இந்நாடகங்களில் சிலவற்றின் கதைகளை மட்டும் கூறிச் செல்கிறார்.ஒழிபியல்ஒழிபியல் தனஞ்செயனார் வடமொழியில் இயற்றிய இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்து கூறுகிறது. நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகமாகும். இவற்றைவிட தொல்காப்பியர் சூத்திர உரையினின்றும் எடுக்கப்பட்ட நாடகத்துக்குரிய அவிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்துக்குப் பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல். அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் மறுபதிப்பாக இலங்கையின் பிரதேச அமைச்சு 1987 ஜூலை 19ல் வெளியிட்டுள்ளது. அந்நூலின் தோற்றத்தையே படத்தில் காட்டியுள்ளேன். இந்த நூலைக் கற்பவர்கள் எத்தனை பேருளர்.? பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களுக்கு மதங்கசூளாமணி பாடநூலாக்கப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே. நம்நாட்டுப் பேரறிஞர் சாத்திரங்களை நாங்களே ஒதுக்கிவிடுகிறோம். மதங்கசூளாமணியை ஒரு வெள்ளைக்காரர் எழுதியிருந்தால் உலகமே போற்றுவதாக நம்தமிழர் மார்தட்டுவார்கள். நாங்கள் எல்லோரும் நடிப்புச் சுதேசிகள்தானே?&lt;br /&gt;இந்த அரிய நூலை எழுதியவர் நமது விபுலானந்த அடிகள். அவர் கிழக்கிலங்கையில் பிறந்து வாழ்ந்து மறைந்தவர். அவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அது நமக்குப் பெருமையைத் தரும். ஈழத்தில், கிழக்கிலங்கையில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் பிறந்தவர்தான் சுவாமி விபுலானந்தர்.&lt;br /&gt;ஈழத்திருநாடு&lt;br /&gt;ஈழத்திருநாடு என்று இலங்கையைக் கூறுவார்கள். இத்திருநாட்டில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் கிழக்கு மாகாணமும் ஒன்று. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முன்னர் இரண்டு மாவட்டங்கள்தான் இருந்தன. அவை திருகோணமலையும் மட்டக்களப்பும் ஆகும்&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தை இப்போது மூன்று மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகியன இதிலடங்கும். ‘மீன்பாடும் தேன் நாடு’ என்று மட்டக்களப்பை அழைப்பார்கள். திருகோணமலையைப் பாடல் பெற்ற திருத்தலம் என்றழைப்பார்கள்.&lt;br /&gt;மட்டக்களப்புக்கு அதன் நீண்ட வாவி இயற்கை அழகை ஊட்டுகிறது. அதேபோல் திருகோணமலைக்கு அதன் இயற்கைத் துறைமுகம் அழகூட்டுகிறது. மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பை இருகூறுகளாக்கி கல்முனைவரை நீண்டு கிடக்கிறது.&lt;br /&gt;கல்முனையில் இருந்து வருபவர்கள் வாவியைத் தோணிகள் மூலம் கடந்து நகரை அடைவார்கள். வாகனங்களைப் பெரிய பாதைப் படகு மூலம் ஏற்றி இறக்குவார்கள்.&lt;br /&gt;இறங்குதுறை மட்டக்களப்புக் கோட்டைக்கு அண்மையில் இருந்தது. கோட்டையில் போத்துக்கேயர் காலத்துப் பீரங்கிகள் பொருத்தப் பட்டிருந்தன. அவற்றை இப்போதும் காணலாம். சூரியன் உதிக்கும் பகுதியை எழுவான்கரை என்பார்கள். சூரியன் மறையும் பகுதியை படுவான்கரை என்பார்கள். சூரியனை மையமாகக் கொண்டு நிலங்களுக்குப் பெயரிட்டார்கள். திசைகளையும் தெரிந்து கொண்டார்கள். வாவியின் இருகரையும் அழகாக இருக்கும். தென்னை விரி;சோலை பரந்தி ருக்கும். படகுகள் அசைந்து செல்லும். மீனும், இறால் நண்டுவகை களும் பிடிபடும். மக்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை அளித்து வருகிறது. விதையாத வயலாக வாவி இன்றும் விளங்குகிறது.&lt;br /&gt;போத்துக்கேயர் இலங்கையின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றி ஆண்டனர். மட்டக்களப்பும் அவர்களது ஆட்சியினுள் வந்தது. அத்துடன் அவர்கள் தமது கத்தோலிக்க சமயத்தைப் பரப்பினார்கள். முதலாவதாககக் கத்தோலிக்க கோயில்களையும், சமயத்தைப் பரப்பப் பாடசாலைகளையும் கட்டினார்கள். மட்டக்களப்பில் உள்ள தாண்டவன்வெளியில் முதலாவது கத்தோலிக்க தேவாலயத்தை 1624ல் கட்டினார்கள். கதர்தோலிக்க குருமார் பாடசாலைகளையும, ஆசிரிய பயிற்சிக் கலாசாலையையும் அமைத்தார்கள். அச்சியந்திர சாலைகளையும் நிறுவினார்கள்.&lt;br /&gt;1626ல் போர்த்துக்கேயர் மட்டக்களப்பின் புளியந்தீவில் கோட்டையினைக் கட்டினர். ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை வென்று தமது ஆட்சியைத் தொடர்ந்தார்கள். போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையை ஒல்லாந்தர் 1682ல் திருத்தியமைத்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் மெதடிஸ்த மிசன் ஆலயங்களும் பாடசாலைகள் வளரத்தொடங்கின. ஒரு மதபாடசாலையின் தலையாய நோக்கம் கிறிஸ்தவ மதத்தைப் போதிப்பதே. இதனை இலக்காகக் கொண்டு கல்வி போதிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதமும், ஆங்கிலமும் உயர்ச்சியடையத் தொடங்கியது. ஆங்கிலப் பண்பாடு தோற்றம் பெற்றது. கிறிஸ்தவ மதத்தில் சேருவோருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தன. சமூக அந்தஸ்த்துக் கிடைத்தது.&lt;br /&gt;மட்டக்களப்பில் இருந்து சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்தில் கல்முனை உள்ளது. கல்முனையின் அருகாமையில் காரைதீவு என்றொரு கிராமம் உள்ளது. அது அழகான ஊராகும். அதனைக் ‘காரேறும் மூதூர்’; என அழைப்பார்கள். காரைதீவின் கிழக்கே வங்காள விரிகுடாக் கடல் விரிந்து கிடக்கிறது. காரைதீவு மணல் பரந்த கிராமம். வீடுகள் நெருக்கமாக இருந்தன. வீடுகளின் முன்னால் கனிதருமரங்கள் நிறைந்திருக்கும். கிணற்றடியில் கமுகுகள் பாக்கினைச் சுமந்து காற்றில் அசையும். பாக்குக் குலையோடு இருந்தால் கமுகுமரங்களுக்குத் தனியான அழகுதான். கமுகு மரங்களைச் சுற்றி வெற்றிலைக் கொடிகள் படர்ந்து அழகூட்டும். தென்னைகள் பாளை வெடித்துக் காற்றில் ஆடும். இளநீரையும், தேங்காய்களையும் தாங்கி நிற்கும்.&lt;br /&gt;காரைதீவின் மேற்கே வயல்வெளி பரந்துள்ளது. கிராமத்தையும் வயல்வெளியையும் கரிய தார்வீதி பிரிக்கிறது. கல்முiனையில் இருந்து வரும் தார்வீதி வடக்குத் தெற்காக பொத்துவில் நோக்கிச் செல்கிறது. அவ்வீதியில் இருந்து காரைதீவு ஊருக்குள் செல்லும் வீதி கடற்கரைவரை செல்கிறது. அச்சந்தியில் கண்ணகி அம்மன் கோவில் உள்ளது.&lt;br /&gt;கோயிலில் இருந்து கூப்பிடு தூரத்தில் சின்னத்தம்பியின் வீடு இருந்தது. அவருடைய மகன்தான் சாமித்தம்பி விதானையார்.&lt;br /&gt;அக்காலத்தில் கிராமத்தின் தலைமகனாக சாமித்தம்பி விதானையார் விளங்கினார். அவர்தான் கிராமத்தின் சிற்றரசன். பேரும் புகழும் விதானையாருக்கு இருந்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. விதானையார் அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செயற்படுபவர்.&lt;br /&gt;காரைதீவின் ஊடாக தோணா எனப்படும் சிற்றாறு ஓடுகிறது. கடற்பெருக்கின் போது தோணாவிலும் தண்ணீர் கூடும். மாரிகாலத்தில் வெள்ளம் பாய்ந்தோடும். தோணாவை நிறைத்து ஊதாநிறத்தில் பூக்களைத் தாங்கி நீர்த்தாவரங்கள் மிதக்கும். பார்ப்போரின் கண்களைக் கவரும். காரைதீவுக்குப் பெருமைசேர்ப்பது தென்னைகள். வங்காளவிரிகுடாக் கடலின் காற்று தென்னைகளை வருடி, ஓலைகளை அசைத்து இசையைக் கூட்டும். தென்னை மரமும் ஒரு கற்பகதருதான். தென்னை அதிக பலனை மக்களுக்குத் தருகிறது. அதனால் அதனைக் கற்பகதரு என்றார்கள். தென்னை தேங்காய் தருகிறது. இளநீரைத் தருகிறது. அதன் ஓலைகள் கிடுகுகளாகப் பின்னப் படுகிறது. கிடுகுகள் வீடுகளின் கூரையை வேய்வதற்குப் பயன்படுகிறன.&lt;br /&gt;அதன் ஈர்க்கு விளக்குமாறு செய்ய உதவுகிறது. ஈர்க்கில் கட்டு முற்றத்தைப் பெருக்க உதவுகிறது. தேங்காயை உரித்தால் உரிமட்டை வரும். உரிமட்டை தும்புகளைக் கொண்டுள்ளது. தும்பு கயிறு இழைக்க உதவுகிறது. தும்புத்தடி செய்ய உதவுகிறது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப் படுகிறது. முற்றிய மரங்கள் வீட்டுக் கைமரங்களாக வீடு கட்டப்பயனாகிறது.&lt;br /&gt;காரைதீவில் இராசகோபாலன்பிள்ளையின் குடும்பமும் செல்வாக்குள்ளது. இராசகோபாலன்பிள்ளையின் மகளாக கண்ணம்மை வாழ்ந்தார். கண்ணகி வழிபாட்டில் கண்ணம்மை சிறந்து விளங்கினார். சின்னத்தம்பியும் இராசகோபாலன்பிள்ளையும் தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இல்லறம் சந்தோசமாகக் கழிந்தது. பத்துத் திங்கள் பறந்தோடியது. இத்தம்பதியினருக்கு 1892 ஆண்டு மார்ச் 27ம் திகதி ஆண்குழந்தை பிறந்தது.&lt;br /&gt;‘மயில்வாகனம்’ எனப் பெயரிட்டனர். பாலூட்டித் தாலாட்டி வளர்த்தார்கள். மயில்வாகனனுக்கு இரு சகோதரிகள் இருந்தார்கள். ஒருவரின் பெயர் கோமளவல்லி. மற்றவரின் பெயர் மரகதவல்லி. &lt;br /&gt;மட்டக்களப்பு மாவட்டம் பத்தினித் தெய்வ வழிபாட்டில் பெருமை மிக்கது. கண்ணகிக்குக் கோயில்கள் அதிகம் உள்ளன. காரைதீவில் உள்ள கண்ணகிக்குக் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவம் நடைபெறும். உற்சவ காலத்தில் மக்கள் பயபக்தியாக இருப்பார்கள்.&lt;br /&gt;கண்ணகி வழக்குரை காதை பாடப்படும். மக்கள் பெருந்திரளாகக் கூடிக் கொண்டாடுவார்கள். விதானையாரின் மேற்பார்வையில் உற்சவம் நடக்கும். மயில்வாகனம் கோயிலுக்குப் போவான். கண்ணகி வழக்குரை காதையில் மூழ்கி ரசிப்பான். சிலப்பதிகாரத்தை நன்கு அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.&lt;br /&gt;இளமைக் கல்வி&lt;br /&gt;இளமைக் கல்வியை தந்தையிடமே கற்றான்;. மயில்வாகனம் ஆரம்ப பள்ளிப் பருவத்தினை அடைந்தான். அவனை சாமித்தம்பி விதானையார் திரு. நல்லரத்தினசிங்கம் அவர்களிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் முறைப்படி வித்தியாரம்பம் செய்து வைத்தார். தொடக்கக் கல்வியை நல்லரத்தினம் ஆசிரியரிடம் கற்றார்.&lt;br /&gt;காரைதீவில் கிறிஸ்தவப் பாடசாலை இருந்தது. அங்கு குஞ்சித்தம்பி ஆசிரியர் கற்பித்தார். அவர் சிறந்த ஆசானாய் விளங்கினார். மயில்வாகனத்தின் திமையைக் கண்டு வியந்தார். அப்பாடசாலையில் 1897ல் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்றான்;. காரைதீவு விநாயகர் கோயில் அர்ச்சகராக புலோலியூர் வைத்தியலிங்க தேசிகர் இருந்தார். அவர் பேரறிஞராய்த் திகழ்ந்தவர். கோயில் பூசையையும் செய்தார். பாடசாலையையும் நடத்தி வந்தார். அவரிடம் நன்நூல், நிகண்டு, சூடாமணி, போன்ற நூல்களையும் வடமொழியையும் கற்றான். &lt;br /&gt;அக்காலத்தில் ஆண்பிள்ளைகளும் பெண்களைப்போல் குடுமி வைப்பது வழக்காக இருந்தது. மயில்வாகனமும் குடுமி வைத்திருந்தான். அதிகாலையில் எழுந்ததும் குளிப்பான். தலையை வாரிக் குடுமி கட்டிக் கொள்வான். பெண்பிள்ளைகள் போல் நீண்ட சட்டையை அணிந்து கொள்வான். காதுகளில் வெண்கடுக்கண் அணிந்திருந்தான். இளமையிலேயே புலமை உடையவனாகக் காணப்பட்டான்.&lt;br /&gt;சாமித்தம்பி விதானையார் 1901ல் மயில்வாகனத்தின் ஒன்பதாவது வயதில் கல்முனை வெய்ஸ்லிக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். கல்முனை சற்று நாகரிகத்தைப் பற்றியிருந்தது. வெய்ஸ்லிக் கல்லூரி கிறிஸ்தவப் பாடசாலை. அங்கு கற்ற மாணவர்கள் மயில்வாகனத்தைச் ‘சைற்லாம்ப்’ எனப்பகுடி பண்ணினார்கள். மயில்வாகனம் செய்த முதல் வேலை தனது காதுகளில் அணிந்திருந்த வெண் கடுக்கண்களைத் துறந்ததுதான்.&lt;br /&gt;அத்துடன் தனது குடுமியையும் எடுத்துவிட்டார். உச்சியில் வகிடெடுத்து இருபக்கமும் அழகாகச் சீவியிருப்பான். அங்கு ஆங்கிலக் கல்வியைக் கற்கத் தொடங்கினான். சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வெய்ஸ்லிக் கல்லூரிக்கு மற்றப் பிள்ளைகளுடன் நடந்தே செல்வான். ஒரு துணியால் செய்த உறையினுள் புத்தகங்களை திணிப்பான்.&lt;br /&gt;தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடப்பான். நடையோடு பாடங்களையும் மனனம் செய்வான். கருவில் திருவுடைய மயில்வாகனம் குரு பக்தியுள்ளவன். தனது குருவை மதித்தவன்.&lt;br /&gt;‘அம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்டி வம்பு செறி வெண்கலச வல்லியருள் எனக்கூட்டி வைத்த வள்ளல் குஞ்சித் தம்பி யெனும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்ட தகமையோன்தன் செம்பதும மலர்ப் பதத்தைச் சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே’&lt;br /&gt;இவ்வாறு தனது பன்னிரெண்டாவது வயதில் தனது குருவாகிய ; குஞ்சித்தம்பி ஆசிரியருக்குக் கவிதையில் வணக்கம் சொன்னார்.&lt;br /&gt;அக்காலத்தில் புளியங்தீவுதான் பெரிய நகரமாக இருந்தது. மட்டக்களப்பு வாவியைத் தோணிகளின் மூலம் கடக்கவேண்டும்.&lt;br /&gt;வாகனங்கள் அக்காலத்தில் மிகக்குறைவு. மாட்டு வண்டிகள்தான் அதிகம் இருந்தன. அவற்றைப் படகுப் பாதையின் உதவியுடன் கடப்பார்கள். மக்கள் காரைதீவிலிருந்து கல்முனைக்கு வருவார்கள். பின்னர் மட்டக்களப்புத் துறையைக் கடந்து நகருக்குச் செல்வார்கள். சாமித்தம்பியும் தனது மகனோடு துறையைத் தாண்டித்தான் சென்றார்.&lt;br /&gt;கிழக்கின் முக்கியமான இடங்களில் மெதடிஸ்த திருச்சபை ஆலயங்களைக் கட்டியது. சமயம் பரப்பும் நோக்காகவே பாடசாலைகளையும் அமைத்தது. ஆங்கிலம் போதனை மொழியாக இருந்தது. சுயமொழியும் போதிக்கப்பட்டது. 1814ல் மட்டக்களப்பில் மெதடிஸ்த கல்லூரி கட்டப்பட்டது. 1904ல் மெதடிஸ்த கல்லூரியில் மயில்வாகனம் சேர்க்கப்பட்டான். மட்டக்களப்பில் சென்மைக்கல் கல்லூரி புளியந்தீவில் 1872ம் ஆண்டு கட்டப்பட்டது. தொடக்கத்தில் 57 மாணவர்கள் கல்வி பயின்றனர். மட்டக்களப்பில் சாமித்தம்பியின் நண்பர் திரு. வேலுப்பிள்ளை வாழ்ந்தார். அவர் ஒரு பிரசித்தி பெற்ற நொத்தாரிசு. சென்மைக்கல் கல்லூரியின் தென்புறத்தே திரு. வேலுப்பிள்ளை அவர்களின் வீடு இருந்தது. மயில்வாகனம் அவரது வீட்டில் தங்கியிருந்து படிப்பதற்கு ஏற்பாடாயிற்று. சாமித்தம்பி 1906ம் ஆண்டு சென் மைக்கல் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.&lt;br /&gt;அப்போது மயில்வாகனத்துக்குப் பதின்நான்கு வயது. மயில்வாகனம் திரு. வேலுப்பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்றான். திருமதி. வேலுப்பிள்ளை அன்பானவர். மயில்வாகனத்தை அவருக்குப் பிடித்துக் கொண்டது. வேண்டிய உணவுப் பொருட்கள் கரைதீவில் இருந்து வந்துவிடும். மயில்வாகனம் அன்பாகப் பழகினான். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.&lt;br /&gt;அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தனது வேலைகளை முடித்துப் படிப்பான். ஏழுமணிக்குக் காலை உணவைத் திருமதி. வேலுப்பிள்ளை தயாரித்து வைத்து விடுவார். பெரும்பாலும் இடியப்பம் அல்லது பிட்டு இருக்கும். அத்துடன் தயிரும் இருக்கும். அதிகாலையில் இடியப்பம் அல்லது பிட்டோடு தயிரைப் பிசைந்து சாப்பிடுவது மயில்வாகனத்துக்குப் பிரியமானது. சாப்பிட்டதும் எட்டிச் சிறுநடை போட்டால் கல்லூரியில் நிற்பான்.&lt;br /&gt;சென்மைக்கல் கல்லூரியில் புகழ்பெற்ற விஞ்ஞான, கணித ஆசிரியராக அருட்தந்தை. பேர்டினன்ற் பொனல் இருந்தார். அவர் ஒரு பிரஞ்சுக்காரர். மயில்வாகனம் இராசாயனம், பௌதிகம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கினான். அதனால் அருட்தந்தை. பேர்டினன்ற் பொனல் அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றான்.&lt;br /&gt;அவர் அவனை ‘மயில்குஞ்சு’ என்றே செல்லமாக அழைப்பார். லத்தின் மொழியினைக் கற்றுக் கொண்டான். கிரேக்கக் காவியங்களைப் படித்தறிய லத்தின் மொழி பேருதவியாக இருந்தது.&lt;br /&gt;விபுலானந்தரைப் பற்றி எழுதுபவர்களும், பேசுபவர்களும் இப்படிக் கதைகதையாகக் கூறுவர். அவற்றுள் சுவையான நிகழ்வாக இதனை அனைவரும் கையாளுவர். அதனை இங்கு நானும் தருகிறேன். ‘ஒருநாள் வழமைபோல் மயில்வாகனம் கல்லூரி செல்ல ஆயத்தமானான். கடமைகளை முடித்தான். திருமதி. வேலுப்பிள்ளை அன்று இரவு அப்பம் சுடுவதற்காக மாவைக் கரைத்துப் புளிக்க வைத்து மூடியிருந்தார். திருமதி. வேலுப்பிள்ளை அன்று வழமைக்கு மாறாக வேறேதோ வேலையில் இருந்திருக்கிறார். காலையிலேயே தனது கடமைகளை முடித்துக் அடுக்களைக்குள் புகுந்தான். உணவு இருக்கும் மேசைக்குச் சென்றான். இடியப்பம் இருந்தது. புளிக்கவைத்த மாவும் இருந்தது. அதனைத் தயிரென நினைத்து குழைத்து உண்டான். உண்ணும் போது புளித்த கள்ளின் மணம் வீசியது. அதனைப் பற்றி சிந்தனையின்றி உண்டபின் கல்லூரிக்குச் சென்றுவிட்டான். &lt;br /&gt;திருமதி. வேலுப்பிள்ளை குசினியில் அப்பம் சுடுவதற்காக வந்தார். புளிக்க வைத்த மா குறைந்திருந்தது. ‘மாவினைப் பூனை விளையாடி விட்டதோ? அப்படி விளையாடச் சந்தர்ப்பம் இல்லையே. கூடையால் அவற்றை மூடிவைத்தேனே’? என நினைந்து கொண்டார். இதில் அதிசயம் என்னவென்றால் மயில்வாகனத்துக்குப் புளித்த மா ஒன்றும் செய்யவில்லை. கல்லூரி முடிந்தபின் வீடு வந்தான்.&lt;br /&gt;“மகன் காலையில் சாப்பிட்டாயா”? திருமதி.வேலுப்பிள்ளை வினவினார்.&lt;br /&gt;“ ஓம். சாப்பிட்டேனே.” மயில்வாகனம் பதிலளித்தான். “ என்ன சாப்பிட்டாய்? இடியப்பமும் தயிரும்” “எங்கே சாப்பிட்டாய். தயிர் அப்படியே இருந்ததே”. என்றார். “இல்லை அம்மா நான் தயிர் சாப்பிட்டேன்”. பதிலளித்தான் மயில்வாகனம். “நீ சாப்பிட்டது தயிரா? வித்தியாசம் விளங்கவில்லையா”? சிரிப்போடு திருமதி. வேலுப்பிள்ளை கூறினார். “நல்ல தயிர்தான். எனக்கு ஒரு வித்தியாசமும் விளங்கவில்லை”. மயில்வாகனம் விளக்கினான். “அது அப்பம் சுடுவதற்காகக் கரைத்துப் புளிக்க வைத்த மா”. என்று விசயத்தை திருமதி. வேலுப்பிள்ளை கூறி விழுந்து விழுந்து சிரித்தார். மயில்வாகனமும் சிரித்துக் கொண்டானாம்.’இக்கதை விபுலானந்தரின் மனநிலையை உணர்த்துகிறதல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4902898186215134864-8495075741589877986?l=ananthavele.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananthavele.blogspot.com/feeds/8495075741589877986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4902898186215134864&amp;postID=8495075741589877986' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/8495075741589877986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4902898186215134864/posts/default/8495075741589877986'/><link rel='alternate' type='text/html' href='http://ananthavele
