Thursday, April 29, 2010

வீட்டுக்கொருவர் ….

அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்படிச் சொல்வது?.. பிள்ளைகள்… வீடு வளவு, மாடுகன்றுகள் என்று சொத்துக்கள் அனைத்தையும் எத்தனை வருசமாப் பொத்திக் காத்து வந்தார். அண்ணனை அவங்கள் வந்து கூட்டிப்போனபோது அவர் பட்ட பாடு… சொல்லமுடியாதது. அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. பெத்து வளர்த்து ஆளாக்கியெடுக்கப் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும் எத்தனை நாள் அம்மாவும், அப்பாவும் எங்களுக்காகப் பட்டினி கிடந்திருப்பாங்கள். அறிவழகன் குலுங்கி அழுதான். அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்காகக் கட்டியிழுத்துப் போன ஆட்டுக்குட்டியைப் போல அண்ணன் போனதை இன்னும் எண்ணியெண்ணி ஏங்கித்தவிக்கும் அந்தப் பெற்ற மனதின் துடிப்பைச் சொல்லில் வடிக்கேலாது. அந்தக் கவலையில் மூழ்கிப்போன அவருக்கு உள்ளவை யாவும் அழிக்கப்பட்டு விட்டன.…ஷெல்லடியினால் அவரது கண்முன்னாலேயே மாடுகள் உடல்சிதறித் துடித்துச் செத்தகாட்சியை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. வாய் பேசாத ஜீவன்கள் என்ன செய்தன? எல்லாவற்றையும் இப்படி..பறிகொடுத்து…யாரால தாங்கமுடியும்? அவரால நடக்கமுடியாது. உடலெங்கும் ஷெல்லடிக் காயங்கள். கொத்தணிக்குண்டின் நச்சுப்புகைபட்டு தோல் எரிந்து அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது ஏக்கத்த எப்படிப் போக்குவது? பேயறைந்தமாதிரி… பங்கருக்குள் ஒரே திசையைப் பார்த்தபடி குந்தியிருக்கிறார். சுதந்திரமாய் நடமாடித்திரிந்த மக்களுக்குப் போக்கிடம் இல்லாது பங்கருக்குள்ளதான் சீவியம். புங்கருக்குள்ளே இருந்தவாறு ஆறிவழகனின் இதயம் அழுதது.

தனது அம்மாவைப் பார்க்கிறான். அம்மா தலைவாரிச் சீவி மாதங்களாகி விட்டன. எல்லாத் தாய்மாரும் அப்படித்தான். ஏன் இளம் கன்னியர்களும் இப்படித்தான். இந்த வன்னியில பங்கருக்குள்ள பட்டினியோட எத்தனை நாளைக்குக் கிடக்கிறது. வெளியில் தலைகாட்டினா ஷெல் விழுந்து தலைதெறிக்கும். நிலம் அதிரும். “கடவுளே பங்கருக்கு மேல ஷெல் விழாமக் காப்பாற்று. இந்த மக்களுக்கு வந்த மாயமென்ன? வற்றாப்பளைத் தாயே நீதான் துணை. கதிர்காமத்துக் கந்தா …கடம்பா …கதிர்வேலவனே.. ” அம்மாவின்ர வேண்டுதல் கந்தனுக்குக் கேக்குமா? இப்ப கதிர்காமத்துக் கந்தனுக்குத் தமிழ் விளங்குமா? அவருக்குச் சிங்களம்தான் விளங்கும். பூசை அர்ச்சனைகள் எல்லாம் சிங்களத்தில்தான் செய்கிறார்கள். தூரத்திலிருந்து ஒலிபெருக்கிச் சத்தம். கேட்கிறது. “என்ன சத்தம் அது. பிரித் ஓதுறாங்களோ?” கந்தையர் கைகளால் பொத்தியிருந்த காதுகளை விடுவித்துக் கேட்கிறார். “தங்கட பக்கம் வரட்டாம். பாதுகாப்புத் தாறங்களாம். சனங்களோட சனங்களா போவமே”? அறிவழகன் மெதுவாகச் சொன்னான்.

மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. “தம்பி பங்கருக்குள்ள வாற தண்ணிய அந்தப்பானைக்குள்ள கொஞ்சம் பிடி. வுடித்துக் குடிப்பம். குடிக்கவும் தண்ணியில்ல. பசிக்குத் தொண்டையையாவது நனைப்பம்”. அம்மா சொல்லவும் அறிவழகன் பானையை எடுத்து பங்கருக்கு வெளியே வைக்கிறான். மழைநீர் அதற்குள் சேருகிறது. ஷெல்லடி தொடருகிறது. இடிமின்னலுடன் சோவென மழை வாரியடிக்கிறது. பங்கருக்குள் இப்போது மழைநீர் நிறைகிறது. அதனை உள்நுழையவிடாது அறிவழகன் தடுக்கிறான். அவனையும் மீறி தண்ணீர் உள்ளே கசிந்து வருகிறது. இனியும் தாக்குப்பிடிக்கேலாது. “கந்தையாண்ணே ஷெல்லடி குறைந்ததும் வெளியில வாங்க. இனி ஒன்றும் செய்யேலாது. என்னால இனித்தாங்கேலாது. உடம்பெல்லாம் எரிகாயம் எரியுது. ஏப்படியென்றாலும் செத்துப்போறது நிச்சயம். அதிர்ஸ்டம் இருந்தால் யாராவது தப்பிப் பிழைக்கலாம். வாறது வரட்டும். நம்மட வரலாற்றச் சொல்லுறதுக்கும் ஆக்கள் வேணுந்தானே” சாமித்தம்பியர் விரக்தியின் விளிம்பில் இருந்து சொன்னார். அவரது உடலெங்கும் எரிகாயம். அதன் வேதனையைத் தாங்கமுடியாது தவித்துக்கொண்டிருப்பவர். அவர் சொன்னது சரியாகத்தான் பட்டது. செய்தி பங்கர்களுக்குப் பரவியது. புற்றுக்குள்ளிருந்து வெளிவரும் ஈசல்களைப்போல் சனங்கள் பிள்ளைகுட்டிகளோட மழையிருளில் பங்கரை விட்டு வெளியில் வந்தனர். மயான அமைதி. எங்கும் வெறிச் சோடிக்கிடந்தது.

கட்டிடங்கள், மரங்கள் ஒன்றையும் காணவில்லை. கேத்துக்கு வெளியாய் தெரிகிறது. மழைமேக மூட்டத்தின் ஊடாகத் தெரியும் வெள்ளிப் பொட்டுக்களின் வெளிச்சம் பூமியில் பட்டுத் தெறிக்கிறது. இருளில் இருந்து பழக்கப்பட்டால் இருளும் வெளிச்சமாகத்தான் தெரியும். இந்தச் சனங்களுக்கு இப்போது பழக்கமாகிவிட்டது. அதனால் பார்க்கும் இடமெல்லாம் வெட்ட வெளியாய் அந்த இருளிலும் தெரிந்தது. பள்ளங்களில் இருள்பதுங்கித் தொட்டந்தொட்டமாகத் தெரிந்தது. பள்ளம் படுகுழிகளாய், நிலம் பாறுண்டு கிடந்தது. ஷெல்விழுந்து வெடித்து உடலங்கள் சிதறிக் கிடந்தன. எங்கும் பிணவாடை. அந்த இருளில் உயிர் தப்பினால் போதும் என்ற உந்தல்வேறு. உயிர் தப்பியவர்கள் சாரிசாரியாக இடறிவிழுந்து நடந்தார்கள். கால்களில் இடறிய உடல்களைக் கடந்து நடந்தார்கள். குற்றுயிராய்க் கிடந்தவர்களின் முனகல் இருளில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.

எப்படி வாழ்ந்த சனங்கள் இப்படிச் சின்னாபின்னமாகி குற்றுயிருடனும், உயிரற்ற சடலங்களாகவும் சிதறிக்கிடக்கின்றனர். யாருக்கும் உதவக்கூடிய நிலையில் யாரும் இல்லை. ‘ஆண்ட இனமிங்கு மாண்டு கிடக்குதையோ’ அறிவழகனின் மனம் அங்கலாய்ந்தது. குலுங்கி ஏங்கிக்கலங்கியது. கண்கள் குளமாகிக் கண்ணீர் கொட்டியது. அவனது கண்கள் பொலபொலத்த வண்ணமிருந்தன. நடக்கும்போது ஒரு உடலில் காலிடறி விழுந்தான். அதனை அணைத்து முகத்தைப் பார்த்தான். அந்த உடலை அடையாளம் காணமுடியவில்லை. பிணவாடை அவனைக் கலக்கியது. அந்த உடலை அடக்கம் செய்யவும் அவனால் முடியாது. அங்கே சுணங்கினால் அவன் உயிரிழக்க நேரிடும “தம்பி யோசியாத ஐயா. நம்மலால ஒண்ணும் செய்யேலாது. எழும்பி ஓடிவா”. அவனை இழக்க அந்தப் பெற்ற மனம் இடம்கொடுக்கவில்லை. அம்மாவுக்குக் கொஞ்சம் துணிச்சல் இருந்தது. “எழும்பி கெதியா வா” அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டான்.;. அப்புவை எப்படியும் கரைசேர்க்க வேண்டும். அவரது உயிரைக் காக்க வேண்டும். இவ்வளவு காலமும் எங்களை வளர்த்து ஆளாக்கிய அப்பு இப்படி ஆளாக்கப்பட்டு விட்டார். எழுந்து ஓடி தனது அப்பாவைத் தாங்கியபடி நடந்தான்.

உப்புநீர் சிற்றாறு குறுக்கிட்டது. ஆறு ஆழமற்றது. அதனைக்கடந்து சென்ற பழக்கமுண்டு. பலருக்குப் படுகாயங்கள். உடல்முழுவதும் எரிந்து மேற்தோல் உரிந்திருந்தது. குறுக்கோடிய ஆற்றைக் கடக்க வேண்டும். உப்புத்தண்ணீர் எரிகாயங்களைக் கழுவின. ஏரிச்சலெடுத்து உருண்டு துடித்தார்கள். திராணியுள்ளவர்கள் சிலரைச் சுமந்தும் நடந்தனர்.
அந்தப்பக்கம் ஷெல்லடியில்லை. ஆனால் சனங்களுக்கு நடக்கத் திராணியில்லை. பசியும், பட்டினியும், பயப்பிராந்தியும் அவர்களை வாட்டியெடுத்தது. ‘இனியொரு மனிதப்பிறவி வேண்டாமடா சாமி. அதுவும் தமிழனாகப் பிறக்கவே கூடாது. சபிக்கப்பட்ட இனம்.’ வுhய் முணுமுணுத்தவண்ணம் இருந்தன. காயப்பட்டவர்களும், உடல்நலம் குன்றியோரும் அதிகமாகக் காணப்பட்டனர். சிலருக்குக் காயங்களிலிருந்து சீழ்வடிந்து மணத்தது. முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்கள் காயப்பட்டவர்களையும், முதியவர்களையும் தூக்கிக் கரைசேர்த்தனர். அப்படித் தூக்கும்போது “ஐயோ அம்மா” எனக் கதறினர். வெடிச்சத்தங்கள் தூரத்தில் தொடர்ந்தன. “எல்லாரும் அப்படியே நிலத்தில குப்புறப் படுத்துக் கொள்ளுங்கோ. கட்டளைகள் பிறந்தன”. சனங்கள் நிலத்தோடு தம்மைச் சங்கமப் படுத்திக்கொண்டனர். சேறும் சகதியும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.;. போர் தொடங்கிய நாளிலிருந்து அவர்களுக்கு உறக்கம் என்பதே கிடையாது. சின்னஞ்சிறிசுகள் வீரிட்டன. அமைதியானதும் எழுந்து நடந்தனர்.

ஆற்றைக்கடந்து வடலிப்புதருக்குள் நுழைந்தனர். உயர்ந்த மரங்களைக் காணவில்லை. “பொழுதுபுலரும் வரை இங்கேயே கிடப்பம். விடிந்ததும் வெள்ளக் கொடியக்காட்டிச் சரணடைவம்’. கந்தையர் கூறினார். “இப்படியே இப்பவே போனால் நல்லதுதானே”? சாமித்தம்பி அவசரப்படுத்தினார். “அவங்களுக்கு யாரெண்டு தெரியும்? சுட்டுப்போட்டால்.. அவங்களிட்டத் துவக்கிருக்கு. இவ்வளவு தூரம் வந்திற்றம். பொறுத்த நாங்க கொஞ்சம் பொறுப்பம்.” எல்லோரும் அமைதியானார்கள். பசியும் களைப்பும் வாட்டியது. எல்லோரும் பட்டினியாலும். பயத்தினாலும் வாடி மெலிந்திருந்தார்கள். பட்டினி போட்டால் எவரும் சரணடையத்தான் செய்வார்கள். பண்டைய யுத்தச் சாணக்கியத்தில் பட்டினி நல்லதொரு ஆயுதமாகப் பயன்பட்டதாம். கொடுமையான யுத்தம் இது. நச்சுவாயு கலந்த குண்டுகளைப் போட்டுச் சாகடிக்கிறாங்கள். நாங்க என்ன எதிரிகளா? நாங்களும் இந்தநாட்டு மக்கள்தானே? ஏன் இப்படிச் செய்யுறாங்கள். ஆளுக்காள் கேட்டவாறே அப்படியே குந்தியிருந்தார்கள். அறிவழகன் மனதில் போராட்டம்.

விடிந்து கொண்டு வந்தது. கந்தையர் எல்லோரையும் உசார்படுத்தி எழுப்பி வரிசையில் நிற்கவைத்தார். வரிசை நீண்டு இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு நின்றது. சனங்களின்; கைகளில் பொலித்தின் பைகள் மட்டுமிருந்தன. ஆமிக்கரங்கள் இவர்களைக் கண்டிருக்க வேண்டும். தலைக்கு மேலால் வெடிகள் பறந்தன. சனங்கள் அலறியடித்துப் பதுங்கினர். கந்தையர் தனது தலையிலிருந்த துவாயை அவிழ்த்து தடியில் கட்டி சமாதானச் சமிக்ஞை கொடுத்தார். அவருக்கும் காயங்கள் இருந்தன. அவருக்கு மனத்தைரியம் கொஞ்சம் அதிகம். மனத்தைரியம் இருந்தால் உடல் உளவலிகளையும். பெரிய பிரச்சனைகளையும் சமாளித்துக் கொள்ளலாமாம். வெடிச் சத்தங்கள் குறைந்து ஓய்ந்தது. பொழுது புலர்ந்து வெயில் எறிக்கத் தொடங்கியிருந்தது. மழைபெய்த தரையில் சூரிய வெப்பம் ஏறித் தகித்தது. எரிகாயங்களில் எரிவு அதிகரித்தது. பசித்துக் களைத்த உடல்களில் இருந்து வியர்த்துக் கொட்டியது. இராணுவ வாகனங்கள் சுற்றி வளைத்தது. பயம் மக்களைக் கௌவிக்கொண்டது. கந்தையருக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும். முன்னால் வந்து விசயத்தை விளக்கினார்.

வரிசையில் வரும்படி கட்டளைபிறந்தது. நடந்தார்கள். நடக்கத் தெம்பில்லை. சிலர் விழுந்து எழும்பினார்கள். வரிசை வளைந்து வளைந்து நகர்ந்தது. சனங்கள் வருவார்கள் என்று தெரிந்து இராணுவம் ஆயத்தமாகத்தான் இருந்தது. பிளாஸ்ரிக் தாங்கிகளில் தண்ணீர் வசதிகள் தெரிந்தன. லொறிகளில் உணவுப் பொட்டலங்கள் வந்தன. கொடுக்கத் தொடங்கினார்கள். உணவுப் பொட்டலத்தைக் கண்டதும் வரிசையாக வந்த மக்கள் வரிசை குழம்பி ஆளுக்காள் தள்ளுண்டு விழுந்து எழும்பி… பார்க்கப் பரிதாபமாகவும் கோபமாகவும் இருந்தது. “என்ன தமிழ் ஈழம் வேணாமா”? தவித்த முயல்களாக வந்தவர்களுக்கு சில சிப்பாய்களிடம் இருந்து நக்கலும் வந்தது. சில சிப்பாய்களுக்குச் சிரிப்பாக இருந்தது. அதே வேளை சிலருக்குப் பரிதாபமாகவும் இருந்தது.

இப்போது இந்தத் தமிழ் மக்கள் அடிமையாகி அகதிகளாகிவிட்டார்கள். ஒருபிடி உணவுக்காகவும், ஒதுங்கி உயிர்தப்புவதற்காகவும் அடங்கி ஒடுங்கி நின்றார்கள். புதுமாத்தளன் பகுதி இப்போது புகலிடமாகத் தெரிந்தது. பெயர்கள் பதியப்பட்டன. ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டார்கள். இளம் வயதினரை வேறாகப் பிரித்தெடுத்தார்கள். ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பதுபோல் கம்பிவேலி போட்டுக் காவலிருந்தார்கள். வெள்ளையர்கள் ஆபிரிக்காவினுள் புகுந்து பழங்குடி மக்களை வேட்டையாடிப் பிடித்துச் சங்கிலியால் பிணைத்துக் கப்பலில் கொண்டு போய் ஏலத்தில் விற்பார்கள். அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று பார்க்க மாட்டார்கள். தாய் வேறு, தந்தை வேறு, பிள்ளைகள் வேறாக விற்பார்கள். ஏலத்தில் வாங்கியவர்கள் அமெரிக்க நாட்டில் அடிமைகளாகத் தமது பருத்தித்தோட்டத்தில் வேலை செய்யப்பணித்தார்கள். கூலியில்லை. அரை வயிற்றுக்குக் கூழ்கிடைக்கும் உரிமையில்லை. சவுக்கடி கிடைக்கும். அதனை அறிவழகன் நினைந்து கொண்டான்.

இப்பொழுது ஒரு நிம்மதியைக் கண்டார்கள். வெடிச்சத்தமில்லை. பங்கரும் இல்லை. ஆனாலும் முள்ளுக்கம்பி வேலிக்குள் சிறைவாசம். “இப்ப எங்கட கையில ஒண்டுமில்ல. வீசின கையும் வெறுங்கையுமாக. உயிர்தப்பி வந்து சேந்திட்டம். இந்தக் கம்பி வேலிக்குள்ள வந்தாச்;சி. என்ன செய்யப் போறாங்களோ தெரியாது. எத்தனை மாதங்களுக்கு இப்படிச் சிறையிருப்பம்”? தமக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். கொழுத்தும் வெயில் சுட்டெரித்தது. “எல்லாரும் ஏறுங்க வண்டியில”. சிங்களத்தில் கட்டளை வந்ததும் ஏற்றப்பட்டார்கள். புதுமாத்தளன் கடற்கரைக்கு பஸ்வண்டி சென்றது. அங்கிருந்து படகுகளில் கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள். கப்பல் புல்மோட்டை நோக்கி நகர்ந்தது.

இருள் பரந்துகொண்டு வந்தது. சிறிய கடற்படைத்தளம் புடவைக்கட்டு ஆற்றுமுனையில் இருந்தது. கப்பல் ஜெட்டியில் தரித்ததும் பயணிகள் இறக்கப்பட்டார்கள். புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலையின் கட்டிடங்கள் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிக ஆஸ்பத்திரியும் உருவாகிவிட்டது. காயப்பட்டவர்களையும், நோய்வாய்ப் பட்டவர்களையும் ஆஸ்பத்திரி பாரமெடுத்தது. காயப்பட்டவர்களை யாரும் பார்க்க முடியாது. இந்திய டாக்டர்கள் கடமையில் ஈடுபட்டனர். அறிவழகனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன இது? டாக்டர்களா இராணுவத்தினரா? அவனுக்குப் பரியவில்லை. டாக்டர்களின் இடுப்பிலும் பிஸ்ரல்கள். பயமாக இருந்தது.

பாடசாலைக் கட்டிடங்கள் நிரம்பி வழிந்தது. உடலாலும் உள்ளத்தாலும் நொந்த மக்கள் கூனிக்குறுகிக் கிடந்தனர். அகதிமுகாங்களாயின. அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சுற்றிவர ஆயுதமேந்திய இராணுவத்தினர் காவலிருந்தனர். இதில இயக்கத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழல் பயிற்சி அளிக்கப் போகிறோம். அப்படிப் பட்டவர்கள் தமது பெயரைத் தரவேண்டும். நாங்களாகக் கண்டுபிடித்தால் தண்டனைதான். ஆறிவிப்பபைக் கேட்டதுமு; இளைஞர் யுவதிகளிடையே ஓரு புயல் உருவாகிவிட்டது. பலர் தொழில்பயிற்சி பெறுவது நல்லது. சுயதொழில் செய்து வாழலாம். பெயர்களைப் பதிந்தனர்.

சற்று நேரத்துக்கெல்லாம் வாகனங்கள் வந்தன. பெயர்பட்டியல் வாசிக்கப் பட்டது. “ஏறுங்கள் வாகனங்களில்.” கட்டளை பிறந்தது. பார்த்துக் கொண்டிருந்த வாட்டசாட்டமான இளைஞர் யுவதிகளையும் பலாத்காரமாக வேறு வாகனங்களில் ஏற்றினர். அறிவழகனும் ஏற்றப்பட்டான். வுhகனங்கள் புறப்பட்டன. “சட்டி சுடுகுதென்று பயந்து நெருப்புக்குள்ள விழுந்தமாதிரிக் கிடக்கு. அவங்கட கட்டுப்பாட்டுல இருந்தம். வீட்டுக் கொருவர் வாங்க. என்று பிடிச்சிக் கொண்டு போனார்கள். பயந்து இங்கால, இவங்களிட்ட வந்தால் எல்லாரையும் கொண்டு போறாங்க. யாரிட்டச் சொல்வது.? தமக்குள் சொல்லிச் சொல்லி தேம்பினார்கள். தூரத்தே சரமாரியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. மிஞ்சியவர்களை ஏற்றுவதற்கு வெற்று வாகனங்கள் மட்டும் திரும்பி வந்தன. சமைத்த உணவு பாத்திரங்களில் அப்படியே கிடந்தது. அங்கு இருந்தவர்களுக்குப் பசிக்கவில்லை.

Read more...

உன்னைப் பெற்றதால்…..

ஈச்சிலம்பற்று அழகான கிராமம். வரலாற்றுப் பெருமைமிக்க செம்பகவல்லி அம்மனின் கோயில் உள்ள கிராமம். உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். உள்ளத்தால் கோடீஸ்வரர்களாக விளங்கினார்கள். நல்லவர்களாகவும் வல்லவராகவும் வாழவேண்டும் என்ற மனங்கொண்டவர்கள். வெருகல் கங்கை பாய்ந்து வளம்கொடுக்கும். வயல்விளைந்து கிடக்கும். ஆநிரைகள் அசைபோட்டுப் பால் சொரியும். கிராம மக்களை நாட்டின் பிரச்சினை வாட்டியெடுத்தது. பலர் காணாமல் போனார்கள். எல்லோரும் அகதிகளானார்கள். தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவர்கள் ஏராளம். வறுமை தாண்டவாமாடியது. சிறுவர்களும் உழைக்க வேண்டியிருந்தது. கல்வியில் மேம்பட வேண்டும் கல்வியினால் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையில் உயரலாம். என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதிபரும் ஆசிரியர் சிலரும் பாடுபட்டார்கள். இரவு பகலாக உழைத்தார்கள். பாடசாலை எழுச்சி கொண்டது.

பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் வரவில்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அதிபர் பாடங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்கள் உதவின. தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்க முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுதொகை வேதனமாக வழங்கப்பட்டது. மாணவர்களது நன்மை கருதி ஒரு குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் அதிபர் பெற்றுக் கொடுத்தார். அதிபர் தனது ஆசிரியர்களின் உதவியோடு பெற்றாரைக் கண்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெற்றார்கள் விழித்துக் கொண்டார்கள். மாணவர்களுக்கு புத்திமதிகள் கூறினார். பழயமாணவர் சங்கத்தின் உதவியைப் பெற்றார். அவர்கள் பாடசாலைக்காக உழைத்தார்கள். பாடசாலை விழித்துக் கொண்டது.

நடேசன் பதினோராம் வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா கமலம்தான் எல்லாம். தம்பி கணேசன் மட்டும் இருந்தான். கணேசன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். மாதவனுக்கு அம்மா இல்லை. அவனுக்கு அப்பா மணியம்தான் எல்லாம். மாதவனும் நடேசனோடு பதினோராம் வகுப்பில் படிக்கிறான். மாதவனின் தம்பி நவநீதன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் வறுமைகாரணமாக உழைக்கவேண்டியிருந்தது. கமலத்தின் அண்ணன்தான் மணியம். தங்கைக்கு உதவியாக மணியம் இருந்தார்.

ஈச்சிலம்பற்றுக்கு வளமூட்டுவது வெருகல் கங்கைதான். கங்கை நீரைச் சுமந்து சலசலத்தோடும். வெருகலம்பதியானை அடியார்கள் வணங்கி அவன் கருணையைப் பெறுவார்கள். பண்டையப் பெருமைக்கும் தமிழர்களின் இருப்புக்கும் அடையாளம் அந்த வேல்முருகனின் கோயில். நீரின் சிலிர்பில் கரையோரத் தாவரங்கள் மதாளித்து மகிழும். வெருகல் கங்கை ஓரமாக வளமான நிலம் கிடந்தது. தண்ணீரை வேண்டியளவு வெருகல் கங்கை வழங்கியது. பம்பிகள் தேவைப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் அவற்றுக்கு உதவின. கங்கை ஓரம் தோட்டங்கள் பெருகின. மக்கள் ஆர்வமாகச் செயற்பட்டார்கள். மணியமும் கமலத்துக்கு சேர்ந்து தோட்டம் செய்தார்கள். இருவரது தோட்டங்களும் அருகிலேயே இருந்தன. அவர்களுக்குப் பொதுவாக பம்பி கொடுபட்டது.

நடேசனின் தாய் கமலம். தோட்டத்தில் தனியாகப் பாடுபடுவதைப் பிள்ளைகள் விரும்பவில்லை. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். தோட்டத்தில்தான் பொழுது போகும்.
பக்கத்தில் மாதவனின் தோட்டமும் இருந்தது. எல்லோரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வார்கள். பயிர்கள் செழித்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. அவற்றுக்குக் காவல் அவசியம். இரவில் தோட்டத்திலேயே தங்குவார்கள். தோட்டத்தில் ஒத்தாப்பு இருந்தது. அது காவலுக்கும், இளைப்பாறுவதற்குமாகக் கட்டபட்ட தற்காலிகச் சிறுகுடில். அரிக்கன் லாம்பு ஒத்தாப்பில் தொங்கும். வேலைகள் முடிந்ததும் இரவில் பாடங்களைப் படிப்பார்கள்.வெருகல் கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்புப் புதர்கள் தொட்டம் தொட்டமாக ஆடிக்கொண்டிருந்தன. கங்கையின் குளிர்ந்த நீரை பம்பிகள் இறைத்துக் கொண்டிருந்தன. தண்ணீர் காய்கறித் தோட்டங்களைக் குளிப்பாட்டியது. பயிர்கள் சிரித்துக் காற்றில் ஆடின. கத்தரி, மிளகாய், வெண்டி, பூசணி, வெங்காயம் எனப் பயிர்கள் காய்த்துக் குலுங்கின.

















கிராமத்துப் பண் காற்றில் தவழ்ந்து வந்தது. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய வேலை. இன்னும் முடியவில்லை. அவசரமாகத் தோட்டத்தில் வேலைகளைச் செய்தார்கள்.“மாதவன்

நேரமென்ன”? நடேசன் சத்தமிட்டான். பம்பி இரைந்து கொண்டிருந்தது. “சரியாக ஏழு மணி. ஏழரைமணிக்குப் பாடசாலையில் நிற்க வேண்டும். வெளிக்கிடு போவம”;. மாதவன் சத்தமாகச் சொன்னான். தோட்டத்தை ஒருமுறை பார்த்தான். பூசணிக்காய்கள் கண்ணைக்கவர்ந்தன. கத்தரியும் கறிமிளகாயும் அவனைப் பார்த்துச் சிரித்தன. வழியில் சந்தை இருக்கிறது. கொடுத்துவிட்டுப் போகலாம். சிலவகைக் காய்கறிகளைப் பிடுங்கினார்கள். மாமா மூடையில் கட்டினார்.

செம்பகா மகாவித்தியாலயம் ஈச்சிலம்பற்றுக் கிராமத்தில் இருந்தது. தோட்டம் சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. நிறுவனத்தின் மூலம் அதிபர் சைக்கிள் வழங்கியிருந்தார். நடேசனுக்கும், மாதவனுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கிடைத்தது. “நீங்கள் பாடசாலைக்கு வருவதற்காகத்தான் இந்தச் சைக்கிள். ஒழுங்காக வந்து படித்து நல்லநிலைக்கு வரவேண்டும”;. அதிபர் அறிவுரை கூறிக்கொடுத்தார். அது பேருதவியாக இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர். ஒருவர் பெடலை மிதிப்பார் இன்னொருவர் சைக்கிள் பாரில் இருப்பார். கரியரில் காய்கறி மூடை ஒன்றிருக்கும். அவரது ஒருகால் பெடலில் இருக்கும். விரைந்து சைக்கிள் ஓடும். ஈச்சிலம் பற்றுச் சந்தையில் காய்கறி மூடைகள் இறக்கபடும். ஏழுமணிக்கு சைக்கிள்கள் இரண்டு பாடசாலை வளாகத்தினுள் புகுந்துவிடும். அவர்கள் போனதும் முதலாம் மணி ஒலிக்கும். பாடசாலைக்குப் பிந்தியது கிடையாது.

வன்செயலின்போது அவர்களது வீடு அழிக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தற்காலிகக் குடிலை அமைத்துக் கொடுத்திருந்தது. வீட்டில் ஆச்சியிருந்தார். பகலில் அவர் சமைப்பார். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போவார்கள். ஆச்சி சமைத்துவைத்திருக்கும் உணவை நால்வரும் உண்பார்கள். மாலைநேர வகுப்புகளுக்குத் தவறாது போவார்கள். வகுப்புக்கள் ஐந்தரை மணிவரை நடக்கும். அதிபர் வகுப்புக்களைச் சுற்றி வருவார். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். வகுப்புக்கள் முடிந்ததும் தோட்டத்துக்குப் போய்விடுவார்கள்.

வழமைபோல் தோட்டத்திலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். வட்டவானைக் கடந்திருப்பார்கள். எங்கும் பதட்டமாக இருந்தது. வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது. ஆட்டிலறி ஷெல் சரமாரியாக வந்து வீழ்ந்து வெடித்தது. வீதியில் இருந்த கொங்கிறீற் பாலத்தினடியில் தஞ்சமானார்கள். அரைமணிநேரம் இடைவிடாது நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீதியால் ஓடிக் கொண்டிருந்தார்கள். “எங்கப்பா ஓடுவது? …ஓடியோடிக் களைச்சாச்சி. இனியும் ஓடேலாது.” முதியவர்கள் பலர் நடக்க இயலாமல் விழிபிதுங்க நின்றார்கள். “இப்படி நடக்குமென்று ஆருக்குத் தெரியும்? இதில இந்த மரத்துக்குக் கீழ் நிற்பம். நடக்கிறது நடக்கட்டும்.” அவர்கள் நின்றார்கள். சனங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனால் இந்த முதியோர்கள் என்ன செய்வார்கள்?.

நடேசன் எட்டிப்பார்த்தான். இரண்டு மூன்று முதியோர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். என்ன செய்யலாம்? யோசித்தார்கள். அவர்கள் பகலில் உடுப்பதற்காக சாறன்கள் கொண்டுவருவது வழக்கம். “மாதவன், முதியோருக்கு உதவவேண்டும.; இதனை அதிபரும். ஆசிரியர்களும் சொல்லித் தந்தவர்கள். இப்ப என்ன செய்வம்.? நடேசன் ஆலோசனை கேட்டான். கணேசன் விவேகி. “அண்ணா எங்கட சாறன் இருக்கு. இப்ப நமக்குத் தேவை நாலு தடிகள்தான்”. சட்டெனக் கூறினான். நவநீதனின் கண்கள் பக்கத்து வயல்வேலியைப் பார்த்தன. உறுதியான கதியால்கள் தென்பட்டன. இருவரும் பாய்ந்தார்கள். நான்கு கதியால்கள் வந்தன. வெடிச்சத்தம் குறைந்திருந்தது. சாறங்களை எடுத்து விரித்தார்கள். அதற்குள் தடிகள் புகுந்தன. தற்காலிக கட்டில்கள் தயார். வெளியில் வந்தார்கள். முதியோர்கள் கிடந்த இடத்துக்கு ஒடினார்கள்.

இரண்டு பேராகச் சேர்ந்தார்கள். முதியவர்களைத் தற்காலிகக் கட்டிலில் வைத்தார்கள். தூக்கினார்கள். அத்தனை பேரையும் பாதுகாப்பாகப் பாலத்துக்குக் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சிலருக்குச் சிறிதான காயங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரைப்படுக்க வைத்தார்கள். இதயத்துடிப்பு நிற்பதற்கான அறிகுறி தென்பட்டது. நடேசன் அவரது நெஞ்சில் தனது கைகளைப் பதித்து முதற்சிகிச்சை அளித்தான். அது பலன்கொடுத்தது. பாடசாலையில் இந்தப் பயிற்சியினைப் பெற அதிபர் வசதிகள் செய்து கொடுத்திருந்தார். அப்பயிற்சி கைகொடுத்து உதவியது. அதிபரை நினைந்து கொண்டார்கள். ஷெல்சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

நடேசனும் நவநீதனும் சைக்கிள்களில் விரைந்தார்கள். இருவர் அவர்களுக்குத் துணையாக நின்றனர். சந்தியில் பிரதேசச் செயலாளரின் அலுவலகம் இருந்தது. சென்றார்கள். “ஷெல் அடிக்கிறாங்கள். என்னடா கண்டபடி சுத்துறீங்க”. பதட்டத்தோடு கூடியிருந்த பலர் அதட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. நேரே பிரதேசச் செயலாளரிடம் சென்றார்கள். அவரிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் ஆஸ்பத்திரிக்குக்கு முறையிட்டார். அம்புலனஸ் விரைந்தது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மாணவர்களது செயற்திறன் ஊரெங்கும் பரவியது. அதிபர் மதிபாலர் மகிழ்ந்தார். மாணவர்களைப் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சேவை செய்யும் ஏதிலியர் நிறுவனம் உதவியது. மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்த வழிசெய்தது. நடேசன் முன்மாதிரியாக இருந்தான். மாணவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டான். “நாம் மாணவர்கள். கஸ்டம் என்பது நமது உடன்பிறப்பு. அந்தக் கஸ்டத்தை நாம் வெல்லவேண்டும். படித்து நமது சமூகத்துக்குச் சேவைசெய்ய வேண்டும். நாம் நமது சகோதரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். பாடங்களைக் கவனமாகப் படிப்போம். சித்தியடைவோம்”. திடசங்கற்பத்தோடு மற்றமாணவர்களை உற்சாகப்படுத்தினான்.




பரீட்சையும் விரைந்து வந்தது. பரீட்சைக்குப் போகும் மாணவரை அதிபர், ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள். “வினாத்தாள்களை நன்கு வாசித்து விளங்கி விடையெழுதுங்கள். நீங்கள் அனைவரும் சித்தியடைவீர்கள். வாழ்த்தியனுப்பினார்கள். அதிபரின் அறிவுரையை நன்றாக விளங்கிக் கொண்டார்கள். பரீட்சையை நன்றாக எழுதினார்கள். பரீட்சை முடிந்ததும் தோட்டவேலையில் கவனம் செலுத்தினார்கள். மூன்று மாதங்கள் பறந்தோடின. பெறுபேறு வந்துவிட்டது. அதிபரும், ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். அவர்களது உழைப்பிற்கான அறுவடையை மாணவர்கள் பெற்றுக் கொடுத்துவிட்டார்கள். நடேசனும், மாதவனும் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தனர். முப்பது பிள்ளைகளும் முழுமையான சித்தி பெற்று உயர்கல்வி பெறத்தகுதி பெற்றிருந்தார்கள்.

ஈச்சிலம்பற்று செம்பகா மகாவித்தியாலயம் நிலவொளியில் பளிச்சிட்டது. செம்பகா மகாவித்தியாலயம் தனது பவளவிழாவுக்காகத் தன்னை அலங்கரிப்பதில் மூழ்கிக் கிடந்தது. சில்லென்ற மெல்லிய காற்று உற்சாகத்தை விதைத்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தனர். பெற்றார் தம்பங்கினை உணர்ந்து செயற்பட்டார்கள். பெரியதொரு நிகழ்ச்சி நிரல் தயாரானது. ‘சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனென்பார்கள்’. மாணவர்கள் படுகுஷியாக இருந்தனர். விடியவிடிய மக்கள் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குழுக்களாக இயங்கினர். பலருக்கு உறக்கமே வரவில்லை.

அதிகாலைப் பொழுது எட்டிப்பார்த்தது. மாவிலை தோரணங்கள் காற்றில் அசைந்து வரவேற்றன. மாணவர்களில் பலர் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருந்தார்கள். தங்களது கடமைகளை நன்குணர்ந்து செயற்பட்டார்கள். விழுமியக் கல்வி கொழுந்து விட்டிருந்தது. காலையில் இருந்து பலவிதமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ‘பண்பாட்டைக் காப்பது மாணவர்களது கடமை’ என்பது மாணவர்களது உள்ளங்களில் ஓடியது. அதிபரும், ஆசிரியர்களும் இதற்காகப் பாடுபட்டனர். மாணவர்களையும், அதிபர் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். கல்வித்திணக்களம் பாடசாலையைப் பாராட்டியது. பெற்றாரை உற்சாகப் படுத்தியது. மாணவர்களைப் பெருமைப்படுத்த முன்வந்தது. பெற்றாரோடு இணைந்து விழாவினை ஏற்பாடு செய்தது.

விழா தொடங்கியது பெற்றார்களது வரிசையில் கமலமும், மணியமும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் பெருமையோடு எழுந்தார். “வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எழுவோம். விழுவது எழுவதற்குத்தான். இதனை எனது மாணவர்கள் செயலில் நிலைநாட்டியுள்ளார்கள். இன்று கல்விப் பணிப்பாளர்களும், கல்விமான்களும் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் பாராட்டுவதற்காக. உங்கள் முயற்சி தொடரட்டும். மாணவர்களால் பாடசாலையும், கிராமமும் பெருமையடைகிறது”. அவர் மனதாரப் பாராட்டினார். கல்விப் பணிமனையினர் வாழ்த்திப் பரிசில்கள் கொடுத்தார்கள். பிரதேசச் செயலாளர் முதியவர்களைக் காத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். கமலமும், மணியமும் தங்கள் பிள்ளைகளின் செயலை எண்ணி மகிழ்ந்தார்கள்.


























உன்னைப் பெற்றதால்…..

ஈச்சிலம்பற்று அழகான கிராமம். வரலாற்றுப் பெருமைமிக்க செம்பகவல்லி அம்மனின் கோயில் உள்ள கிராமம். உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். உள்ளத்தால் கோடீஸ்வரர்களாக விளங்கினார்கள். நல்லவர்களாகவும் வல்லவராகவும் வாழவேண்டும் என்ற மனங்கொண்டவர்கள். வெருகல் கங்கை பாய்ந்து வளம்கொடுக்கும். வயல்விளைந்து கிடக்கும். ஆநிரைகள் அசைபோட்டுப் பால் சொரியும். கிராம மக்களை நாட்டின் பிரச்சினை வாட்டியெடுத்தது. பலர் காணாமல் போனார்கள். எல்லோரும் அகதிகளானார்கள். தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவர்கள் ஏராளம். வறுமை தாண்டவாமாடியது. சிறுவர்களும் உழைக்க வேண்டியிருந்தது. கல்வியில் மேம்பட வேண்டும் கல்வியினால் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையில் உயரலாம். என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதிபரும் ஆசிரியர் சிலரும் பாடுபட்டார்கள். இரவு பகலாக உழைத்தார்கள். பாடசாலை எழுச்சி கொண்டது.

பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் வரவில்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அதிபர் பாடங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்கள் உதவின. தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்க முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுதொகை வேதனமாக வழங்கப்பட்டது. மாணவர்களது நன்மை கருதி ஒரு குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் அதிபர் பெற்றுக் கொடுத்தார். அதிபர் தனது ஆசிரியர்களின் உதவியோடு பெற்றாரைக் கண்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெற்றார்கள் விழித்துக் கொண்டார்கள். மாணவர்களுக்கு புத்திமதிகள் கூறினார். பழயமாணவர் சங்கத்தின் உதவியைப் பெற்றார். அவர்கள் பாடசாலைக்காக உழைத்தார்கள். பாடசாலை விழித்துக் கொண்டது.

நடேசன் பதினோராம் வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா கமலம்தான் எல்லாம். தம்பி கணேசன் மட்டும் இருந்தான். கணேசன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். மாதவனுக்கு அம்மா இல்லை. அவனுக்கு அப்பா மணியம்தான் எல்லாம். மாதவனும் நடேசனோடு பதினோராம் வகுப்பில் படிக்கிறான். மாதவனின் தம்பி நவநீதன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் வறுமைகாரணமாக உழைக்கவேண்டியிருந்தது. கமலத்தின் அண்ணன்தான் மணியம். தங்கைக்கு உதவியாக மணியம் இருந்தார்.

ஈச்சிலம்பற்றுக்கு வளமூட்டுவது வெருகல் கங்கைதான். கங்கை நீரைச் சுமந்து சலசலத்தோடும். வெருகலம்பதியானை அடியார்கள் வணங்கி அவன் கருணையைப் பெறுவார்கள். பண்டையப் பெருமைக்கும் தமிழர்களின் இருப்புக்கும் அடையாளம் அந்த வேல்முருகனின் கோயில். நீரின் சிலிர்பில் கரையோரத் தாவரங்கள் மதாளித்து மகிழும். வெருகல் கங்கை ஓரமாக வளமான நிலம் கிடந்தது. தண்ணீரை வேண்டியளவு வெருகல் கங்கை வழங்கியது. பம்பிகள் தேவைப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் அவற்றுக்கு உதவின. கங்கை ஓரம் தோட்டங்கள் பெருகின. மக்கள் ஆர்வமாகச் செயற்பட்டார்கள். மணியமும் கமலத்துக்கு சேர்ந்து தோட்டம் செய்தார்கள். இருவரது தோட்டங்களும் அருகிலேயே இருந்தன. அவர்களுக்குப் பொதுவாக பம்பி கொடுபட்டது.

நடேசனின் தாய் கமலம். தோட்டத்தில் தனியாகப் பாடுபடுவதைப் பிள்ளைகள் விரும்பவில்லை. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். தோட்டத்தில்தான் பொழுது போகும்.
பக்கத்தில் மாதவனின் தோட்டமும் இருந்தது. எல்லோரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வார்கள். பயிர்கள் செழித்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. அவற்றுக்குக் காவல் அவசியம். இரவில் தோட்டத்திலேயே தங்குவார்கள். தோட்டத்தில் ஒத்தாப்பு இருந்தது. அது காவலுக்கும், இளைப்பாறுவதற்குமாகக் கட்டபட்ட தற்காலிகச் சிறுகுடில். அரிக்கன் லாம்பு ஒத்தாப்பில் தொங்கும். வேலைகள் முடிந்ததும் இரவில் பாடங்களைப் படிப்பார்கள்.வெருகல் கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்புப் புதர்கள் தொட்டம் தொட்டமாக ஆடிக்கொண்டிருந்தன. கங்கையின் குளிர்ந்த நீரை பம்பிகள் இறைத்துக் கொண்டிருந்தன. தண்ணீர் காய்கறித் தோட்டங்களைக் குளிப்பாட்டியது. பயிர்கள் சிரித்துக் காற்றில் ஆடின. கத்தரி, மிளகாய், வெண்டி, பூசணி, வெங்காயம் எனப் பயிர்கள் காய்த்துக் குலுங்கின.

















கிராமத்துப் பண் காற்றில் தவழ்ந்து வந்தது. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய வேலை. இன்னும் முடியவில்லை. அவசரமாகத் தோட்டத்தில் வேலைகளைச் செய்தார்கள்.“மாதவன்

நேரமென்ன”? நடேசன் சத்தமிட்டான். பம்பி இரைந்து கொண்டிருந்தது. “சரியாக ஏழு மணி. ஏழரைமணிக்குப் பாடசாலையில் நிற்க வேண்டும். வெளிக்கிடு போவம”;. மாதவன் சத்தமாகச் சொன்னான். தோட்டத்தை ஒருமுறை பார்த்தான். பூசணிக்காய்கள் கண்ணைக்கவர்ந்தன. கத்தரியும் கறிமிளகாயும் அவனைப் பார்த்துச் சிரித்தன. வழியில் சந்தை இருக்கிறது. கொடுத்துவிட்டுப் போகலாம். சிலவகைக் காய்கறிகளைப் பிடுங்கினார்கள். மாமா மூடையில் கட்டினார்.

செம்பகா மகாவித்தியாலயம் ஈச்சிலம்பற்றுக் கிராமத்தில் இருந்தது. தோட்டம் சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. நிறுவனத்தின் மூலம் அதிபர் சைக்கிள் வழங்கியிருந்தார். நடேசனுக்கும், மாதவனுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கிடைத்தது. “நீங்கள் பாடசாலைக்கு வருவதற்காகத்தான் இந்தச் சைக்கிள். ஒழுங்காக வந்து படித்து நல்லநிலைக்கு வரவேண்டும”;. அதிபர் அறிவுரை கூறிக்கொடுத்தார். அது பேருதவியாக இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர். ஒருவர் பெடலை மிதிப்பார் இன்னொருவர் சைக்கிள் பாரில் இருப்பார். கரியரில் காய்கறி மூடை ஒன்றிருக்கும். அவரது ஒருகால் பெடலில் இருக்கும். விரைந்து சைக்கிள் ஓடும். ஈச்சிலம் பற்றுச் சந்தையில் காய்கறி மூடைகள் இறக்கபடும். ஏழுமணிக்கு சைக்கிள்கள் இரண்டு பாடசாலை வளாகத்தினுள் புகுந்துவிடும். அவர்கள் போனதும் முதலாம் மணி ஒலிக்கும். பாடசாலைக்குப் பிந்தியது கிடையாது.

வன்செயலின்போது அவர்களது வீடு அழிக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தற்காலிகக் குடிலை அமைத்துக் கொடுத்திருந்தது. வீட்டில் ஆச்சியிருந்தார். பகலில் அவர் சமைப்பார். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போவார்கள். ஆச்சி சமைத்துவைத்திருக்கும் உணவை நால்வரும் உண்பார்கள். மாலைநேர வகுப்புகளுக்குத் தவறாது போவார்கள். வகுப்புக்கள் ஐந்தரை மணிவரை நடக்கும். அதிபர் வகுப்புக்களைச் சுற்றி வருவார். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். வகுப்புக்கள் முடிந்ததும் தோட்டத்துக்குப் போய்விடுவார்கள்.

வழமைபோல் தோட்டத்திலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். வட்டவானைக் கடந்திருப்பார்கள். எங்கும் பதட்டமாக இருந்தது. வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது. ஆட்டிலறி ஷெல் சரமாரியாக வந்து வீழ்ந்து வெடித்தது. வீதியில் இருந்த கொங்கிறீற் பாலத்தினடியில் தஞ்சமானார்கள். அரைமணிநேரம் இடைவிடாது நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீதியால் ஓடிக் கொண்டிருந்தார்கள். “எங்கப்பா ஓடுவது? …ஓடியோடிக் களைச்சாச்சி. இனியும் ஓடேலாது.” முதியவர்கள் பலர் நடக்க இயலாமல் விழிபிதுங்க நின்றார்கள். “இப்படி நடக்குமென்று ஆருக்குத் தெரியும்? இதில இந்த மரத்துக்குக் கீழ் நிற்பம். நடக்கிறது நடக்கட்டும்.” அவர்கள் நின்றார்கள். சனங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனால் இந்த முதியோர்கள் என்ன செய்வார்கள்?.

நடேசன் எட்டிப்பார்த்தான். இரண்டு மூன்று முதியோர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். என்ன செய்யலாம்? யோசித்தார்கள். அவர்கள் பகலில் உடுப்பதற்காக சாறன்கள் கொண்டுவருவது வழக்கம். “மாதவன், முதியோருக்கு உதவவேண்டும.; இதனை அதிபரும். ஆசிரியர்களும் சொல்லித் தந்தவர்கள். இப்ப என்ன செய்வம்.? நடேசன் ஆலோசனை கேட்டான். கணேசன் விவேகி. “அண்ணா எங்கட சாறன் இருக்கு. இப்ப நமக்குத் தேவை நாலு தடிகள்தான்”. சட்டெனக் கூறினான். நவநீதனின் கண்கள் பக்கத்து வயல்வேலியைப் பார்த்தன. உறுதியான கதியால்கள் தென்பட்டன. இருவரும் பாய்ந்தார்கள். நான்கு கதியால்கள் வந்தன. வெடிச்சத்தம் குறைந்திருந்தது. சாறங்களை எடுத்து விரித்தார்கள். அதற்குள் தடிகள் புகுந்தன. தற்காலிக கட்டில்கள் தயார். வெளியில் வந்தார்கள். முதியோர்கள் கிடந்த இடத்துக்கு ஒடினார்கள்.

இரண்டு பேராகச் சேர்ந்தார்கள். முதியவர்களைத் தற்காலிகக் கட்டிலில் வைத்தார்கள். தூக்கினார்கள். அத்தனை பேரையும் பாதுகாப்பாகப் பாலத்துக்குக் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சிலருக்குச் சிறிதான காயங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரைப்படுக்க வைத்தார்கள். இதயத்துடிப்பு நிற்பதற்கான அறிகுறி தென்பட்டது. நடேசன் அவரது நெஞ்சில் தனது கைகளைப் பதித்து முதற்சிகிச்சை அளித்தான். அது பலன்கொடுத்தது. பாடசாலையில் இந்தப் பயிற்சியினைப் பெற அதிபர் வசதிகள் செய்து கொடுத்திருந்தார். அப்பயிற்சி கைகொடுத்து உதவியது. அதிபரை நினைந்து கொண்டார்கள். ஷெல்சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

நடேசனும் நவநீதனும் சைக்கிள்களில் விரைந்தார்கள். இருவர் அவர்களுக்குத் துணையாக நின்றனர். சந்தியில் பிரதேசச் செயலாளரின் அலுவலகம் இருந்தது. சென்றார்கள். “ஷெல் அடிக்கிறாங்கள். என்னடா கண்டபடி சுத்துறீங்க”. பதட்டத்தோடு கூடியிருந்த பலர் அதட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. நேரே பிரதேசச் செயலாளரிடம் சென்றார்கள். அவரிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் ஆஸ்பத்திரிக்குக்கு முறையிட்டார். அம்புலனஸ் விரைந்தது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மாணவர்களது செயற்திறன் ஊரெங்கும் பரவியது. அதிபர் மதிபாலர் மகிழ்ந்தார். மாணவர்களைப் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சேவை செய்யும் ஏதிலியர் நிறுவனம் உதவியது. மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்த வழிசெய்தது. நடேசன் முன்மாதிரியாக இருந்தான். மாணவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டான். “நாம் மாணவர்கள். கஸ்டம் என்பது நமது உடன்பிறப்பு. அந்தக் கஸ்டத்தை நாம் வெல்லவேண்டும். படித்து நமது சமூகத்துக்குச் சேவைசெய்ய வேண்டும். நாம் நமது சகோதரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். பாடங்களைக் கவனமாகப் படிப்போம். சித்தியடைவோம்”. திடசங்கற்பத்தோடு மற்றமாணவர்களை உற்சாகப்படுத்தினான்.




பரீட்சையும் விரைந்து வந்தது. பரீட்சைக்குப் போகும் மாணவரை அதிபர், ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள். “வினாத்தாள்களை நன்கு வாசித்து விளங்கி விடையெழுதுங்கள். நீங்கள் அனைவரும் சித்தியடைவீர்கள். வாழ்த்தியனுப்பினார்கள். அதிபரின் அறிவுரையை நன்றாக விளங்கிக் கொண்டார்கள். பரீட்சையை நன்றாக எழுதினார்கள். பரீட்சை முடிந்ததும் தோட்டவேலையில் கவனம் செலுத்தினார்கள். மூன்று மாதங்கள் பறந்தோடின. பெறுபேறு வந்துவிட்டது. அதிபரும், ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். அவர்களது உழைப்பிற்கான அறுவடையை மாணவர்கள் பெற்றுக் கொடுத்துவிட்டார்கள். நடேசனும், மாதவனும் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தனர். முப்பது பிள்ளைகளும் முழுமையான சித்தி பெற்று உயர்கல்வி பெறத்தகுதி பெற்றிருந்தார்கள்.

ஈச்சிலம்பற்று செம்பகா மகாவித்தியாலயம் நிலவொளியில் பளிச்சிட்டது. செம்பகா மகாவித்தியாலயம் தனது பவளவிழாவுக்காகத் தன்னை அலங்கரிப்பதில் மூழ்கிக் கிடந்தது. சில்லென்ற மெல்லிய காற்று உற்சாகத்தை விதைத்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தனர். பெற்றார் தம்பங்கினை உணர்ந்து செயற்பட்டார்கள். பெரியதொரு நிகழ்ச்சி நிரல் தயாரானது. ‘சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனென்பார்கள்’. மாணவர்கள் படுகுஷியாக இருந்தனர். விடியவிடிய மக்கள் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குழுக்களாக இயங்கினர். பலருக்கு உறக்கமே வரவில்லை.

அதிகாலைப் பொழுது எட்டிப்பார்த்தது. மாவிலை தோரணங்கள் காற்றில் அசைந்து வரவேற்றன. மாணவர்களில் பலர் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருந்தார்கள். தங்களது கடமைகளை நன்குணர்ந்து செயற்பட்டார்கள். விழுமியக் கல்வி கொழுந்து விட்டிருந்தது. காலையில் இருந்து பலவிதமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ‘பண்பாட்டைக் காப்பது மாணவர்களது கடமை’ என்பது மாணவர்களது உள்ளங்களில் ஓடியது. அதிபரும், ஆசிரியர்களும் இதற்காகப் பாடுபட்டனர். மாணவர்களையும், அதிபர் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். கல்வித்திணக்களம் பாடசாலையைப் பாராட்டியது. பெற்றாரை உற்சாகப் படுத்தியது. மாணவர்களைப் பெருமைப்படுத்த முன்வந்தது. பெற்றாரோடு இணைந்து விழாவினை ஏற்பாடு செய்தது.

விழா தொடங்கியது பெற்றார்களது வரிசையில் கமலமும், மணியமும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் பெருமையோடு எழுந்தார். “வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எழுவோம். விழுவது எழுவதற்குத்தான். இதனை எனது மாணவர்கள் செயலில் நிலைநாட்டியுள்ளார்கள். இன்று கல்விப் பணிப்பாளர்களும், கல்விமான்களும் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் பாராட்டுவதற்காக. உங்கள் முயற்சி தொடரட்டும். மாணவர்களால் பாடசாலையும், கிராமமும் பெருமையடைகிறது”. அவர் மனதாரப் பாராட்டினார். கல்விப் பணிமனையினர் வாழ்த்திப் பரிசில்கள் கொடுத்தார்கள். பிரதேசச் செயலாளர் முதியவர்களைக் காத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். கமலமும், மணியமும் தங்கள் பிள்ளைகளின் செயலை எண்ணி மகிழ்ந்தார்கள்.

Read more...

Sunday, April 25, 2010

தூக்கணாங் குருவிக் கூடு.

சாவகச்சேரி செழிப்பான அழகிய நகரம். சாவகச்சேரிச் சந்தை பிரசித்திபெற்றது. நல்ல மண்வளம் சாவகச்சேரியை சூழ்ந்துள்ளது. வயல்சார்ந்த நிலம் பரந்திருந்தது. உழைப்பால் உயர்ந்த மக்களைக் கொண்டது மா, பலா. தென்னை. பனை, வாழையெனப் பயன்தரும் மரங்கள் நிறைந்திருந்தன. பனைகள் வானுயர வளர்ந்து காற்றில் ஆடின. நுங்குக் குலைகள் சேர்ந்தாடின.
வயல்வெளியில் நெற்கதிர்கள் சாய்ந்தாடின. பறவைகள் பாட்டம் பாட்டமாய்ப் பறந்து திரிந்தன. சிட்டான் குருவிகள் வயல்வரம்புகளில் கூடுகட்டிக் குதூகலித்தன. தினையான் குருவிகள் பற்றைகளில் கூடுவைத்தன. உயர்ந்த பனையோலைகளில் தோரணங்கள் ஆடின. அவை தோரணங்கள் அல்ல. தூக்கணாங் குருவிகளின் கூடுகள். தோட்டங்களில் காய்கறி வகைகள் விளைந்தன. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். மண்டுவில்லேன் சிறுவர்கள் குறும்புக் காரர்கள். விடிந்தால் வயல்வெளிகளில் திரிவார்கள். பற்றைகளில் பதுங்கிக் குருவிகளைப் பிடிப்பார்கள்.

கூட்டமாகச் சேருவார்கள். பனைகளின் கீழ் சிறு கொட்டில்களைப் போடுவார்கள். கண்ணில் படுவதெல்லாம் அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள்தான். அவர்களுக்கு ஆண்பெண் என்ற வித்தியாசமில்லை. சாதிபோதம் கிடையாது. வெள்ளையுள்ளம் கொண்ட வண்ணத் தேவதைகள். வடலிகளுக்குள் புகுந்து ஓடுவார்கள். விளையாடுவார்கள். அடிக்கடி விளையாட்டுக்கள் மாறும். சந்தையும் குதூகலிக்கும். நெருஞ்சிச் செடிகளின் இலைகளை எடுப்பார்கள். தண்ணீரில் போட்டுப் பிழிவார்கள். அதனை வடிப்பார்கள். அது எண்ணெய்போல் தடிப்பான திரவமாகும். அது அவர்களுக்கு எண்ணெய்யாகும். சிறு போத்தல்கள் இருக்கும். அளந்து வியாபாரம் நடக்கும். செங்கற்தூள் அவர்களுக்கு மிளகாய்த் தூள். கண்ணில் பட்டதெல்லாம் அவர்களது விளையாட்டுப் பொருட்களே.

குரும்பட்டிகளைச் சேர்ப்பார்கள். நுங்குக் கோம்பைகளையும் சேர்ப்பார்கள். இரண்டு குரும்பட்டிகளை அல்லது நுங்குக் கோம்பைகளை எடுப்பார்கள் ஒரடி நீளமான தடியின் முனைகளில் இணைப்பார்கள். பற்றையில் உள்ள நீளமான தடியை வெட்டுவார்கள். இரண்டு கிளைகள் பிரியும் இடத்தைக் கவனிப்பார்கள். அளவாக வெட்டி எடுப்பார்கள். அதனை நுங்குகள் பொருத்திய தடியில் மாட்டுவார்கள். தள்ளுவார்கள். நுங்கு வண்டில் உருளும். வண்டிச் சவாரிப்போட்டி நடக்கும். சந்தோசத்தில் துள்ளுவார்கள்.

விழுந்த பனையோலையின் அடிப்பகுதியை தங்கள் உயரத்திற்கு ஏற்ப வெட்டுவார்கள். அதனைத் தலைகீழாகப் பிடித்துத் தார் வீதியில் அழுத்தித் தள்ளுவார்கள். அமுக்கத்தினால் பனைமட்டை தெத்தும். அப்போது மோட்டார் சைக்கிள் போல் சத்தம் வரும். பாடிப்பாடி மோட்டார் சைக்கள் ஓடும். சிலநேரம் பாடசாலை நடக்கும். சிலர் ஆசிரியர்களாகப் பாடம் நடத்துவார்கள். மற்றவர்கள் மாணவர்களாக மாறுவார்கள். எருக்கலை இலைகள்தான் அவர்களது கொப்பிகள். பனை ஈர்க்குகள் அவர்களுக்குப் பென்சில்களாக மாறும். ஈர்க்கிலால் எருக்கலை இலையில் கிறுக்குவார்கள். எருக்கலை இலை தடிப்பானது. அதில் ஈர்க்கினால் எழுதும்போது பதியும்.

அதனைப் பார்த்து மகிழ்வார்கள். அவர்களுக்குத் தங்கள் கிறுக்கல் யாவும் எழுத்துக்கள்தாம். அதனையே வாசிப்பார்கள். தமக்குத் தெரிந்த கதைகளை இலைகளைப் பார்த்துச் சொல்வார்கள். தெரிந்த கதைகள் வாசிக்கப்படும். பனையிலிருந்து தூக்கணாங் குருவிக்கூடுகள் விழும். அவற்றைச் சேகரிப்பார்கள். அதன் வடிவமைப்பைப் பார்த்துப் பிரமிப்பார்கள்.

சிறுவர்களது செயற்பாடுகளை நாள்தவறாது இருவர் அவதானித்தார்கள். இந்தச் சிறார்களுக்கு ஏதும் நாங்கள் செய்யவேண்டும். இவர்களது சின்ன மனங்களில் நல்ல சிந்தனைகள் உருவாகியுள்ளன. இவர்களை நல்ல மனிதர்களாக்க வேண்டும். சிறுவர்கள் வெற்றுக்குடங்களல்ல. குழந்தை கருவில் உருவாகும் போதே கற்கத் தொடங்குகிறது. அவர்களது மூளையும் இதயமும் விருத்தியடைகிறது. இந்த வயதிலேயே இவர்கள் நல்லனவற்றைச் சிந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். “இவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டியது நமது கடமை”. அதனைச் செய்வதற்கு மகாலிங்கத்தார் தருணம் பார்த்திருந்தார். இராசரத்தினத்தார் உந்து சக்தியாக உதவியாக இருந்தார். “சிறுவர் பாடசாலை ஒன்றைக் கட்டவேண்டும். அதனைச் செய்தால் உங்கள் மனதுக்கு சந்தோசமாக இருக்கும்”. இராசரத்தினம் மகாலிங்கத்தாரைக் கேட்டுக் கொண்டார். அதற்கான ஒழுங்குகளை இருவரும் செய்தார்கள்.

ஒருநாள் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பலத்த காற்றுச் சுழன்றடித்தது. பனைகள் ஆடிச்சுழன்றன. பனையோலைகள் சரசரத்தன. பல பனையோலைகள் வீழ்ந்தன. அடர்த்தியான பனைகளுக்குள் ஒதுங்கினார்கள். அவர்களுக்கு அண்மையில் ஒரு பனையோலை வீழ்ந்தது. முதலில் பயந்தார்கள். காற்று ஓய்ந்தது. ஓலையோடு குருவிக்கூடு விழுந்தது. அதனைக் கண்டார்கள். ஓடிச்சென்று எடுத்தார்கள். கூட்டினுள் குஞ்சுகளின் ஆரவாhரம். சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்.

மூன்று குஞ்சுகள் கூக்குரலிட்டன. தூக்கணாங் குருவிகள் பறந்து வட்டமடித்தன. சிறார்களுக்கு அவை அழுவதுபோல் தோன்றின. இந்திரன்தான் அவர்களுக்குத் தலைவன். அவனுக்கு இரக்க சுபாவம் அதிகம். குஞ்சுகளைப் பார்த்து மகிழ்ந்தான். அண்ணார்ந்து பார்த்தான். தாய்க்குருவி அலறியடிப்பதைக் கண்டான். தந்தைக்குருவியும் பறந்து பறந்து சத்தமிட்டது. அவற்றைச் சுற்றிப் பலகுருவிகள் சேர்ந்து ஓலமிட்டன. “ஏய் … தம்பி தங்கைகளே.. இந்தக் குருவிக் குஞ்சுகளை என்ன செய்வோம் சொல்லுங்கோ”? பலத்துச் சொன்னான். “நாங்க வளர்ப்போம்”. ஒரேகுரலாகப் பதில் வந்தது. இந்திரன் இதனை எதிர்பார்க்கவில்லை. அவனுக்குக் கவலையாக இருந்தது. “இவை சின்னஞ்சிறிய குஞ்சுகள். என்ன செய்வது? அவன் யோசித்தான்.

குஞ்சுகளைப் பார்த்தான். அவை சின்னச் சிறகுகளை விரித்து வாயைத் திறந்து சத்தமிட்டன. “ஐயோ பாவம். அதுகளுக்குப் பசிபோல. ஏதும் தின்னக் குடுப்பமே?” ருக்மணி பரிதாபப்பட்டாள். அவளுக்கு இரக்ககுணம் அதிகம். “ஓன்று செய்வோம். குஞ்சுகளை அப்படியே விடுவோம். தாய் வந்து தூக்கிக் கொண்டு போகும். விடுவோமா”? ராசன் மனமில்லாமல் கூறினான். “விடுவோம்” குரல் வந்தது. “இப்படியே விடுவது பாவம்.” முகுந்தன் சத்தமிட்டான். அவ்வழியே இராசரத்தினத்தார் வந்தார். கூடவே மகாலிங்கத்தாரும் வந்தார். சிறுவர்களுக்குச் சந்தோசம். “ஐயா இஞ்ச…பாருங்கோ. குருவிக் குஞ்சுகள். பாவம் . அங்க பாருங்கோ.. தாய்க்குருவி அலறுது. பனையில் இந்தக் கூட்டை வைக்கலாமோ சொல்லுங்கோ. ஐயா”? இந்திரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

இராசரத்தினத்தார் குஞ்சுகளைப் பார்த்தார். குஞ்சுகள் அவரைப்பார்த்தன. வாயைப்பிளந்து சத்தமிட்டன. இராசரத் தினத்தார் மகாலிங்கத்தைப் பார்த்தார். இருவரும் புன்னகை செய்தார்கள். “என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள்.” இருவரும் ஒன்றாகவே பதிலளித்தார்கள். “ஐயா! இந்தக் குஞ்சுகளைக் கூட்டில் விடுவோம். கூட்டைப் பனையில் கட்டிவிடுவோம். தாய் வந்து கூட்டிச்செல்லும். பாவம் ஐயா. எங்களால மரத்தில் ஏறமுடியாது”. இந்திரன் வினயமாக ஒப்புவித்தான். மகாலிங்கம் இளகிய மனம் படைத்தவர். இராசரத்தினத்தைப் பார்த்தார். இராசரத்தினம் செல்வாக்குள்ள நல்ல மனிதர். “சரி நீங்கள் சொல்வது போல் செய்வோம். ஆனால் ஒன்று. நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேணும். அதன்படி நடக்கவேணும். சம்மதமா”? கேள்வியைக் கேட்டு பதிலுக்காகக் காத்திருந்தார்.

“என்ன ஐயா செய்யவேணும்? ருக்மணி முந்திக் கொண்டு பதில் சொன்னாள். இந்திரன் எல்லோருடைய முகங்களையும் பார்த்தான். அவர்களது மனங்களைப் படித்தான். தாங்கள் எருக்கலை இலையில் கிறுக்குவதையே வாசித்துப் பழக்கப் பட்டவர்கள். அல்லவா?. அவனும் ஒப்புக் கொண்டான். மகாலிங்கத்தாருக்குக் கொள்ளைச் சந்தோசம். இராசரத்தினத்தார் பலமாகச் சிரித்தார். சிறுவர்களுக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் இந்தக் குஞ்சுகளுக்காக ஒத்துக் கொண்டனர். “ஐயா என்ன செய்யவேணும். அதைச் சொல்லுங்கோ. அங்கே மேலே பாருங்கள். அந்தக்குருவிகள் அலறுகின்றன. இந்தக் குஞ்சுகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்”. ஓன்றாகவே சத்தமிட்டனர்.

சிறுவர்களது இரக்க சுபாவத்தை வெகுவாக ரசித்தார்கள். “நீங்கள் பெரிசாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. உங்களுக்காக அந்த இடத்தில பாடசாலை கட்டித்தரப் போகிறோம்.” முன்பள்ளி கட்டப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார். “அந்த நேசரி எங்களுக்கா”? ஆவலோடு கேட்டார்கள். “வேற ஆருக்கு? உங்களுக்குத்தான். நீங்கள் நல்ல பிள்ளைகள். உங்களிடம் இரக்கமும், அன்பும் இருக்கிறது. நீங்கள் படிக்கவேண்டும். விளையாடி விளையாடிப் படிக்கவேண்டும். பாடசாலை கட்டித் தருவது எங்கட பொறுப்பு”. மகாலிங்கத்தார் கூறினார். பிள்ளைகள் குதூகலித்தார்கள். துள்ளிச் சந்தோசப் பட்டார்கள். “ஹேய்…” என்று சத்தமிட்டார்கள். “நாங்கள் பாடசாலைக்கு வருவோம்”. ஏகமனதாகக் கூச்சலிட்டனர். “ஐயா! எப்ப பாடசாலை தொடங்கும்”. ருக்மணி ஆவலோடு கேட்டாள். அவள் பாடசாலைக்குப் போவதாகக் கனவுகாணத் தொடங்கிவிட்டாள். “அடுத்த மாதம் பாடசாலை தொடங்குவோம். சரியா”? மகாலிங்கத்தார் பதில் கூறினார். இராசரத்தினம் யாரையோ தேடினார். தூரத்தில் மயில்வாகனம் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். “தம்பி… மயில்..இஞ்ச கொஞ்சம் வா..தம்பி” அழைத்தார். மயில் ஓடோடி வந்தான்.

“இஞ்சபார் தம்பி..ஒருக்கா இந்தப் பனையில ஏறி இந்தக்கூட்டை வைக்கலாமோ? பார் தம்பி”. அன்போடு கேட்டார். மயில் நல்ல பையன். பனைகளில் ஏறிஇறங்குவதில் சூரன். சிறுவர்களின் கூட்டாளி. சிலநேரங்களில் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவான்; அவன் ஐந்தாம் வகுப்போடு படிப்புக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டான். அவன்தான் சிறுவர்களுக்கு நுங்கு வெட்டிக் கொடுப்பவன். புனையை அண்ணார்ந்து பார்த்தான். பனை அவ்வளவு உயரமில்லை. “ஐயா…அந்தக் கூட்டுக்குள் என்ன இருக்கு? மயில் கேட்டான். “அதுக்குள் குருவிக்குஞ்சுகள் இருக்கு” ருக்கு பதில் கூறினாள். “அண்ணன் இப்ப ஏன் நீங்க விளையாட வாறதில்லை. பள்ளிக்குப் படிக்கப் போறீங்களோ”? செந்தில் கேட்டாள். “அந்தப் பள்ளிக்கு யார் போவான்.” முகத்தைச் சுளித்தமாதிரிச் சொன்னான். “ஏன் படிப்பது நமக்கு நல்லதுதானே”? மீண்டும் செந்தில் கூறினாள். “நல்லதுதான். ஆனால் ‘ஸ்கொலசிப்’ சோதினை என்று உசிரை எடுக்கிறாங்கள்.” “அப்ப தம்பி நீ சோதினை எடுக்கல்லையோ?” மகாலிங்கத்தார் வியப்போடு கேட்டார்.

“சோதினை எடுத்தனான் ஐயா. ஒரு ‘மார்க்ஸ்’; குறைவாம். அதுக்கு நான் என்ன செய்யிறது? ‘மார்க்ஸ’; போடுறவங்க குறைச்சிட்டாங்க… அவங்க கூடப்போட்டிருக்கலாம்தானே?. பாஸ்பண்ணின பிள்ளைகளை பாராட்டுறாங்க. நான் ஒரு மார்க்ஸால விட்டுட்டன். என்ர மனம் எவ்வளவு வேதனைப் பட்டது. அது எனக்குத்தான் தெரியும். அதனால பள்ளிக்குப் போறல்லை. நிண்டிட்டன்.” அவன் சொல்லும் போது இராசரத்தினத்தின் விழிகள் பனித்தன. பெருமூச்சு விட்டார். யோசித்தார். “இந்த ‘ஸ்கொலசிப்’ சோதினை யாருக்காக நடத்தினம். வறுமைக்கோட்டுக்குள் வாழும் பிள்ளைகளுக்காகத்தானே. பாஸ்பண்ணுகிற பிள்ளைகள் யார்? எல்லாரும் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள்தான். இப்ப ஸ்கொலசிப் சோதினை கௌரவத்துக்காக நடக்கிறது. பாவம். இதனால் வறுமையான பிள்ளைகள்தான் நஸ்டம் அடைகிறார்கள். அரசாங்கம் நன்மை அடைகிறது”. அவரது மனம் வெந்தது. “தம்பி வேற பள்ளியில் சேர்த்து விட்டால் படிக்கலாம்தானே”? கேட்டார். அவன் “ஓம் ஐயா” சட்டென்று பதில் சொன்னான். “சரி அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறன். இது முடிய என்னோடு விட்டுக்கு வா. சரியா? இப்ப இந்தக் கூட்டைப் பனையில வை தம்பி” அவன் கூட்டை எடுத்துப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் குஞ்சுகள் சிறகை விரித்தன. வாயைத்திறந்து சத்தமிட்டன. “ஐயோ.. பாவம். சன்னக் ” பரிதாபப் பட்டான்.

ருக்கு கூட்டை எடுத்துக் கொடுத்தாள். கூட்டை எடுத்து இடுப்பில் கட்டினான். மளமளவென்று அணில்போல பனையில் ஏறினான். அவன் ஏறுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இராசரத்தினத்தாருக்கு நெஞ்சு படபடத்தது. “கடவுளே அந்தப் பிள்ளையைக் காப்பாற்று” மனதில் கடவுளைப் பிரார்த்தித்தார். மயில் வளைந்து வளைந்து பதம் பார்த்தான். உறுதியான பனை மட்டைகளைப் பிடித்தான். வசதியாகக் கால்களை வைத்துக் கொண்டான். ஒரு பனையோலையைப் பிடித்து இழுத்துக் கொண்டான். கூட்டை எடுத்து ஓலையில் வரிந்து கட்டினான். முடிந்து விட்டது. பனையோலையை மெதுவாக விட்டான். கீழே நின்றவர்கள் ஆரவாரித்தார்கள். கூடு பனையோலையில் காற்றில் ஆடியது. பறவைகள் பார்த்த வண்ணம் இருந்தன. “மெதுவாக இறங்கு”. கீழே இருந்து குரல்கள் ஒலித்தன. மயில் கீழே இறங்கி வந்தான். அவனை சிறுவர்கள் சூழ்ந்து நன்றி சொன்னார்கள். குருவிகளின் சத்தம் அடங்கிவிட்டது. தாய்ப்பறவை குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.

பறவைகள் எல்லாம் வட்டமடித்து வந்தன. அவர்களைச் சுற்றிவிட்டுப் பறந்து போயின. சிறுவர்களுக்குச் சந்தோசம். “இப்ப எல்லாருக்கும் சந்தோசம்தானே? சரி நீங்க விளையாடுங்கோ. அடுத்த மாதம் முதலாம் திகதி பாடசாலை தொடங்குவோம். சரியா”? கூறிக் கொண்டு இருவரும் நடந்தார்கள். “தம்பி மயில் என்னோட வா”. இராசரத்தினம் அவனை அழைத்தார். அவனும் பின்னால் சென்றான். அவனைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரில் சேர்த்துவிட்டார். அவனது படிப்புச் செலவை அவரே பொறுப்பெடுத்தார். பாடசாலை கட்டப்பட்டது. நல்ல நாளில் பாடசாலை தொடங்கி விட்டது. மூன்று இளம் ஆசிரியைகள் நியமிக்கப் பட்டார்கள். பிள்ளைகள் ஆர்வத்தோடு கல்வி கற்கத் தொடங்கிவிட்டனர்.

சாவகச்சேரியில் தபால் அலுவலக வீதி சுறுசுறுப்பாகியது. இராசரத்தினத்தார் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அது மண்டுவில்லேனை அடைந்தது. மகாலிங்கம் ஆவலோடு காத்திருந்தார். குகேந்திரன் முன்பள்ளி கலகலத்தது. ஆர்வமுடன் சிறுவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். கற்றல் விளையாட்டு முறையில் நடந்து கொண்டிருந்தது. இருவரையும் கண்ட சிறுவர்கள் ஆசிரியைகள் சகிதம் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஐயா! நாங்கள் நன்றாகப் படிக்கிறோம். ஒருமித்த குரலில் சத்தமிட்டார்கள். ருக்மணியும், செந்திலும் தாங்கள் செய்த மாலைகளை எடுத்து வந்தார்கள். ருக்மணி இராசரத்தினத்தாரின் கழுத்தை அலங்கரித்தாள். செந்தில் மகாலிங்கத்தாரின் கழுத்தை அலங்கரித்தாள். அவர்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

தாங்கள் பயின்ற கற்றல் நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டினார்கள். இருவருக்கும் பெருமையாக இருந்தது. பெற்றார்கள் மகிழ்ந்து பாராட்டினார்கள். மகாலிங்கத்தாரின் கண்கள் பனித்தன. “இன்று எனது மனம் நிறைந்து விட்டது. எனது ஆசைமகன் குபேந்திரனின் கனவு நிறைவேறி விட்டது. இந்தப் பிஞ்சு முகங்களில் அவனைக் காண்கிறேன்.” அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. இராசரத்தினத்தாரின் மனம் சந்தோசித்தது. சிறுவர்கள் ஆடிப்பாடி மகிந்து கொண்டார்கள். தங்களுக்கு வாழ்வளித்த சிறுவர்களைப் பாரத்துக் குருவிகள

Read more...

கிளிக்குஞ்சு மலை

திருகோணமலை நகரின் மேற்காகக் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. இடையில் உள்ளதுதான் கிளிக்குஞ்சு மலை. அப்பகுதி இயற்கை வளம் நிறைந்த பிரதேசம். சிறிய மலைத்தொடர் நீண்டு கிடக்கிறது. மலைத் தொடரில் தொட்டம் தொட்டமாக தாவரப்போர்வை. தொடரை மூடிச் சோடித்துக் கிடக்கிறது. மரஞ்செடி கொடிகள் பரந்திருந்தன. பூக்களும் காய்கனிகளும் நிறைந்திருந்தன. நெருக்கமாகப் புதர்கள் வளர்ந்திருந்தன. மரஞ்செடி கொடிகள் பரந்திருந்தன. பூக்களும், காய்கனிகளுமாய் நிறைந்திருந்தன. பறவைகளுக்குப் புகலிடமாக விளங்கியது. எங்கும் பலவகைப் பறவைகள் வாழ்ந்தன.

கிளிகள்தான் அதிகமாகக் காணப்பட்டன. புறாக்களும் நிறையவே வாழ்ந்தன. மலைத் தொடர் நீண்டு ஆங்காங்கே கற்பாறைகளை நீட்டியிருந்தன. பாறைகள் அடுக்கடுக்காகப் படுக்கை விரித்திருந்தன. பாறை இடுக்குகள் பெரிதும் சிறிதுமாகக் காணப்பட்டன. இடுக்குகள் குகைபோல் தெரிந்தன. மலை இடுக்குகளில் புறாக்களும், கிளிகளும் வாழ்ந்தன. மைனாக்களும் இன்னும் பலவகைப் பறவைகளும் வாழ்ந்தன. பொந்துகளில் கூடுகளை அமைத்தன. முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரித்து வாழ்ந்தன. ஊரிய நேரத்தில் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டின. குஞ்சுகள் சந்தோசமாகச் சிறகடித்து குதூகலித்தன.


கிழக்கு வெளிக்குமுன் பறவைகள் எழுந்து விடும். காலைவேளை குதூகலமாக இருக்கும். பொழுது புலருமுன் அனைத்துப் பறவைகளும் வெளியில் வந்து விடும். குஞ்சுகளும் பொந்துகளைவிட்டு வெளியில் எட்டிப் பார்க்கும். அனைத்தும கூடிச் சல்லாபிக்கும். காலையானதும் கிளிகளும் புறாக்களும் பாட்டம் பாட்டமாகச் சேரும். இரைதேடப் போவது சந்தோசமானது. பாட்டம் பாட்டமாகச் சேர்ந்து பாடிப்பறக்கும்.

வான்வெளியில் சிறகடித்து வலம் வரும். காற்றில் சிறகை விரித்துப் பறப்பது அற்புதமானது. பறவைகள் வெளியே போனதும் கிளி. புறா, மைனா, எனக் குஞ்சுகள் ஒன்று சேரும். சேர்ந்து ஒற்றுமையாக விளையாடிப் பேசிமகிழும். அவைகளுக்குள் வேற்றுமையில்லை. மரங்களிலும். மலையோரங்களிலும் குஞ்சுகள் நிறைந்திருக்கும். கிளிக்குஞ்சுகளின் அட்டகாசந்தான் பெரிதாக இருக்கும். கிளிக்குஞ்சுகளின் சொர்க்கமாக மலை விளங்கியது. அதனால் ‘கிளிக்குஞ்சுமலை’ என்ற பெயர் வந்தது.

மாலையானதும் ஒரே குதூகலம்தான். புறாக்கள் ஒருபுறம் கூடி உறவாடும். கொஞ்சிக் குலாவும். கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து பேசும். மனிதர்கள் வந்தார்கள். தரமான கருங்கற்கள் எனப் பார்த்தவர்கள் கூறினார்கள். உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மனிதனுக்குரியவை. “இறைவன் மனிதனுக்காகப் படைத்த செல்வங்கள் இவை”. இப்படித்தான் மனிதர்கள் பேசிக்கொண்டார்கள். கல்லுடைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. தொழிலாளர்களுக்கு தற்காலிக தொடர்வீடுகள் கட்டப்பட்டன. பல தொழிலாளர்களது குடும்பங்கள் வந்தனர். மலையை வெடிமருந்து வைத்துத் தகர்க்கத் தொடங்கினர். வெடிச்சத்தம் அந்தப்பிரதேசத்தைக் கலங்க வைத்தது.

கிளிக்குஞ்சு மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் ‘குவாரி’ இருந்தது. குவாரியில் இருந்து கூப்பிடு தூரத்தில் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தையும் கிளிக்குஞ்சுமலை என்றே அழைத்தார்கள். அக்கிராமத்தில் ஐம்பது வீடுகள்வரை இருந்தன. தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். குவாரியில் ஆண்களும், பெண்களும் வேலை செய்தார்கள். வேலை செய்பவர்கள் அனைவரும் ஏழைகள். அற்புதனின் வீடும் அங்கேயே இருந்தது. அன்சார். நிமால், விக்ரர் வீடுகளும் பக்கத்திலேயே இருந்தன.

அற்புதனின் அம்மாவும் அப்பாவும் குவாரியில் வேலை செய்தார்கள். குவாரிக்கு நடந்து போவார்கள். அற்புதனின் வீட்டுத்தோட்டத்தில் கனிதரு மரங்கள் இருந்தன. மா, பாலா, வாழை, தென்னை நிறைந்திருந்தன. குவாரியில் வேலை தொடங்கும். குவாரியில் கல்லுடைக்கும் சத்தம் பயங்காட்டும். கிளிக்குஞ்சுகள் கிராமத்துள் வந்துவிடும். காலையில் இருந்து மாலைவரை மரங்களில் கூத்தடிக்கும்.

சனங்கள் அதிகாலையில் எழுவார்கள். உணவினைச் சமைப்பார்கள். வேலைக்குச் செல்வார்கள். பகல் உணவுக்கு வருவார்கள். உணவின்பின் சென்றுவிடுவார்கள். அவர்கள் வேலைக்குச் சென்றதும், பிள்ளைகள் ஒன்று கூடுவார்கள். பறவைகளும் பகலில் குஞ்சுகளைத் தேடிவரும். உணவினை ஊட்டும். பின்னர் உணவு தேடிச்சென்றுவிடும். பாடசாலை அந்தக்கிராமத்தில் இல்லை. சின்னச் சிறுவர்களும் கல்லுடைக்கப் போவார்கள். போகாதவர்கள் வீடுகளில் கூத்தடிப்பார்கள். அற்புதனின் வீட்டுத் தோட்டம்தான் அவர்களது விளையாட்டு மைதானம். அன்சார். நிமால், விக்ரர் என நண்பர்கள் வருவார்கள். தோட்டம் நிறைந்து கலகலக்கும். அந்தத் தோட்டத்தில்தான் பறவைக் குஞ்சுகளும் கூடும். மாலையானதும் வேலை முடிந்துவிடும். வேலையாட்கள் வீடுகளுக்குப் வந்துவிடுவார்கள். கிளிக்குஞ்சுகள் மலைக்குப் போய்விடும். தங்கள் கூடுகளில் தவமிருக்கும். காலையில் போன உறவுகள் கூடுகளுக்கு வரும். பின்னர் ஒரே கொண்டாட்டம்தான். விடியவிடியக் கதையளந்து குதூகலிக்கும்.

கல்லுடைக்கும் வேலை கஸ்டமானது. சிறிய காயங்களை ஏற்படுத்தும். கண்களில் கற்துணிக்கைகள் படும். கவனமாக வேலை செய்யவேண்டும். இரும்பினால் செய்த வளையம் இருக்கும். அதற்குள் கற்துண்டங்களைப் போடுவார்கள். வேண்டிய கற்களின் அளவினைச் சொல்வார்கள். அந்த அளவுக்குச் சுத்தியலால் அடித்துத் துண்டங்களாக்க வேண்டும். நாள் முடிந்ததும் தாச்சிச் சட்டிகளால் அளந்து கணக்குக் கொடுக்கவேண்டும். கிழமை முடிவில் கூலி கொடுபடும். கையில் காசு வந்தால் கேட்கவும் வேண்டுமா? ஆண்கள் நிலவில் கூடியிருந்து கொண்டாடுவார்கள். கூட்டங்கூட்டமாகச் சிறுவர்கள் கூடிக்கதைப்பார்கள். கிளிக்குஞ்சுகளின் கதைகளைக் கூறுவார்கள்.

பகலில் அற்புதன் வீட்டில் தனிமையில் இருப்பான். அன்சார். நிமால், விக்ரர் என நண்பர்கள் வருவார்கள். மரத்தில் கிளிக்குஞ்சுகள் இருக்கும். அவை சீட்டியடித்து விளையாடும். அற்புதனும் அவைற்றைப் போல் செய்து பார்ப்பான். நுண்பர்களும் செய்வார்கள். இப்படிப் பலநாட்கள் செய்துவந்தார்கள். கிளிக்குஞ்சுகள் அவர்களை நண்பர்களாக எற்றுக் கொண்டன. அவர்கள் சீட்டியடிப்பார்கள். பதிலுக்குக் குஞ்சுகளும் சீட்டியடிக்கும். குஞ்சுகளுக்குப் பழங்களைக் கொடுப்பார்கள். அவை சந்தோசமாக உண்ணும். பழக்கம் வழக்கமாகி விடுமாம். ஓவ்வொரு நாளும் அவர்கள் பழங்களைக் கொடுப்பார்கள். அவை சந்தோசத்தோடு உண்டு வந்தன. நட்பு வளரத்தொடங்கியது.

கன்னியாவில் பாடசாலை கட்டப்பட்டது. கட்டாயக் கல்விச் சட்டம் வந்தது. சிறுவர்கள் அனைவரும் பாடசாலைக்குப் போகவேண்டும். அவர்களும் போனார்கள். பாடங்கள் நடக்கும். பாடங்களில் ஆர்வம் இல்லை. தங்களது சுதந்திரம் பறிக்கப் பட்டதாக எண்ணிக்கொண்டார்கள். பாடசாலைக்குப் போகாவிட்டால் வழக்குத் தொடரப்படும். பெற்றார் தண்டப்பணம் கட்ட வேண்டிவரும். ஆதனால் பாடசாலைக்குப் போனார்கள். பாடசாலை விட்டதும் வீடுகளுக்கு ஓடுவார்கள். குஞ்சுகளோடு கொஞ்சுவார்கள். சிறுவர்கள் வரும்வரை குஞ்சுகள் காத்திருக்கும். அவர்கள் வந்ததும் ஆரவாரிக்கும்.


சிறுவர்கள் பாடசாலை விட்டு வந்தார்கள். கிளிக்குஞ்சுகள் கவலையோடு இருந்தன. அவை பாடவில்லை. பேசவில்லை. அனைத்துக் குஞ்சுகளும் அமைதியாக மரங்களில் இருந்தன. ஆனால் அதிகம் குஞ்சுகளைக் காணவில்லை. பழங்களைக் கொடுத்தார்கள். அவை உண்ணவில்லை. அன்சார் சீட்டியடித்தான். பதிலில்லை. விக்ரர். நிமால் சேர்ந்து சீட்டியடித்தார்கள். பதிலில்லை. அற்புதனுக்கு ஆச்சரியம். அவனும் சீட்டியடித்தான். பதிலே இல்லை. குஞ்சுகள் கவலையோடு இருப்பதைக் கவனித்தார்கள். ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தார்கள். பெயர் சொல்லிச் சீட்டியடிப்பார்கள். பதிலுக்கு அவை சீட்டியடிக்கும். ஏன் இப்படி இருக்கின்றன. அவர்களுக்குப் புரியவில்லை. பெயர் சொல்லிச் சீட்டியடித்தார்கள். சில பதிலளித்தன. பல பதிலளிக்கவில்லை. உங்களுக்கு என்ன நடந்தது.? சத்தமிட்டுக் கத்தினாhர்கள். இரண்டு தாய்ப்புறாக்கள் தலைகளை அசைத்தன. அவைகளும் கவலையுடன் இருந்தன.

குஞ்சுகளின் மொழியைப் புரிந்து கொண்டார்கள். அவர்களும் சாப்பிடவில்லை. கவலையோடு இருந்தார்கள். பிள்ளைகள் ஏன் சாப்பிடவில்லை? பெற்றோருக்கும் கவலை. புpள்ளைகளைத் தேடி வந்தூர்கள். அற்புதன் அம்மாவிடம் சென்று விசாரித்தான். அன்சாரின் அம்மா பயக்கூன் வந்தார். நிமாலின் அம்மா அனுலா வந்தார். விக்ரரின் அம்மா பிலோமினாவும் வந்தார். ஏன் சாப்பிடவில்லை? கவலையோடு கேட்டார்கள். குஞ்சுகள் எங்களோடு கதைக்கவில்லை. பல குஞ்சுகளைக் காணவில்லை. என்ன நடந்திருக்கும்? கவலையோடு இருக்கிறோம். பசியே இல்லை.” என்றார்கள்.

அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. கிளிக்குஞ்சு மலைக்கு சிலர் வந்திருந்ததைக் கூறினார்கள். குஞ்சுகளைப் பிடித்துப் போனதையும் சொன்னார்கள். சிறுவர்கள்; கவலையடைந்தார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்? இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். சைகையால் குஞ்சுகளுக்கு ஆறதல் கூறினார்கள். சிறுவர்கள் யோசித்தார்கள். “டேய் நமக்கு நமது ஆசிரியர்கள்தான் உதவக்கூடியவர்கள். அவர்களிடம் சொல்வோம். இதற்கு ஒரு விடிவு கடைக்கும். அற்புதன் புதிய பாதையைக் கண்டு பிடித்தான். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

பொழுது விடிந்தது. அவர்கள் பாடசாலைப் படலையில் நின்றார்கள். அதிபர் எப்ப வருவார்? வரும்வரை காத்திருந்தார்கள். அதிபர் யோகராசன் வந்தார். அவரைத் தொடர்ந்து ஏனைய ஆசிரியர்களும் வந்தார்கள். அதிபருக்குப் பெரியதொரு ஆச்சரியம். சிறுவர்களை உற்றுப் பார்த்தார். “இவர்கள் வழமையாகப் பாடசாலைக்குப் பிந்தி வருபவர்கள். பாடசாலைக்கு ஒழுங்காக வருவதுமில்லை. படிப்பதும் இல்லை. இன்று பாடசாலைக்கு முந்தி வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்”;. ஊகித்துக் கொண்டார். அவர்களை அன்போடு அழைத்தார்.

கதை கொடுத்து விசாரித்தார். அவர்களது கதை அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “சேர் எங்கட கிளிக்குஞ்சு மலையில பறவைக் குஞ்சுகள் இருக்கு. அவற்றை மனிதர்கள் பிடித்துச் செல்கிறார்கள். தாய்ப் பறவைகள் வருந்துகின்றன. குஞ்சுகள் பயந்து நடுங்கிக் கிடக்கின்றன. நீங்கதான் சேர் காப்பாற்ற வேண்டும்”. அற்புதன் பிரசங்கம் செய்தான். அதிபர் அவர்களை அன்போடு பார்த்தார். அவர்களையிட்டுத் தான் கொண்ட அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டார். உயிர்களிடம் இச்சிறுவர்கள் காட்டும் அன்பை நினைத்து மகிழ்ந்தார். ‘இவர்கள் நன்றாகப் படித்தால் இந்த நாட்டையே மாற்றியமைப்பார்கள். இவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.’ உறுதியெடுத்தார்.

“சரி நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுக்குப் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதானே”? கேட்டார். “ஓம் சேர்”. பயபக்தியுடன் ஆர்வத்தோடு நின்றார்கள். “நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் காப்பாற்ற முடியும். உங்களால் முடியுமா”? மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். “முடியும் சேர்”; ஒன்றாகச் சேர்ந்து ஒரே குரலில் சொன்னார்கள். “இனிமேல் பாடசாலைக்கு ஒழுங்காக வரவேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். உங்களால்தான் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியும்”. அதிபர் விளக்கினார். “பாடசாலைக்கு வந்தால் காப்பாற்ற முடியுமா? அதெப்படி சேர்”? ஆவலோடு கேட்டார்கள். “ஒழுங்காகப் பாடசாலைக்கு வந்து படியுங்கள். நடப்பதைப் பாருங்கள். அதிபர் கூறிக் கொண்டிருந்தார்.

“சேர் பறவைக் குஞ்சுகளுக்காக எதையும் செய்வோம் சேர். பாடசாலைக்கு ஒழுங்காக வருவோம் சேர். வந்து நன்றாகப் படிப்போம் சேர். அதுமட்டுமில்லை சேர். பாடசாலைக்கு வராமல் வீட்டில நிற்கிற பிள்ளைகளையும் கூட்டி வருவோம் சேர். குஞ்சுகளைக் காப்பாற்றுங்க சேர்” கெஞ்சினார்கள். அவர்களது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பறவைக் குஞ்சுகளுக்காக அவர்களது மனங்கள் ஏங்கின. அப்பாவிச் சிறுவர்களின் இரக்க குணம் அதிபரை மெய்மறக்கச் செய்தது. ஆசிரியர்கள் சூழ்ந்து மாணவர்களின் உள்ளங்களைப் படித்தனர். இந்தச் சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை பெரிய மனது.? பிரமித்தார்கள். பறவைக் குஞ்சுகளுக்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக நின்றார்கள்.

அதிபரும் ஆசிரியர்களும் மனம் நெகிழ்ந்து போனார்கள். சதீசன் சுறுசுறுப்பான ஆசிரியர். மாணவர்களில் அக்கறையுடையவர். மாணவர்களை வகுப்புக்களுக்கு அனுப்பினார்கள். பாடம் தொடங்கியது. அதிபர் சதீசனை அழைத்தார். தனது திட்டத்தைச் சொன்னார். சதீசன் அதிபரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பிரதேச செயலாளரின் அலுவலகம் சென்றார்கள். அவரிடம் விரித்துரைத்தார்கள். பிரதேச செயலாளர் போலிஸ் அத்தியட்சருடன் தொலைபேசியில்

கதைத்தார். அவர்கள் ஏதோ கதைத்துக் கொண்டார்கள். அப்படியே அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் முறையிட்டனர்.

இன்றும் கவலையோடுதான் பாடசாலைக்கு வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பறவைக் குஞ்சுகளும் பாட்டமாக வந்தன. மரங்களில் தஞ்சம் புகுந்தன. சிறுவர்களின் மனதில் தாங்கமுடியாத கவலையிருந்தது. பாடசாலை தொடங்கியது. ஒன்றுகூடல் நடந்தது. பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது. முடிவுற்றதும் வகுப்குக்கள் தொடங்கின. குஞ்சுகள் அவர்கள் போகும் பக்கமெல்லாம் அலைந்தன. வகுப்பறைகளுக்குள் நுழைந்து அமைதியாக இருந்தன. மாணவர்களது செயல்களை ஆசிரியை ஜனார்த்தனி அவதானித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சரியம். உயிர்கள் அனைத்தும் ஒன்றுதானே? தனக்குத் தானே நினைத்துக் கொண்டார். சற்று நேரத்தில் வாகனங்கள் பல வந்தன. பாடசாலையின் நுழைவாயிலை அடைந்தன. பிள்ளைகளுக்கு ஆச்சரியம்.

பிரதேச செயலாளர் தேவி இறங்கினார். ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அவரைத் தொடர்ந்து பொலிஸ் அத்தியட்சர் வந்தார். அரசசார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களும் வந்தார்கள். கிராமசேவகர் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப் பட்டது. அதிபரும் ஆசிரியர்களும் அவர்களை வரவேற்றனர். பாடசாலை மண்டபத்தினுள் கூட்டம் நடைபெற்றது. அதிபர் தலைமை வகித்தார். கிளிக்குஞ்சு மலையின் சூழலை அதிபர் விளக்கினார். மாணவர்களைப் பற்றிச் சொன்னார். அற்புதன். அன்சார், நிமால். விக்ரர் எனப் பெயர்கள் குறிப்பிடப் பட்டன. பிரதேச செயலாளர் அவர்களை விளித்துப் பாராட்டினார். “உங்களால் கிளிக்குஞ்சுமலை காப்பற்றப்படுகிறது. இனி எந்தத் தொல்லையும் இருக்காது. போலிஸ் அத்தியட்சர் பிடித்துப் போனவர்களைக் கைது செய்துள்ளார். நீதிமன்றில் வழக்கு நடந்தது. பிடித்துப் போனவர்களுக்குத் தண்டனையும் கிடைத்துள்ளது. நீதிபதி செழியன் பறவைக்குஞ்சுகளைப் பிடிப்பதற்குத் தடையும் போட்டுள்ளார். இனி யாரும் எந்தப் பறவைகளையும் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை. பறவைகளைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் குஞ்சுகளை மீட்டுள்ளோம். அதோ அங்கே பாருங்கள்”;. சுட்டிக் காட்டினார். பலர் கூடுகளுடன் நின்றார்கள். கூடுகளுள் பறவைக் குஞ்சுகள் இருந்தன. அற்புதன் ஓடிவந்தான். அன்சார், நிமால், விக்ரர் பின் தொடர்ந்தார்கள். பறவைக்குஞ்சுகள் அவர்களைக் கண்டு கொண்டன. சிறகடித்து ஆரவாரித்தன.


கூடுகளை அவர்களிடம் ஒப்படைக்கும்படி கூறினார். கூடுகளை வாங்கியதும் கூத்தாடினார்கள். கொள்ளை இன்பம் அவர்களைப் பற்றிக் கொண்டது. கூடுகளைத் திறந்தார்கள். பறவைக் குஞ்சுகள் சுதந்திரமாக வெளியில் வந்தன. சிறுவர்களின் தோளில் தொத்திக் கொண்டன. பற்றைகளில் பதுங்கியிருந்த பறவைக் குஞ்சுகளும் சேர்ந்து கொண்டன. பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். உயிர்கள் அனைத்தும் ஒன்றுதான். உடல்களில் மட்டுந்தான் வித்தியாசம். அவை தொடர்பாடும் வழிமுறைகளிலும் வித்தியாசம் உண்டு. உணவு, உறைவிடம், உறவு, பாசம் ஆகியன யாவற்றுக்கும் உண்டு. உயிர்களிடத்து அன்பு வேண்டும்.

பிரதேசச் செயலாளர் தேவியின் கண்கள் பனித்தன. போலிஸ் அத்தியட்சர் பிரமித்துப் போனார். மனிதர்கள் மட்டுமேன் இப்படி ஆனார்கள்.? சிறுவர்களை வாழ்த்தினார்கள். “நீங்கள் பெரிய சாதனையாளர்கள். உங்களால் கிளிக்குஞ்சுமலை சுதந்திரம் பெற்றுள்ளது. பறவைக் குஞ்சுகள் விடுதலை பெற்றன. நன்றாகப் படித்து வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துக்கள்”. கூறிவிட்டுச் சென்றார்கள். பாடசாலை மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

அற்புதனும் நண்பர்களும் பாடசாலைக்குப் போவார்கள். பாடசாலைவரை குஞ்சுகள் பறந்து வரும். பாடம் நடப்பதைப் பார்த்து மகிழும். பாடசாலை விட்டதும் அவர்களோடு சேர்ந்து வீடு போகும். பறவைக் குஞ்சுகள் தங்கள் நண்பர்களையிட்டுச் சந்தோசமடைந்தன. அவர்கள் சாதனையைச் செய்துள்ளார். உங்களுக்கு எங்கள் நன்றி. நன்றாகப் படியுங்கள். வாழ்த்தி வானில் பறந்து கொண்டாடின. இப்போது சிறுவர்கள் ஒழுங்காகப் பாடசாலை செல்கிறார்கள்.

Read more...

சாதனை படைத்தவர்கள்

“சீனாவுக்கும் எங்கள் ஊருக்கும் என்ன தொடர்பு? ஏன் சீனக்குடா என்று பெயர்வந்தது”. ஆதவன் பாடசாலையின் எல்லையில் நின்று யோசித்தான். பாடசாலையின் எல்லையைக் கடல் தழுவிக்கொண்டிருந்தது. நிலப்பரப்பினுள் கடல்நீர் விரல்களை நீட்டிக் குடைந்து குடாக்களை உருவாக்கியிருந்தது.

அதில் ஒன்றுதான் இந்தச் சீனக்குடா. திருகோணமலையின் இயற்கைத் துறைமுகத்தின் மேற்குக் கரையோரத்தில் சீனக்குடா சிதறிக்கிடக்கிறது. குடாக்கடலின் ஓரமாக சமனற்ற நிலப்பரப்பு. அங்குதான் சீனக்குடா தமிழ்வித்தியாலயம் குந்தியிருக்கிறது.


“பிரித்தானியர் எண்ணைய்க் குதங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வேலைசெய்வதற்காக சீனாவிலிருந்து வந்தவர்கள் முகாமிட்டிருந்த பகுதி சீனக்குடாவாகியது”. யாரோ ஒரு பெரியவர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான். சிறியஅலைகள் கரையில் மோதிக் கொண்டிருந்தன. சிறு நண்டு கரைமீது படமொன்று வரையும். அலை வந்து மெதுவாக அழித்தோடிப் போகும்.. அவன் வாய் முணுமுணுத்தது.

ஆதவன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நுரைகள் கரையில் மாலைகளாகப் படிந்திருந்தன. அவை அடுக்கடுக்காய்த் திரண்டு கிடந்தன. எத்தனை அலைகள்.? ஆலைகள் எழுந்து வருவதும் போவதுமாக இருந்தன, எழுவதும் மடிந்து சுருண்டு புரள்வதுமாகக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. ஜூன், ஜூலை வந்தாலே ஒரு பயம் தழுவிக் கொள்ளும். இலங்கைத்தீவில் இம்மாதங்களில்தான் வன்செயல்கள் அதிகரிக்கும். அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்து நலிவுறுவதும் இம்மாதங்களில்தான். “எத்தனைமுறை நாங்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்றோம். இனி ஓடுவதற்கு இடமும் இல்லை. வாழ்ந்தால் இங்கேயே வாழ்ந்து மடிவோம். ஓற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்”. அவனது சின்னமனதில் சமாதானத்தின் தேவை புகுந்து கொண்டது.


ஆழ்ந்து யோசித்தான். “மாணவ சமுதாயம் விழித்துச் செயற்பட்டால் இந்த நாட்டைச் சொர்க்கமாக்கலாம். முயற்சித்தால் என்ன? சரி விளையாடிப் பார்ப்போம்”. தனது நண்பர்களை எண்ணிக் கொண்டான். தலையைத் திருப்பிக் கண்களை மேயவிட்டான். கண்களுக்கெட்டிய தூரம்வரை அவனது பார்வை பாய்ந்தது. விளையாட்டு மைதானம் விரிந்து கிடந்தது. சிறுவர்கள் காலையிலும் மாலையிலும், விளையாடுவார்கள். கடல் துள்ளிக்குதித்து அலைகளை வீசும். மென்படையை அலைகள் கரைத்துச் செல்லும். சிறுகற்களைக் கரையில் உருட்டிவிடும். கரையில் நின்றவாறே பாடசாலையைப்


பார்த்தான். பாடசாலை பழைய கட்டிடங்களோடு வயது முதிர்ந்து கிடந்தது. பற்றைகள் புடைசூழ கட்டிடங்கள் ஒதுங்கி ஓரமாகச் சிதறிக்கிடந்தன.

இரவு வேளைகளில் பாடசாலையினுள் பலர் வருவார்கள். தங்கி பாடசாலையை அசுத்தமாக்குவார்கள். அப்படியே சென்று விடுவார்கள். அதனை நினைந்து வருந்தினான். “எங்கள் பாடசாலைக்கு ஒரு விடிவு வாராதா? ஒரு புறம் துறைமுகம். ஓருபுறம் பிரித்தானியரால் அமைக்கப் பெற்ற எண்ணெய்க் குதங்கள் தெரிந்தன. பிறிமா தொழிற்சாலை நிமிர்ந்து நின்றது.

சீமேந்துத் தொழிற்சாலை, விமானப்படைத்தளம். புகைவண்டி நிலையம். குறிஞ்சியும், நெய்தலும் குலவி மகிழுமிடம். மூவின மக்களும் சேர்ந்து வாழுமிடம். அழகான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பாடசாலை கல்வியில் பின்தங்கியுள்ளதே.” அவன் உள்ளத்தில் ஏக்கம் குந்திக்கொண்டது.

“ஒரு நல்லகாலம் வராமலா போகும். வரும் காத்திருப்போம்.” முணுமுணுத்தான். விளையாட்டுத் திடல் ஒப்புரவாக அமையவில்லை. கிறேவல் சார்ந்த மலைச்சாரல். விளையாடுவதற்கேற்ற திடலாக இல்லை. விளையாடும் போது பலமுறை விழுந்திருக்கிறான். சிறுவர்கள் விழுந்து காயப்பட்டும் இருக்கிறார்கள். தூரத்தில் சைக்கிள் தெரிந்தது. அன்வர் வந்து கொண்டிருந்தான். கூடவே அன்ரனும் வந்தான். அவர்களும் நல்ல சிந்தனையுடையவர்கள். மூவரும் நண்பர்கள். பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை உடையவர்கள்.

“ஹாய்..ஆதவன!; தனிமையில் என்ன யோசிக்கிறாய்”?. அன்வர் சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து கொண்டே கேட்டான். “நமது பாடசாலையின் நிலையை எண்ணிப் பார்த்தேன். நமது ஊரில் இருந்து பற்றுள்ள ஒருவனாவது நன்றாகப் படிக்கவேண்டும். நமது பாடசாலைக்கு ஆசிரியராக வரவேண்டும். அப்போதுதான் நமது பாடசாலை விழித்துக் கொள்ளும். இதனை நமது ஆசிரியர்கள் அடிக்கடி சொல்வதை நினைத்துப்பார். நாம் படித்து இப்பாடசாலையில் ஆசிரியராக வந்தால்தான் நமது பாடசாலையை உயர்த்தலாம். ஆனால் படிப்பதற்கு ஏற்ற வசதியில்லை. நமது பெற்றோரும் நம்மைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் கடலுக்குப் போவார்கள். வேலை முடிந்ததும் வருவார்கள். கடல்தான் அவர்களுக்குத் தஞ்சம். நாம் படிக்கவேண்டும். அதுதான் யோசிக்கிறன்.”

“எங்களுக்கும் அதுதான் யோசனை. என்ன செய்யலாம்.”? அன்வரும், அன்ரனும் ஒரே குரலில் கூறினார்கள். நடந்து கொண்டே பாடசாலை வளவினுள் வந்தார்கள். பாடசாலை விளையாட்டு மைதானத்தின் ஓரமாக வேம்பு நிழல்பரப்பிக் கொண்டிருந்தது. அதற்கப்பால் ஆசிரியர் விடுதியிருந்தது. வேப்பமரத்தடியில் மரக்குத்திகள் கிடந்தன. மரக்குத்திகளில் இருந்தார்கள். வேம்பு பூத்துக் கலகலத்தது. இலைகள் காற்றில் அசைந்து இசையெழுப்பிக் கொண்டிருந்தன. நேரே பார்த்தார்கள். “அன்வர்! அந்த விக்ஸ் மரத்துக்கு எத்தனை வயதிருக்கும்? சொல். பார்க்கலாம்.?” ஆதவன் வினவினான்.

“சுமார் முப்பத்தாறு இருக்கலாம்’
“எப்படிச் சொல்வாய்” அன்ரன் கேட்டான்.
“இந்தப் பாடசாலை ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரெண்டில் கட்டப்பட்டது. அப்போது நடப்பட்டிருக்கலாம். அதுதான் சொன்னேன். இது ஒரு ஊகந்தான்”.
‘பரவாயில்லையே. உனக்கும் மூளை வேலை செய்யுது.” ஆதவன் சிரிப்போடு சொன்னான்.“ இதுதானே கூடாது. நக்கல் அடிக்காதே” சந்தோசமாக உரையாடினார்கள். “அன்வர்! நான் சொல்வதைக் கேள். நாம் படிக்க வேண்டும். நமது கிராமத்தில் எழுச்சியைக் காணவேண்டும். அதற்குப் பல தியாகங்களைச் செய்யவேண்டும்.”

“என்ன செய்யவேண்டும்”. அன்ரன் வினவினான் “பாடசாலைக்குப் புதிய அதிபர் வந்திருக்கிறார். அவரிடம் நல்ல திட்டமுள்ளது போல் தெரிகிறது. நமது ஆதங்கத்தை அவரிடம் சொல்வோமா? அவரைச் சந்திப்போமா?’ அன்வர் உற்சாகமாகச் சொன்னான். “நல்ல விசயம்தான். அதற்கு முதல் எங்கட ரீச்சர்மார் சொன்னதைச் செய்வோமா? செய்தால் புதிய அதிபருக்கு நம்மீது நம்பிக்கை பிறக்கும்” ஆதவன் உசாரூட்டினான்.

“ ரீச்சர்மார் என்ன சொன்னவங்க.” அன்வர் தெரியாதவன்போல் கேட்டான். “இதைக்கூட நீ நினைவில் வைக்கவில்லை. எப்படி படிக்கப்போகிறாய்?. எத்தனைநாள் முதலிருந்த அதிபர்களும், நமது ரீச்சர்மார்களும் சொல்லியிருக்கிறார்கள். இது நமது பாடசாலை. பாடசாலையைச் சுத்தமாகவும், அழகாகவும் வைக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். இரவு வேளையில் பாடசாலையில் வந்து படியுங்கள். பக்கதுணையாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் படித்தால் ஊர் முன்னேறும். என்று எவ்வளவு புத்திமதி கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்தானே சொல்லுவார்கள். நாங்கதான் கேட்பதில்லை. வீட்டிலும் படிக்கச் சொல்வார்கள். நமக்குத்தான் வீட்டில் படிக்க வசதியில்லை. நாங்களும் யோசிக்க வேணும்..” ஆதவன் கவலையோடு கூறினான்.

“ஆதவன்! நடந்தவற்றை மறப்போம். நடக்கப்போவதையிட்டு யோசிப்போம். நாளைக்குச் சனிக்கிழமை. ரீச்சர்மார் சொன்னவற்றைச் செயலில் காட்டுவோமா? நமது பாடசாலை பற்றைகளில் மறைந்துள்ளது. எங்கும் குப்பை கூளங்கள். அவற்றை முதலில் துப்பரவு செய்வோமா? சிரமதானம் செய்தால் என்ன? முதல் முயற்சியாக மேற்கொள்வோமே. நீ என்ன சொல்கிறாய்”? அன்வர் விளையாட்டகச் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்டான் ஆதவனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. “சரி வாங்க. முதலில் நமது ரீச்சரிடம் ஆலோசனை கேட்போம்.” ரீச்சரிடம் ஓடினார்கள். “என்ன ஓட்டப்போட்டி நடக்கிறது?” ரீச்சர் உமா விளையாட்டாகக் கூறினார்.

“ரீச்சர்! இனி ஓட்டப்போட்டிதான். உங்கட ஆலோசனைதான் தேவை.” உமா அவர்களது மன உறுதியைப் புரிந்து கொண்டார். அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார். “என்ன விசயம். சொல்லுங்க.” தங்கள் முடிவைச் சொன்னார்கள். உமா இந்த உலகத்தில் இல்லை. “ஆதவன் இது உங்களது வழமையான விளையாட்டுத்தானே?. விளையாடுவதற்கும் ஒரு எல்லையுண்டு. நீங்கள் நல்லா யோசிக்க வேண்டும். நமது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்ன? நான் சொல்வது புரிகிறதா”?. உமா சற்று அழுத்தமாகவே கூறினார்.

“ரீச்சர். இவ்வளவு நாளும் விளையாடினோம்தான். ஆனால் இப்போது விழித்துக் கொண்டோம்.. எங்களை வழிநடத்துங்கள்.” அவர்களது குரலொலி உமாவை சிறைப்பிடித்து விட்டது. “ஆதவன், அன்ரன், அன்வர்! விளையாட்டுத்தான். விளையாட்டு மூலம் சாதனை படைக்கலாம். வெறும் விளையாட்டு, கல்வி இல்லை. ஆனால் விளையாட்டில்லாமல் கல்வி இல்லை. இறைவனே திருவிளையாடல் மூலம்தான் மனிதனுக்கு வாழ்வை விளக்குகிறார். உங்களுக்கு வாழ்த்துக்கள்.” அவர்களை அமரச்சொன்னார். கதிரைகளில் இருந்தார்கள். எல்லா வழிவகைகளையும் விளக்கினார். ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வி உளவியலைக் கற்றவர்கள். அதனைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பரீட்சித்துப் பார்ப்பவர்கள். உமா நல்லதொரு ஆசிரியர். எங்கு தட்டினால் இயந்திரம் இயங்குமோ, அங்கு தட்டிவி;ட்டார். மாணவர்கள் பம்பரமானார்கள்.


நேரம் மாலை ஆறுமணி. இருவரும் கோயிலுக்கு ஓடினார்கள். பூசை நடந்து கெண்;டிருந்தது. குருக்கள் திருக்குமரன் வாழ்த்தினார். நண்பர்களிடம் செய்தி பரிமாறப் பட்டது. பள்ளிவாயில் மௌலவி அமீரலியிடம் ஆலோசனை பெறப்பட்டது. அவர் ஓரு புன்னகையை மட்டும் உதிர்த்தார். “நல்லது நடக்கும்” என்றார். பங்குத் தந்தை மரியசேவியரிடம் ஓடினார்கள். செய்தியைக் கேட்டதும் அவரது உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. “நாளை அங்கு உங்களில் ஒருவனாக நிற்பேன்”; என்றார். இரவு எட்டு மணி விகாரைக்கு ஓடினார்கள். தர்மானந்த தேரர் வரவேற்றார். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “உங்களால் முடியும். முயற்சி திருவினையாக்கும். நாளைக்குப் பார்ப்போம்.” என்றார். வணக்கம் கூறிப் புறப்பட்டார்கள். செய்தி காட்டுத் தீபோல் ஊரெங்கும் பரவியது.. மாணவர்கள் செய்தி காவிகள். அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் சாதனை படைக்கலாம். ஆதவனும் அன்வரும் சாதனை படைக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

திருக்கோணமலைத் துறைமுகம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. காலைநேரம் அற்புதமாகப் பரந்தது. ஆதவனும் அன்வரும் பாடசாலையை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதிபர் பத்மசீலன் அதிகாலையிலேயே வந்து விட்டார். அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவரைச் சூழப் பலர் நின்றிருந்தார்கள். அதிபரைக் கண்டதும் பயமாக இருந்தது. அவரது பக்கத்தில் சென்றார்கள். “சேர் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் சொல்லாமல்....” இழுத்தார்கள். “எல்லாம் எனக்குத் தெரியும். ரீச்சர் உமா அறிவித்தார். பெரிய சந்தோசம். நான் யோசித்ததை நீங்கள் சாதித்துவிட்டீர்கள்”. அவர்களது தலைகளைத் தடவிவிட்டார்.

அவர்களுக்கு உச்சி குளிர்ந்தது. உமாவுக்குச் சந்தோசமாக இருந்தது. சொல்லி வைத்தாற்போல் அனைத்துச் சமய குரவர்களும் வந்தார்கள். அதிபரோடு சேர்ந்து அவர்களை வரவேற்றார்கள். சமய குரவர்கள் ஆசிர்வதித்துச் சிரமதானப் பணியைத் தொடங்கி வைத்தார்கள். தர்மானந்த தேரர் வாழ்த்தினார். பங்குத்தந்தை மரியசேவியர் வாழ்த்தினார். மௌலவி அமீரலி ஆசிர்வதித்தார். குருக்கள் திருக்குமரன் பாராட்டி வாழ்த்தினார். விளையாட்டு மைதானத்தில் இவ்வளவு சனக்கூட்டத்தை இன்றுதான் உமா ரீச்சர் பார்த்தார். எப்படி இம்மாணவர்களால் ஒரு இரவுக்குள் சாதிக்க முடிந்தது. மாணவர் சமுதாயம் வலிமைமிக்கது. அவர்கள் நினைத்தால் உலகை மாற்றி அமைக்கலாம். அவர்களிடம் ஆற்றல்கள் நிறையவே உண்டு. அதனை அவர்கள் உணர்ந்து கொண்டால் உலகம் உயர்வு கொள்ளும். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடசாலை வளவினுள் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்புகாமி புள்டோசருடன் வந்தார். விளையாட்டு மைதானம் ஒப்புரவானது. கதிர்காமத்தம்பி முதலாளியும் காதர் முதலாளியும் உணவுப் பொட்டலங்களோடு வந்தார்கள். பல நிறுவனங்கள் வந்திறங்கின. பிஸ்கற், குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன. விமானப்படையதிகாரி வட்டுகொட வந்தார். பார்வையிட்டுச் சென்றார். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான படையினர் குவிந்தனர். மக்கள் அனைவரும் மனிதர்கள்தான் என்ற தத்துவம் மிளிர்ந்தது. பழைய கட்டிடங்கள் புதுவடிவம் பெறத் தொடங்கின. பிள்ளைகளின் கிறுக்கல்கள் ஓடிமறைந்தன. பற்றைக் காடுகள் பறந்து விட்டன. பாடசாலை புதுமைக் கோலத்தில் நின்றது.

அனைவரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இனபேதம் அங்கு இல்லை. சந்தோசம் கும்மாளமிட்டது. தர்மானந்ததேரரும், திருக்குமரன் குருக்களும். பங்குத்தந்தை மரியசேவியரும், மௌலவி அமீரலியும் சந்தோசப் பட்டார்கள். இப்படியே நமது நாடு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். நாமும் இந்தச் சமாதானத்துக்காகத்தானே சேவை செய்கிறோம். சிறுவர்களின் துணிச்சலையும் ஓற்றுமையையும் பாராட்டினார்கள். அயலிலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் உள்ளது. கபிலதான் மாணவ தலைவன். கபில தலைமையில் மாணவரணி வந்தது. தீபிகா தலைமையில் மாணவியர் வந்து சூழ்ந்தனர். ஆவர்களும் சிரமதானப்பணியில் ஈடுபட்டுழைத்தார்கள். ‘இது நமது நாடு. நமது பாடசாலை. நூம் ஒருதாய் மக்கள்’ என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

பகல் உணவுத் திட்டம் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் சமைப்பதற்கேற்ற கட்டிடம் இல்லை. அதனை அதிபர் ஒரு நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஏற்ற ஒழுங்குகளையும் செய்திருந்தார். ஆனால் எப்போது கட்டப்படும் என்பது தெரியாதிருந்தது. சிலவாகனங்கள் வந்துநின்றன. பலர் இறங்கி வந்தார்கள். எடுப்பான நடையோடு சூரியா நடந்து வந்தார். சூரியாவின் வரவு அனைவரையும் கவர்ந்தது.

அதிபர் வரவேற்று அழைத்து வந்தார். சமய குரவர்கள் வந்து ஆசிர்வதித்து வரவேற்றார்கள். சூரியா பிரமித்துப் போனார். தன்னை இவர்கள் வரவேற்பதா?. சூரியா தன்னைத் தானே உயர்த்திக் கொண்டது கிடையாது. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியக் கூடாதென்ற புனிதக் கொள்கையைத் தன் கொள்கையாகக் கொண்டவர். அதிர்ந்து போனார். தர்மானந்த தேரர் வந்து வாழ்த்தினார். பங்குத்தந்தை போற்றினார். அனைத்துச் சமய குரவர்களும் பாராட்டினார்கள். இந்தப் பெரியவர்கள் போற்றுவதற்குத் தான் தகமையுள்ளவாரா? மனதினிலே கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். அவருக்குச் சங்கடமாக இருந்தது. எனினும் அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

எந்த நேரமும் சூரியாவின் முகத்தில் ஒரு புன்னகை குந்தியிருக்கும். அந்தப் புன்னகையை வீசியவாறு நடந்து வந்தார். பாடசாலையைப் பார்த்ததும் சூரியாவுக்கு அதிர்ச்சியான ஆனந்தம் பொங்கியது. கூடவே எஞ்ஜினிர சிவலிங்கமும்; வந்திருந்தார். கட்டிடப் பொருட்களும் வந்திறங்கின. பெற்றோர்களுள் மேசன்மார் இருந்தார்கள். அத்திவாரம் வெட்டப்பட்டது. சமய குரவர்கள் சேர்ந்து வாழ்த்த அடிக்கல்லை சூரியா நாட்டிவைத்தார். அப்போதும் சூரியா மலர்ந்த முகத்துடனேயே இருந்தார். வந்திருந்த பிரமுகர்களும் நாட்டினார்கள். கட்டு வேலைகள் தொடங்கின.

குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டார்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு செயற்திட்டத்தில் ஈடுபட்டது. பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் வந்திருந்து செயற்பட்டார்கள். பெற்றோர் இவ்வாறு செயற்பட்டது இதுதான் முதற்தடவை. அனைவருக்கும் ஆச்சரியம். சந்தோசம் கலந்த நிகழ்ச்சியாக அமைந்தது. பற்றைகள் படர்ந்து வேலி உடைந்து கிடந்தது. பற்றைகள் அகற்றப்பட்டன. பாடசாலையின் வேலி செப்பனிடப்பட்டது. “அமுதன். அடுத்து நமது திட்டப்படி பாடசாலையைச் சுற்றி நிழல்தரு மரங்களை நட்டால் என்ன?”அழகாக இருக்கும். அத்துடன் நிழலும் கிடைக்கும்.” ஆதவன் அமுதனின் காதுகளில் ஓதினான். பிள்ளைகளின் காதுகளிலும் புகுந்து வந்தன. சிங்கள மகாவித்தியாலய மாணவர்களும் மரக்கன்றுகளைக் கொண்டுவந்தார்கள். மரக்கன்றுகள் வந்து குவிந்தன. மா, பலா, வாழை. தேக்கு, வேம்பு, பப்பாளி, தோடை என அனைத்து மரக்கன்றுகளும் குவிந்தன.

“எப்படி இக்கன்றுகளைப் பெற்றீர்கள்.? எவ்வளவு செலவாகியிருக்கும்”. சூரியா பிள்ளைகளிடம் வினவினார். “எங்களுக்கு ஒரு சதமும் செலவில்லை. உங்கள் நிறுவனத்தினர் இரண்டு மாதங்களுக்குமுன் எமது பாடசாலைக்கு வந்திருந்தார்கள். வீட்டிலும் பாடசாலையிலும் மரக்கன்றுகளை வளர்க்கும்படி அறிவுறுத்தினார்கள். மரக்கன்றுகளை இளநீர்க் கோம்பைகளில் வளர்க்கும்படி வழிகாட்டினார்கள். பாடசாலையில் வேலியில்லை. வீடுகளில் வளர்த்தோம். பொழுது போக்காகவும் இருந்தது. இப்படிச் செய்வதன் மூலம் மரக்கன்றுகளை வளர்க்கவும் கற்றுக் கொண்டோம்.” விளக்கினார்கள். “என்ன கற்றுக் கொண்டீர்கள்? சூரியா குறுக்கிட்டார். “ மாணவர்கள் பதிலளித்தார்கள்.

“சிறந்த விதைகளைத் தேர்ந்தெடுத்தோம். கோம்பைகள் அல்லது அளவான பொலித்தின் உறைகளைத் தேடி எடுப்போம். அதனுள் வளமான மண்ணையிட்டு விதைகளை நடுவோம். அதனைக் கொப்பியில் பதிந்து கொள்வோம். திகதியையும் குறித்துக் கொள்வோம். தண்ணீர் விடுவோம். முளை வருவதை அவதானித்துக் குறிப்பெழுதுவோம். இலைகள் துளிர்விடுவதைப் பார்க்கச் சந்தோசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகள் உள்ளன. ஓவ்வொருவரும் ஒருவகை மரக்கன்றுகளைத்தான் வளர்க்கிறோம். வேண்டியபோது மரக்கன்றுகளைப் பரிமாறிக் கொள்வோம். கற்றலும் நடக்கிறது, பொழுது போக்குடன் செலவுக்கு எமக்குப் பணமும் கிடைக்கிறது. இது மிகுந்த பயனுடைய திட்டம். இதனைத் தொடர்ந்து உங்களது நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இது எமது வேண்டுகோளாகும்.” ஒரு மாணவி கேட்டுக் கெண்டார். “தனியாருக்குப் போகும் பணத்தை படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதால் படிப்புச் செலவைச் சமாளிக்கலாம். அல்லவா”?. இன்னுமொரு மாணவி பதிலிறுத்தாள். சூரியாவுக்குப் பெருமையாக இருந்தது.

மாணவர்களுடன் சூரியாவும் சிரமதானப் பணியில் இறங்கிவிட்டார். ஒரு சிறந்த தொண்டன்தான் தலைவனாக முடியும். இதனை அனுபவத்தில் கண்டவர். அதனால் மாணவர்களுடன் சேர்ந்து அவர்களைக் கலகலப்பாக்கித் தானும் ஈடுபட்டார். பாடசாலை வளவு, கட்டிடங்கள். சுற்றுச்சூழல் அழகு பெற்றது. அன்றைய நாளை நினைவு கொள்ளவேண்டும். அதிபர் பத்மசீலன் வந்தார். சூரியாவை மாமரக் கன்று ஒன்றை நடும்படி கேட்டுக் கொண்டார். சூரியாவிடம் மரக்கன்று கொடுபட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் கைகளைத் தட்டினார்கள். பெரும் ஆரவாரத்தோடு சூரியா மரக்கன்றை நட்டார். சமயகுரவர்களும் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டார்கள். மரக்கன்றுகளை எப்படி, எங்கே நடுவதென்று திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அந்தந்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பெற்றன. பூந்தோட்டம் திட்டமிடப்பட்டு அழகாக நடப்பெற்றது. மலை மெல்லப் படரத் தொடங்கியது. அதிபர் பாடசாலையினைச் சுற்றி நோட்டம் விட்டார். காலையில் காடுபற்றி பயங்கரமாகத் தெரிந்த பாடசாலைக் காணியைக் காணவில்லை. அது அழுகுபெற்று புத்துயிர் பெற்று நிமிர்ந்திருந்தது.

ஒருநாள் பொழுதுக்குள் பாடசாலை பொலிவுற்றுப் பளிச்சிட்டது. நிகழ்வு முடிவுறும் தருணம் வந்தது. செயற்பாட்டில் முன்னின்று உழைத்தவர்களை அனைவரும் பாராட்டினார்கள். “இவ்வாறான நிகழ்வுகள் பாடசாலைகள் தோறும் நடைபெற வேண்டும். அப்போதுதான் இனநல்லுறவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உதவிகள் செய்து சமாதானமாக வாழவும் முடியும்” சமயகுரவர்கள் பாராட்டினார்கள். “இந்த மாணவர்களைப் பாராட்டும் இந்நாளில் வீட்டுக்கொரு மரம் நடும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துங்கள். நமது வளங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சின்னஞ்சிறு சிறார்களின் மனவளங்களையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். நமது சூழலின் வளங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேற்றுமையை நான் காணவில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக நிற்கிறீர்கள். மிகச் சந்தோசமாக இருக்கிறது. இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாடசாலைத் தேவைக்கேற்றவாறு பயனுறச் செய்த அதிபர், ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்”. சூரியா நிறைவாகக் கூறினார்.

மாலையானதும் சிரமதானப் பணி நிறைவாகியது. வெளியில் வந்துநின்று பாடசாலையைப் பார்த்தார்கள். அவர்களது கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. ‘சீனக்குடா உயர்நிலை வித்தியாலயம்’ காட்சியாகிக் கொண்டிருந்தது. சிங்கள மகாவித்தியாலய மாணவர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்களோடு வாஞ்சையுடன் உரையாடினார்கள். உமா ரீச்சர் ஆதவனைப் பார்த்தார். அன்ரனையும், அன்வரையும் அழைத்தார். சிங்கள மகாவித்தியாலய மாணவர் தலைவர்களை அழைத்தார். அவர்கள் அனைவரையும் பார்த்தார். அவர்களை வாஞ்சையோடு பாராட்டினார். “ நீங்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய சாதனையைச் சாதித்துவிட்டீர்கள். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேற்றுமையை உடைத்தெறிந்து விட்டீர்கள். உங்கள் சாதனை தொடரவேண்டும். படிப்பில் மிகுந்த கரிசனையைக் காட்டுங்கள். சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு வாழ்த்துக்கள்.” என்றார். அதிபர் பத்மசீலன் அனைவருக்கும் நன்றி கூறினார். ஆதவனும், அன்வரும், அன்ரனும் ஏனைய மாணவர்களை ஊக்குவிக்கும் சாதனை வீரர்களாக வலம்வருகிறார்கள்.

Read more...

Friday, April 2, 2010

சாதனையாளர்கள்

சாம்பல்தீவு அழகிய கிராமம். நீர்வளம் மிக்கது. நிலவளம் கொண்டது. உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட மாந்தர்கள் வாழுமிடம். தொல்பொருள் என்பது பழங்காலத்துப் பொருட்கள். அவற்றையிட்டு ஆராய்வதை தொல்பொருள்ஆய்வு என்பார்கள். அந்த ஆய்வில் நாட்டங் கொண்டவர்தான் ‘சேமன்’ தம்பிராசா. அவர் பிறந்து வாழ்ந்த கிராமும் சாம்பல்தீவுதான்.




உப்புநீர்ச் சிற்றாறு ஒருபக்கம் ஊரும். கிழக்கே கடல். அலைவீசித் தென்றலை அனுப்பும். தென்னம்பாளைகள் வெடித்துச் சிரிக்கும். தென்னோலைகளைப் பிரித்துச் சூரிய ஒளி எட்டிப் பார்க்கும். கிளி, மைனாக்கள் சீட்டியடித்துக் குதூகலிக்கும். வீடுகளின் முற்றங்களில் றோசாச் செடிகள் பூத்துக் குலுங்கும். கனிகளைச் சுமந்து பலாமரங்கள் காற்றில் அசையும். மாமரங்கள் காய்த்துக் குலுங்கும். ககாய்கறித் தோட்டம் சிரித்துப் படுத்திருக்கும்.




பாடசாலை கிராமத்துக்குப் பெருமை தேடித்தருவது. அதிலே கற்கும் மாணவர்களால் ஊரின் புகழ்பரவும். சாம்பல்தீவு மகாவித்தியாலயம் அதனை நிறைவு செய்வதாக நிமிர்ந்து நிற்கிறது. எத்தனை அதிபர்களும், ஆசிரியர்களும் வந்தார்கள். தமது கடமையை முடித்துச் சென்றார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களது சேவையைச் செய்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால் அதிபர் யோகானந்தர் இவர்களைவிடவும் சற்று வித்தியாசமானவர். சாதனையாளர்கள் மற்றவர்கள் செய்வதையே சற்று வித்தியாசமாகச் செய்வார்கள். யோகானந்தர் அப்படிப் பட்டவர்தான். அவரும் சாதனை படைக்கப் புறப்பட்டவர்தான். ஆனால் அந்தச் சாதனையை மாணவர்கள் ஊடாகக்காண ஆசைப்பட்டார். பாடசாலையைப் பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. பாடசாலை சோம்பலை விடுத்து விழித்துக் கொண்டது. இருபத்திநான்கு மணித்தியாலங்களைக் கொண்டது ஒருநாள். பாடசாலை எந்நேரமும் திறந்திருக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை. பாடசாலை அனைவரையும் அணைத்துக் கொள்ளும் இடமாக அமையவேண்டும். பாடசாலையில் அக்கறையற்ற பெற்றோரையும், மற்றோரையும் ஈர்த்தெடுக்கும் இடமாக விளங்கவேண்டும்.




பழைய மாணவர்களையும் இணைத்து அவர்களது ஆற்றல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாடசாலையே தஞ்சம் எனக்கிடந்தார். பாடசாலை புதுப்பொலிவோடு நிமிர்ந்து நிற்கிறது. அதிபரில் சிறார்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர் கூறுவதும், செய்வதும் தங்களுக்காகத்தான். தங்கள் உயர்வுக்காகத்தான் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதிபரின் அறிவுரையும் செயற்பாடுகளும் மாணவர்களைக் கவர்ந்து விட்டது. ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கவர்ந்து விட்டனர். சாம்பல்தீவு மகாவித்தியாலயம் எந்த நாளும் இயங்கிக் கொண்டுதானிருக்கும். பாடசாலைகள் மூன்றாந்தவணை விடுமுறைக்காக மூடியிருந்தன




தலைமைத்துவம் என்றால் என்ன? தானாகக் கடமைகளை உணர்ந்து செய்வது தலைமைத்துவப் பண்பு. நல்லனவற்றைப் பிறர் செய்யத்தூண்டுவதும் தலைமைத்துவம்தான். சாம்பல்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் இதனை உணர்திருந்தார்கள். அவர்களும் தலைமைத்துவம் கொண்ட தொண்டர்களாக மாறிவிட்டார்கள். விடுமுறை நாட்களிலும் பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் தாங்களே கற்றலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். பாடசாலைச் சுற்றுப்புறம் தூய்மை கண்டது. பூந்தோட்டம் அழகூட்டியது. பூங்கன்றுகளுக்கிடையில் கத்தரி, மிளாய், வெண்டி காய்த்துக் கொண்டிருந்தன. கொஞ்சநேரப் படிப்பு. பின்னர் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொண்டார்கள். விளையாட்டில் விதிமுறைகள் உண்டு அவற்றுக்குத் தாங்களாகவே கட்டுப்பட்டு விளையாடினார்கள். கற்றல் என்பதும் தவம்தான். இவைகளும் ஒருவகைத் தவம்தான். சந்தோசம் கூத்திட்டது. குப்பை கூளங்கள் குழிகளில் நிறைந்து பசளையாகின. மாணவர்கள் பாடசாலைக்கு விருப்பத்தோடு வந்தார்கள்.



மாதங்களில் மார்கழி மாதம் மகத்தானது. மழையும் பனியும் கலந்து பொழியும். மழைத்தூறலும் பனியும் கலந்து குளிரைத் தடவிக் கொண்டிருந்தது. கோயில்களில் திருவெம்பாவை முடிந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். அடுத்த வருடம் பதினோரம் வகுப்பு. அவர்கள் வகுப்பறைச் சுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பல மாணவர்கள் பூந்தோட்டத்தில் நின்றிருந்தார்கள். வழமைக்கு மாறாகக் கடல் இரைந்து கொண்டிருந்தது. “கடல் பொங்கி வருது. ஓடுங்கள்”. மக்களிற் சிலர் சத்தமிட்டார்கள். கால் போனபோக்கில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். சல்லியில் உள்ள மக்கள் சாம்பல்தீவு வழியாக ஓடினார்கள். எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள். ஆத்திமோட்டைச் சந்தியைத் தாண்டினார்கள். “உயிர்தப்பினால் உப்பும் வித்துச் சீவிக்கலாம்.’. சொல்லியபடி சனங்கள் ஓடினார்கள். பெரியகுளம் மேட்டுப்பகுதியில் மக்கள் குவிந்திருந்தார்கள்.




மாணவர்களுக்குப் புதினமாக இருந்தது. “என்னடா செய்யிறியள். கடல் பொங்கி வருது. உயரமான பகுதிக்கு ஓடுங்க” யாரோ ஒருபெரியவர் கரிசனையோடு சத்தமிட்டு விரைந்தார். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் மாணவர்களை உசார்ப் படுத்தினார்கள். அவர்களை ஒன்று கூட்டினார்கள். மக்களுக்குப் பின்னால் ஓடவைத்தார்கள். பாடசாலை வெளிக்கதவை மூடினார்கள். அவர்களும் சைக்கிளில் விரைந்தார்கள். சனங்கள் சாரிசாரியாக ஓடிக்கொண்டிருந்தார்கள். சனங்களை உயரமான இடங்களில் அனுப்பினார்கள். நேரம் பதினொரு மணியைத் தாண்டியிருந்தது. வெயில் சுட்டெரித்தது. தெருவெங்கும் மக்கள் கூட்டம். கடற்கரைப் பக்கம் போகமுடியாது. அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் சைக்கிளைத் திருப்பினார்கள்.




திருகோணமலை நகரை நோக்கி மிதித்தார்கள். விரைந்து செல்லமுடியாதிருந்தது. வீதிகளில் மக்கள் திரண்டிருந்தார்கள். பலரின் கண்களில் கண்ணீர் வெள்ளம். ஓலமிட்டு அழுதார்கள். உப்புவெளியைத்தாண்டி மட்டிக்களிக்கு வந்தார்கள். மட்டிக்களிப் பரவைக் கடல் வெறிசோடிக் கிடந்தது. கடல்நீரைக் காணவில்லை. மக்கள் கூட்டம் கடற்பரப்பினுள் பாய்ந்து செல்வதை அவதானித்தார்கள். பலர் கைகளில் மீன், நண்டு என நிறைந்து காணப்பட்டன. கடலுள் நீரில்லாததைப் பார்த்தார்கள். சற்று நேரத்தில் கடல் சீறியெழுந்து விரைந்து வந்தது. மக்கள் கூட்டம் முண்டியடித்து கரையேறி ஓடினார்கள். பலர் விழுந்து புரண்டார்கள்.




கடல்நீர் வேகமாகப் பின்வாங்கியது. கடலை நோக்கி மக்கள் மீண்டும் ஓடினார்கள். பயமறியாச் சிறுவர்கள் பாய்ந்து ஓடினார்கள். அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும் எச்சரித்தார்கள். “கடலுள் போகவேண்டாம”; எனக் கத்தினார்கள். அதனை மக்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை. போனவேகத்தில் கடல் வாரிச்சுருட்டித் திரும்பியது. மக்கள் பாய்ந்து கரைக்கு வந்தார்கள். வெகுவேகமாக வந்து கரைகளில் மோதியது. பலர் விழுந்து சுருண்டார்கள். அவர்களைச் சுருட்டி முட்டி மோதியது. ‘மக்களின் அறியாமையினாலும் பயத்தினாலும் அனர்த்தங்கள் அதிகரிக்கின்றன’. ஆசிரியர் வகுப்பில் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.




மக்கள் ஓடிய வேகத்தில் முதியவர் இடறி வீழ்ந்து கிடந்தார். முதியவரை நோக்கி அரவிந்தனும், ஸ்ரீவனும் அஸ்வரும ஓடினார்கள். அவரைத் தூக்கி ஓரமாக விட்டார்கள். இரண்டு மூன்று வயதுச் சிறுவர்களும் அனாதரவாக ஓலமிட்டார்கள். அவர்களைத் தூக்கி மக்கள் நின்ற இடங்களில் விட்டார்கள். கடல்நீர் நிறம் மாறியிருந்தது. நிலத்தின் தாழ்வான பகுதிக்குள் ஊடுருவிய நீர் வேகமாகக் கடலுள் இழுக்கப் பட்டது. அந்த வேகம் வீடுகளின் மதில் சுவர்களையும் பெயர்த்து வீழ்த்தியது. அவர்களது வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவம்.



“ ஸ்ரீவன்! நம்மூர் சனங்களைக் கவனிக்க வேண்டும். விரைந்து போவம்.. எங்கே அஸ்வர்”? அரவிந்தன் சத்தமிட்டான். “அதோ அஸ்வர்” காட்டினான். அஸ்வர் அந்த முதியவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான். கடல்நீர் கடலுக்குள் வடிந்தோடிக் கொண்டிருந்தது. வானொலிச் சாதனங்கள் நேரடி ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தன. அவர்களது காதுகளில் ‘சுனாமி’ என்ற யப்பானியச் சொல் பதிந்து கொண்டது. அனைவரது வாய்களிலும் சுனாமி உலாவந்தது. யப்பானிய மொழிச் சொல்லுக்குச் சர்வதேச அந்தஸ்த்துக் கிடைத்து விட்டது. சைக்கிள்கள் சாம்பல்தீவை நோக்கிப் பறந்தன. கடற்கரையை அண்மித்த பகுதிகளைமக்கள் பாடசாலையில் நிறைந்திருந்தனர்.





அப்படியே சல்லியம்பாள் கோயிலடிக்குச் சென்றார்கள். அவர்கள் திடுக்கிட்டார்கள். என்ன கொடுமை. அவர்களால் அக்காட்சியைப் பார்க்கமுடியவில்லை. படகுகள் வீதிகளில் வீசப்பட்டுக் கிடந்தன.





அலைவாரி கரையில் மோதியவண்ணம் இருந்தது. கடற்கரையோரம் சின்னாபின்னமாகிக் காணப்பட்டது. எங்கும் கடல் சீற்றத்தின் எச்சங்கள் தெரிந்தன. தென்னைகள் சரிந்து கிடந்தன. வீடுகள் சிதைந்து குவிந்து கிடந்தன. தென்னஞ்சோலையாக விரிந்து கிடந்த கடற்கரை பாலைவனமாகப் படர்ந்திருந்தது. கடற்கரையில் மக்கள் கூட்டம். தங்கள் உறவுகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பல உடலங்கள் கரையொதுங்கின. கடற்கரையோரமாக இருந்த வீடுகளை கடலலை அள்ளிக் கொண்டு போய்விட்டது. கோயில் முன்மண்டபம் அழிவுற்றிருந்தது. மூலஸ்த்தானம் அழிபடவில்லை. அம்பாள் சிலைமட்டும் அசையாமல் இருக்கிறது. அவர்களுக்கு அதிசயம். கையெடுத்துக் கும்பிட்டார்கள். “ஏனம்மா இந்தக் கொடுமை”? அரவிந்தன் இரந்தான்.



“ஸ்ரீவன்! இந்த அம்மன் பேராற்றல் வாய்ந்தசக்தி கொண்டவள். இராம இராவண யுத்தம் பற்றிப் படித்தோம் அல்லவா? நமது அதிபரும் ஆசிரியர்களும் கற்பித்ததை மறந்து விட்டாயா? நினைத்துப் பார். இராமரது வீரர்கள் சாம்பல்தீவில் அதாவது நமது ஊரில் முகாமிட்டிருந்தனர். விடியவும் போர் நிகழவிருந்தது. அன்று இரவு இராமன் இந்த அம்மனைப் பிரதிஸ்டை செய்தான். இந்த இடத்தில் இருத்திக் களப்பலி கொடுத்தான். அந்த அம்மன்தான் இவள். இவளது பேராற்றல் அளப்பெரியது. அதிகம் உக்கிரமுடையது. இவளது உக்கிரத்தைக் குறைப்பதற்காகத்தான் பாலம்போட்டாற்று அம்மனை நிறுவினார்கள். இது நமது மூதாihயர் வாய்வழி வந்த உண்மை. வருடாவருடம் வைகாசிமாதத்தில் உற்சவம் நடக்கும். அந்தக் களப்பலியை நினைவு கூரத்தான் இந்தக் கோயிலில் சேவலைக் கழுவில் ஏற்றுவார்கள்.” அரவிந்தன் இந்தச் சோகத்தின் போதும் தனக்குத் தெரிந்ததைக் கூறினான். ஸ்ரீவனுக்கு ஒரே ஆச்சரியம். அவனுக்குப் பயமாகவும் இருந்தது.




கோணேசர் கோயில் நேரே தெரிந்தது. கடற்கரை ஓரங்களில் உயிரற்ற உடல்கள் புதையுண்டு கிடந்தன. தூரத்தே சிலர் மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

“தம்பிமார் அங்கால ஓடுங்கள். பயந்து போவிங்கள்.” பெரியவர்கள் எச்சரித்தார்கள். “ஐயா நாங்கள் சல்லியம்மனின் பிள்ளைகள். எங்களுக்குப் பயமாவது, நாங்கள் பயப்படுவதாவது. நமது மக்கள் செத்துக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” சிறார்களது பேச்சுப் பெரியவர்களது வாய்களுக்குப் பூட்டுப் போட்டது. “உங்க இஸ்டம். வாங்க.” அவர்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். கூடவே நண்பர்களும் உதவிக்கு வந்தார்கள். சில ஆசிரியர்களும், அதிபரும் வந்தார்கள். கடற்கரையைப் பார்த்தார்கள். அவர்களது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. மீட்புப் பணியில் அவர்களும் பங்கு கொண்டார்கள். தனது மாணவர்களைக் கண்டதும் அதிபர் நெகிழ்ந்து போனார். இராணுவத்தினரும் பல்வேறு இளைஞர்களும் பங்கு கொண்டு உழைத்தார்கள்.



அனைவருக்கும் களைப்பு. தாகம் தலைக்கேறியது. கிணறுகளை எட்டிப் பார்த்தார்கள். பளிங்கு போன்ற தண்ணீர்; கருமையடைந்து தெரிந்தது. பார்க்கப் பயங்கரமாக இருந்தது. உப்பாகக் கரித்தது. வீடுகள் உருக்குலைந்து கூரையற்றுக் கிடந்தன. கிடுகுக்கூரை சிதைந்து அப்பால் சரிந்த மரங்களில் சிக்கியிருந்தது. தென்னை மரங்கள் சரிந்து கிடந்தன. இளநீர் குலைகளைக் கண்டார்கள். சிதைந்த வீட்டினுள் எட்டிப் பார்த்தார்கள். இரண்டு மூன்று கத்திகள் தெரிந்தன. எடுத்துக் கொண்டார்கள். இளநீரை வெட்டினார்கள். காப்பாற்றப் பட்டவர்கள் களைத்திருந்தார்கள்.




அனைவருக்கும் இளநீரைக் கொடுத்தார்கள். தாங்களும் உட்கொண்டார்கள். தொண்டு நிறுவனங்கள் வந்து சேர்ந்து கொண்டன. கரையோரக் கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டன. அரவிந்தன் மற்றவர்களுக்குச் சைகை காட்டினான். மூவரும் பாடசாலையை நோக்கி விரைந்தார்கள். மக்கள் வெள்ளம் பாடசாலையை நிறைத்திருந்தது. கரையோர மக்கள் பாடசாலையில் தஞ்சமாகினார்கள். அவர்களைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது.



சாம்பல்தீவு மகாவித்தியாலயம் சுனாமியினால் பாதிக்கப் படவில்லை. பயத்தினால் இடம் பெயர்ந்த மக்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். அரவிந்தன் சுற்றிப்பார்த்தான். “அஸ்வர்! எங்கே ஸ்ரீவன்”?;. நமது வகுப்பு மாணவர்களைக் கூப்பிடு. வகுப்பறைகளில் தஞ்சமடைந்த மக்களைக் குடும்பவாரியாகப் பதிவு செய்வோம். விரைவாகச் செய்வோம். சரியா”? மாணவர்களைப் பாடசாலைக்கு வரும்படி செய்தி அனுப்பியாகிவிட்டது. பல மாணவர்கள் வந்துவிட்டார்கள். சாரணர்கள் தங்கள் சீருடையில் வந்தனர்.



மாணவிகள் பதிவுகளை மேற்கொண்டார்கள். “இயற்கையினால் நமது மக்கள் அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு உதவுவோம். புறப்படுவோம்..” பாடசாலையில் இருந்த மண்வெட்டிகள் வெளியில் வந்தன. பொருத்தமான இடங்களில் கழிவுகள் போடுவதற்கான குழிகள் அமைந்தன. தொட்டிகளில் தண்ணீர் நிரம்பியது. கழிவறைகள் சுத்தமாக்கப் பட்டன. பல மாணவர்கள் கிராமத்தின் வீதிகளில் வலம் வந்தார்கள். மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உணவுப் பார்சல்கள் தயாராகின.



மேற்குவானம் சோகத்தால் சிவந்திருந்தது. மக்கள் துயரில் பங்குகொண்டது போல் சூரியன் அழுது வடிந்து கீழிறங்கியது. இருள் சூழ்ந்து கொண்டது. அரவிந்தன் தலைமையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மின்வெளிச்சம் பரவியது. மாணவிகளுக்கு உதவியாக மாதர்சங்க உறுப்பினர்களும் தேநீர் தயாரித்தார்கள். அஸ்வர் பெருங்கூட்டம் புடைசூழ உணவுப் பார்சல்களோடு வந்தான். ஸ்ரீவன் உடுதுணிகளை அள்ளியவாறு இளைஞர் கழகத்துடன் வந்தான். அபயபுர சிங்கள மகாவித்தியாலய் மாணவரணி வந்தது. அவர்கள் பாய்களும் போர்வைகளும் கொண்டுவந்தனர். பதிவுகளைப் பரிசீலித்தார்கள். ஏறத்தாழ இருநூற்று ஐம்பத்தைந்து குடும்பங்கள் அகதிளாகி இருந்தனர். பதிவுகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தார்கள்.



உணவுப்பொதிகளைப் பகிர்ந்தார்கள். வாளிகளில் தண்ணீர் நிறைத்துக் கொடுத்தார்கள். முதியோர்களை ஆதரித்து உபசரித்தார்கள். தாய்மார்களை அன்புடன் போற்றினர். அதிபர் அப்போதுதான் களைத்து வந்து சேர்ந்தார். அனைத்தையும் உற்று நோக்கினார். அவருக்குப் பெருவியப்பாக இருந்தது. சந்தோசம் அவரது களைப்பைப் போக்கியது. “இவற்றைவிட எனக்கென்ன வேண்டும். எனது மாணவர்கள் சாதனையாளர்கள்தான். தாமாகவே இயங்கும் வல்லமை பெற்றவர்கள்.” மாணவர்களது சேவை அவரது உள்ளத்தைத் தொட்டது. அவரை அறியாமலேயே கண்கள் பனித்தன.

யாவும் கற்பனை.

Read more...

உறவுகள்

About This Blog

கேணிப்பித்தன் படைப்புக்கள்

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP