Thursday, April 29, 2010

வீட்டுக்கொருவர் ….

அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்படிச் சொல்வது?.. பிள்ளைகள்… வீடு வளவு, மாடுகன்றுகள் என்று சொத்துக்கள் அனைத்தையும் எத்தனை வருசமாப் பொத்திக் காத்து வந்தார். அண்ணனை அவங்கள் வந்து கூட்டிப்போனபோது அவர் பட்ட பாடு… சொல்லமுடியாதது. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. பெத்து வளர்த்து ஆளாக்கியெடுக்கப் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும் எத்தனை நாள் அம்மாவும், அப்பாவும் எங்களுக்காகப் பட்டினி கிடந்திருப்பாங்கள். அறிவழகன் குலுங்கி அழுதான். அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்காகக் கட்டியிழுத்துப் போன ஆட்டுக்குட்டியைப் போல அண்ணன் போனதை இன்னும் எண்ணியெண்ணி ஏங்கித்தவிக்கும் அந்தப் பெற்ற மனதின் துடிப்பைச் சொல்லில் வடிக்கேலாது. அந்தக் கவலையில் மூழ்கிப்போன அவருக்கு உள்ளவை யாவும் அழிக்கப்பட்டு விட்டன.…ஷெல்லடியினால் அவரது கண்முன்னாலேயே மாடுகள் உடல்சிதறித் துடித்துச் செத்தகாட்சியை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. வாய் பேசாத ஜீவன்கள் என்ன செய்தன? எல்லாவற்றையும் இப்படி..பறிகொடுத்து…யாரால தாங்கமுடியும்? அவரால நடக்கமுடியாது. உடலெங்கும் ஷெல்லடிக் காயங்கள். கொத்தணிக்குண்டின் நச்சுப்புகைபட்டு தோல் எரிந்து அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது ஏக்கத்த எப்படிப் போக்குவது? பேயறைந்தமாதிரி… பங்கருக்குள் ஒரே திசையைப் பார்த்தபடி குந்தியிருக்கிறார். சுதந்திரமாய் நடமாடித்திரிந்த மக்களுக்குப் போக்கிடம் இல்லாது பங்கருக்குள்ளதான் சீவியம். புங்கருக்குள்ளே இருந்தவாறு ஆறிவழகனின் இதயம் அழுதது.

தனது அம்மாவைப் பார்க்கிறான். அம்மா தலைவாரிச் சீவி மாதங்களாகி விட்டன. எல்லாத் தாய்மாரும் அப்படித்தான். ஏன் இளம் கன்னியர்களும் இப்படித்தான். இந்த வன்னியில பங்கருக்குள்ள பட்டினியோட எத்தனை நாளைக்குக் கிடக்கிறது. வெளியில் தலைகாட்டினா ஷெல் விழுந்து தலைதெறிக்கும். நிலம் அதிரும். “கடவுளே பங்கருக்கு மேல ஷெல் விழாமக் காப்பாற்று. இந்த மக்களுக்கு வந்த மாயமென்ன? வற்றாப்பளைத் தாயே நீதான் துணை. கதிர்காமத்துக் கந்தா …கடம்பா …கதிர்வேலவனே.. ” அம்மாவின்ர வேண்டுதல் கந்தனுக்குக் கேக்குமா? இப்ப கதிர்காமத்துக் கந்தனுக்குத் தமிழ் விளங்குமா? அவருக்குச் சிங்களம்தான் விளங்கும். பூசை அர்ச்சனைகள் எல்லாம் சிங்களத்தில்தான் செய்கிறார்கள். தூரத்திலிருந்து ஒலிபெருக்கிச் சத்தம். கேட்கிறது. “என்ன சத்தம் அது. பிரித் ஓதுறாங்களோ?” கந்தையர் கைகளால் பொத்தியிருந்த காதுகளை விடுவித்துக் கேட்கிறார். “தங்கட பக்கம் வரட்டாம். பாதுகாப்புத் தாறங்களாம். சனங்களோட சனங்களா போவமே”? அறிவழகன் மெதுவாகச் சொன்னான்.

மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. “தம்பி பங்கருக்குள்ள வாற தண்ணிய அந்தப்பானைக்குள்ள கொஞ்சம் பிடி. வுடித்துக் குடிப்பம். குடிக்கவும் தண்ணியில்ல. பசிக்குத் தொண்டையையாவது நனைப்பம்”. அம்மா சொல்லவும் அறிவழகன் பானையை எடுத்து பங்கருக்கு வெளியே வைக்கிறான். மழைநீர் அதற்குள் சேருகிறது. ஷெல்லடி தொடருகிறது. இடிமின்னலுடன் சோவென மழை வாரியடிக்கிறது. பங்கருக்குள் இப்போது மழைநீர் நிறைகிறது. அதனை உள்நுழையவிடாது அறிவழகன் தடுக்கிறான். அவனையும் மீறி தண்ணீர் உள்ளே கசிந்து வருகிறது. இனியும் தாக்குப்பிடிக்கேலாது. “கந்தையாண்ணே ஷெல்லடி குறைந்ததும் வெளியில வாங்க. இனி ஒன்றும் செய்யேலாது. என்னால இனித்தாங்கேலாது. உடம்பெல்லாம் எரிகாயம் எரியுது. ஏப்படியென்றாலும் செத்துப்போறது நிச்சயம். அதிர்ஸ்டம் இருந்தால் யாராவது தப்பிப் பிழைக்கலாம். வாறது வரட்டும். நம்மட வரலாற்றச் சொல்லுறதுக்கும் ஆக்கள் வேணுந்தானே” சாமித்தம்பியர் விரக்தியின் விளிம்பில் இருந்து சொன்னார். அவரது உடலெங்கும் எரிகாயம். அதன் வேதனையைத் தாங்கமுடியாது தவித்துக்கொண்டிருப்பவர். அவர் சொன்னது சரியாகத்தான் பட்டது. செய்தி பங்கர்களுக்குப் பரவியது. புற்றுக்குள்ளிருந்து வெளிவரும் ஈசல்களைப்போல் சனங்கள் பிள்ளைகுட்டிகளோட மழையிருளில் பங்கரை விட்டு வெளியில் வந்தனர். மயான அமைதி. எங்கும் வெறிச் சோடிக்கிடந்தது.

கட்டிடங்கள், மரங்கள் ஒன்றையும் காணவில்லை. கேத்துக்கு வெளியாய் தெரிகிறது. மழைமேக மூட்டத்தின் ஊடாகத் தெரியும் வெள்ளிப் பொட்டுக்களின் வெளிச்சம் பூமியில் பட்டுத் தெறிக்கிறது. இருளில் இருந்து பழக்கப்பட்டால் இருளும் வெளிச்சமாகத்தான் தெரியும். இந்தச் சனங்களுக்கு இப்போது பழக்கமாகிவிட்டது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் வெட்ட வெளியாய் அந்த இருளிலும் தெரிந்தது. பள்ளங்களில் இருள்பதுங்கித் தொட்டந்தொட்டமாகத் தெரிந்தது. பள்ளம் படுகுழிகளாய், நிலம் பாறுண்டு கிடந்தது. ஷெல்விழுந்து வெடித்து உடலங்கள் சிதறிக் கிடந்தன. எங்கும் பிணவாடை. அந்த இருளில் உயிர் தப்பினால் போதும் என்ற உந்தல்வேறு. உயிர் தப்பியவர்கள் சாரிசாரியாக இடறிவிழுந்து நடந்தார்கள். கால்களில் இடறிய உடல்களைக் கடந்து நடந்தார்கள். குற்றுயிராய்க் கிடந்தவர்களின் முனகல் இருளில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

எப்படி வாழ்ந்த சனங்கள் இப்படிச் சின்னாபின்னமாகி குற்றுயிருடனும், உயிரற்ற சடலங்களாகவும் சிதறிக்கிடக்கின்றனர். யாருக்கும் உதவக்கூடிய நிலையில் யாரும் இல்லை. ‘ஆண்ட இனமிங்கு மாண்டு கிடக்குதையோ’ அறிவழகனின் மனம் அங்கலாய்ந்தது. குலுங்கி ஏங்கிக்கலங்கியது. கண்கள் குளமாகிக் கண்ணீர் கொட்டியது. அவனது கண்கள் பொலபொலத்த வண்ணமிருந்தன. நடக்கும்போது ஒரு உடலில் காலிடறி விழுந்தான். அதனை அணைத்து முகத்தைப் பார்த்தான். அந்த உடலை அடையாளம் காணமுடியவில்லை. பிணவாடை அவனைக் கலக்கியது. அந்த உடலை அடக்கம் செய்யவும் அவனால் முடியாது. அங்கே சுணங்கினால் அவன் உயிரிழக்க நேரிடும “தம்பி யோசியாத ஐயா. நம்மலால ஒண்ணும் செய்யேலாது. எழும்பி ஓடிவா”. அவனை இழக்க அந்தப் பெற்ற மனம் இடம்கொடுக்கவில்லை. அம்மாவுக்குக் கொஞ்சம் துணிச்சல் இருந்தது. “எழும்பி கெதியா வா” அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டான்.;. அப்புவை எப்படியும் கரைசேர்க்க வேண்டும். அவரது உயிரைக் காக்க வேண்டும். இவ்வளவு காலமும் எங்களை வளர்த்து ஆளாக்கிய அப்பு இப்படி ஆளாக்கப்பட்டு விட்டார். எழுந்து ஓடி தனது அப்பாவைத் தாங்கியபடி நடந்தான்.

உப்புநீர் சிற்றாறு குறுக்கிட்டது. ஆறு ஆழமற்றது. அதனைக்கடந்து சென்ற பழக்கமுண்டு. பலருக்குப் படுகாயங்கள். உடல்முழுவதும் எரிந்து மேற்தோல் உரிந்திருந்தது. குறுக்கோடிய ஆற்றைக் கடக்க வேண்டும். உப்புத்தண்ணீர் எரிகாயங்களைக் கழுவின. ஏரிச்சலெடுத்து உருண்டு துடித்தார்கள். திராணியுள்ளவர்கள் சிலரைச் சுமந்தும் நடந்தனர்.
அந்தப்பக்கம் ஷெல்லடியில்லை. ஆனால் சனங்களுக்கு நடக்கத் திராணியில்லை. பசியும், பட்டினியும், பயப்பிராந்தியும் அவர்களை வாட்டியெடுத்தது. ‘இனியொரு மனிதப்பிறவி வேண்டாமடா சாமி. அதுவும் தமிழனாகப் பிறக்கவே கூடாது. சபிக்கப்பட்ட இனம்.’ வுhய் முணுமுணுத்தவண்ணம் இருந்தன. காயப்பட்டவர்களும், உடல்நலம் குன்றியோரும் அதிகமாகக் காணப்பட்டனர். சிலருக்குக் காயங்களிலிருந்து சீழ்வடிந்து மணத்தது. முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்கள் காயப்பட்டவர்களையும், முதியவர்களையும் தூக்கிக் கரைசேர்த்தனர். அப்படித் தூக்கும்போது “ஐயோ அம்மா” எனக் கதறினர். வெடிச்சத்தங்கள் தூரத்தில் தொடர்ந்தன. “எல்லாரும் அப்படியே நிலத்தில குப்புறப் படுத்துக் கொள்ளுங்கோ. கட்டளைகள் பிறந்தன”. சனங்கள் நிலத்தோடு தம்மைச் சங்கமப் படுத்திக்கொண்டனர். சேறும் சகதியும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.;. போர் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு உறக்கம் என்பதே கிடையாது. சின்னஞ்சிறிசுகள் வீரிட்டன. அமைதியானதும் எழுந்து நடந்தனர்.

ஆற்றைக்கடந்து வடலிப்புதருக்குள் நுழைந்தனர். உயர்ந்த மரங்களைக் காணவில்லை. “பொழுதுபுலரும் வரை இங்கேயே கிடப்பம். விடிந்ததும் வெள்ளக் கொடியக்காட்டிச் சரணடைவம்’. கந்தையர் கூறினார். “இப்படியே இப்பவே போனால் நல்லதுதானே”? சாமித்தம்பி அவசரப்படுத்தினார். “அவங்களுக்கு யாரெண்டு தெரியும்? சுட்டுப்போட்டால்.. அவங்களிட்டத் துவக்கிருக்கு. இவ்வளவு தூரம் வந்திற்றம். பொறுத்த நாங்க கொஞ்சம் பொறுப்பம்.” எல்லோரும் அமைதியானார்கள். பசியும் களைப்பும் வாட்டியது. எல்லோரும் பட்டினியாலும். பயத்தினாலும் வாடி மெலிந்திருந்தார்கள். பட்டினி போட்டால் எவரும் சரணடையத்தான் செய்வார்கள். பண்டைய யுத்தச் சாணக்கியத்தில் பட்டினி நல்லதொரு ஆயுதமாகப் பயன்பட்டதாம். கொடுமையான யுத்தம் இது. நச்சுவாயு கலந்த குண்டுகளைப் போட்டுச் சாகடிக்கிறாங்கள். நாங்க என்ன எதிரிகளா? நாங்களும் இந்தநாட்டு மக்கள்தானே? ஏன் இப்படிச் செய்யுறாங்கள். ஆளுக்காள் கேட்டவாறே அப்படியே குந்தியிருந்தார்கள். அறிவழகன் மனதில் போராட்டம்.

விடிந்து கொண்டு வந்தது. கந்தையர் எல்லோரையும் உசார்படுத்தி எழுப்பி வரிசையில் நிற்கவைத்தார். வரிசை நீண்டு இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு நின்றது. சனங்களின்; கைகளில் பொலித்தின் பைகள் மட்டுமிருந்தன. ஆமிக்கரங்கள் இவர்களைக் கண்டிருக்க வேண்டும். தலைக்கு மேலால் வெடிகள் பறந்தன. சனங்கள் அலறியடித்துப் பதுங்கினர். கந்தையர் தனது தலையிலிருந்த துவாயை அவிழ்த்து தடியில் கட்டி சமாதானச் சமிக்ஞை கொடுத்தார். அவருக்கும் காயங்கள் இருந்தன. அவருக்கு மனத்தைரியம் கொஞ்சம் அதிகம். மனத்தைரியம் இருந்தால் உடல் உளவலிகளையும். பெரிய பிரச்சனைகளையும் சமாளித்துக் கொள்ளலாமாம். வெடிச் சத்தங்கள் குறைந்து ஓய்ந்தது. பொழுது புலர்ந்து வெயில் எறிக்கத் தொடங்கியிருந்தது. மழைபெய்த தரையில் சூரிய வெப்பம் ஏறித் தகித்தது. எரிகாயங்களில் எரிவு அதிகரித்தது. பசித்துக் களைத்த உடல்களில் இருந்து வியர்த்துக் கொட்டியது. இராணுவ வாகனங்கள் சுற்றி வளைத்தது. பயம் மக்களைக் கௌவிக்கொண்டது. கந்தையருக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும். முன்னால் வந்து விசயத்தை விளக்கினார்.

வரிசையில் வரும்படி கட்டளைபிறந்தது. நடந்தார்கள். நடக்கத் தெம்பில்லை. சிலர் விழுந்து எழும்பினார்கள். வரிசை வளைந்து வளைந்து நகர்ந்தது. சனங்கள் வருவார்கள் என்று தெரிந்து இராணுவம் ஆயத்தமாகத்தான் இருந்தது. பிளாஸ்ரிக் தாங்கிகளில் தண்ணீர் வசதிகள் தெரிந்தன. லொறிகளில் உணவுப் பொட்டலங்கள் வந்தன. கொடுக்கத் தொடங்கினார்கள். உணவுப் பொட்டலத்தைக் கண்டதும் வரிசையாக வந்த மக்கள் வரிசை குழம்பி ஆளுக்காள் தள்ளுண்டு விழுந்து எழும்பி… பார்க்கப் பரிதாபமாகவும் கோபமாகவும் இருந்தது. “என்ன தமிழ் ஈழம் வேணாமா”? தவித்த முயல்களாக வந்தவர்களுக்கு சில சிப்பாய்களிடம் இருந்து நக்கலும் வந்தது. சில சிப்பாய்களுக்குச் சிரிப்பாக இருந்தது. அதே வேளை சிலருக்குப் பரிதாபமாகவும் இருந்தது.

இப்போது இந்தத் தமிழ் மக்கள் அடிமையாகி அகதிகளாகிவிட்டார்கள். ஒருபிடி உணவுக்காகவும், ஒதுங்கி உயிர்தப்புவதற்காகவும் அடங்கி ஒடுங்கி நின்றார்கள். புதுமாத்தளன் பகுதி இப்போது புகலிடமாகத் தெரிந்தது. பெயர்கள் பதியப்பட்டன. ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டார்கள். இளம் வயதினரை வேறாகப் பிரித்தெடுத்தார்கள். ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பதுபோல் கம்பிவேலி போட்டுக் காவலிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆபிரிக்காவினுள் புகுந்து பழங்குடி மக்களை வேட்டையாடிப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்துக் கப்பலில் கொண்டு போய் ஏலத்தில் விற்பார்கள். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று பார்க்க மாட்டார்கள். தாய் வேறு, தந்தை வேறு, பிள்ளைகள் வேறாக விற்பார்கள். ஏலத்தில் வாங்கியவர்கள் அமெரிக்க நாட்டில் அடிமைகளாகத் தமது பருத்தித்தோட்டத்தில் வேலை செய்யப்பணித்தார்கள். கூலியில்லை. அரை வயிற்றுக்குக் கூழ்கிடைக்கும் உரிமையில்லை. சவுக்கடி கிடைக்கும். அதனை அறிவழகன் நினைந்து கொண்டான்.

இப்பொழுது ஒரு நிம்மதியைக் கண்டார்கள். வெடிச்சத்தமில்லை. பங்கரும் இல்லை. ஆனாலும் முள்ளுக்கம்பி வேலிக்குள் சிறைவாசம். “இப்ப எங்கட கையில ஒண்டுமில்ல. வீசின கையும் வெறுங்கையுமாக. உயிர்தப்பி வந்து சேந்திட்டம். இந்தக் கம்பி வேலிக்குள்ள வந்தாச்;சி. என்ன செய்யப் போறாங்களோ தெரியாது. எத்தனை மாதங்களுக்கு இப்படிச் சிறையிருப்பம்”? தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். கொழுத்தும் வெயில் சுட்டெரித்தது. “எல்லாரும் ஏறுங்க வண்டியில”. சிங்களத்தில் கட்டளை வந்ததும் ஏற்றப்பட்டார்கள். புதுமாத்தளன் கடற்கரைக்கு பஸ்வண்டி சென்றது. அங்கிருந்து படகுகளில் கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள். கப்பல் புல்மோட்டை நோக்கி நகர்ந்தது.

இருள் பரந்துகொண்டு வந்தது. சிறிய கடற்படைத்தளம் புடவைக்கட்டு ஆற்றுமுனையில் இருந்தது. கப்பல் ஜெட்டியில் தரித்ததும் பயணிகள் இறக்கப்பட்டார்கள். புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலையின் கட்டிடங்கள் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிக ஆஸ்பத்திரியும் உருவாகிவிட்டது. காயப்பட்டவர்களையும், நோய்வாய்ப் பட்டவர்களையும் ஆஸ்பத்திரி பாரமெடுத்தது. காயப்பட்டவர்களை யாரும் பார்க்க முடியாது. இந்திய டாக்டர்கள் கடமையில் ஈடுபட்டனர். அறிவழகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன இது? டாக்டர்களா இராணுவத்தினரா? அவனுக்குப் பரியவில்லை. டாக்டர்களின் இடுப்பிலும் பிஸ்ரல்கள். பயமாக இருந்தது.

பாடசாலைக் கட்டிடங்கள் நிரம்பி வழிந்தது. உடலாலும் உள்ளத்தாலும் நொந்த மக்கள் கூனிக்குறுகிக் கிடந்தனர். அகதிமுகாங்களாயின. அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சுற்றிவர ஆயுதமேந்திய இராணுவத்தினர் காவலிருந்தனர். இதில இயக்கத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழல் பயிற்சி அளிக்கப் போகிறோம். அப்படிப் பட்டவர்கள் தமது பெயரைத் தரவேண்டும். நாங்களாகக் கண்டுபிடித்தால் தண்டனைதான். ஆறிவிப்பபைக் கேட்டதுமு; இளைஞர் யுவதிகளிடையே ஓரு புயல் உருவாகிவிட்டது. பலர் தொழில்பயிற்சி பெறுவது நல்லது. சுயதொழில் செய்து வாழலாம். பெயர்களைப் பதிந்தனர்.

சற்று நேரத்துக்கெல்லாம் வாகனங்கள் வந்தன. பெயர்பட்டியல் வாசிக்கப் பட்டது. “ஏறுங்கள் வாகனங்களில்.” கட்டளை பிறந்தது. பார்த்துக் கொண்டிருந்த வாட்டசாட்டமான இளைஞர் யுவதிகளையும் பலாத்காரமாக வேறு வாகனங்களில் ஏற்றினர். அறிவழகனும் ஏற்றப்பட்டான். வுhகனங்கள் புறப்பட்டன. “சட்டி சுடுகுதென்று பயந்து நெருப்புக்குள்ள விழுந்தமாதிரிக் கிடக்கு. அவங்கட கட்டுப்பாட்டுல இருந்தம். வீட்டுக் கொருவர் வாங்க. என்று பிடிச்சிக் கொண்டு போனார்கள். பயந்து இங்கால, இவங்களிட்ட வந்தால் எல்லாரையும் கொண்டு போறாங்க. யாரிட்டச் சொல்வது.? தமக்குள் சொல்லிச் சொல்லி தேம்பினார்கள். தூரத்தே சரமாரியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. மிஞ்சியவர்களை ஏற்றுவதற்கு வெற்று வாகனங்கள் மட்டும் திரும்பி வந்தன. சமைத்த உணவு பாத்திரங்களில் அப்படியே கிடந்தது. அங்கு இருந்தவர்களுக்குப் பசிக்கவில்லை.

Read more...

உன்னைப் பெற்றதால்…..

ஈச்சிலம்பற்று அழகான கிராமம். வரலாற்றுப் பெருமைமிக்க செம்பகவல்லி அம்மனின் கோயில் உள்ள கிராமம். உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். உள்ளத்தால் கோடீஸ்வரர்களாக விளங்கினார்கள். நல்லவர்களாகவும் வல்லவராகவும் வாழவேண்டும் என்ற மனங்கொண்டவர்கள். வெருகல் கங்கை பாய்ந்து வளம்கொடுக்கும். வயல்விளைந்து கிடக்கும். ஆநிரைகள் அசைபோட்டுப் பால் சொரியும். கிராம மக்களை நாட்டின் பிரச்சினை வாட்டியெடுத்தது. பலர் காணாமல் போனார்கள். எல்லோரும் அகதிகளானார்கள். தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவர்கள் ஏராளம். வறுமை தாண்டவாமாடியது. சிறுவர்களும் உழைக்க வேண்டியிருந்தது. கல்வியில் மேம்பட வேண்டும் கல்வியினால் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையில் உயரலாம். என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதிபரும் ஆசிரியர் சிலரும் பாடுபட்டார்கள். இரவு பகலாக உழைத்தார்கள். பாடசாலை எழுச்சி கொண்டது.

பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் வரவில்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அதிபர் பாடங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்கள் உதவின. தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்க முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுதொகை வேதனமாக வழங்கப்பட்டது. மாணவர்களது நன்மை கருதி ஒரு குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் அதிபர் பெற்றுக் கொடுத்தார். அதிபர் தனது ஆசிரியர்களின் உதவியோடு பெற்றாரைக் கண்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெற்றார்கள் விழித்துக் கொண்டார்கள். மாணவர்களுக்கு புத்திமதிகள் கூறினார். பழயமாணவர் சங்கத்தின் உதவியைப் பெற்றார். அவர்கள் பாடசாலைக்காக உழைத்தார்கள். பாடசாலை விழித்துக் கொண்டது.

நடேசன் பதினோராம் வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா கமலம்தான் எல்லாம். தம்பி கணேசன் மட்டும் இருந்தான். கணேசன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். மாதவனுக்கு அம்மா இல்லை. அவனுக்கு அப்பா மணியம்தான் எல்லாம். மாதவனும் நடேசனோடு பதினோராம் வகுப்பில் படிக்கிறான். மாதவனின் தம்பி நவநீதன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் வறுமைகாரணமாக உழைக்கவேண்டியிருந்தது. கமலத்தின் அண்ணன்தான் மணியம். தங்கைக்கு உதவியாக மணியம் இருந்தார்.

ஈச்சிலம்பற்றுக்கு வளமூட்டுவது வெருகல் கங்கைதான். கங்கை நீரைச் சுமந்து சலசலத்தோடும். வெருகலம்பதியானை அடியார்கள் வணங்கி அவன் கருணையைப் பெறுவார்கள். பண்டையப் பெருமைக்கும் தமிழர்களின் இருப்புக்கும் அடையாளம் அந்த வேல்முருகனின் கோயில். நீரின் சிலிர்பில் கரையோரத் தாவரங்கள் மதாளித்து மகிழும். வெருகல் கங்கை ஓரமாக வளமான நிலம் கிடந்தது. தண்ணீரை வேண்டியளவு வெருகல் கங்கை வழங்கியது. பம்பிகள் தேவைப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் அவற்றுக்கு உதவின. கங்கை ஓரம் தோட்டங்கள் பெருகின. மக்கள் ஆர்வமாகச் செயற்பட்டார்கள். மணியமும் கமலத்துக்கு சேர்ந்து தோட்டம் செய்தார்கள். இருவரது தோட்டங்களும் அருகிலேயே இருந்தன. அவர்களுக்குப் பொதுவாக பம்பி கொடுபட்டது.

நடேசனின் தாய் கமலம். தோட்டத்தில் தனியாகப் பாடுபடுவதைப் பிள்ளைகள் விரும்பவில்லை. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். தோட்டத்தில்தான் பொழுது போகும்.
பக்கத்தில் மாதவனின் தோட்டமும் இருந்தது. எல்லோரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வார்கள். பயிர்கள் செழித்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. அவற்றுக்குக் காவல் அவசியம். இரவில் தோட்டத்திலேயே தங்குவார்கள். தோட்டத்தில் ஒத்தாப்பு இருந்தது. அது காவலுக்கும், இளைப்பாறுவதற்குமாகக் கட்டபட்ட தற்காலிகச் சிறுகுடில். அரிக்கன் லாம்பு ஒத்தாப்பில் தொங்கும். வேலைகள் முடிந்ததும் இரவில் பாடங்களைப் படிப்பார்கள்.வெருகல் கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்புப் புதர்கள் தொட்டம் தொட்டமாக ஆடிக்கொண்டிருந்தன. கங்கையின் குளிர்ந்த நீரை பம்பிகள் இறைத்துக் கொண்டிருந்தன. தண்ணீர் காய்கறித் தோட்டங்களைக் குளிப்பாட்டியது. பயிர்கள் சிரித்துக் காற்றில் ஆடின. கத்தரி, மிளகாய், வெண்டி, பூசணி, வெங்காயம் எனப் பயிர்கள் காய்த்துக் குலுங்கின.

















கிராமத்துப் பண் காற்றில் தவழ்ந்து வந்தது. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய வேலை. இன்னும் முடியவில்லை. அவசரமாகத் தோட்டத்தில் வேலைகளைச் செய்தார்கள்.“மாதவன்

நேரமென்ன”? நடேசன் சத்தமிட்டான். பம்பி இரைந்து கொண்டிருந்தது. “சரியாக ஏழு மணி. ஏழரைமணிக்குப் பாடசாலையில் நிற்க வேண்டும். வெளிக்கிடு போவம”;. மாதவன் சத்தமாகச் சொன்னான். தோட்டத்தை ஒருமுறை பார்த்தான். பூசணிக்காய்கள் கண்ணைக்கவர்ந்தன. கத்தரியும் கறிமிளகாயும் அவனைப் பார்த்துச் சிரித்தன. வழியில் சந்தை இருக்கிறது. கொடுத்துவிட்டுப் போகலாம். சிலவகைக் காய்கறிகளைப் பிடுங்கினார்கள். மாமா மூடையில் கட்டினார்.

செம்பகா மகாவித்தியாலயம் ஈச்சிலம்பற்றுக் கிராமத்தில் இருந்தது. தோட்டம் சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. நிறுவனத்தின் மூலம் அதிபர் சைக்கிள் வழங்கியிருந்தார். நடேசனுக்கும், மாதவனுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கிடைத்தது. “நீங்கள் பாடசாலைக்கு வருவதற்காகத்தான் இந்தச் சைக்கிள். ஒழுங்காக வந்து படித்து நல்லநிலைக்கு வரவேண்டும”;. அதிபர் அறிவுரை கூறிக்கொடுத்தார். அது பேருதவியாக இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர். ஒருவர் பெடலை மிதிப்பார் இன்னொருவர் சைக்கிள் பாரில் இருப்பார். கரியரில் காய்கறி மூடை ஒன்றிருக்கும். அவரது ஒருகால் பெடலில் இருக்கும். விரைந்து சைக்கிள் ஓடும். ஈச்சிலம் பற்றுச் சந்தையில் காய்கறி மூடைகள் இறக்கபடும். ஏழுமணிக்கு சைக்கிள்கள் இரண்டு பாடசாலை வளாகத்தினுள் புகுந்துவிடும். அவர்கள் போனதும் முதலாம் மணி ஒலிக்கும். பாடசாலைக்குப் பிந்தியது கிடையாது.

வன்செயலின்போது அவர்களது வீடு அழிக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தற்காலிகக் குடிலை அமைத்துக் கொடுத்திருந்தது. வீட்டில் ஆச்சியிருந்தார். பகலில் அவர் சமைப்பார். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போவார்கள். ஆச்சி சமைத்துவைத்திருக்கும் உணவை நால்வரும் உண்பார்கள். மாலைநேர வகுப்புகளுக்குத் தவறாது போவார்கள். வகுப்புக்கள் ஐந்தரை மணிவரை நடக்கும். அதிபர் வகுப்புக்களைச் சுற்றி வருவார். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். வகுப்புக்கள் முடிந்ததும் தோட்டத்துக்குப் போய்விடுவார்கள்.

வழமைபோல் தோட்டத்திலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். வட்டவானைக் கடந்திருப்பார்கள். எங்கும் பதட்டமாக இருந்தது. வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது. ஆட்டிலறி ஷெல் சரமாரியாக வந்து வீழ்ந்து வெடித்தது. வீதியில் இருந்த கொங்கிறீற் பாலத்தினடியில் தஞ்சமானார்கள். அரைமணிநேரம் இடைவிடாது நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீதியால் ஓடிக் கொண்டிருந்தார்கள். “எங்கப்பா ஓடுவது? …ஓடியோடிக் களைச்சாச்சி. இனியும் ஓடேலாது.” முதியவர்கள் பலர் நடக்க இயலாமல் விழிபிதுங்க நின்றார்கள். “இப்படி நடக்குமென்று ஆருக்குத் தெரியும்? இதில இந்த மரத்துக்குக் கீழ் நிற்பம். நடக்கிறது நடக்கட்டும்.” அவர்கள் நின்றார்கள். சனங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனால் இந்த முதியோர்கள் என்ன செய்வார்கள்?.

நடேசன் எட்டிப்பார்த்தான். இரண்டு மூன்று முதியோர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். என்ன செய்யலாம்? யோசித்தார்கள். அவர்கள் பகலில் உடுப்பதற்காக சாறன்கள் கொண்டுவருவது வழக்கம். “மாதவன், முதியோருக்கு உதவவேண்டும.; இதனை அதிபரும். ஆசிரியர்களும் சொல்லித் தந்தவர்கள். இப்ப என்ன செய்வம்.? நடேசன் ஆலோசனை கேட்டான். கணேசன் விவேகி. “அண்ணா எங்கட சாறன் இருக்கு. இப்ப நமக்குத் தேவை நாலு தடிகள்தான்”. சட்டெனக் கூறினான். நவநீதனின் கண்கள் பக்கத்து வயல்வேலியைப் பார்த்தன. உறுதியான கதியால்கள் தென்பட்டன. இருவரும் பாய்ந்தார்கள். நான்கு கதியால்கள் வந்தன. வெடிச்சத்தம் குறைந்திருந்தது. சாறங்களை எடுத்து விரித்தார்கள். அதற்குள் தடிகள் புகுந்தன. தற்காலிக கட்டில்கள் தயார். வெளியில் வந்தார்கள். முதியோர்கள் கிடந்த இடத்துக்கு ஒடினார்கள்.

இரண்டு பேராகச் சேர்ந்தார்கள். முதியவர்களைத் தற்காலிகக் கட்டிலில் வைத்தார்கள். தூக்கினார்கள். அத்தனை பேரையும் பாதுகாப்பாகப் பாலத்துக்குக் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சிலருக்குச் சிறிதான காயங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரைப்படுக்க வைத்தார்கள். இதயத்துடிப்பு நிற்பதற்கான அறிகுறி தென்பட்டது. நடேசன் அவரது நெஞ்சில் தனது கைகளைப் பதித்து முதற்சிகிச்சை அளித்தான். அது பலன்கொடுத்தது. பாடசாலையில் இந்தப் பயிற்சியினைப் பெற அதிபர் வசதிகள் செய்து கொடுத்திருந்தார். அப்பயிற்சி கைகொடுத்து உதவியது. அதிபரை நினைந்து கொண்டார்கள். ஷெல்சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

நடேசனும் நவநீதனும் சைக்கிள்களில் விரைந்தார்கள். இருவர் அவர்களுக்குத் துணையாக நின்றனர். சந்தியில் பிரதேசச் செயலாளரின் அலுவலகம் இருந்தது. சென்றார்கள். “ஷெல் அடிக்கிறாங்கள். என்னடா கண்டபடி சுத்துறீங்க”. பதட்டத்தோடு கூடியிருந்த பலர் அதட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. நேரே பிரதேசச் செயலாளரிடம் சென்றார்கள். அவரிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் ஆஸ்பத்திரிக்குக்கு முறையிட்டார். அம்புலனஸ் விரைந்தது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மாணவர்களது செயற்திறன் ஊரெங்கும் பரவியது. அதிபர் மதிபாலர் மகிழ்ந்தார். மாணவர்களைப் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சேவை செய்யும் ஏதிலியர் நிறுவனம் உதவியது. மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்த வழிசெய்தது. நடேசன் முன்மாதிரியாக இருந்தான். மாணவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டான். “நாம் மாணவர்கள். கஸ்டம் என்பது நமது உடன்பிறப்பு. அந்தக் கஸ்டத்தை நாம் வெல்லவேண்டும். படித்து நமது சமூகத்துக்குச் சேவைசெய்ய வேண்டும். நாம் நமது சகோதரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். பாடங்களைக் கவனமாகப் படிப்போம். சித்தியடைவோம்”. திடசங்கற்பத்தோடு மற்றமாணவர்களை உற்சாகப்படுத்தினான்.




பரீட்சையும் விரைந்து வந்தது. பரீட்சைக்குப் போகும் மாணவரை அதிபர், ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள். “வினாத்தாள்களை நன்கு வாசித்து விளங்கி விடையெழுதுங்கள். நீங்கள் அனைவரும் சித்தியடைவீர்கள். வாழ்த்தியனுப்பினார்கள். அதிபரின் அறிவுரையை நன்றாக விளங்கிக் கொண்டார்கள். பரீட்சையை நன்றாக எழுதினார்கள். பரீட்சை முடிந்ததும் தோட்டவேலையில் கவனம் செலுத்தினார்கள். மூன்று மாதங்கள் பறந்தோடின. பெறுபேறு வந்துவிட்டது. அதிபரும், ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். அவர்களது உழைப்பிற்கான அறுவடையை மாணவர்கள் பெற்றுக் கொடுத்துவிட்டார்கள். நடேசனும், மாதவனும் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தனர். முப்பது பிள்ளைகளும் முழுமையான சித்தி பெற்று உயர்கல்வி பெறத்தகுதி பெற்றிருந்தார்கள்.

ஈச்சிலம்பற்று செம்பகா மகாவித்தியாலயம் நிலவொளியில் பளிச்சிட்டது. செம்பகா மகாவித்தியாலயம் தனது பவளவிழாவுக்காகத் தன்னை அலங்கரிப்பதில் மூழ்கிக் கிடந்தது. சில்லென்ற மெல்லிய காற்று உற்சாகத்தை விதைத்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தனர். பெற்றார் தம்பங்கினை உணர்ந்து செயற்பட்டார்கள். பெரியதொரு நிகழ்ச்சி நிரல் தயாரானது. ‘சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனென்பார்கள்’. மாணவர்கள் படுகுஷியாக இருந்தனர். விடியவிடிய மக்கள் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குழுக்களாக இயங்கினர். பலருக்கு உறக்கமே வரவில்லை.

அதிகாலைப் பொழுது எட்டிப்பார்த்தது. மாவிலை தோரணங்கள் காற்றில் அசைந்து வரவேற்றன. மாணவர்களில் பலர் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருந்தார்கள். தங்களது கடமைகளை நன்குணர்ந்து செயற்பட்டார்கள். விழுமியக் கல்வி கொழுந்து விட்டிருந்தது. காலையில் இருந்து பலவிதமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ‘பண்பாட்டைக் காப்பது மாணவர்களது கடமை’ என்பது மாணவர்களது உள்ளங்களில் ஓடியது. அதிபரும், ஆசிரியர்களும் இதற்காகப் பாடுபட்டனர். மாணவர்களையும், அதிபர் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். கல்வித்திணக்களம் பாடசாலையைப் பாராட்டியது. பெற்றாரை உற்சாகப் படுத்தியது. மாணவர்களைப் பெருமைப்படுத்த முன்வந்தது. பெற்றாரோடு இணைந்து விழாவினை ஏற்பாடு செய்தது.

விழா தொடங்கியது பெற்றார்களது வரிசையில் கமலமும், மணியமும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் பெருமையோடு எழுந்தார். “வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எழுவோம். விழுவது எழுவதற்குத்தான். இதனை எனது மாணவர்கள் செயலில் நிலைநாட்டியுள்ளார்கள். இன்று கல்விப் பணிப்பாளர்களும், கல்விமான்களும் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் பாராட்டுவதற்காக. உங்கள் முயற்சி தொடரட்டும். மாணவர்களால் பாடசாலையும், கிராமமும் பெருமையடைகிறது”. அவர் மனதாரப் பாராட்டினார். கல்விப் பணிமனையினர் வாழ்த்திப் பரிசில்கள் கொடுத்தார்கள். பிரதேசச் செயலாளர் முதியவர்களைக் காத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். கமலமும், மணியமும் தங்கள் பிள்ளைகளின் செயலை எண்ணி மகிழ்ந்தார்கள்.


























உன்னைப் பெற்றதால்…..

ஈச்சிலம்பற்று அழகான கிராமம். வரலாற்றுப் பெருமைமிக்க செம்பகவல்லி அம்மனின் கோயில் உள்ள கிராமம். உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். உள்ளத்தால் கோடீஸ்வரர்களாக விளங்கினார்கள். நல்லவர்களாகவும் வல்லவராகவும் வாழவேண்டும் என்ற மனங்கொண்டவர்கள். வெருகல் கங்கை பாய்ந்து வளம்கொடுக்கும். வயல்விளைந்து கிடக்கும். ஆநிரைகள் அசைபோட்டுப் பால் சொரியும். கிராம மக்களை நாட்டின் பிரச்சினை வாட்டியெடுத்தது. பலர் காணாமல் போனார்கள். எல்லோரும் அகதிகளானார்கள். தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவர்கள் ஏராளம். வறுமை தாண்டவாமாடியது. சிறுவர்களும் உழைக்க வேண்டியிருந்தது. கல்வியில் மேம்பட வேண்டும் கல்வியினால் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையில் உயரலாம். என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதிபரும் ஆசிரியர் சிலரும் பாடுபட்டார்கள். இரவு பகலாக உழைத்தார்கள். பாடசாலை எழுச்சி கொண்டது.

பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் வரவில்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அதிபர் பாடங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்கள் உதவின. தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்க முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுதொகை வேதனமாக வழங்கப்பட்டது. மாணவர்களது நன்மை கருதி ஒரு குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் அதிபர் பெற்றுக் கொடுத்தார். அதிபர் தனது ஆசிரியர்களின் உதவியோடு பெற்றாரைக் கண்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெற்றார்கள் விழித்துக் கொண்டார்கள். மாணவர்களுக்கு புத்திமதிகள் கூறினார். பழயமாணவர் சங்கத்தின் உதவியைப் பெற்றார். அவர்கள் பாடசாலைக்காக உழைத்தார்கள். பாடசாலை விழித்துக் கொண்டது.

நடேசன் பதினோராம் வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா கமலம்தான் எல்லாம். தம்பி கணேசன் மட்டும் இருந்தான். கணேசன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். மாதவனுக்கு அம்மா இல்லை. அவனுக்கு அப்பா மணியம்தான் எல்லாம். மாதவனும் நடேசனோடு பதினோராம் வகுப்பில் படிக்கிறான். மாதவனின் தம்பி நவநீதன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் வறுமைகாரணமாக உழைக்கவேண்டியிருந்தது. கமலத்தின் அண்ணன்தான் மணியம். தங்கைக்கு உதவியாக மணியம் இருந்தார்.

ஈச்சிலம்பற்றுக்கு வளமூட்டுவது வெருகல் கங்கைதான். கங்கை நீரைச் சுமந்து சலசலத்தோடும். வெருகலம்பதியானை அடியார்கள் வணங்கி அவன் கருணையைப் பெறுவார்கள். பண்டையப் பெருமைக்கும் தமிழர்களின் இருப்புக்கும் அடையாளம் அந்த வேல்முருகனின் கோயில். நீரின் சிலிர்பில் கரையோரத் தாவரங்கள் மதாளித்து மகிழும். வெருகல் கங்கை ஓரமாக வளமான நிலம் கிடந்தது. தண்ணீரை வேண்டியளவு வெருகல் கங்கை வழங்கியது. பம்பிகள் தேவைப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் அவற்றுக்கு உதவின. கங்கை ஓரம் தோட்டங்கள் பெருகின. மக்கள் ஆர்வமாகச் செயற்பட்டார்கள். மணியமும் கமலத்துக்கு சேர்ந்து தோட்டம் செய்தார்கள். இருவரது தோட்டங்களும் அருகிலேயே இருந்தன. அவர்களுக்குப் பொதுவாக பம்பி கொடுபட்டது.

நடேசனின் தாய் கமலம். தோட்டத்தில் தனியாகப் பாடுபடுவதைப் பிள்ளைகள் விரும்பவில்லை. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். தோட்டத்தில்தான் பொழுது போகும்.
பக்கத்தில் மாதவனின் தோட்டமும் இருந்தது. எல்லோரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வார்கள். பயிர்கள் செழித்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. அவற்றுக்குக் காவல் அவசியம். இரவில் தோட்டத்திலேயே தங்குவார்கள். தோட்டத்தில் ஒத்தாப்பு இருந்தது. அது காவலுக்கும், இளைப்பாறுவதற்குமாகக் கட்டபட்ட தற்காலிகச் சிறுகுடில். அரிக்கன் லாம்பு ஒத்தாப்பில் தொங்கும். வேலைகள் முடிந்ததும் இரவில் பாடங்களைப் படிப்பார்கள்.வெருகல் கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்புப் புதர்கள் தொட்டம் தொட்டமாக ஆடிக்கொண்டிருந்தன. கங்கையின் குளிர்ந்த நீரை பம்பிகள் இறைத்துக் கொண்டிருந்தன. தண்ணீர் காய்கறித் தோட்டங்களைக் குளிப்பாட்டியது. பயிர்கள் சிரித்துக் காற்றில் ஆடின. கத்தரி, மிளகாய், வெண்டி, பூசணி, வெங்காயம் எனப் பயிர்கள் காய்த்துக் குலுங்கின.

















கிராமத்துப் பண் காற்றில் தவழ்ந்து வந்தது. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய வேலை. இன்னும் முடியவில்லை. அவசரமாகத் தோட்டத்தில் வேலைகளைச் செய்தார்கள்.“மாதவன்

நேரமென்ன”? நடேசன் சத்தமிட்டான். பம்பி இரைந்து கொண்டிருந்தது. “சரியாக ஏழு மணி. ஏழரைமணிக்குப் பாடசாலையில் நிற்க வேண்டும். வெளிக்கிடு போவம”;. மாதவன் சத்தமாகச் சொன்னான். தோட்டத்தை ஒருமுறை பார்த்தான். பூசணிக்காய்கள் கண்ணைக்கவர்ந்தன. கத்தரியும் கறிமிளகாயும் அவனைப் பார்த்துச் சிரித்தன. வழியில் சந்தை இருக்கிறது. கொடுத்துவிட்டுப் போகலாம். சிலவகைக் காய்கறிகளைப் பிடுங்கினார்கள். மாமா மூடையில் கட்டினார்.

செம்பகா மகாவித்தியாலயம் ஈச்சிலம்பற்றுக் கிராமத்தில் இருந்தது. தோட்டம் சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. நிறுவனத்தின் மூலம் அதிபர் சைக்கிள் வழங்கியிருந்தார். நடேசனுக்கும், மாதவனுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கிடைத்தது. “நீங்கள் பாடசாலைக்கு வருவதற்காகத்தான் இந்தச் சைக்கிள். ஒழுங்காக வந்து படித்து நல்லநிலைக்கு வரவேண்டும”;. அதிபர் அறிவுரை கூறிக்கொடுத்தார். அது பேருதவியாக இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர். ஒருவர் பெடலை மிதிப்பார் இன்னொருவர் சைக்கிள் பாரில் இருப்பார். கரியரில் காய்கறி மூடை ஒன்றிருக்கும். அவரது ஒருகால் பெடலில் இருக்கும். விரைந்து சைக்கிள் ஓடும். ஈச்சிலம் பற்றுச் சந்தையில் காய்கறி மூடைகள் இறக்கபடும். ஏழுமணிக்கு சைக்கிள்கள் இரண்டு பாடசாலை வளாகத்தினுள் புகுந்துவிடும். அவர்கள் போனதும் முதலாம் மணி ஒலிக்கும். பாடசாலைக்குப் பிந்தியது கிடையாது.

வன்செயலின்போது அவர்களது வீடு அழிக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தற்காலிகக் குடிலை அமைத்துக் கொடுத்திருந்தது. வீட்டில் ஆச்சியிருந்தார். பகலில் அவர் சமைப்பார். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போவார்கள். ஆச்சி சமைத்துவைத்திருக்கும் உணவை நால்வரும் உண்பார்கள். மாலைநேர வகுப்புகளுக்குத் தவறாது போவார்கள். வகுப்புக்கள் ஐந்தரை மணிவரை நடக்கும். அதிபர் வகுப்புக்களைச் சுற்றி வருவார். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். வகுப்புக்கள் முடிந்ததும் தோட்டத்துக்குப் போய்விடுவார்கள்.

வழமைபோல் தோட்டத்திலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். வட்டவானைக் கடந்திருப்பார்கள். எங்கும் பதட்டமாக இருந்தது. வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது. ஆட்டிலறி ஷெல் சரமாரியாக வந்து வீழ்ந்து வெடித்தது. வீதியில் இருந்த கொங்கிறீற் பாலத்தினடியில் தஞ்சமானார்கள். அரைமணிநேரம் இடைவிடாது நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீதியால் ஓடிக் கொண்டிருந்தார்கள். “எங்கப்பா ஓடுவது? …ஓடியோடிக் களைச்சாச்சி. இனியும் ஓடேலாது.” முதியவர்கள் பலர் நடக்க இயலாமல் விழிபிதுங்க நின்றார்கள். “இப்படி நடக்குமென்று ஆருக்குத் தெரியும்? இதில இந்த மரத்துக்குக் கீழ் நிற்பம். நடக்கிறது நடக்கட்டும்.” அவர்கள் நின்றார்கள். சனங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனால் இந்த முதியோர்கள் என்ன செய்வார்கள்?.

நடேசன் எட்டிப்பார்த்தான். இரண்டு மூன்று முதியோர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். என்ன செய்யலாம்? யோசித்தார்கள். அவர்கள் பகலில் உடுப்பதற்காக சாறன்கள் கொண்டுவருவது வழக்கம். “மாதவன், முதியோருக்கு உதவவேண்டும.; இதனை அதிபரும். ஆசிரியர்களும் சொல்லித் தந்தவர்கள். இப்ப என்ன செய்வம்.? நடேசன் ஆலோசனை கேட்டான். கணேசன் விவேகி. “அண்ணா எங்கட சாறன் இருக்கு. இப்ப நமக்குத் தேவை நாலு தடிகள்தான்”. சட்டெனக் கூறினான். நவநீதனின் கண்கள் பக்கத்து வயல்வேலியைப் பார்த்தன. உறுதியான கதியால்கள் தென்பட்டன. இருவரும் பாய்ந்தார்கள். நான்கு கதியால்கள் வந்தன. வெடிச்சத்தம் குறைந்திருந்தது. சாறங்களை எடுத்து விரித்தார்கள். அதற்குள் தடிகள் புகுந்தன. தற்காலிக கட்டில்கள் தயார். வெளியில் வந்தார்கள். முதியோர்கள் கிடந்த இடத்துக்கு ஒடினார்கள்.

இரண்டு பேராகச் சேர்ந்தார்கள். முதியவர்களைத் தற்காலிகக் கட்டிலில் வைத்தார்கள். தூக்கினார்கள். அத்தனை பேரையும் பாதுகாப்பாகப் பாலத்துக்குக் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சிலருக்குச் சிறிதான காயங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரைப்படுக்க வைத்தார்கள். இதயத்துடிப்பு நிற்பதற்கான அறிகுறி தென்பட்டது. நடேசன் அவரது நெஞ்சில் தனது கைகளைப் பதித்து முதற்சிகிச்சை அளித்தான். அது பலன்கொடுத்தது. பாடசாலையில் இந்தப் பயிற்சியினைப் பெற அதிபர் வசதிகள் செய்து கொடுத்திருந்தார். அப்பயிற்சி கைகொடுத்து உதவியது. அதிபரை நினைந்து கொண்டார்கள். ஷெல்சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

நடேசனும் நவநீதனும் சைக்கிள்களில் விரைந்தார்கள். இருவர் அவர்களுக்குத் துணையாக நின்றனர். சந்தியில் பிரதேசச் செயலாளரின் அலுவலகம் இருந்தது. சென்றார்கள். “ஷெல் அடிக்கிறாங்கள். என்னடா கண்டபடி சுத்துறீங்க”. பதட்டத்தோடு கூடியிருந்த பலர் அதட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. நேரே பிரதேசச் செயலாளரிடம் சென்றார்கள். அவரிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் ஆஸ்பத்திரிக்குக்கு முறையிட்டார். அம்புலனஸ் விரைந்தது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மாணவர்களது செயற்திறன் ஊரெங்கும் பரவியது. அதிபர் மதிபாலர் மகிழ்ந்தார். மாணவர்களைப் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சேவை செய்யும் ஏதிலியர் நிறுவனம் உதவியது. மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்த வழிசெய்தது. நடேசன் முன்மாதிரியாக இருந்தான். மாணவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டான். “நாம் மாணவர்கள். கஸ்டம் என்பது நமது உடன்பிறப்பு. அந்தக் கஸ்டத்தை நாம் வெல்லவேண்டும். படித்து நமது சமூகத்துக்குச் சேவைசெய்ய வேண்டும். நாம் நமது சகோதரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். பாடங்களைக் கவனமாகப் படிப்போம். சித்தியடைவோம்”. திடசங்கற்பத்தோடு மற்றமாணவர்களை உற்சாகப்படுத்தினான்.




பரீட்சையும் விரைந்து வந்தது. பரீட்சைக்குப் போகும் மாணவரை அதிபர், ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள். “வினாத்தாள்களை நன்கு வாசித்து விளங்கி விடையெழுதுங்கள். நீங்கள் அனைவரும் சித்தியடைவீர்கள். வாழ்த்தியனுப்பினார்கள். அதிபரின் அறிவுரையை நன்றாக விளங்கிக் கொண்டார்கள். பரீட்சையை நன்றாக எழுதினார்கள். பரீட்சை முடிந்ததும் தோட்டவேலையில் கவனம் செலுத்தினார்கள். மூன்று மாதங்கள் பறந்தோடின. பெறுபேறு வந்துவிட்டது. அதிபரும், ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். அவர்களது உழைப்பிற்கான அறுவடையை மாணவர்கள் பெற்றுக் கொடுத்துவிட்டார்கள். நடேசனும், மாதவனும் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தனர். முப்பது பிள்ளைகளும் முழுமையான சித்தி பெற்று உயர்கல்வி பெறத்தகுதி பெற்றிருந்தார்கள்.

ஈச்சிலம்பற்று செம்பகா மகாவித்தியாலயம் நிலவொளியில் பளிச்சிட்டது. செம்பகா மகாவித்தியாலயம் தனது பவளவிழாவுக்காகத் தன்னை அலங்கரிப்பதில் மூழ்கிக் கிடந்தது. சில்லென்ற மெல்லிய காற்று உற்சாகத்தை விதைத்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தனர். பெற்றார் தம்பங்கினை உணர்ந்து செயற்பட்டார்கள். பெரியதொரு நிகழ்ச்சி நிரல் தயாரானது. ‘சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனென்பார்கள்’. மாணவர்கள் படுகுஷியாக இருந்தனர். விடியவிடிய மக்கள் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குழுக்களாக இயங்கினர். பலருக்கு உறக்கமே வரவில்லை.

அதிகாலைப் பொழுது எட்டிப்பார்த்தது. மாவிலை தோரணங்கள் காற்றில் அசைந்து வரவேற்றன. மாணவர்களில் பலர் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருந்தார்கள். தங்களது கடமைகளை நன்குணர்ந்து செயற்பட்டார்கள். விழுமியக் கல்வி கொழுந்து விட்டிருந்தது. காலையில் இருந்து பலவிதமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ‘பண்பாட்டைக் காப்பது மாணவர்களது கடமை’ என்பது மாணவர்களது உள்ளங்களில் ஓடியது. அதிபரும், ஆசிரியர்களும் இதற்காகப் பாடுபட்டனர். மாணவர்களையும், அதிபர் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். கல்வித்திணக்களம் பாடசாலையைப் பாராட்டியது. பெற்றாரை உற்சாகப் படுத்தியது. மாணவர்களைப் பெருமைப்படுத்த முன்வந்தது. பெற்றாரோடு இணைந்து விழாவினை ஏற்பாடு செய்தது.

விழா தொடங்கியது பெற்றார்களது வரிசையில் கமலமும், மணியமும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் பெருமையோடு எழுந்தார். “வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எழுவோம். விழுவது எழுவதற்குத்தான். இதனை எனது மாணவர்கள் செயலில் நிலைநாட்டியுள்ளார்கள். இன்று கல்விப் பணிப்பாளர்களும், கல்விமான்களும் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் பாராட்டுவதற்காக. உங்கள் முயற்சி தொடரட்டும். மாணவர்களால் பாடசாலையும், கிராமமும் பெருமையடைகிறது”. அவர் மனதாரப் பாராட்டினார். கல்விப் பணிமனையினர் வாழ்த்திப் பரிசில்கள் கொடுத்தார்கள். பிரதேசச் செயலாளர் முதியவர்களைக் காத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். கமலமும், மணியமும் தங்கள் பிள்ளைகளின் செயலை எண்ணி மகிழ்ந்தார்கள்.

Read more...

Sunday, April 25, 2010

தூக்கணாங் குருவிக் கூடு.

சாவகச்சேரி செழிப்பான அழகிய நகரம். சாவகச்சேரிச் சந்தை பிரசித்திபெற்றது. நல்ல மண்வளம் சாவகச்சேரியை சூழ்ந்துள்ளது. வயல்சார்ந்த நிலம் பரந்திருந்தது. உழைப்பால் உயர்ந்த மக்களைக் கொண்டது மா, பலா. தென்னை. பனை, வாழையெனப் பயன்தரும் மரங்கள் நிறைந்திருந்தன. பனைகள் வானுயர வளர்ந்து காற்றில் ஆடின. நுங்குக் குலைகள் சேர்ந்தாடின.
வயல்வெளியில் நெற்கதிர்கள் சாய்ந்தாடின. பறவைகள் பாட்டம் பாட்டமாய்ப் பறந்து திரிந்தன. சிட்டான் குருவிகள் வயல்வரம்புகளில் கூடுகட்டிக் குதூகலித்தன. தினையான் குருவிகள் பற்றைகளில் கூடுவைத்தன. உயர்ந்த பனையோலைகளில் தோரணங்கள் ஆடின. அவை தோரணங்கள் அல்ல. தூக்கணாங் குருவிகளின் கூடுகள். தோட்டங்களில் காய்கறி வகைகள் விளைந்தன. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். மண்டுவில்லேன் சிறுவர்கள் குறும்புக் காரர்கள். விடிந்தால் வயல்வெளிகளில் திரிவார்கள். பற்றைகளில் பதுங்கிக் குருவிகளைப் பிடிப்பார்கள்.

கூட்டமாகச் சேருவார்கள். பனைகளின் கீழ் சிறு கொட்டில்களைப் போடுவார்கள். கண்ணில் படுவதெல்லாம் அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள்தான். அவர்களுக்கு ஆண்பெண் என்ற வித்தியாசமில்லை. சாதிபோதம் கிடையாது. வெள்ளையுள்ளம் கொண்ட வண்ணத் தேவதைகள். வடலிகளுக்குள் புகுந்து ஓடுவார்கள். விளையாடுவார்கள். அடிக்கடி விளையாட்டுக்கள் மாறும். சந்தையும் குதூகலிக்கும். நெருஞ்சிச் செடிகளின் இலைகளை எடுப்பார்கள். தண்ணீரில் போட்டுப் பிழிவார்கள். அதனை வடிப்பார்கள். அது எண்ணெய்போல் தடிப்பான திரவமாகும். அது அவர்களுக்கு எண்ணெய்யாகும். சிறு போத்தல்கள் இருக்கும். அளந்து வியாபாரம் நடக்கும். செங்கற்தூள் அவர்களுக்கு மிளகாய்த் தூள். கண்ணில் பட்டதெல்லாம் அவர்களது விளையாட்டுப் பொருட்களே.

குரும்பட்டிகளைச் சேர்ப்பார்கள். நுங்குக் கோம்பைகளையும் சேர்ப்பார்கள். இரண்டு குரும்பட்டிகளை அல்லது நுங்குக் கோம்பைகளை எடுப்பார்கள் ஒரடி நீளமான தடியின் முனைகளில் இணைப்பார்கள். பற்றையில் உள்ள நீளமான தடியை வெட்டுவார்கள். இரண்டு கிளைகள் பிரியும் இடத்தைக் கவனிப்பார்கள். அளவாக வெட்டி எடுப்பார்கள். அதனை நுங்குகள் பொருத்திய தடியில் மாட்டுவார்கள். தள்ளுவார்கள். நுங்கு வண்டில் உருளும். வண்டிச் சவாரிப்போட்டி நடக்கும். சந்தோசத்தில் துள்ளுவார்கள்.

விழுந்த பனையோலையின் அடிப்பகுதியை தங்கள் உயரத்திற்கு ஏற்ப வெட்டுவார்கள். அதனைத் தலைகீழாகப் பிடித்துத் தார் வீதியில் அழுத்தித் தள்ளுவார்கள். அமுக்கத்தினால் பனைமட்டை தெத்தும். அப்போது மோட்டார் சைக்கிள் போல் சத்தம் வரும். பாடிப்பாடி மோட்டார் சைக்கள் ஓடும். சிலநேரம் பாடசாலை நடக்கும். சிலர் ஆசிரியர்களாகப் பாடம் நடத்துவார்கள். மற்றவர்கள் மாணவர்களாக மாறுவார்கள். எருக்கலை இலைகள்தான் அவர்களது கொப்பிகள். பனை ஈர்க்குகள் அவர்களுக்குப் பென்சில்களாக மாறும். ஈர்க்கிலால் எருக்கலை இலையில் கிறுக்குவார்கள். எருக்கலை இலை தடிப்பானது. அதில் ஈர்க்கினால் எழுதும்போது பதியும்.

அதனைப் பார்த்து மகிழ்வார்கள். அவர்களுக்குத் தங்கள் கிறுக்கல் யாவும் எழுத்துக்கள்தாம். அதனையே வாசிப்பார்கள். தமக்குத் தெரிந்த கதைகளை இலைகளைப் பார்த்துச் சொல்வார்கள். தெரிந்த கதைகள் வாசிக்கப்படும். பனையிலிருந்து தூக்கணாங் குருவிக்கூடுகள் விழும். அவற்றைச் சேகரிப்பார்கள். அதன் வடிவமைப்பைப் பார்த்துப் பிரமிப்பார்கள்.

சிறுவர்களது செயற்பாடுகளை நாள்தவறாது இருவர் அவதானித்தார்கள். இந்தச் சிறார்களுக்கு ஏதும் நாங்கள் செய்யவேண்டும். இவர்களது சின்ன மனங்களில் நல்ல சிந்தனைகள் உருவாகியுள்ளன. இவர்களை நல்ல மனிதர்களாக்க வேண்டும். சிறுவர்கள் வெற்றுக்குடங்களல்ல. குழந்தை கருவில் உருவாகும் போதே கற்கத் தொடங்குகிறது. அவர்களது மூளையும் இதயமும் விருத்தியடைகிறது. இந்த வயதிலேயே இவர்கள் நல்லனவற்றைச் சிந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். “இவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டியது நமது கடமை”. அதனைச் செய்வதற்கு மகாலிங்கத்தார் தருணம் பார்த்திருந்தார். இராசரத்தினத்தார் உந்து சக்தியாக உதவியாக இருந்தார். “சிறுவர் பாடசாலை ஒன்றைக் கட்டவேண்டும். அதனைச் செய்தால் உங்கள் மனதுக்கு சந்தோசமாக இருக்கும்”. இராசரத்தினம் மகாலிங்கத்தாரைக் கேட்டுக் கொண்டார். அதற்கான ஒழுங்குகளை இருவரும் செய்தார்கள்.

ஒருநாள் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பலத்த காற்றுச் சுழன்றடித்தது. பனைகள் ஆடிச்சுழன்றன. பனையோலைகள் சரசரத்தன. பல பனையோலைகள் வீழ்ந்தன. அடர்த்தியான பனைகளுக்குள் ஒதுங்கினார்கள். அவர்களுக்கு அண்மையில் ஒரு பனையோலை வீழ்ந்தது. முதலில் பயந்தார்கள். காற்று ஓய்ந்தது. ஓலையோடு குருவிக்கூடு விழுந்தது. அதனைக் கண்டார்கள். ஓடிச்சென்று எடுத்தார்கள். கூட்டினுள் குஞ்சுகளின் ஆரவாhரம். சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்.

மூன்று குஞ்சுகள் கூக்குரலிட்டன. தூக்கணாங் குருவிகள் பறந்து வட்டமடித்தன. சிறார்களுக்கு அவை அழுவதுபோல் தோன்றின. இந்திரன்தான் அவர்களுக்குத் தலைவன். அவனுக்கு இரக்க சுபாவம் அதிகம். குஞ்சுகளைப் பார்த்து மகிழ்ந்தான். அண்ணார்ந்து பார்த்தான். தாய்க்குருவி அலறியடிப்பதைக் கண்டான். தந்தைக்குருவியும் பறந்து பறந்து சத்தமிட்டது. அவற்றைச் சுற்றிப் பலகுருவிகள் சேர்ந்து ஓலமிட்டன. “ஏய் … தம்பி தங்கைகளே.. இந்தக் குருவிக் குஞ்சுகளை என்ன செய்வோம் சொல்லுங்கோ”? பலத்துச் சொன்னான். “நாங்க வளர்ப்போம்”. ஒரேகுரலாகப் பதில் வந்தது. இந்திரன் இதனை எதிர்பார்க்கவில்லை. அவனுக்குக் கவலையாக இருந்தது. “இவை சின்னஞ்சிறிய குஞ்சுகள். என்ன செய்வது? அவன் யோசித்தான்.

குஞ்சுகளைப் பார்த்தான். அவை சின்னச் சிறகுகளை விரித்து வாயைத் திறந்து சத்தமிட்டன. “ஐயோ பாவம். அதுகளுக்குப் பசிபோல. ஏதும் தின்னக் குடுப்பமே?” ருக்மணி பரிதாபப்பட்டாள். அவளுக்கு இரக்ககுணம் அதிகம். “ஓன்று செய்வோம். குஞ்சுகளை அப்படியே விடுவோம். தாய் வந்து தூக்கிக் கொண்டு போகும். விடுவோமா”? ராசன் மனமில்லாமல் கூறினான். “விடுவோம்” குரல் வந்தது. “இப்படியே விடுவது பாவம்.” முகுந்தன் சத்தமிட்டான். அவ்வழியே இராசரத்தினத்தார் வந்தார். கூடவே மகாலிங்கத்தாரும் வந்தார். சிறுவர்களுக்குச் சந்தோசம். “ஐயா இஞ்ச…பாருங்கோ. குருவிக் குஞ்சுகள். பாவம் . அங்க பாருங்கோ.. தாய்க்குருவி அலறுது. பனையில் இந்தக் கூட்டை வைக்கலாமோ சொல்லுங்கோ. ஐயா”? இந்திரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

இராசரத்தினத்தார் குஞ்சுகளைப் பார்த்தார். குஞ்சுகள் அவரைப்பார்த்தன. வாயைப்பிளந்து சத்தமிட்டன. இராசரத் தினத்தார் மகாலிங்கத்தைப் பார்த்தார். இருவரும் புன்னகை செய்தார்கள். “என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள்.” இருவரும் ஒன்றாகவே பதிலளித்தார்கள். “ஐயா! இந்தக் குஞ்சுகளைக் கூட்டில் விடுவோம். கூட்டைப் பனையில் கட்டிவிடுவோம். தாய் வந்து கூட்டிச்செல்லும். பாவம் ஐயா. எங்களால மரத்தில் ஏறமுடியாது”. இந்திரன் வினயமாக ஒப்புவித்தான். மகாலிங்கம் இளகிய மனம் படைத்தவர். இராசரத்தினத்தைப் பார்த்தார். இராசரத்தினம் செல்வாக்குள்ள நல்ல மனிதர். “சரி நீங்கள் சொல்வது போல் செய்வோம். ஆனால் ஒன்று. நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேணும். அதன்படி நடக்கவேணும். சம்மதமா”? கேள்வியைக் கேட்டு பதிலுக்காகக் காத்திருந்தார்.

“என்ன ஐயா செய்யவேணும்? ருக்மணி முந்திக் கொண்டு பதில் சொன்னாள். இந்திரன் எல்லோருடைய முகங்களையும் பார்த்தான். அவர்களது மனங்களைப் படித்தான். தாங்கள் எருக்கலை இலையில் கிறுக்குவதையே வாசித்துப் பழக்கப் பட்டவர்கள். அல்லவா?. அவனும் ஒப்புக் கொண்டான். மகாலிங்கத்தாருக்குக் கொள்ளைச் சந்தோசம். இராசரத்தினத்தார் பலமாகச் சிரித்தார். சிறுவர்களுக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் இந்தக் குஞ்சுகளுக்காக ஒத்துக் கொண்டனர். “ஐயா என்ன செய்யவேணும். அதைச் சொல்லுங்கோ. அங்கே மேலே பாருங்கள். அந்தக்குருவிகள் அலறுகின்றன. இந்தக் குஞ்சுகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்”. ஓன்றாகவே சத்தமிட்டனர்.

சிறுவர்களது இரக்க சுபாவத்தை வெகுவாக ரசித்தார்கள். “நீங்கள் பெரிசாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. உங்களுக்காக அந்த இடத்தில பாடசாலை கட்டித்தரப் போகிறோம்.” முன்பள்ளி கட்டப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார். “அந்த நேசரி எங்களுக்கா”? ஆவலோடு கேட்டார்கள். “வேற ஆருக்கு? உங்களுக்குத்தான். நீங்கள் நல்ல பிள்ளைகள். உங்களிடம் இரக்கமும், அன்பும் இருக்கிறது. நீங்கள் படிக்கவேண்டும். விளையாடி விளையாடிப் படிக்கவேண்டும். பாடசாலை கட்டித் தருவது எங்கட பொறுப்பு”. மகாலிங்கத்தார் கூறினார். பிள்ளைகள் குதூகலித்தார்கள். துள்ளிச் சந்தோசப் பட்டார்கள். “ஹேய்…” என்று சத்தமிட்டார்கள். “நாங்கள் பாடசாலைக்கு வருவோம்”. ஏகமனதாகக் கூச்சலிட்டனர். “ஐயா! எப்ப பாடசாலை தொடங்கும்”. ருக்மணி ஆவலோடு கேட்டாள். அவள் பாடசாலைக்குப் போவதாகக் கனவுகாணத் தொடங்கிவிட்டாள். “அடுத்த மாதம் பாடசாலை தொடங்குவோம். சரியா”? மகாலிங்கத்தார் பதில் கூறினார். இராசரத்தினம் யாரையோ தேடினார். தூரத்தில் மயில்வாகனம் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். “தம்பி… மயில்..இஞ்ச கொஞ்சம் வா..தம்பி” அழைத்தார். மயில் ஓடோடி வந்தான்.

“இஞ்சபார் தம்பி..ஒருக்கா இந்தப் பனையில ஏறி இந்தக்கூட்டை வைக்கலாமோ? பார் தம்பி”. அன்போடு கேட்டார். மயில் நல்ல பையன். பனைகளில் ஏறிஇறங்குவதில் சூரன். சிறுவர்களின் கூட்டாளி. சிலநேரங்களில் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவான்; அவன் ஐந்தாம் வகுப்போடு படிப்புக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டான். அவன்தான் சிறுவர்களுக்கு நுங்கு வெட்டிக் கொடுப்பவன். புனையை அண்ணார்ந்து பார்த்தான். பனை அவ்வளவு உயரமில்லை. “ஐயா…அந்தக் கூட்டுக்குள் என்ன இருக்கு? மயில் கேட்டான். “அதுக்குள் குருவிக்குஞ்சுகள் இருக்கு” ருக்கு பதில் கூறினாள். “அண்ணன் இப்ப ஏன் நீங்க விளையாட வாறதில்லை. பள்ளிக்குப் படிக்கப் போறீங்களோ”? செந்தில் கேட்டாள். “அந்தப் பள்ளிக்கு யார் போவான்.” முகத்தைச் சுளித்தமாதிரிச் சொன்னான். “ஏன் படிப்பது நமக்கு நல்லதுதானே”? மீண்டும் செந்தில் கூறினாள். “நல்லதுதான். ஆனால் ‘ஸ்கொலசிப்’ சோதினை என்று உசிரை எடுக்கிறாங்கள்.” “அப்ப தம்பி நீ சோதினை எடுக்கல்லையோ?” மகாலிங்கத்தார் வியப்போடு கேட்டார்.

“சோதினை எடுத்தனான் ஐயா. ஒரு ‘மார்க்ஸ்’; குறைவாம். அதுக்கு நான் என்ன செய்யிறது? ‘மார்க்ஸ’; போடுறவங்க குறைச்சிட்டாங்க… அவங்க கூடப்போட்டிருக்கலாம்தானே?. பாஸ்பண்ணின பிள்ளைகளை பாராட்டுறாங்க. நான் ஒரு மார்க்ஸால விட்டுட்டன். என்ர மனம் எவ்வளவு வேதனைப் பட்டது. அது எனக்குத்தான் தெரியும். அதனால பள்ளிக்குப் போறல்லை. நிண்டிட்டன்.” அவன் சொல்லும் போது இராசரத்தினத்தின் விழிகள் பனித்தன. பெருமூச்சு விட்டார். யோசித்தார். “இந்த ‘ஸ்கொலசிப்’ சோதினை யாருக்காக நடத்தினம். வறுமைக்கோட்டுக்குள் வாழும் பிள்ளைகளுக்காகத்தானே. பாஸ்பண்ணுகிற பிள்ளைகள் யார்? எல்லாரும் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள்தான். இப்ப ஸ்கொலசிப் சோதினை கௌரவத்துக்காக நடக்கிறது. பாவம். இதனால் வறுமையான பிள்ளைகள்தான் நஸ்டம் அடைகிறார்கள். அரசாங்கம் நன்மை அடைகிறது”. அவரது மனம் வெந்தது. “தம்பி வேற பள்ளியில் சேர்த்து விட்டால் படிக்கலாம்தானே”? கேட்டார். அவன் “ஓம் ஐயா” சட்டென்று பதில் சொன்னான். “சரி அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறன். இது முடிய என்னோடு விட்டுக்கு வா. சரியா? இப்ப இந்தக் கூட்டைப் பனையில வை தம்பி” அவன் கூட்டை எடுத்துப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் குஞ்சுகள் சிறகை விரித்தன. வாயைத்திறந்து சத்தமிட்டன. “ஐயோ.. பாவம். சன்னக் ” பரிதாபப் பட்டான்.

ருக்கு கூட்டை எடுத்துக் கொடுத்தாள். கூட்டை எடுத்து இடுப்பில் கட்டினான். மளமளவென்று அணில்போல பனையில் ஏறினான். அவன் ஏறுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இராசரத்தினத்தாருக்கு நெஞ்சு படபடத்தது. “கடவுளே அந்தப் பிள்ளையைக் காப்பாற்று” மனதில் கடவுளைப் பிரார்த்தித்தார். மயில் வளைந்து வளைந்து பதம் பார்த்தான். உறுதியான பனை மட்டைகளைப் பிடித்தான். வசதியாகக் கால்களை வைத்துக் கொண்டான். ஒரு பனையோலையைப் பிடித்து இழுத்துக் கொண்டான். கூட்டை எடுத்து ஓலையில் வரிந்து கட்டினான். முடிந்து விட்டது. பனையோலையை மெதுவாக விட்டான். கீழே நின்றவர்கள் ஆரவாரித்தார்கள். கூடு பனையோலையில் காற்றில் ஆடியது. பறவைகள் பார்த்த வண்ணம் இருந்தன. “மெதுவாக இறங்கு”. கீழே இருந்து குரல்கள் ஒலித்தன. மயில் கீழே இறங்கி வந்தான். அவனை சிறுவர்கள் சூழ்ந்து நன்றி சொன்னார்கள். குருவிகளின் சத்தம் அடங்கிவிட்டது. தாய்ப்பறவை குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.

பறவைகள் எல்லாம் வட்டமடித்து வந்தன. அவர்களைச் சுற்றிவிட்டுப் பறந்து போயின. சிறுவர்களுக்குச் சந்தோசம். “இப்ப எல்லாருக்கும் சந்தோசம்தானே? சரி நீங்க விளையாடுங்கோ. அடுத்த மாதம் முதலாம் திகதி பாடசாலை தொடங்குவோம். சரியா”? கூறிக் கொண்டு இருவரும் நடந்தார்கள். “தம்பி மயில் என்னோட வா”. இராசரத்தினம் அவனை அழைத்தார். அவனும் பின்னால் சென்றான். அவனைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரில் சேர்த்துவிட்டார். அவனது படிப்புச் செலவை அவரே பொறுப்பெடுத்தார். பாடசாலை கட்டப்பட்டது. நல்ல நாளில் பாடசாலை தொடங்கி விட்டது. மூன்று இளம் ஆசிரியைகள் நியமிக்கப் பட்டார்கள். பிள்ளைகள் ஆர்வத்தோடு கல்வி கற்கத் தொடங்கிவிட்டனர்.

சாவகச்சேரியில் தபால் அலுவலக வீதி சுறுசுறுப்பாகியது. இராசரத்தினத்தார் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அது மண்டுவில்லேனை அடைந்தது. மகாலிங்கம் ஆவலோடு காத்திருந்தார். குகேந்திரன் முன்பள்ளி கலகலத்தது. ஆர்வமுடன் சிறுவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். கற்றல் விளையாட்டு முறையில் நடந்து கொண்டிருந்தது. இருவரையும் கண்ட சிறுவர்கள் ஆசிரியைகள் சகிதம் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஐயா! நாங்கள் நன்றாகப் படிக்கிறோம். ஒருமித்த குரலில் சத்தமிட்டார்கள். ருக்மணியும், செந்திலும் தாங்கள் செய்த மாலைகளை எடுத்து வந்தார்கள். ருக்மணி இராசரத்தினத்தாரின் கழுத்தை அலங்கரித்தாள். செந்தில் மகாலிங்கத்தாரின் கழுத்தை அலங்கரித்தாள். அவர்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

தாங்கள் பயின்ற கற்றல் நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினார்கள். இருவருக்கும் பெருமையாக இருந்தது. பெற்றார்கள் மகிழ்ந்து பாராட்டினார்கள். மகாலிங்கத்தாரின் கண்கள் பனித்தன. “இன்று எனது மனம் நிறைந்து விட்டது. எனது ஆசைமகன் குபேந்திரனின் கனவு நிறைவேறி விட்டது. இந்தப் பிஞ்சு முகங்களில் அவனைக் காண்கிறேன்.” அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. இராசரத்தினத்தாரின் மனம் சந்தோசித்தது. சிறுவர்கள் ஆடிப்பாடி மகிந்து கொண்டார்கள். தங்களுக்கு வாழ்வளித்த சிறுவர்களைப் பாரத்துக் குருவிகள

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP